மின்னல், மழை, மோகினி






(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 34-35 | அத்தியாயம் 36-37 | அத்தியாயம் 38-39
அத்தியாயம்-36
உடுமலைப்பேட்டை செல்லும் காரில் டிரைவருக்கு அடுத்தபடியாக ராஜு உட்கார்ந்திருந்தான்.

பின் சீட்டில் மோகினியும் கௌரியும் உட்கார்ந்திருந்தனர். விஜயாவின் வைர நகைகள், புடவை ஆகியவற்றை அணிந்து பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மோகினியின் உணர்ச்சிகள் புரியாத ஒரு கலவையாக இருந்தன.
முதல்தரமான பெரிய காரில் அவள் பயணம் செய்வது அதுதான் முதல் தடவை. விலையுயர்த்த நகைகள் புடவை அணிந்தது அதுதான் முதல் தடவை.
அவள் மனத்தில் புரியாத இன்பம் ஒரு பக்கம், ராஜுவோடு காரில் பயணம் செய்கிறோம் என்பதில் ஏற்பட்ட வெட்கம் ஒரு பக்கம்.
நகை, புடவை. அணித்து கொண்டு மினுக்குகிறாள் என்று ராஜு தவறாக எண்ணிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் ஒரு பக்கம்.
வீட்டை விட்டு விலகிக் கொள்கிறேன் என்று சொன்னவள் இப்போது வீட்டு எஜமானியின் ஸ்தானத்தில் காரில் அமர்த்து வருகிறாளே என்று ராஜு நினைத்தால் என்ன செய்வது?
உண்மையிலேயே அவள் மனம் அந்தப் பயணத்தை வெறுத்ததா என்றால் அதுதான் இவ்லை.
நல்ல புடவை, வைர நகைகளை அவள் மனம் வெறுத்ததா என்றால் அதுவும் இல்லை. ‘மற்றப் பெண்களைப் போல் தானா நானும்? செல்வத்தின் பளபளப்புக்காக மனத்தைப் பறி கொடுப்பவள் தானா?’
‘மஞ்சள் அழகும். குஞ்சியழகும் அழகல்ல, கல்வி அழகே அழகு’ என்று எப்போதோ கூட்டப் குழந்தைப் பருவத்தில் சாமியார் சொல்லிக் கொடுத்த தமிழ்ப் பாட்டின் அடிகள் அவள் ஞாபகத்துக்கு வந்து கொண்டுதான் இருந்தன.
கார் ஜன்னல் வழியாக வீசிய காற்று அவள் அணிந்திருந்த பட்டுச் சேலையின் மீது வீசி முந்தானையை விலக்கப் போகும்போது அவன் அதை இழுத்துப் பிடித்து உடலோடு ஒட்டிப் போர்த்திய போதெல்லாம் அந்தச் சேலை தன் உடல் செழிப்பை எவ்வளவு அதிகம் வெளிப்படுத்தியது என்பதை அவள் உணராமல் இல்லை.
ராஜுலின் மனத்தில் என்ன சிந்தனைத் தொடர் ஒடுகிறது என்பதை உணரத் துடித்தாள் மோகினி. ஆனால் ராஜு ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
குழந்தை கௌரி நடுநடுவே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள், அவள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு நேர் எதிரே சாலையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் ராஜு.
பின்புறம் கூடத் திரும்பாமல் கௌரியின் கேள்விகளுக்கு ராஜு பதில் சொன்னது மோகினிக்கு வேதனையாக இருந்தது.
‘அவர் ஏன் இப்படி ஒரு மாதிரியாக இருக்க வேண்டும்? தான் அவரோடு காரில் வருவது அவருக்குப் பிடிக்கவில்லையா?’ என்று நினைத்தாள்.
கோயம்புத்துரிலிருந்து சுமார் பத்துப் பன்னிரண்டு மைல்கள் வந்த பிற்பாடு காரில் ஏதோ ‘கடகட’ என்று சப்தம் வரவே, டிரைவர் மெள்ளக் காரை ஒட்டிக் கொண்டு சென்று அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் நிறுத்தினான்.
கார் பானட்டைத் திறந்து ஏதோ பழுது பார்த்துக் கொண்டிருந்தாள். சுமார் பத்திலிருந்து பதினான்கு வயதுக்குள் உள்ள சிறுவர்கள் கூட்டம் கைகளில் புத்தகப் பையுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது. அந்த சிறுவர் கூட்டம் பெரிய கார் ஒன்ற பெட்ரோல் பங்கின் அருகில் நிற்கவும் காரை நோக்கி நெருங்கியது.

எதிர் வெய்யில் கண்ணாடி வழியே மோகினியின் தங்க நிற முகத்தில் வீசி அவள் மேனியை இன்னும் பிரகாசப்படுத்தியது.
சிறுவர்களின் பார்வை மோகினியின் முகத்தில் பட்டதும் அந்தக் கூட்டத்திலுள்ள ஒருவன். “டேய், சினிமா ஸ்டார்டா” என்று கூச்சல் போட்டான்.
உடனே மற்றச் சிறுவர்கள் காரை நெருங்கினர்.
காரின் உட்புறம் உட்கார்த்திருந்த மோகினியைச் சுட்டிக் காட்டி, பல ஸ்டார்களின் பெயரைச் சொல்லி, “இதுவாயிருக்குமோ! அதுவாயிருக்குமோ!” என்று சர்ச்சை செய்ய ஆரம்பித்தனர்.
சிறுவர்களின் பேச்சுக் குரல் ராஜுவின் காதில் பட்டதும் அவன் திரும்பி மோகினியைப் பார்த்தான். மோகினி அதே சமயத்தில் ராஜுவைப் பார்த்தாள். ராஜு சிறுவர்களைத் தூரச் செல்லும்படி விரட்டினான். அதற்குள் சிறுவர் கூட்டத்தில் ஒருவன், “இந்தம்மா பழைய ஸ்டார் இல்லடா. யாரோ புது ஸ்டார்டா!” என்று சொல்லிவிட்டு ஓடினான்.
