கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2024
பார்வையிட்டோர்: 2,160 
 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். தலை வலித்தது. மீண்டும் படுப்பதற்கே உடல் கெஞ்சியது. ஆனால் படுத்து என் செய்வது? காலை ஏழு மணியாகி விட்டிருந்தது, வானொலியில் சென்று போன சூறாவளியைப் பற்றிய செய்திகள். ஆவனுக்கு எரிச்சல் எடுத்தது. தலை கூடுதலாக வலித்தது. எதிரே ஏகப்பட்ட வேலைகள் அவனை நோக்கிக் காத்துக் கிடப்பது போன்ற பிரமை, வெறும் பிரமைதாள். அப்படி எந்த வேலையுமே அவனுக்கு இதுவரை இருந்ததாக இல்லை. ஆனால் ஒவ்வொருநாள் காலையும் அவன் விழித்துக் கொள்ளும் போது அந்தப் பிரமையும் கூடவே விழித்துக் கொள்ளும். அதைப் பற்றி அவன் சீராகச் சிந்தித்ததில்லை. ஒரு வேளை வேலையே இல்லாதிருந்ததால், அப்படி அவன் மனம் தன் குற்ற உணர்வை மறைத்துக் கொள்கிறதோ? கண்ணாடி எதிரே போய் நின்றான். முகம் காய்ந்து போய்க் கிடந்தது. அதிக நேரம் கண்ணாடிக்கெதிரே நிற்க அவனுக்குப் பிடிக்கவில்லை. சட்டையை எடுத்து மாட்டியவன் கைகளால் தலையைச் சரிப்படுத்திய வண்ணம் அறையைப் பூட்டிக் கொண்டு வெளிக்கிட்டு விட்டாள்.

மூடுபனி தெருவை மூடிப் பெய்து கொண்டிருந்தது. வெயிலின் மினுக்கம் விழ பத்துமணிக்கு மேல் ஆகும் போலிருந்தது. அவன் பளியோடு பனியாகக் கடைக்குப் போய்க் கொண்டிருந்தான். அந்தக் கடையில் தான் அவளது கால் நூற்றாண்டு வயதின் பாதி நூற்றாண்டைக் கழித்திருந்தான். இப்பொழு தும் அப்படித்தான், ஒரு நாளின் அரைப் பொழுதை கடையிலும் அடுத்த அரைப் பொழுதை அறையிலுமாகக் கழித்து வந்தான். அந்தக் கடையில் அவனுக்கு சம்பளமில்லாத உத்தியோகம். அவனது அண்ணரோ அத்தானோ அந்தக் கடையில் ஏதோ பிஸ்னஸ் செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஒத்தாசை என்ற பெயரில் இவன் சம்பளம் வாங்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவன் அவரிடம் சம்பளம் வாங்கத் துவங்கியிருந்தால் கடையில் போட்டிருந்த முதலின் லட்சணத்தில் அவர் எப்பவோ பின்னால் போயிருக்க வேண்டும். அதனால் இவன், தான் ஏதோ உத்தியோகம் பார்க்க முயற்சிப்பதாகவும் எதற்கோ படிப்பதாகவும் பெயர் பண்ணிக் கொண்டு அங்கு சம்பளம் வாங்காமல் சாப்பிட்டுக் கொணடிருந்தான். 

அவனுக்கு எப்படியோ சாப்பாடு கிடைத்து வந்தது உத்தியோகத்தைப் பற்றியும் படிப்பைப் பற்றியும் அவனுக்குக் கவலை இல்லை. இருந்தும் உத்தியோகம் தருவதாகச் சொல்லும் சில பரீட்சைகளுக்கு இவன் உட்கார்ந்திருக்கிறான். கூடவே குறித்த காலத்தை தவறவிட்டு, அரைத் தூக்கத்தில் விழித்துக் கொண்டிருந்தவன் போல் தராதரம் வழங்கும் சில சோதனைகளுக்கும் இவன் குந்தியிருக்கிறான். ஆனால் பெறுபேறு பற்றி யார் கவலைப்பட்டார்கள்? எனவே பழைய கதை தொடர்ந்தது. 

