மறக்க முடியுமா அந்த மாமன்னன் இருப்பை?

இடறிச் சரித்து விட்டுப் போகும் வாழ்க்கையில் எதற்கும் நிலை குலையாத அப்பழுக்கற்ற பளிங்கு , மனசோடு அப்பாவை தரிசிக்க நேர்ந்தது ஒரு கால பொக்கிஷம் தான் இன்று நேற்றல்ல ஒரு யுக புருஷனாக அவர் இருக்கையிட்டு வாழ்ந்து கழித்து விட்டுப் போன அந்த சிம்மாசனம் இன்று வரை காலியாகவே கிடக்கிறது அதற்குத் தகுந்த, ஆள் கிடைக்காமல், சமூகமே வெறிச்சோடிக் கிடப்பதாய் உணர்வு பூர்வமாய் மனம் சலிக்கும் போதெல்லாம் ஹாலில் மாலையும் கழுத்துமாக வீற்றிருக்கும் அவர் போட்டோவைப் பார்த்தே துர்கா சாந்தி பெறுவாள் அப்படி அவரை மற்க்க முடியாமல் ரு முடி தரித்த ராஜாவாய் நினைவு கூர்ந்து மனம் சிலிர்துப் போகுமளவுக்கு அவர் சாதித்த காரிய சித்தி தான் என்ன .ஒன்றா இரண்டா.
துர்காவுக்கு மறக்க முடியாது அந்த நிகழ்ச்சி ஓர் அசம்பாவிதமாக நடந்தேறிய, போது வயது பத்து கூட ஆகவில்லை. மல்லாகம் மகாவித்தியாலயத்தில் தான் அவள் படிக்க, அப்பாவோடு, கூட போய் வந்து கொண்டிருந்தாள் அவள் வாழும் கிராமமான அந்த சொர்க்கபுரி, ஏழாலை அவள் காலடியிலேயே கிடந்த நேர்ம். அது ஒரு பொன்னான பொழுது நன்மை, தீமையே . பருவம் வீட்டிலே அவள் ஐந்தாவது பிறப்பு அப்பாவுக்கு அம்மாவுக்கு வேறு வேலையில்லை. உடல் மாயையிலேயே வாழ்ந்து கழித்தல், இதன் பெறு பேறே, அவர்கல் வீட்டின் வம்ச விருத்தி அதற்கு ஒரு கணக்கில்லை ஆசை தீரப் பெற்றுப் போட்டுக் கொண்டே, இருக்க வேண்டும் ஞான சூரியனான, அப்பாவைக் கூட அது விட்டு வைக்கவில்லை .துர்கா அவர்கள் வீட்டின், குலக் கொழுந்து. ஐந்தாவது வாரிசு. அவளை முன் வைத்துத் தான் இந்த பாழாப் போன கதை,அரங்கேற்றம் காட்சி நாடகனம். எல்லாம் கனவில் நடப்பது போல், தோன்றியது. அன்று அவள் பள்ளிக்கூடம் போயிருந்த, போது அவள் சூழ்ந்து வேடிக்கை பார்க்க, வம்புக் கதை பேச, ஒரு பெருங் கூட்டமே கூடி விட்டது . கதையென்ன, அவ சுற்றும் எதிர்பாராத, விதமாக நெஞ்சில் அறைந்தது ஒரு கேள்விக் கணை.
அவள் அதை மெளனமாக கேட்ட்டுக் கொண்டிருந்தாள் திடீரென்று குரலை உயர்ந்தி அவளின் சக மாணவி ஒருத்தி அவளைப் பார்த்து ஒரு கேள்வி, கேட்டாளே என்னவென்று?
துர்க்கா! விருந்து சாப்பாடெல்லாம் எப்படி? உங்கடை வீட்டிலை ஒரு விஷேசம் களை கட்டி, நடந்து முடிஞ்சிருக்கே அதைப் பற்றித் தான் கேக்கிறன். சொல்லு. என்ன வாய்க்குள்ளை முட்டையே?
என்ன கேட்கிறாள் இவள் ? எனக்குத் தெரியாமலா அங்கு ஒரு விஷேசம் நடந்திருக்கப் போகுது?இதை ஆரிட்டை போய்க் கேட்பது ?இதையெல்லாம் சிந்தித்தவாறு, துருவத்தில் போய் மறைந்து நீதியைத் தேடி, ஒன்றும் பேசத் தோன்றாமல் வானத்தை வெறித்து, வெகு நேரம் வரை ஒரு நிர்மல தேவதை போல அவள் நிற்க, நேர்ந்த, பொழுதிலும் விடாமல், துரத்திஅடிக்கிற கேள்விக் கணைகள், அவல் மீது சராமாரியாக பொழிகையில் பாவம் அவள் தான் என்ன செய்வாள். ? நடக்காத ஒன்றுக்கான பதிலை எப்படிச் சொல்வது?எந்த விஷேசமும் நடக்காத, போது, நீட்டி முழக்கி அதற்கு வார்த்தை ஜாலம் புரிந்து திடீரென்று பொய் முகமூடி போட்டவாறு ஒரு எதிர்மறை வர்ணனையாளனாக வேடம் கட்டி ஆட மனம் மனம், வராமல், சத்தியம் தோற்றுப் போனதையிட்டு தனக்குள் கதறி அழவே அவளால் முடிந்தது .பேச வரவில்லை பகல், மூன்று மணிக்கு அப்பாவுடன் வீடு திரும்பும் போது வழக்காமால மகிழ்ச்சியாக அவள் நடந்து வரும் பாதையெல்லாம் வெறிச்சோடிக் கிடப்பதாய் அவள் உணர்ந்தாள் ஆனால், அப்பா1 முகத்தில் எந்தசலனமுமின்றி அதே வீர நடை தான் வெற்றிப் பாதை தான் வெறி பிடித்து வந்து மோதும் பொய் மனிதர்களினிடை,யே. அந் நேரம் கூட கொஞ்சமும் திரிந்து போகாத உள்ளப் பெருக்கிலே ஒளி விட்டுப் ப்ரகாசிகும் ஆனந்த ஜோதியாகவே அப்போதும் அவரை தரிசிக்க முடிந்தது.
காற்றில் அலை மோதும் அவள் கேட்ட இக் கதை அவரின் செவிக்கு எட்டாமலா போயிருக்கும் ? அவரைப் புறம் தள்ளி ,கை கழுவி விட இது ஒன்றும் கங்கையில்லையே சகதி தான் என்றுஅவள் தன்னையே சமாதனப் படுத்திக் கொண்டாள் வீடு வந்து விட்டது அது துஷ்டர்கள் காலடியே படாத அது ஒரு புண்ணிய பூமி1 கண்ணீர் மல்க அவள் நிம்ரிந்து பார்த்தாள் அப்பாவின் வர்கையை, எதிர்பார்து ஒரு பட்டாளமே திரண்டிருந்தது வீட்டிலுள்ள அனைவருமே திரண்ருந்தார்கல். பெரியண்ணா உட்பட்ட பெரியக்காவைத் தான் காணோம். முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு அவள் எப்படி வருவாள் ?ஆம் இங்கு என்ன நடக்கிறது? அழுகை நதி குளித்தபடி அம்மாவையே முதலில் வாசலில் காண முடிந்தது அப்பாவைக் கண்டதும் ., ஓடி வந்து அவர் காலடியில் வீழ்ந்து அவள் க்தறியழுத சப்தம், காற்றில் அலை மோதிச் சிதறியது . அப்பாஅ வளைத் தூக்கி நிறுத்தி முகம் கங்கை பிரகாசிக்க அன்பு மாறாமல், கேட்டார்.
என்ன நடந்து போச்சென்று இப்ப அழுகிறாய்?
மாதவிக்கு பிள்ளை பிறந்திருக்கென்று ஊரே குடு முழுகிப் போய்க் கிடக்கு நீங்கள் சாமியார் மாதிரி நிக்கிறியள். இந்தப் பொய்யிலை இந்த ஊரெல்லாம் எல்லாம் பத்தி எரியுது இஞ்சை இப்ப கூட உங்களுக்கு கோபமே வரவில்லையென்றால் நீங்களும் ஒரு மனுஷனே1 சொல்லுங்கோ1 துவக்கை தூக்கிக் கொண்டு போய் இதுகளை சுட்டால், என்ன நீங்கள் நான் சொல்லுறன் மாதவி வானிலே சுன்னாகம் போய் படிச்சது போதும் அதாலை தான் இந்தக் கதை வந்தது வான் றைவர் சுகுமாரோடு பழகி இவளுக்குக் குழந்தையே பிறந்த, மாதிரி ஊரெல்லாம் கதை அடிபடுகுது . உங்களுக்கு ஏன் கோபம் வரேலை.?
ஆரை நான் கோபிப்பது? இந்த நிழல் பொம்மைக்கு உயிர் கொடுத்தது ஆர்? ஒரு தறு தலை. அந்த துர்தேவதையை நான் நன்கறிவேன் தர்மத்தை நிலை நிறுத்த நான் எடுத்த ராம அவதாரத்துக்கு இது தான் பதிலென்றால், இதை சங்கு ஊதி குழப்புகிற ஆளாய் மாற என்ன சகதி குளித்து எழும்புகிறவனா நானும் ? அந்த வழிக்கு என்னை இழுக்காதை .சக்தி.என்னைக் கடவுளாய் பார் எல்லாம் சரி வரும்.
இவர் என்ன சொல்கிறார்?? பாவம் குளித்து எழுகிற இந்த, மண்ணிலே இது என்ன ப்து அவதாரம்? கடவுள் வேஷம் போட்டுக் கொண்டு, வாழுதே மகா பாவம், அதோ 1 தீக்குள் கருகி மாதவி எப்படி அழிந்து போனாலும் சரி ,இவர் கடவுளாகவே இருந்து தொலையட்டும் நானும் என் பிள்ளைகளுமாய் பாவ தீயில் எரிஞ்சே அழிஞ்சு தொலையிறம் எங்கள் வி மோசனத்துக்கு இவரே கடவுளாக இருந்து தொல்லையட்டும் மண்ணை வாரித் தூற்றி சபித்து விட்டுப் போகிற அம்மாவைப் பார்த்து பரிதாபமே கொன்டாள் துர்கா அழுவதற்குப் பதிலாக வாழ்க்கையின் எதிர்மரையாகத் தோன்றுகின்ற வக்கிர புத்தி கொண்டு அலையும் தூசாகிப் போன அற்ப மனிதர்கள் வாழ்கிற காடு வெறித்த இந்த மண்ணில் தான் அப்பாவை ஒரு தெய்வமாகவே இனம் கண்டு விட்ட பூரிப்பில் ஆழ்ந்து அஞ்சலி செய்வது போல கண்களை மூடி, கரம் ,குவித்து, பிராத்தனை செய்தாள் அவர் அப்படி வீற்றிருந்து விட்டு போன அந்த சிம்மாசனமும் அன்பு இருக்கையுமே இப்போது ஒரு மறக்க, முடியாது ஒரு சிரஞ்சீவி ஞாபகமாய் தன்னை தன்னை வழி நடத்தி வாழ வத்துக் கொண்டிருப்பதாய் அவள் மகிழ்ச்சியுடன், நினைவு கூர்ந்தாள்.