இதைக் கேட்டதும் மோகினி வெட்கத்தோடு தலை குனிந்தாள்.
ராஜு சிரித்தபடி, “என்ன செய்யறது மோகினி, நல்ல புடவை நகையணிந்து காரிலே உட்கார்ந்தாலே சிறு பிள்ளைகள், ஸ்டார் ஆக்கிடறாங்க” என்றான்.
அதற்குள் டிரைவர் பானட்டை மூடிவிட்டு டிரைவில் சீட்டுக்கு வரவே ராஜு பேச்சை நிறுத்திவிட்டு முகத்தை முன்புறம் திருப்பிக் கொண்டான்.
கல்யாண வீடு செல்லும் வரையில் ராஜு அப்புறம் மோகினியிடம் பேச வில்லை.
டிரைவர் இல்லாத சமயத்தில் தன்னிடம் பேசிவிட்டு அவன் வந்ததும் ராஜு முகத்தை முன்புறம் திருப்பிக் கொண்டது ஆண்மையோ தைரியமோ நிறைந்த செயலாக அவளுக்குத் தோன்றவில்லை.
மோகினிதான் சாந்தினி என்ற உண்மை தெரிந்த பின் அதை மனைவி விடமிருந்து மூடி மறைப்பதே மனைவிக்குச் செய்யும் துரோகம் என்று நினைக்கும் அளவுக்குப் பண்புள்ளவர், டிரைவரின் முன் ஏன் இப்படிப் பயப்பட வேண்டும் என்று புரியாமல் நின்றாள்.
‘மனிதனின் மனம் பல் பகுதிகளால் ஆனதா? ஒரு பகுதியில் உறுதியும் மறு பகுதியில் பலவீனமும் இருக்குமா? ஒரு பக்கத்தில் சீலமும் வேறு ஒரு பக்கத்தில் மட்டமான ஆசைகளும் நிறைந்திருக்குமா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
ஒரு விஷயத்தில் ஏற்பட்ட துணிவு இன்னெரு விஷயத்தில் ஏன் ஏற்படுவதில்லை?
சில நாவல்கள், கதைகளில் வருவது போல் பூராவும் நல்லவர்கள், பூராவும் கெட்டவர்கள் இருக்க முடியாது என்பதை உணர்ந்தாள்.
மனம் என்பது ஒரு கலப்படம். நல்லதும் கெட்டதும், துணிவும் அச்சமும், கொடுமையும் கலந்த ஒரு கருணையும், கலப்படம். அந்த ஒரு கலவையை நாம் பிறந்த குழ்நிலை, வளரும் குழ்நிலைதான் நமக்கு ஏற்படுத்துகிறது. அதுவே மொத்தத்தில் கர்மா என்ற முத்திரையில் தம்முடைய ஒரு பகுதி ஆகிறது. இம்மாதிரி கலப் படமான கர்மா ஒவ்வொரு பிறப்பிலும் ஏற்பட்டு பிறப்பிலும் தொடர்ந்து, நம்மை ஆட்டி வைக்கிறதா? நன்மையும் தீமையும் இன்பமும் துன்பமும் மாறி மாறி அனுபவிக்கக் நாம் காரணமாக இருப்பவை நம் மனத்திலுள்ள பல பொருத்தமில்லாத பகுதிகள்தானா? அப்படி யென்றால் யாரைத்தான் எதற்குத் தான் குற்றம் சொல்ல முடியும்!
அயோக்கியன் என்பது அவனவன் குற்றமல்ல. தலைவலி, ஜூரம், என்னும் வியாதிகள் மனிதனை வந்தடைவது போல் குணங்களும் அவனையறியாமல் அவனை வந்தடைகின்றனவா இப்படி?”
சிந்திக்கச் சிந்திக்க அவளுக்கு அவன் மீதும் உலகத்தின் மீறும் வெறுப்பு ஏற்பட்டது. சில வினாடிகளுக்கு முன் இரவல் வைர நகை, பட்டுப் புடவையில் தன் அழகை நினைத்து மகிழ்ந்த மோகினிக்கு இப்போது அவள் இருக்கும் நிலை திருப்தியளிக்கவில்லை.
உடுமலைப்பேட்டையில் கல்யாண வீட்டுக்கு வந்ததும் இன்னும் பெரிய சோதனைகள் அவளை எதிர் நோக்கின.
விஜயாவின் பந்துக்கள் பெரிய ஒரு சமூகமே அந்தக் கல்யாணத்தில் கூடியிருந்தது. ராஜுவின் தந்தை வேங்கடபதி அந்தச் சமூகத்தில் பெரிய புள்ளியாக வாழ்ந்தவர். ராஜுவின் சிறிய மாமனூர் வீட்டுக்கல்யாணம், விஜயாவின் பிறந்த வீட்டுக் கல்யாணம். அந்தக் கல்யாணத்துக்கு ராஜு செல்லும் போது தன் மனைவி இல்லாமல் வந்திருப்பதைப் பற்றி அவனிடம் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. விஜயாவின் நிலையை உணர்ந்த பந்துக்கள் அவள் வந்தால் தான் ஆச்சரியப்படுவார்கள்.
விஜயாவுக்குப் பதில் விஜயாவை விட அழகான இளமையான ஒரு பெண் விஜயாவின் கணவனோடு கல்யாணத்துக்கு வந்திருந்தது அங்குள்ளவர்களின் கவனத்தைக் கவர்ந்தது.
குழந்தை கௌரிக்குத் துணையாக ஒரு வீட்டு வேலைக்காரி வருவதில் தவறில்லை. அந்த வேலைக்காரியின் அழகுதான் பேச்சைத் தூண்டியது. அழகோடு அவள் விஜயாவின் வைர நகைகளை அணிந்து கண்ணையும் கருத்தையும் பறிக்கும் வகையில் ஒரு தேவ மாது போல் பந்தலில் நுழைந்ததும் எல்லோர் கவனமும் ராஜு மீதும், மோகினி மீதும்தான் நின்றன.