காலையில் வந்ததும் வராததுமாக ஓட்டல் ஒன்றுக்குள் நுழைந்து ஓர் ஆறு சதத்தை வீசியெறிந்து பிளெயின் டீ ஒன்றைக் குடித்து தொண்டையை நனைத்துக் கொண்டான். நனைக்கும்போது உடலில் ஒரு நடுக்கம். புளிப்போடு தொண்டையுள் இறங்கிய பிளெயின் டீ அவனது உடலின் வெறுமையை இன்னும் கூட்டியதா அல்லது குறைத்ததா? வாந்தி வருவது போன்ற உணர்வு. அவன் பிளெயின் டீயை காலையில் குடிப்பதை வெறுத்தான். முன்னர் அவன் கோப்பி தான் குடித்து வந்தான். ஆனால் கோப்பி 12 சதத்திலிருந்து 20 சதமாக தன்னை உயர்த்தி எக்ஸ்பென்சிவ் ஆக்கிக் கொண்ட பின்னர் அவன் அதை மேலும் மேலும் தழுவ விரும்பவில்லை. ஒரேயடியாக வர்க்கம்மாறி ஆறுசதத்திற்கு இறங்கி அதை வஞ்சம் தீர்த்துக் கொண்டான். அதனால் வாந்தி, பித்தம், பஸ்ஸில் போகும் பிரயாண உணர்வு. வர்க்க மாற்றம் வயிற்றுக்குள்ளும் மாற்றம்! 

காறித்துப்பிக் கொண்டு கடைக்குள் புகுந்தவன் அன்றைய காலைப் பத்திரிகையைக் கையில் எடுத்தான். எங்கும் சூறாவளி பற்றிய செய்திகள். அடிவயிறு வற்றுவது போலிருந்தது அவனுக்கு. பக்கங்களைப் புரட்டினான். அன்றைய காலபலன் அவன் கண்ணில் குத்தியது. மகரம்: வெறுப்பு, வெறுமை என்று போட்டிருந்ததைப் படித்தபோது அவனுதட்டில் ஒரு சிரிப்பு. கவூர் அவன் நினைவில் ஓடி வந்தார். அவர் மந்திரம், பெல்லி, பிசாசுகளுக்கெதிராக நடத்தும் பிரச்சாரங்களும் பந்தயங்களும் கூடவே ஓடி வந்தன. பத்திரிகைச் சாத்திரங்களைப் படிக்கும் போது அவனுக் கென்றைக்குமே சிரிப்பு. அதே மாதிரி கவூரின் அரைகுறை விஞ்ஞானப் படிப்பு. சாத்திரம், பேய், பிசாசுகளுக்கெதிராக நடத்தும் புரட்டுக்களை நினைக்கும் போது இன்னும் கூடுதலாக சிரிப்பு. அன்றைய ஆங்கிலப் பேப்பரில் கவூருக்கெதிராக யாரோ ஒருவர் எழுதியிருந்தார். 

கடந்த இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பே ஜேர்மனியரும் சோதிடர்களைத்தானாம் நாடி ஓடினார் விஞ்ஞானயுத்தம். பின்னால் சோதிட மந்திரந்தான் சே அரைகுறை விஞ்ஞானமெல்லாம் ஆபத்து வரும்வரை இறந்த ஆங்கிலக் கவிஞன் லூயிமக்னிஸ் சோதிட வெளியிட்டுள்ளாராம்! கவிஞர்கள்! கலைஞர்கள்! ஒன் பற்றி அவர்களுக்கிருக்கும் உள்ளுணர்வுக்கு முன் விஞ்ஞானிகள் எந்த மூலைக்கு? அவனுக்குத் தன்னை போது திடீரென உவகையின் பேரலைகள்! உல அனைத்துக்கும் மேலாகத் தான் நிற்பது போன்ற பேருண மீண்டும் பேப்பரைப் பார்த்தான். எழுத்துக்கள் வெள் தலைவலித்தது. அடிவயிறு வற்றுவது போன்ற உணர்வு. முகம் கழுவ எழுந்து போனான். 

காலை பத்து மணியாகிய போது அவனு தொடங்கியது. காலையில் அவன் நன்றாகச் சாப்பிடவி காலைச் சாப்பாட்டின் போது அவனெதிரே அமர்ந் நினைத்துக் கொண்டான். ஐந்தாறு ரொட்டிகளை ஒன்றா பருப்பு, கிழங்கு, மீன் எல்லாவற்றையும் அவற்றே ‘வீமன்பிடி’ பிடித்தார். இவனுக்கு அருவருத்தது. உடலி இரண்டு அப்பத்தோடு இவன் தனது சடங்கை முடித்துக் பயன் இப்போ தெரிந்தது. ஆனால் பசியல்ல. நாக்கி பிளெயின்டீ, ஒரு சிகரட்! இவை போதும் அதைத் து பையில் கையை விட்டுத் துழாவினான். ஏமாந் எடுக்கவில்லை. சும்மா அப்படியே கையை கொண்டிருந்தபோது அவனெதிரே ஒருத்தன் கிற்பாக் சிரித்தான். அவனைக் கண்டதும் ‘வக்கே’ என்றான் அவனும் ‘மச்சான் வட் கல்பனாவ?’ என்றான் கேள்வியில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று வந்து, சம அந்தஸ்துப் பெற்றன. வக்கே இவனுடை ட்ரொட்ஸ்கியவாதி, பட்டதாரி. பக்கத்தூரில் படிப்பித்து இன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்தான். 

“என்ன யோசனை?” என்று மீண்டும் எதிர்பார்க்காமலேயே. “வா, டி குடிக்கப் போவ சாப்பிடவில்லை’ என்று தொடர்ந்து கூறி இவனை ரோட்டில் இறங்கி விட்டான். 

ஹோட்டலின் ஒதுக்குப் புறத்தில் இவர்க கொண்டிருந்தார்கள். வக்கே பணிஸ் ஒன்றைக் சுவைத்தான். அடுத்தவன் சிகரட்டோடு தேனீர்: இருவருக்குமிடையே இரு நிமிட மௌனம். வக்கே தேனீர்க் கோப்பையை கையில் எடுக்காமல் மேசையிலேயே வைத்து குனிந்து குனிந்து சுவைத்தான். அந்த இடைப்பொழுதில் அடுத்தவன் அவனை அளந்தான். வக்கே இவனோடு படித்தவன்.. இப்போ பட்டதாரி. சம்பளம். சந்தோஷம். அவனோடு ஒப்பிட்டால் இவன் ஒரு “தோற்று”ப் போனவன். திடீரென்று அவனுக்கு தன்மேல் ஒரு வெறுப்பு. தோற்றுப் போனதால் அல்ல. சும்மா ஒரு வெறுப்பு. நாக்கைத் தீய்த்து விட்ட சுடுபிளெயின்டீ அதை இன்னும் கூட்டியது. அதனால் சிகரட்டைச் சுவைக்க முடியவில்லை. அதன் வெள்ளைப் புகைகளில் இவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. அவற்றையேன் உள்ளுக்கிழுத்து வெளியில் தள்ளிக் கொண்டிருக்க வேண்டும் ? அரைச் சிகரட்டை அப்படியே கீழே போட்டு நசுக்கினான். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி எதிரே இருந்தவனை அளந்த போது ஒரு மிடறு தேனீரைக் குனிந்து வாய்க்குள் அனுப்பிக் கொண்டு திடீரென நிமிர்ந்து அவன் இவனை ஒரு விதமாகப் பார்த்தான். இவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது. அதை மறைக்கும் முகமாக “மச்சான் வக்கே. இப்போ எப்படி உனது கட்சி வேலை போகுது?” என்றான் வெகு இயற்கையாக. 

வக்கே பதில் அளிக்கவில்லை. அவனொரு ட்ரொட்ஸ்கியவாதி, என்.எம் தாசன். குறிப்பாக ஒரு மாக்ஸியன் இன்டெலெக்ஷஸுவல். படிப்பு. பட்டம் இவற்றை விடக் கட்சியே அவனுக்குக் கடவுள். கூட்டரசாங்கம் அவனிடத்தில் சில கோளாறுகளை விளைவித்திருந்தது லேசாகத் தெரிந்தது. ஆனால் இலகுவில் அவனை அளக்க முடியாது. 

“புரட்சியைவிட எதுவும் சரிவராது” 

வக்கே திடீரென பதில் கொடுத்தான். கட்சியில் ஏற்பட்டிருந்த வேதனையும் வெறுப்பும் அந்தப் பேச்சில் தொக்கி நின்றது. அந்த நேரத்தில் அவ்விருவரும் ஏதோ விதத்தில் ஒரே நிலையில் இருந்தனர். தோற்றுப் போன நிலை? இருவரும் லேசாகச் சிரித்துக் கொண்டனர். 

“காமினி வந்தானா?” வக்கே கேட்டான். இப்போ இருவரும் ரோட்டில் நடந்து கொண்டிருந்தனர். லைப்பிரரியை நோக்கி நடை சென்றது. 