உறவினர்கள் எல்லோரும் கௌரியிடம் மோகினி யார் விசாரிக்கத் தொடங்கினர்.
கௌரி “என் டீச்சர்,” என்று சொன்னாள். வயதான ஒரு பெண் பிள்ளை, “உனக்கு டீச்சரா, இல்லை உங்கப்பாவுக்கு டீச்சரா?” என்று வேடிக்கையாகக் கேட்டதன் அர்த்தம் கௌரிக்குப் புரியவில்லை.
வெளிப்படையாக எல்லோரும் மரியாதையாக நடந்து கொண்டனர். ஆனால் அங்குள்ளவர்கள் ராஜுவையும் மோகினியையும் ஒரு மாதிரியாகப் பார்ப்பதை ராஜு உணர்ந்தான்.
‘விஜயா ஏன் இப்படி யோசனையில்லாமல் மோகினியையும் கூட அனுப்பி வைத்தாள்? அவளுக்குள்ள வழக்கமான பொறாமைக் குணம் இருந்திருந்தால் கல்யாண வீட்டில் நிகழக் கூடிய விளைவுகளை முன்பே யோசித்திருப்பாள்; மோகினியைத் தனியாக என்னுடன் அனுப்புக் கனவிலும் இசைந்திருக்க மாட்டாள்’.
மோகினி கிணற்றில் குதித்துக் கௌரியைக் காப்பாற்றியதிலிருந்து விஜயாவின் போக்கில் ஒரு மாறுதல்.
என்றுமே அவள் சுபாவத்தில் இல்லாத கனிவு, அன்பு இருந்தது…
ராஜு முகூர்த்தம் முடிந்து சாப்பிட்டவுடனே அங்கிருந்து புறப்பட்டுவிடுவது என்று தீர்மானித்தான்.
கல்யாணத்துக்கு வந்திருந்த மைனர்கள் காசு வைத்துச் சீட்டாட ராஜுவை அழைத்தனர். மூன்று சீட்டு ஆட்டம்!
ராஜுவால் மறுக்க முடியலில்லை. ஆடவும் பிடிக்கவில்லை. ஆனாலும் ஆட உட்கார்ந்தான். அன்று அவனுக்குத் தொடர்ந்து வெற்றி. ஒவ்வொரு முறையும் வெல்லும் போது ராஜு வின் கையிலிருந்த சீட்டு மூன்று ராணியாக இருந்தது.
சீட்டாடிக் கொண்டிருந்த ஒருவன், “ராஜு! நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, மூன்று ராணியாக அடிக்கிறேடா.” என்றான்.
அடுத்தவன் கிண்டலாக, “ராஜுவுக்கு எப்பவுமே லேடிஸ் ‘லக்’ உண்டு. அதுதான் மூணு க்வீன் திரும்பத் திரும்ப வருகிறது. நமக்குத் தெரிந்தவரை இரண்டு ராணி உண்டு. மூன்றாவது யாரோ?” என்று சொல்லி விட்டு வெற்றிலைக் காவி படிந்த பற்களைக் காட்டினான்.
ராஜு அடுத்த ஆட்டத்திலேயே எழுந்துவிட்டான். சாப்பிட்டவுடனே கௌரியையும் மோகினியையும் அழைத்துக் கொண்டு கோயம்புத்தூரை நோக்கிப் புறப்பட்டான்.
மோகினி காரில் ஏறும்போது கல்யாண வீட்டு வெளிப் புறத்தில் கூட்டமாக ஆண்களும் பெண்களும் நின்று கொண்டு அவர்களைக் கவனிப்பதைப் பார்த்தாள். மோகினியின் உள்ளம் துடித்தது.
மாலை சுமார் மூன்று மணிக்கே கோயம்புத்தூர் பங்களாவுக்கு வந்து சேர்ந்தனர்.
விஜயா அன்று இரவுதான் தன் கணவன் வரவை எதிர்பார்த்தாள். அவ்வளவு சீக்கிரம் திரும்பிவிட்டதன் காரணம் அவளுக்குப் புரியவில்லை. குழந்தை கௌரியாவது சும்மா இருந்திருக்கலாம்.
கௌரி, “அம்மா, எனக்குக் கல்யாணத்திலேயே இருக்கலாம் போலிருந்தது அம்மா! அப்பாதான் அவசரப்படுத்திக் கூட்டிட்டு வந்துட்டார்,” என்று முறையிட்டாள்.
விஜயா கணவனை, “ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் வரக் கூடாதோ?” என்று கேட்டாள்.
“எனக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த புஸ்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான் ராஜு.
மோகினியும் புடவை, நகைகளைக் களைந்துவிட்டு தன்னுடைய ஆடையை உடுத்திக் கொண்டு மாடிக்கு வந்தாள். அவள் கையில் நகைகளும் நீலப் பட்டுப் புடவையும் இருந்தன. புடவையைப் பீரோவில் வைத்துவிட்டு நகைகளை இரும்புப் பெட்டியில் வைத்தாள்.
மோகினி விஜயாவிடம் திரும்பி, “அம்மா, நகையெல்லாம் இரும்புப் பெட்டியில் வைத்துவிட்டேன்,” என்று சொல்லிவிட்டு விஜயாவின் முகத்தைப் பார்த்தாள்.
விஜயா மோகினியிடம், “என்ன சாந்தினி, உனக்குக் கல்யாணம் பிடிச்சிருந்துதா?” என்று கேட்டாள்.
சாந்தினி தயங்கிவிட்டு, “அம்மா, நீங்க வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்,” என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள்.
மாடி அறையில் மௌனம் நிலவியது. மோகினி மெள்ள கணவனையும் மனைவியையும் அறையில் தனியே விட்டு நகர்ந்தாள்.
மோகினி வெளியே நகர்ந்ததும், அதுவரையில் சிந்தித்தபடி பேசாமல் இருந்த விஜயா கணவளை நோக்கி, “ஏன், கல்யாணத்தில் என்ன நடந்தது?” என்று கேட்டாள்.
ராஜு சற்று வெப்பத்துடன், “நீ கௌரியோடு அவள் டீச்சரையும் அனுப்பினது சரியில்லை. கல்யாணத்துக்கு வந்திருந்தவங்க அவளை ஒரு ஒரு மாதிரியாகப் பார்த்தாங்க,” என்றான்.
விஜயாவுக்கு விஷயம் புரிந்துவிட்டது.
“கௌரியின் டீச்சர்தான் சாந்தினின்னு சொல்றதுதானே?”
“யாராவது ஏதாவது என்னை நேரில் கேட்டால் தானே பதில் சொல்ல? ஒன்றும் கேட்காமல் அவர்களே தங்கள் மனத்துக்குள்ளே முடிவு பண்ணிட்டாங்க,” என்று கூறிவிட்டுக் குளிக்கும் அறைக்குள் சென்றான்.
விஜயா சிந்தித்தபடி இருந்தாள்.
அத்தியாயம்-37
ராஜு உடுமலை பேட்டைக் கல்யாணத்தில் நிகழ்ந்ததைக் கூறியதும் விஜயாவுக்குக் குழப்பம்தான் ஏற்பட்டது. விஜயாவுக்கு அது புரியாத விஷயமில்லை. விஜயாவே ஒரு வாரத்துக்கு முன்பு இதே போல்தான் நடந்து கொண்டிகுப்பாள். அவள் மனமும் அப்போது சாந்தினியைப் பொறுத்த வரையில் சந்தேகப் படாமல் இல்லை. கடந்த சில நாட்களாகத்தான் விஜயாவின் சுபாவத்தில் மாறுதல் ஏற்பட்டது. அந்த மாறுதல் ஓர் அடிப்படை மாறுதலாக இருந்தது.

அன்று பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருந்த கௌரி கால் தவறிக் கிணற்றில் விழவும், அதை மாடி பால்கனியிலிருந்து பார்த்த விஜயா தன்னையுமறியாமல் “கௌரி!” என்றலறி, சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து நின்றதும், அதே வினடியில் சாந்தினி ஓடி வந்து கிணற்றில் குதித்ததும் விஜயாவின் மனத் திரையில் அழுத்தமாகப் பதிந்த காட்சிகள். மூர்ச்சை தெளிந்து எழுந்த பின் விஜயாவுக்கு எல்லாம் புதிதாக இருந்தன. அவளுடைய ஆசாபாசங்களையெல்லாம் அவள் மூர்ச்சையாகிக் கிடந்த இடைவெளியில் கடவுள் அவள் மனத்தில் புகுந்து மாற்றி அமைத்துவிட்டது போல் தோன்றியது. அதிர்ச்சி ஓரளவு விஜயாவின் கால்களுக்கு உணர்ச்சியைக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவள் உள்ளத்திலிருந்து வெறுப்பு, பொறாமை முதலிய உணர்ச்சிகளையே போக்கி யிருந்தது. விஜயா முதன் முறையாக உலகத்தைக் குளிர்ச்சி நிறைந்த பார்வையோடு பார்த்தாள். வெறுப்பின் வெப்பம் அடங்கியிருந்தது. சாந்தினியின் மீது அன்பு ஏற்பட்டது.
கணவனிடம் எப்போதுமே அவளுக்கு ஆசை இருந்தது. ஆனால் அந்த ஆசையில் சந்தேகமும் குற்றம் காணும் தன்மையும் கூடக் கலந்து குடியிருந்தன. இப்போது அதே ஆசை ஒருவித அமைதியான கனவு நிறைந்த ஆசையாக மாறியிருந்தது.
முன்பெல்லாம் விஜயா, இரக்கத்துக்குப் பாத்திரமானவள் தான் ஒருத்தி தான் என்று நினைத்துத் தன் தவறுகளுக்கெல்லாம் மற்றவர்கள் பொறுமை காட்டவேண்டுமென எதிர்பார்த்தாள். முன்பு சாந்தினி அழகாக இருந்ததே அவளுடைய குற்றமாக இருந்தது. ஆனால் இப்போது சாந்தினியின் அழகு குற்றமாகத் தோன்றவில்லை. சாத்தினியையும் அவள் கணவனையும் சேர்த்து உடுமலைப்பேட்டையில் உள்ள அவள் பந்துக்கள் பேசியதை சாந்தினிக்கு இழைத்த அவமானமாகவே நினைத்தாள். பரிகாரமாக சாந்தினிக்கு ஏதாவது ஒரு விதத்தில் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.
சாந்தினி வந்ததிலிருந்து விஜயாவின் வீட்டில் நல்லதே நடக்கிறது. அவளைச் சாமியார் அழைத்து வந்த தினமே டாக்டர் அவளுடைய கார்டியோ கிராம் ரிபோர்ட் நல்லபடி இருக்கிறது என்று சொன்னார். குழந்தைக்கு உயிரையே கொடுத்தாள். இப்போது விஜயாவின் காலுக்குப் பலம் வந்துவிட்டது. இன்னும் மூன்று நான்கு மாதங்களில் கைப்பிடிச் சுவரைப் பிடித்து நடக்கவும் முடியும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்…
இவ்வாறு சிந்தனையில் மகிழ்ந்தாள் விஜயா. அடுத்த வினாடியே மகிழ்ச்சி மறைந்தது. அவளுடைய இருதயம் ஏற்கெனவே இருமுறை தாக்கப்பட்டிருந்ததால், மூன்றாவது முறை ஒரு ‘அட்டாக்’ வந்தால் பிழைப்பது கடினம் என்று டாக்டர் சொன்ன வார்த்தைகள் விஜயாவின் ஞாபகத்துக்கு வந்தன.
தினமும் டாக்டர் வந்து இஞ்ஜெக்ஷன் கொடுத்து, அவளது இருதயத்தைப் பரிசோதித்துவிட்டுச் செல்வது வழக்கம். இன்று அவர் வந்தபோது இருதயத் துடிப்பு பலவீனமாக இருப்பதாகவும் உடலை அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் படியும் சொன்னார்.
விஜயா, “என்ன டாக்டர், இப்படிச் சொல்றீங்க? திடீரென்று என்னால் கால்களை அசைக்க முடிந்தது, கால்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பழைய படி ஆக்கலாம் என்றால் அதுவும் கூடாதென்கிறீர்களே!” என்று கடிந்து கொண்டாள்.
“இல்லையம்மா. எந்த அதிர்ச்சி உங்கள் கால்களுக்குச் சலனத்தைக் கொடுத்ததோ, அதே அதிர்ச்சிதான் உங்கள் இருதயத்தையும் தாக்கிப் பலவீனப் படுத்தியிருக்கிறது. மறுபடியும் அது சாதாரண நிலைக்கு வரும் வரையில் நீங்கள் எந்த வீதமான சிறு உழைப்பிலும் ஈடுபடக்கூடாது”. என்று சொல்லிலிட்டுச் சென்றார், டாக்டர்.
அவர் சென்ற பின் மோகினி மாடிக்கு வந்து விஜயாவுக்கு முகம் கழுவித் தலைவாரிப் பொட்டிட்டுவிட வந்தாள்.
டாக்டர் சொன்னதை விஜயா மோகினியிடம் கூறினாள்!
“என்ன சாந்தினி! டாக்டர்கள் சொல்லுவதெல்லாம் பூராவும் உண்மையாக இருக்குமா? அவர்களுக்குப் இருக்க புரியாத விஷயங்கள் இருக்க முடியாதா? எனக்கு மாரிலே வலியோ ஆயாசமோ இல்லை. ஆனாலும் என்னை ஒன்றும் செய்யக் கூடாது என்று எச்சரிக்கிறார்கள். குழந்தை கௌரி அப்படித்தான் ஷோரனூர் டாக்டர் எச்சரித்து வைத்திருந்தார். ஆனால் கௌரி படித்த பள்ளிக்கூடத்தில் மோகினி என்று ஒரு டீச்சர் இருந்தாள். அந்த மோகினி டீச்சர் தான் கௌரிக்குத் தைரியம் கொடுத்து அவளை நடக்கச் செய்தாள். அப்போது நான் கூட அந்த மோகினி என் குழந்தையைக் கொன்று விடுவாள் என்று பயந்தேன். என் பயம் அவ்வளவும் தவறு என்று ஆகிவிட்டது. என் விஷயத்திலும் டாக்டர்கள் அப்படித் தான் தவறாக எச்சரிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.”
உடனே மோகினியின் மனத்தில் “இப்போதாவது நான்தான் அந்த மோகினி டீச்சர் என்று சொல்லி விடலாமா?’ என்று தோன்றியது. ஆனால் துணிவு வரவில்லை. “குழந்தை விஷயம் வேறு, பெரியவர்கள் விஷயம் வேறு, அம்மா. வளரும் குழந்தைகளின் உடலிலுள்ள குற்றங்களை இயற்கை, தானே சரி செய்துவிடலாம். ஆனால் பெரியவர்களுக்கு அதுமாதிரி ஏற்பட வாய்ப்பு இல்லை. அதனாலே நீங்க டாக்டர்கள் சொல்கிறபடி ஜாக்கிரதையா இருக்கிறதுதாம்மா நல்லது,” என்று மட்டும் சொல்லி விட்டு நிறுத்திக் கொண்டாள்.
“என்ன சாந்தினி! கால்களை அசைக்காமல் பிறத்தியார் கை பார்த்து எத்தனை நாள் நான் வாழ்வது? இந்தப் படுக்கைக் சிறையிலிருந்து எப்போ நான் விடுதலையடைவது? இந்த நாற்காலியிலிருந்தபடி என் உயிர் போயிடுமோ என்று பயமாயிருக்கிறது.” என்று கண்கள் கலங்கக் கூறினாள்.
விஜயாவின் உணர்ச்சி ததும்பிய வார்த்தைகளைக் கேட்டதும் மோகினிக்குப் பரிதாபமாக இருந்தது. விஜயாவின் அருகில் உட்கார்ந்து அவளை அன்போடு தடவியபடி, “இத்தனை வருஷம் பொறுத்து இருந்திருக்கிங்களே, அம்மா. இன்னும் இரண்டு மாசம் பொறுங்கள். இருதயத்திற்கு பலம் வந்த பின்பு நீங்க நடக்க ஆரம்பிக்கலாம். வெண்ணெய் திரண்டு வர்றப்போ அவசரப் படாதீங்கம்மா,’ என்றாள்.
“சாத்தினி! நீ இந்த வீட்டுக்கு வத்த புதிசிலே தான் எவ்வளவோ உன்னைத் தப்பாய்ப் பேசியிருக்கேன், ஒரு நாள் உன் கன்னத்திலே கூட அடிச்சிருக்கேன். இருந்தாலும் நீ என்னை வெறுக்காமல் என் கூடப் பிறந்த சகோதரி மாதிரி என்னிடம் பிரியமா இருக்கிறாயே! எங்க பந்துக்கள் எல்லாரும் எங்கிட்டே அன்பு காட்டுவாங்க. அந்த மரியாதை என் கணவரின் பணத்துக்காக, என் அந்தஸ்துக்காக, ‘இந்த நொண்டிக்குப் பாரடி, எவ்வளவு ஆணவம்!’ என்று பேசுவாங்க, வேறிடத்திலே. நான் உண்மையான அன்பையே கண்டதில்லை,” என்று சொல்லி வருந்தினாள்.
“மற்றவர்கள் அன்பு எதுக்கம்மா? அவர்தான் உங்கள் மேலே உயிரையே வெச்சிருக்காரே!” என்று ராஜுவைக் குறிப்பாக உணர்த்தினாள் மோகினி. விஜயா மோகினியை ஒரு முறை பார்த்துவிட்டுச் சில வினாடிகள் பேசாமல் இருந்தாள்.
“அவர் அன்பை வெறுமே அன்புன்னு சொல்லக் கூடாது சாந்தினி! அவர் ஆசை ஒரு தெருப்பு மாதிரி. கல்யாணமாவதற்கு முன்னாடியே அவரை நான் சந்திச்சிருக்கேன், அப்போ எல்லாம் நான் ரொம்ப அழகா இருப்பேன், சாந்தினி. உன் மாதிரிதான் இருப்பேன். இந்த உலகத்திலே எந்தப் பெண்ணும் நான் அவரோடு இன்பமாய் இருந்த மாதிரி எந்த ஆடவனோடும் இருந்திருக்க முடியாது. அழகு, பணம், பலம் மூன்றும் நிறைஞ்ச கணவர் எனக்குக் கிடைத்தார். அழகு, பணம் மற்றவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அவருக்குள்ள வலிமை இந்த உலகத்திலே வேறு யாருக்கும் இருக்காது” என்று சொல்லி விஜயா பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
அவள் ராஜுவின் வலிமையைப் பற்றிப் பேசும் போது மோகினியின் உடலில் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது. தன் மனத்தில் ஏற்பட்ட குழப்பத்தை, வெப்பத்தை, விஜயா புரிந்து கொள்வாளோ என்று பயந்தாள் மோகினி.
ஆனால் விஜயாவின் மனம் கடந்த காலக் கனவுகளில் சென்று கொண்டிருந்தது. “சாந்தினி! நான் அவரோடு அடைந்த இன்பத்தைக் கண்டு தெய்வத்துக்கே பொறுக்கவில்லை என்று தான் நினைகிறேன். அதனால்தான் என்னை இப்படி ஆக்கி விட்டது. அவ்வளவு உடல் வலிமையுள்ளவர் எப்படிப் பெண் இன்பத்தைத் துறந்து வாழ முடியும் என்ற பயம்தான் என்னை ஆத்திரக்காரியாகச் செய்து விட்டது. அவர் வேறு பெண்ணை மனத்தால், நினைப்பது கூட என்னால் பொறுக்க முடியாது, சாந்தினி! எத்தனை முறை அவரைச் சொற்களால் வதைத்திருப்பேன் தெரியுமா? எவ்வளவு தரம் அவரை வீணகச் சந்தேகப்பட்டிருப்பேன் தெரியுமா! இதெல்லாம் ஏன் உன்கிட்டே சொல்றேன் என்று எனக்கே புரியவில்லை,” என்று சொல்லியிட்டு மோகினியைக் பார்த்தாள். அவள் தலை குனிந்தபடி இருந்தாள். விஜயா, “அப்போப் பட்ட நல்லவரைக் கல்யாண வீட்டிலே இருக்கிற என் சொந்தக்காரர்கள் தவறாய்ப் பேசினாங்க என்றால் அது எவ்வளவு பெரிய கொடுமை! நீயே யோசித்துப் பாரு!” என்று சொன்னாள்.
மோகினிக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை, ஒன்றும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. “அம்மா, நான் அந்தக் கல்யாணத்துக்குப் போயிருக்கக் கூடாது. அப்படிப் போயிருந்தாலும் உங்களுடைய வைர நகைகளை அணிந்து போயிருக்கக் கூடாதம்மா,” என்றாள்.
விஜயா பதில் பேசாமல் படுக்கையில் படுத்துக் கொண்டாள். மோகினி அறையை விட்டு நகரப் போனாள், விஜயா திடீரென்று, “நில்லு சாந்தினி!” என்று கூப்பிட்டாள். படுக்கையடியில் இருந்த ஒரு தோல் பெட்டியை எடுக்கச் சொன்னாள் மோகினியிடம். பெட்டியைத் திறந்தாள். அதில் ஒரு ரோஸ் கலர் சேலையும், ப்ளவுசும் இருந்தன. அந்தச் சேலையின் தலைப்பிலும் உடலிலும் ஜரிகை மின்னியது. விஜயா சேலையையும் ப்ளவுசையும் படுக்கையில் வைக்கச் சொன்னாள். ”சாந்தினி, இந்தச் சேலையை மாமனார் என் தேனிலவுக் கென்று தனியாகக் கொள்ளே காலத்திலே ஆர்டர் கொடுத்துத் தயார் செய்யச் சொன்னார். இதை நான் அணிந்து நடந்து வந்தால் என் கணவர் அப்படியே சொக்கி விடுவார். சாந்தினி! மங்கிய ஒளியில் பார்த்தால் நிலா வெளிச்சத்தையே புடவையாக நெய்தது போல் தோன்றும்!”
“கண்களையும் கருத்தையும் பறிக்கும் படியாத்தாம்மா இருக்கு,” என்றாள் மோகினி. இந்தச் சேலையை ஒரு நாளாவது நாம் அணிய வேண்டும் என்று பெண் இனத்துக்கென்றே இயற்கையாக ஏற்பட்ட ஆசை ஆவல் கண்களில் வெளிப்பட்டது.
”இதை நான் வெளியே எடுக்கிறதில்லை. ஏன் தெரியுமா? இதை அவர் பார்த்தாரானால் அவருக்கு இன்பமாக கழிந்த கடந்த கால நினைவு எல்லாம் தோன்றும், அவர் சித்தம் குழம்பும். இதை நான் என்றைக்குமே அணியப் போறதில்லே. அதனாலே இதை உனக்குக் கொடுத்திடறேன்!”
”எனக்காம்மா? இவ்வளவு விலையுயர்ந்த சாரியா?” என்று கேட்டாள் மோகினி.
”என்னிக்குமே இந்த வீட்டிவே இருக்கப் போறியா நீ? ஒரு நாள் திருமணமாகி வெளியே போக வேண்டியவள் தானே? அப்போ இதைக் கட்டி கொள்ளேன்,” என்று கெஞ்சிய மாதிரி சொன்னாள் விஜயா.
மோகினி அந்தச் சேலையை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி இருந்தாள். அதன் கவர்ச்சி ஓர் உயிருள்ள ஒவியத்தின் கவர்ச்சி போல் இருந்தது. அந்தக் கவர்ச்சியில் பயங்கரம் பிரதி பலித்தது. அதைக் கையில் தொட்டதும் அது மோகினியின் உடலில் சிறு நடுக்கத்தையே கொடுத்தது. வீடுகளுக்கும் வைரங்களுக்கும் ராசி உண்டு என்று சொல்லுவார்கள். அது மாதிரி இந்தப் புடவைக்கும் ராசி இருக்குமோ? அப்படி அதற்கென்று ஒரு தன்மை இருந்தால் அது விபரீத ராசியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.
மோகினி அதை எடுக்கவே தயங்கினாள். “எடுத்துக் கொள், சாந்தினி! எடுத்து உன் பெட்டியிலே வை. நீ இந்த வீட்டிலே இருக்கிற வரையில் அணியவேண்டாம். நான் இந்தச் சேலையை உனக்குக் கொடுத்த விஷயம் அவருக்குத் தெரியவே வேண்டாம்!” என்றாள் விஜயா.
மோகினி அதை எடுத்துக் கொண்டு படிகளில் இறங்கித் தன் அறைக்கு வந்தாள். சேலையையும் பிளவுசையும் பெட்டியில் வைத்து மூடினாள். தன் கணவனைப் பற்றிய ரகசியமான விஷயங்களைக் கூட விஜயா தன்னிடம் சொன்னது, மோகினிக்கு வேதனையையே கொடுத்தது. விஜயாவின் மாறுதல் திடீரென்று ஏற்பட்டதால் அது எவ்வளவு நாள் நீடிக்குமென்று பயந்தாள்.
ஏதாவது தக்க காரணத்தைச் சொல்லி, அந்த வீட்டை விட்டுப் போய்விட வேண்டும். என்ன காரணம் சொல்லுவது? மோகினி யோசித்தாள். இப்போது விஜயா தன்னை ஒரு சகோதரி போல் நினைக்கிறாள். விலகிக் கொள்ள அனுமதிக்க மாட்டாளே? என்ன செய்வது! நாராயணியம்மாளுக்கு உடல் நிலை சரியில்லை என்று ஒரு சாக்குச் சொல்லிவிட்டு ஊருக்குப் போய்விடலாமா? ஷோரனூர் சென்ற பின் திரும்பாமலே இருந்துவிட்டால்? அது ஒரு நாளும் வெற்றியடையாது. கடிதம் எழுதியோ ஆள் அனுப்பியோ விஜயா தன்னை மறுபடியும் வேலைக்கு வரும்படி அழைப்பாள். ஊருக்குச் சென்றபின், ‘உங்களிடம் சாந்தினி என்ற பெயருடன் பழகியவள் மோகினி டீச்சர்தான்’ என்ற உண்மையைக் கடித்தான் மூலம் தெரிவித்து விட்டால் என்ன? அதுவும் சரியெனத் தோன்றவில்லை. எல்லோரையும் வெறுத்து, சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஜெயாவின் மனத்தில் இப்போதுதான் மனித இனத்தின் மீதே நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கை போய், அவள் பழைய விஜயா ஆகிவிடுவாள் என்ற பயமும் மோகினிக்கு ஏற்பட்டது. காலமும் கடவுளும் தான் இந்தத் தர்ம சங்கடத்திலிருந்து தனக்கு விடுதலையளிக்க வேண்டும். என்று நினைத்தாள்.
கடவுள் வேறு திட்டங்களை வகுக்கிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை.
அன்று மாலை நிடீரென்று செய்தி வரவே ராஜு நீலகிரியில் குன்னூருக்கு அருகிலுள்ள தன் எஸ்டேட்டைப் பார்க்கப் போய்விட்டான்.
அவன் வீட்டில் இல்லாததே மோகினிக்கு நல்லதாகப் பட்டது. ஆனால் குன்னூருக்குச் சென்ற ராஜுவின் மனத்தில் நிம்மதியே இல்லை. உடுமலைப் பேட்டைக் கல்யாணத்தில் அவனையும் மோகினியையும் சேர்த்துக் கற்பனை செய்த அவதூறுகள் அவன் மனத்தைக் குழப்பின. ஆதாரமில்லாத அவதறுகளாயிருந்தால் பரவாயில்லை, மறந்து விடலாம். மோகினியைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனத்தில் ஏற்படும் சலனம். அவனை வேதனைக்குள்ளாக்கியது. தன்னை மறக்கக் கையில் எடுத்து வந்த டி. எச். லாரன்ஸின் ‘லேடி சாட்டர்லீஸ் லவர்’ என்ற புத்தகத்தைப் படித்தான்.அந்தப் புத்தகத்தில், கதாநாயகி வேலைக்காரனின் குடிசைக்குச் சென்று கூச்சமில்லாமல் அவனிடம் தன் உடலை அர்ப்பணிக்கும் காட்சியைப் படித்தான். அதைத் திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. ‘உடல் பசிதான் காதலின் முடிவு நிலை, உடலையும், அதன் பசியையும் மறந்த காதல் இருக்க முடியாது’, என்ற லாரன்சின் தத்துவம் சரிதானா என்று யோசித்தான், குன்னூரின் குளிரில், கம்பளிகளின் அடியில் படுத்திருந்த அவனுக்கு அவன் உடலின் வெப்பம் ஆசைகளின் தாக்குதலால் இன்னும் அதிக வெப்பமாகத் தோன்றியது.
அன்று பிற்பகல் அடுத்த பங்களாவில் தங்கியிருந்த இரண்டு ஐரோப்பியர்கள் அவனை விருந்துக்கு அழைத்தனர். அவர்கள் தேயிலை எஸ்டேட்டில் வியாபார நிமித்தம் வந்தவர்கள்.
அவர்கள் அளித்த மதுவை முதலில் குடிக்க மறுத்தான். மறுப்பது மரியாதை இல்லை என்று அவனுடைய மானேஜர் வற்புறுத்தவே மரியாதைக்காகக் கொஞ்சம் குடித்தான். அவன் இருந்த குழம்பிய நிலையில், பேச்சுப் போக்கில் இன்னும் கொஞ்சம் குடித்தான், மனத்திலுள்ள சுமை படிப்படியாக இறங்குவது போல் தெரிந்தது. உணவு அருந்திவிட்டுத் தன் ‘காட்டேஜுக்கு’ வந்து படுத்தான். அயர்ந்து தூங்கினான்.
கண் விழித்ததும் மணி ஏழு ஆகி விட்டதை உணர்ந்தான். அவன் உடலில் ஒரு மதமதப்பு இருந்தது. அவன் மனச் சாட்சியின் குரல் அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கவில்லை. போதையுடன் படுத்துத் தூங்கிய போது அவன் மனத் திரையில் ஏற்பட்ட கனவுகளின் தொடர்ச்சியோ என்னவோ, விழித்தெழுந்ததும் அவனுக்கு மோனியின் நினைவுதான் வந்தது. நீலப்’ புடலையில், வைர நகையணித்து காரின் பின் சீட்டில் உட்கார்த்திருந்த உருவம்தான் அவன் கண்முன் நின்றது.
ஓர் அசுர சக்தி அவனைக் கோயம்புத்தூருக்குச் செல்லும்படி தூண்டியது. இரவு ஆகிவிட்டதே, மலை வழியாயிற்றே என்று கூட அவன் நினைக்கவில்லை. உடனே காரை எடுத்துக்கொண்டு கோயம்புத்தூரை நோக்கிப் புறப்பட்டான். காந்தம் ஊசியைத் தன்னிடம் இழுப்பது போல் கோயம்புத்தூர் அவனை இழுத்தது. வேலை முடியவில்லையே என்று மானேஜர் அவனை தடுக்க முயன்றதற்கும் பலனில்லை. வியாபாரம் அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றவில்லை ராஜுவுக்கு. இவ்வளவு வருஷங்களாக அணைபோட்டுத் தடுத்திருந்த உணர்ச்சி கள் வெள்ளமாக எழுந்து தாக்கின. இருளில் விறைத்துப் பார்த்தபடி பறக்கும் காரில் அமர்ந்திருந்தான்.
கார் மேட்டுப்பாளையம் வரும் பேய்மழை பெய்து கொண்டிருந்தது. இடியோசையும் மின்னல் ஒளியும் கண்களைப் பறித்தன. டிரைவர் கூட, “மேட்டுப்பாளையத்தில் தங்கி விடலாமா சார்?” என்றான். ஆனால் ராஜுவின் மனத்தில் வீசிய புயல் இயற்கையின் புயலைவிட வலிமை மிகுந்து இருந்ததால் அவன் மழையைப் பாராட்டாமல், “பரவாயில்லை. கோயம்புத்தூருக்கு ஓட்டு.” என்றான்.
மேட்டுப்பாளையத்தைத் தாண்டிக் காரமடை வரும்போது வழியில் ஒரு பள்ளத்தில் வெள்ளம் போய்க் கொண்டிருந்தது. வண்டி நின்றுவிட்டது. கொட்டும் மழையில் குடையின் உதவி கூட இல்லாமல் டிரைவர் பானெட்டைத் திறந்து டார்ச் லைட்டின் உதவியால் வண்டியைப் பழுது பார்க்கலானான். ராஜு “இன்னும் ரிப்பேர் முடியவில்லையா?” என்று டிரைவரை விரட்டிக் கொண்டேயிருந்தான்,
அந்த டிரைவர் வாழ் நாளிலேயே எஜமான் இவ்வாறு விரட்டிப் பார்த்தில்லை, ‘இவருக்கு இன்று என்ன வந்துவிட்டது? ஏன் இப்படித் துடிக்கிறார்?’ என்று ஆச்சரியப்பட்டான்.
அங்கே-
கோயம்புத்தூரில் பேய் மழையுடன் காற்றும் அடித்தன. மோகினி மாடி பால்கனியின் ஜன்னல்களையெல்லாம் மூடினாள். இடிச் சத்தம் கேட்டு, குழந்தை கௌரி நடுங்கினாள். மோகினி அவளருகில் உட்க்கார்ந்து அவளை தூங்கச் செய்தாள். பிறகு விஜயாவிடம், “அம்மா, நான் இங்கேயே உங்கள் பக்கத்தில் துணைக்குப் படுத்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்டாள்.
விஜயா, “வேண்டாம் சாந்தினி. நீ போய்ச் சாப்பிட்டுவிட்டு உன் அறையிலேயே படுத்துக் கொள்”, என்று கூறிவிட்டாள்.
கிழே இறங்கி வந்தாள் மோகினி. காற்றில் விளக்குகள் ஆடிக் கொண்டிருந்தன. அதனால் ஹாலிலுள்ள நிழல்களும் ஆடுவது போல் தெரிந்தது. சாப்பிட்டு விட்டுத் தன் அறைக்கு வந்தாள். மின்னனும் மழையும் இன்னும் அதிகமாகி இருந்தன.
மோகினியைப் புரியாத ஒரு பயம் பிடித்துக் கொண்டது.
– தொடரும்…
– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.