“இல்லை. ஆனால் இரண்டு தரம் என்னோடு போனில் தொடர்பு கொண்டான். உனக்கு பி.சி போட்டானாம்.நீதான் அவனுக்கு பணம் அனுப்பவில்லையாம். அதனால் அவன் இங்கு வரமுடியாமல் கிடக்கிறான். பாவம் அவன். ஒரே பறோக்.” 

“இப்போ அவன் என்ன செய்கிறானாம்?’ வக்கே முன்னதிற்குப் பதில் அளிக்காமலே இன்னொரு கேள்வியைக் கேட்டான். 

“இப்போ அவன் படிப்பை எல்லாம் ஒரு மூலையில் தூக்கிப் போட்டுவிட்டான். இனிமேல் அவனுக்கு ஒன்றுமே வேண்டாமாம். ஆனால் செக்ஸ் உலகை ஒரு கை பார்க்கப் போவதாகச் சொன்னான். நோர்மன் மெய்லரின் ‘ஹிப்’ படிக்கிறானாம். 

வக்கே பெரிதாகச் சிரித்தான். அடுத்தவனும் அதில் சேர்ந்து கொண்டான். 

இருவரும் லைபிரரிக்குள் நுழைந்தனர். வக்கே செய்தித்தாள் இருந்த பக்கமாகச் சென்றான். மற்றவன் சஞ்சிகை இருந்த பக்கத்துக்குப் போனான். ஒரு சஞ்சிகையை முன்னால் விரித்துக் கொண்டு உட்கார்ந்தான். படிப்பதில் நாட்டம் செல்லவில்லை. உள்ளே நுழைபவர்களையும் வெளியேறுபவர்களையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். நுழைவாயிலில் பேரேடு ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அதி, நுழைவோரும் போவோரும் தமது பெயரையும் நேரத்தையும் பதிந்து கோணிடிருந்த காட்சி வேடிக்கையாயிருந்தது. மடையர்கள்! மடத்தனமான சட்டம், அந்தப் பேரேட்டில் இவனும் இவனது நண்பர்களும் தமது பெயருக்குப் பதிலாக சத்ரே, கொலின், வில்சன், மெயிலர், என்.எம்.பெரேரா, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் என்று எழுதியவை அவன் நினைவில் ஓடியது. அவன் சிரித்தான். இருந்தாற்போல் சக்கிலியர்கள் யாரோ சந்தியில் சண்டை போடுவது கேட்டது. தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! நின்றவர்கள் கூக்காட்டிச் சிரிப்பது கேட்டது. யாரோ ஒரு சிங்களவன் “தெமல கறதறே” என்று கத்தினான். அந்த ஓசை விழுந்த பொது உள்ளே இருந்த பல முகங்களில் ஒரே நேரத்தில் சிரிப்பு மலர்ந்தது.

வக்கேயும் சிரித்தான். இவனுக்கு இருந்தாற் அதில் ஒரு ஆச்சரியம். எப்படி அவர்கள் ஒரேமாதிரிச் சிரித்தார்கள்? இது என்ன சிரிப்பு? இங்கு ஏன் எல்லோரும் வருகிறார்கள்? என்னத்தை அப்படி விழுந்து கிடந்து படிக்கிறார்கள்? ஏன் படிக்க வேண்டும்? இவர்களுக்கு பைத்தியமா? இது என்ன புத்தகங்கள், பத்திரிகைகள்? இது எல்லாம் எதற்கு? இதை யார் எழுதுகிறார்கள்? எழுத்தாளர்கள், கவிஞர்கள். அவர்களுக்கும் பைத்தியமா? திடீரென்று அவன் நினைவில், அவன் அறைக்கெதிரே காக்கா வழிப்பாள் விழுந்து கிடந்து துடித்த ஒருவனின் காட்சி ஓடி வருகிறது. அவன் கடைக்கு இரண்டு கடைகளுக்கப்பால், ஒருவோச் மேக்கர், உடம்பில் பெற்றோல் ஊற்றிக் கொண்டு தன்னைப் பற்ற வைத்துக் கொண்டான். கோர ரயில் விபத்து. வெட்டுண்டு, சிதையுண்டு ஆண்களும் பெண்களும்! சூறாவளி! சுக்குநூறான படகுகள், பிரேதங்கள். தமிழர்கள் பாவம் செய்தவர்களாம். தெய்வ கோபமாம். அவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. அவன் நண்பனைப் பார்த்துக் கைகாட்டி விட்டு லைப்ரரியை விட்டு வெகுவேகமாக வெளியே வந்து நடந்தான்.

எஞ்சிய பகல் முழுதும் வெறுமையில் மிதந்தது. இரவு பத்துமணிபோல் அவன் தனது அறைக்குள் வந்து அடைந்து கொண்டான். அவனது குண்டியில் வீக்கம் கண்டு வலித்தது. கலரி வாங்குகளில் இருந்த மூட்டைப் பூச்சிகள் அவன் குண்டியைப் பதம் பார்த்து விட்டிருந்தன. தெரியாத்தனமாக ஒரு தமிழ்ப்படம் பார்க்கப் போய் நேர்ந்த கதி. அவர்கள் சிரித்த போது இவன் அழுதும், அவர்கள் அழுத போது இவன் சிரித்தும் படம் தன் வழியில் செல்வதற்கு மிகுந்த கஷ்டப்பட்டது. இவன் வேதனையோடு எழுந்து வந்து விட்டான். இருந்தும் ஒன்றரை மணித்தியாலம் மூட்டைப்பூச்சிகளுக்கு தாராளத்திலும் தாராளம். அதனால்குண்டி வலித்தது. கூடவே நேரம் போய் விட்டதனால் நாயர் கடைச் சாப்பாடும் சாப்பாடாய் இருக்கவில்லை. எதையோ இரண்டு தரம் அள்ளி வாய்க்குள் வீசி விட்டு வந்து விட்டான். இனி?

எஞ்சியிருந்த அரைச் சிகரட் துண்டை உதட்டில் பற்ற வைத்தான். அதிலாவது இன்பங்காணலாம் என்ற ஒரு திருப்தி. ஆனால் சிகரட் தணல் கையைச் சுட்ட போதுதான் அவன் திடுக்கிட்டான். இன்ப உணர்வைத் துறந்து அவன் எண்ணங்கள் எங்கெல்லாமோ அலைந்து விட்டதால் அநியாயமாகச் சிகரட் எரிந்து போய் விட்டிருந்தது. அதைக் கீழே போட்டு கசக்கி விட்டு புத்தகம் ஒன்றைக் கையில் எடுத்தான். ஹுகும், அது படிப்பதற்கான நேரம் இல்லை. இருந்தாற் போல் அவனிடத்தே ஓர் உள்தூண்டல் ஏற்பட்டது. உள்ளம் மலர்ந்தது. அதன் மலர்ச்சி உடலெங்கும் சுவறுவது போன்ற உணர்ச்சி. உடனே அவன் அருகிருந்த குறிப்புக் கொப்பியை எடுத்து, அதன் புதிய ஒற்றையின் மேலே ‘புயல்’ என்று தலைப்பெழுதிச் சில கவிதைகளை கிறுக்கினான். தமிழர்கள் அந்த யூதர்களைப் போல் சபிக்கப்பட்டவர்களா? அவர்கள் மேல் தெய்வ கோபமா? அன்று முழுக்க அவனைக் குடைந்த கேள்விகள். அவற்றுக்குப் பதில் காணும் முகமாகவே அவன் கவிதைகளை எழுத எண்ணினான். ஆனால் அவையோ அவன் எண்ணங்களைக் கடந்து எங்கேயோ சென்றன. இருந்தும் சில இடங்களில் ஏதோ விதத்தில் அவ்வெண்ணங்களைப் புணர்ந்தும் நின்றன. சிலவரிகள்.

“மனித இயக்கமோர் யந்திர மாகையில்
இயற்கை புகுந்துடன் இன்னுயிர் பாய்ச்சுவான்…
சிதை ஒழுங்கினைச் செய்த அனர்த்தங்கள்!
புது ஒழுக்கத்தில் பூத்திடும்! ஆர்த்தெழும்
துயர்கடலிலோர் துடிப்புச் சுழித்திடும்…”

பேனை கிறுக்கிக் கொண்டிருந்த அந்த வேளையில் அவன் உலகமெல்லாம் நிறைந்து கொண்டிருந்தான். ஆனால் அந்த உணர்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. அனாவசியமாக அவனது கவியுள்ளம் திடீரென வேறு விஷயங்களில் இறங்கித் தன்னை விரயப்படுத்திக் கொண்டது. ஐந்து கவிதைகளுக்கு மேல் உள்ளம் ஓய்ந்து போய் விட்டது. இவற்றையெல்லாம் எழுதி எதற்கு? யார் பிரசுரிக்க இருக்கிறார்கள்? இலங்கையில் எங்காவது நேர்மையுள்ள தமிழ்ப் பத்திரிகைகள் ஏதாவது இருக்கின்றனவா? முன்னர் நான்கு வருடங்களுக்கு முன்பு அனுப்பிய வளரிளம் பருவத்துக் கவிதை யொன்றைப் போனவாரந்தான் யாரோ ஒரு பத்திரிகைக்காரன் போட்டு கழுத்தை அறுத்திருந்தான். இவர்களுக்கென்ன கவிதையும் கட்டுரையும்?

இவற்றையெல்லாம் ஏன் எழுத வேண்டும்? பைத்தியக்காரத்தனமான வேலை. பிரசுரத்தலங்கள் எல்லாவற்றுக்கும் நெருப்பு வைக்க வேண்டும். அதன் நீற்றை எடுத்து பத்திரிகை ஆசிரியர் நெற்றியில் பூசி மொட்டை அடித்து தெருத்தெருவாக கொடும்பாவி இழுக்க வேண்டும்.

அவனுக்கு வியர்த்தது. குறிப்புக் கொப்பியைத் தூக்கி வீசிவிட்டு மேசையில் குப்புற முகத்தைப் புதைத்தான். இருள். ஆஸ்பத்திரியில் டி.பி நோயாளியாகக் கிடக்கும் அவன் அக்காவை நினைத்தான். கண்களில் நில கண்ணீர். டி.பி நோயால் செத்துப் போன அவனது அப்பா! இருமல், கொக்கல், இரத்தம். அம்மாவின் உருக்குலைந்த முகம். அதன்பின் பல முகங்கள் ஓடிவந்தன. அதிருப்தியில் தவிக்கும் ட்ரொட்ஸ்கியவாதி வக்கேயின் முகம். ஹிப்ஸ்ரறிஸம் படிக்கும் காமினியின் கசந்த முகம். காக்காவலிப்பால் சுழன்ற ஒருத்தன், தன்னை நெருப்பாக்கிய வோச் மேக்கர், சக்கிலியரின் தமிழ், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள், இவன் எழுதிய கவிதை, மங்கிப்போன பள்ளிக்கூட நாட்கள், அவன் அழுதான். வெறும் சுயபச்சாத்தாபம். அவனுக்கு தன்மேலேயே வெறுப்பு. இருந்தாற் போல் அவன் சிரத்தை எடுத்த ஒருத்தியின் முகம். அவள் இப்போ என்ன செய்து கொண்டிருப்பாள்? பிறகு பெண்களைப் பற்றிய நினைவோட்டம். அவர்களை ஆண்களிடமிருந்து பிரித்து வைக்கும் உளுத்துப் போன கட்டுப்பாடு. பெண்களைப் பற்றி அவன் நண்பன் காமினி பொருளாதார ரீதியில் சொன்னவை நினைவுக்கு வந்தன. Supplyயும் இருக்கிறது. Demandம் இருந்தும் அவர்களை ஆண்களால் பெற்று கொள்ள முடியாத Scarcity! லேசாகச் சிரித்தான். எங்குமே சூன்யம். விழுந்து விடப் போகிறவன் போல் உடல் தள்ளாடிற்று. எதுவோ அவனுக்கு உயிரூட்டத் தேவைப்பட்டது. எது? எது? எதையுமே காணான். திடீரென உடல் எதையோ கண்டு விட்டது போல் வேகங் கொண்டது. தன்னை வெளிக்காட்டும் ஒரு இன்ப வேட்கை. எது? எது?

உடலுறவா?

ஆக்க இலக்கியச் சிருஷ்டியா?

இவற்றைறையும் கடந்தழைக்கும் ஓர் இந்நிலையா?

கரமை துனமா?

அது எது ? எது? எது?

அவன் சுயகாம கரமை துனத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த போது எதிரே சுவரில் மாட்டப்பட்டிருந்த புத்தரின் படம் அவனை எள்ளுதல் போல்பட்டது. உடனே அவன் அனைத்து மனவிகாரங்களையும் ஒதுக்கி அவக்கென எழுந்து விளக்கை அணைத்தான். தொப்பென கட்டிலில் குப்புற விழுந்தான். அவனை இப்போ பூதாகரமான சூன்யம் காய் பரப்பி கௌவிற்று.

– 1963 (1966 இலங்கை வானொலி சிறுகதை மஞ்சரியில்).

– கடலும் கரையும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1996, நண்பர்கள் வட்டம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *