புலிநகம்




(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1659! மராட்டிய மண்டலத்திலே மாவீரன் சிவாஜி, வீர வெற்றிகளின் பயனாக, விடுதலை வேட்கை கொண்ட வர்களின் மனதிலே கொலுவீற்றிருந்த சமயம்! மணிமுடி தரித்துக்கொள்ளவில்லை. ஆனால் அவன் காலடியிலே கிடந்தது மணிமுடி! ஓய்வுதான் இல்லை, பட்டாபிஷேகத் துக்கான காரியங்களைக் கவனிக்க.மராட்டிய மன்னன் என்ற பட்டம் இல்லையே தவிர, நிலை அதுதான். யார் இந்த மாயாவி? மலைகளை அதிரச் செய்கிறான், மண்டலங்களை மண்டியிட வைக்கிறான், உழவர்களை வீரராக்குகிறான்! எங்கும் அவன் வெற்றி! பரத கண்டத்திலே புதியதோர் ஒளியானான். பரவிவரும் இஸ்லாமிய ராஜ்யத்துக்குப் புய லானான்! இவனை இப்படியே விட்டு வைப்பதா? வீரன், தீரன், இரட்சகன், அவதார புருஷன் என்றெல்லாம் புகழப் படுகிறான். புதிய அரசை சிருஷ்டிக்கிறான். சாத்பூரா மலைச் சரிவுகளிலெல்லாம் அவனுடைய போர் வீரர்கள்! குகைகளிலே கூடித்திட்டம் வகுத்துவிடுகிறான். பிறகு அரண் மனைகளிலே அழுகுரல் கேட்கிறதே! சரித்திரத்திலே இடம் தேடும், இந்தச் சாமான்யக் குடியானவனை இப்போது வளர விடுவது, ஆபத்து. எதிர்காலத்திலே அவன் புகழ் நிலைத்து விடும்! சிவாஜியின் வெற்றி நிறுத்தப்பட வேண்டும்!–என்று இந்திய உபகண்டத்திலே ஆங்காங்கு இருந்த அரசுகள் பல வற்றிலும் பேசப்பட்ட காலம். ஆச்சரியமும்,அச்சமும் கலந்த பேச்சு, எங்கும், அந்த அஞ்சா நெஞ்சனைப்பற்றி. அவனை அலட்சியப்படுத்த முடியாது. அவன் வளர்ச்சியைச்சாமான்ய மாகவும் கருதக்கூடாது. மண்ணிலே செம்பொன் கண்டெடுக் கிறான், மங்கிய மராட்டியத்திலே மாணிக்கங்களை உண்டாக்கிவிட்டான். மாசு மருவற்றவன் என்றும் புகழப்படுகிறான். குடியில்லை, கூத்தியில்லை, கோலாகல வாழ்வு இல்லை, வீரத்தின் சின்னமாய் விளங்குகிறான், மாற்றுக் குறையாத மராட்டியத் தங்கம்! இந்த நிலையை நீடிக்கவிட் டால் இனி நமக்கு வரும் பங்கம் என்று அரசு பீடத்தில் அமர்ந்திருந்தவர் அனைவரும் எண்ணிய காலம் அது. 1659-ம் ஆண்டு, சிவாஜி, ஜாகீர்தார் நிலைக்காக அல்ல, வேலை செய்கிறான் சாம்ராஜ்யாதிபதியாவதற்காகவே என்பது விளங்கிவிட்டது.
5000 குதிரை வீரர்கள்! 7000 காலாட் படைகள்! போர் முரசு கொட்டியபடி இப்பெரும் படையைத் தலைமை தாங்கி நடத்தி வந்தான் தளபதி அப்சல்கான். குதிரைப்படை கிளப்பிய தூசு போல, சிவாஜியின் வெற்றிகள் இனியாகும் என்று அப்சல்கான் எண்ணினான். கோபத்தோடு, உறுதி யோடு, அசைக்க முடியாத நம்பிக்கையோடு சென்றான், அப்சல்கான். படையின் ஆர்ப்பரிப்புக்கு இடையிலேயும், அவனுக்கு புறப்படுமுன்பு, தனக்கும் மன்னனுக்கும் நடந்த உரையாடல் காதிலே வீழ்ந்த வண்ணமே இருந்தது. வாழ்க் கையிலே முக்கியமான கட்டம் அது—அவனுக்கு மட்டுமல்ல; அவன் பணிபுரிந்து வந்த அரசுக்கே.
“அப்சல்! உன் வாழ்நாளிலேயே மிக முக்கியமான செயலில் இறங்குகிறாய். இதிலே நீ வெற்றி பெறுவதைப் பொறுத்துத்தான் இருக்கிறது, பீஜபூர் மண்டலத்தின் புகழ்’ என்று மன்னன் கூறியபோது, “மன்னா! அந்த மலை எலி, இங்கு உலவுவது நமது மண்டலத்துக்கே இழிவு தருவது என்பதை உணருகிறேன். இதோ புறப்படுகிறேன்! சிவாஜியைச் சிறைபிடித்து வருவேன். வெற்றியுடன் திரும்பி வருவேன். இது உறுதி’ என்று வீரமாகப் பேசியதும், அப் சல்கானின் நினைவிலே பதிந்துவிட்டது. படையைப் பார்க் கிறான், பூரிக்கிறான், தன் திறமையை எண்ணுகிறான், மகிழ்கிறான்; சிவாஜியின் கண்முன் இப்படை தோன்றினால் போதும்! பீஜபூர் மன்னன்முன் மண்டியிட, அந்த மார் தட்டும் வீரன் ஓடோடி வருவான் என்று நினைத்தான். அப்சல்கான், சாமான்யனல்ல; வீரப்படைகளை நடத்திச் சென்று வெற்றி பல கண்டவன். எனவே அவன் எண்ணியது வீண் புகழ்ச்சியுமல்ல.
காடு, கூடாரமாயிற்று! குதிரைகள், கானாறுகளிலே நீர் அருந்தின! கடுகிச்சென்ற ஒற்றர்கள், கடும்புயல் மராட் கூறினர். டியத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கலங்காத உள்ளந்தான். ஆனாலும் காலாட்படை 7000, குத்ரைப்படை 5000, படைத்தலைவன் அப்சல்கான் என்று கேள்விப்பட்டால், சிவாஜியும் சோகிக்கத்தானே வேண்டி நேரிடும்! இவ்வளவு பெரிய படையை, நேரடியாகத் தாக்கி வெற்றி பெற முயற்சிப்பது, வீண் வேலை என்பதை, வீரத் துடன் யூகமும் தெரிந்த சிவாஜி தெரிந்து கொள்ளாமல் இல்லை. அப்சல்கான், பிரதாப்கார் நகருக்கு வெளியே! சிவாஜி தன் சிறு படையுடன் நகருக்குள்ளே! பெரும் புயல் வெளியே! ஆபத்துக்கும் தனக்கும் இடையிலே இருந்தது ஒரே ஒரு காடு-அதிலே இருந்ததும் ஒரே ஒரு பாதை. அந்தப் பாதையிலே பூஜபூர் படைகள் நுழைந்தால்,சிவாஜியின்படை தப்பிச் செல்லவும் முடியாது. அதுவரை பெற்ற வெற்றிகள் அவ்வளவையும், அப்சல்கானுக்குக் காணிக்கையாக்கிவிட வேண்டியதுதானா? மராட்டியம், மண்டியிட வேண்டியது தானா? பீஜபூர் சுல்தானிடம் பணியத்தான் வேண்டுமா? வேறு மார்க்கமே இல்லையா?
1946 இன்று இபுராகீமுக்கு, இந்து தேச சரித்திரத் தைப் போதிக்கிறார் சுந்தரேச ஐயர்! ‘அப்சல்கானின் பெரும்படையைக் கண்ட அஞ்சா நெஞ்சன் சிவாஜி, என்ன செய்தான்? அப்சல்கானைத் தனியாகச் சந்திக்க வேண்டு மென்று கூறினான். பீஜபூரான் வந்தான்; அவனைத் தழுவு வதுபோலச் சிவாஜி நடித்துத் தன் கரத்திலே வைத்தி ருந்த புலிநகத்தால் கீறிக் கொன்றான்” என்று வரலாற்று ஆசிரியர் கூற, இபுராகீம், தன்னையுமறியாது “பத்மாஷ்” என்று ஏச, துஷ்ட நிக்ரஹார்த்தம் எதையும் செய்யலாம் என்று வரலாற்று ஆசிரியர் கொஞ்சம் வைதீக போதனையும் புரிகிறார். என்ன சமாதானம் சொன்னாலும், இபுராகீம், “இது சதிச் செயல்! நம்பிக்கை துரோகம்! வஞ்சனை! ஒரு வீரனின் இலட்சணமல்ல”என்று கூறாமல் இருக்க முடியுமா? உண்மையிலேயே, மாவீரன் செய்யலாமா? சமரசம் பேச அழைத்துத் தழுவி, தழுவுகிற நேரத்தில் வஞ்சகமாகக் கொல். வது வீரமரபா? இல்லை! இபுராகீம் மட்டுமல்ல; வெளிஉலகு முழுவதும், சிவாஜி, அப்சல்கானைக் கொன்றார். அக்ரமம், சதி செய்தார், தன் கீர்த்திக்கே இதனால் ஓர் பழி தேடிக் கோண்டார் என்றே கூறும். ஆனால் இபுராகீமுக்கும் தெரி யாது, இவ்வளவு பெரிய இலட்சிய புருஷன் ஏன் இந்தச் சதிச்செயல் புரியவேண்டும் என்று. தனிமையிலே சிந்தித்துச் சோகிக்கும் தோழர்களுக்கும் தெரியாது. ஏன் சிவாஜி அங் ஙனம் செய்தார்? வீர சிவாஜியை இந்த வஞ்சகம் புரியச் செய்த சூட்க்ஷம சக்தி எது என்ற உண்மை. வரலாற்று ஆசி ரியரும் அதைக் கூறமாட்டார். சிவாஜி துரோகம் செய்ததாக, இபுராகீம் எண்ணிக் கொண்டால் அவருக்கு என்ன நஷ்டம்? அவர் இபுராகீம் இனமுமல்ல, சிவாஜி பிறந்த மராட்டியக் குடியுமல்ல, அவர் பூதேவர் பரம்பரை! சிவாஜியின் போக் குக்கான உண்மைக் காரணம் என்ன? அதை அறிய மீண் டும் நாம் கொஞ்ச நேரம் அப்சல்கான் படையுடன் போக வேண்டும். போவோம்.
வாளையும் வேலையும் கூர்பார்த்துக் கொண்டும், இன்னவிதமான நிலையிலே இவ்விதமாகக் கத்தியை வீச வேண்டும், இன்ன இடத்திலே முன்னேறித் தாக்க வேண்டும், இந்த இடத்திலே, பக்கவாட்டில் தாக்க வேண்டும் என்று, போருக்கான எண்ணம், ஏற்பாடு ஆகியவைகளிலே, அப் சல்கானின் படை ஈடுபட்டிருந்தது. கூடாரத்திலே அமர்ந்து, வரவிருக்கும் வெற்றியை நினைத்துக் குதூகலமாக வீற்றி ருந்தான் அப்சல்கான். அந்தக் காட்டிலே, கோபிநாத் பண் டிட்ஜியும், அதே இடத்தில் உலவுகிறார். அவரிடம் வாள் இல்லை; ஆனால் மற்றக் குலத்தவரைத் தம் தாளடியிலே காண்பதற்கான மகத்துவத்தை மகேஸ்வரனிடம் பெற்ற தாகக் கூறிக்கொள்ளும் பிரம்ம குலத்தவர், கோபிநாத். அப்சல்கான், சிவாஜியை முறியடிக்கப் படைபலத்துடன் வந்ததுடன், சமரசம் பேச சிவாஜி விரும்பினால், அதை முன் னின்று முடித்து வைக்க அந்த முப்புரியானையும் அழைத்து
மனதிலே, என்னென்ன வந்தான். கோபிநாதரின் ணங்கள் கிளம்பின என்பதை வரலாறு எங்ஙனம் எடுத்துக் காட்டும்! சரிதங்களிலே சம்பவங்களைக் கொண்டுதானே, அவற்றுக்கான சில பல சிந்தனைகளை யூகிக்க முடியும்! கோபிநாத் பண்டிட்ஜி,தூது அனுப்பப்பட்டார் சிவாஜியிடம். பெரியதோர் படை தயாராக இருக்கிறது என்பதை எடுத் துக்கூறி, சிவாஜியைப் பணிய வைக்கக் கிளம்பினார் கோபி நாத். மகத்தான, பொறுப்பான ஓர் செயல் தரப்பட்டது என்பதை எண்ணும்போது கோபிநாத் பெருமை அடைந்து தான் இருப்பார். ஒரு மண்டலாதிபதியின் தூதராக, மற் றோர் மாவீரரிடம் செல்வது, சாமான்யமான காரியமல்ல. பண்டிட்ஜி புறப்பட்டார். நாடுகளைக் காடாக்கிவிடக் கூடிய படைபலம் பெற்றிருந்த அப்சல்கானின் தூதராகக் கிளம்பிய அந்த ஆரியனின் அகம், முதலில் பெருமை கொண்டிருக்கும்; பிறகோ சிந்தனை வேறாகித்தான் இருக்கும். பரத கண்டத் திலே பல்வேறு இடங்களிலே இருந்த நிலை பற்றிய நினைப்பு தோன்றாமலிருக்குமா? கோபிநாததின் மனக்கண்முன் அப் போது, என்னென்ன காட்சிகள் தோன்றியிருக்கும்!அஸ்தினா புரம் டில்லியாகி, அங்கு அவுரங்கசீப் அரியாசனம் ஏறும் காட்சி ஒரு புறம்! வங்கத்திலே இஸ்லாமியரின் வல்லமை யால் ஆட்சி நிறுவப்பட்ட காட்சி மற்றோர் புறம்!பீஜபூரிலே ஒரு சுல்தான்! தன்னைத் தூதுபோகச் செய்த அப்சல்கான், துடிதுடிக்கும் படையுடன் இருக்கும் காட்சி! எதிரே பிரதாப் கார் நகரம் -அங்கேயோ, மராட்டிய குலம் ஆள்கிறது! ஒருபுறம் இஸ்லாமியர்; மற்றோர்புறம் மராட்டியர்! ஆரியர் ஆட்சிப் பீடத்திலே எங்கும் தென்படவில்லை. பெருமையுடன், அந்த பூபாகத்தைப் பாரத்வர்ஷம், பரத கண்டம், ஆர்யவர்த்தம் என்று பேசிக் கொள்ளும் ஆரியர், அரச பீடத்திலே இல்லை! தூது போகும் வேலைதான் கிடைத்தது! கோபிநாத் பண்டிட்ஜியின் மனக்கண், இவை போன்ற காட்சிகளைக் காணாதிருந்திருக்க முடியாது!
அப்சல்கான் அனுப்பிவைத்த கோபிநாத் பண்டிட்ஜி, சில சகாக்களும், பணியாட்களும் புடைசூழ, நகருக்குள் நுழைந்தார். “பணிந்துவிடு சிவாஜி! இல்லையேல் அழிவு இந்நகருக்குள் நுழையும்!நீ அஞ்சா நெஞ்சனாக இருக்கலாம். ஆனால் அப்சல்கானிடம் இருக்கும் படை பிரம்மாண்டமா னது” என்றுகூற, சிவாஜி கோபிநாத் பண்டிட்ஜியை மரியா தையாக வரவேற்றான். உபசாரம் பல புரிந்தான். அவரும் உடன் வந்தோரும் தங்கியிருக்க, இடவசதிகள் ஏற்பாடு செய்து தந்தான். ஒரு பலம் பொருந்திய துரைத்தனத்தின் தூதுவராக வந்துள்ள பண்டிட்ஜியை, மிகக் கௌரவமாக நடத்த வேண்டுவது முறைதானே! முறை தெரியாதவரா, வீரசிவாஜி! முறை மட்டுமல்ல, கொஞ்சம் யூகமும் தெரிந் தவர். கோபிநாத் பண்டிட்ஜி பிரம்மகுலத்தவர் என்பது தெரிந்ததும், சிவாஜிக்கு வர இருக்கும் ஆபத்தினின்றும் தப்ப, ஒரு வழி கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை பிறந்தது. கோபிநாதருக்குச் செய்த மகத்தான உபசாரத்தின் உட் பொருள் அதுதான். அவருடன் வந்தவர்களுக்குத் தரப் பட்ட விடுதிகளினின்றும், கொஞ்சம் தொலைவான இடத் திலே, பண்டிட்ஜிக்கு, தங்கும் இடம் அமைக்கப்பட்டது. நள்ளிரவில், சிவாஜி, அந்தத் தனியிடம் சென்றான், கோபி நாத் பண்டிட்ஜியிடம், தனியாகப் பேச! தூது கூற வந்த வரை, இலகுவில் தன் பக்கம் இழுத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில். மராட்டிய மாவீரரின் நம்பிக்கை வீண் போகவில்லை. மறையவர், மலர்ந்த முகத்துடனேயே வர வேற்றார் சிவாஜியை.
”மாமுனியே! மராட்டிய மண்டலத்துக்கு வந்துள்ள ஆபத்தை நினைக்கும்போது”
“மனக்கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மாவீரனே! பணிவதன்றி வேறு மார்க்கம் இல்லை.”
“பணிவது பற்றியல்ல பூதேவா நான் சோகிப்பது! என் மனோ பீஷ்டம், சங்கல்பம், பாழாகுமே.”
“படைபலம் அவனிடம் அதிகம்! எதிர்த்துப் பயன் இல்லை. தோல்வி நிச்சயம் சம்பவிக்கும். அழிவை அணைத் துக் கொள்வாருண்டோ?”
”மறையவரே! என் சங்கல்பம், இங்கு பாரத்வர்ஷத் திலே நமது ஜென்ம பூமியில், புண்ய பூமியில், இந்து சாம் ராஜ்யம் சிருஷ்டிக்க வேண்டும் என்பதுதான். என் பொருட்டு அல்ல; பிராம்மணோத்தமர்களின் பொருட்டே நான் இந் தப் பாடுபடுகிறேன். என் இலட்சியம் தங்களுக்குத் தெரிந் திருக்கும். பசு, பிராம்மணர், இவற்றின் இரட்சகன் சிவாஜி என்பதை ஸ்தாபிக்க வேண்டுமெனபதே என் நோக்கம். இந்த ராஜ்யம் ஏற்பட்டால்தான்’ பூர்வ பெருமை நிலைக் கும்; பண்டைச் சிறப்பு மீண்டும் தோன்றும்! ஆரியவர்த்தத் திலே, வேதாச்சாரமும், குலதர்மமும் ஜொலிக்கும். ஸ்வாமி! சித்தம் குழம்பியிருக்கும் நான் தங்களை யாசிக்கிறேன். என் சங்கல்பம் ஈடேற வழி செய்யுங்கள்; சனாதனதர்மம் தழைக்க உபாயம் கூறுங்கள்; இந்த பீஜபூர் படையினால் அழிந்துவிடலாமோ? நான் பாடுபட்டு வளர்ந்துவரும் பால் யன! பூஜிதரே! ஒருவழி காட்டும்!”
”நானா? வழிகாட்டுவதா? சிவாஜி! நான் பீஜபூர் சுல் தானின் தூதுவன்!”
“இல்லை, ஸ்வாமி! தாங்கள் பாரத்வர்ஷத்தின் பிரதி நிதி! ஆர்யவர்த்தத்தை இரட்சிக்க வேண்டிய ஆர்ய சிரேஷ் டர்! தங்களை அப்சல்கான் அனுப்பியிருந்தாலும் சரி, பீஜபூர் சுல்தான் அனுப்பியிருந்தாலும் சரி, நான் தங்களை ஆண்டவன் அனுப்பி வைத்த தூதுவர் என்றே கொள்கிறேன். ஆரிய! ஆரியவர்த்தத்துக்கு ஆபத்து நேரிடுவதைத் தடுக்கப் பிரம்ம குலத்தவராகிய உமக்கு உரிமை உண்டு! உமது கட மையும் அதுதான். நான் ஆரிய சேவா சைன்யத்தை நடத்து பவன், கட்டளை பிறப்பித்துவிடும்! ஆர்யவர்த்தத்தை அன்னி யரிடம் தந்துவிடவா? அப்சல்கானிடம் அடிபணியவா? ஆரிய! நான் அடி பணிவ வது என்றால் என்ன அர்த்தம்? ஆரிய வர்த்தம் அழிந்தது என்று பொருள்!”
கோபிநாத் பண்டிட்ஜி வந்ததோ, சிவாஜியைப் பணிய வைக்க! சிவாஜியோ, மேலே தீட்டப்பட்ட கருத்துகளைக் கொட்டினான் கோபிநாதர் முன்பு. கோபிநாத் கூறிவிட்டி ருக்கலாம். ‘சிவாஜி! துரோகம் செய்ய முடியாது! நம் பிக்கை மோசம், மகாபாபம்! நான் பீஜபூர் சுல்தானின் உப் பைத் தின்பவன். அவனுக்கு ஊறு தேடமாட்டேன். அது கயவர் செய்யும் காரியம். தர்மசாஸ்திரம் இதை ஏற்காது!” என்று. ஆனால் கோபிநாத் அதுபோல் கூறினாரா? இல்லை! துரோகம் செய்யக் கூடாது என்ற எண்ணம் இல்லை. ஆரிய வர்த்தம்! ஆரிய சிரேஷ்டர்! சனாதனம் எனும் சொற் களின் சுவையை ரசித்தார்; பீஜபூர் சுல்தானைக் காட்டிக் கொடுக்க இசைந்தார்! வந்தது தூதுவனாக; ஒப்புக் கொண் டதோ, துரோகியாவதற்கு! எவ்வளவு நேரம், கோபிநாத் பண்டிட்ஜியின் மனதிலே போராட்டம் இருந்ததோ நாம் அறியோம்; துரோகி என்று உலகு எதிர்காலத்திலேனும் தூற்றுமோ என்று துளியாவது அச்சம் பிறந்ததோ அறி யோம். பக்தனின் தூபத்தைப் பெற்றுப் பரவசமடைந்த பண்டிட்ஜி, பழிபாவம் எதையும் கருதாமல், எந்த பீஜ பூர் சமஸ்தானத்தால் வளர்க்கப்பட்டாரோ, அதே அரசுக் குத் ‘துரோகி’யாக இசைந்தார். கோபிநாதர், சாமான் யரா? பண்டிட்ஜீ! வேதபுராண இதிகாசம் தெரிந்தவர்! அதா வது, நயவஞ்சகம், அடுத்துக் கெடுத்தல், அணைத்து அழித் தல், கொஞ்சி நஞ்சு தருவது போன்ற முறைகளை ஏராள மாகக் கூறும் ஏடுகளை நன்கு அறிந்தவர். பாரதத்திலே, திருதராஷ்டிரன், எதிரியை அணைத்து அழித்தது பற்றிப் படிததிருக்கிறார். சூரியனையே சக்ராயுதத்தால் மறைத்துப் பொழுது சாய்ந்ததாகக் காட்டி எதிரியைக் கொல்ல, அர் ஜுனனுக்கு உதவி செய்த கண்ணன் காட்டும் வழியை அறிந் தவர் கோபிநாத்! பாரதம் போதாதா, எதிரியை அழிக்க! “தர்மாதர்மம்” பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற ஆரிய மார்க்கத்தை எடுத்துரைக்க, கோபிநாதருக்கு மட்டு மல்ல, சிவாஜிக்கும் தெரியும் பாரத- இராமாயணக் கதை. பூஜைக்குரிய இராமன் மரத்தின் பின்புறமிருந்து அம்பு எய்தி வாலியைக் கொன்ற கதையை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்ததும், அதைக் கேட்டு ஆனந்தித்ததும், வீண் போகுமா? இப்படிப்பட்ட சமயத்திலே, அந்த இதிகாசங் களிலே தெரிந்துகொண்ட ‘முறைகள்’ பயன்படவில்லையா னால், அவைகளைப் படித்துத்தான் பயன் என்ன? கோபி நாத் பண்டிட், சிவாஜிக்கு, அப்சல்கானின் படையை முறி யடிக்க, இன்ன யாகம் செய், அதனால் இன்ன அஸ்திரம் கிடைக்கும் என்று யோசனை கூறினாரா? இல்லை! இன்ன தெய்வத்தை உபாசனை செய், இந்த மந்திரத்தை ஜெபித்து விட்டுப் போருக்குக் கிளம்பு என்று உபதேசம் செய்தாரா? அவர் ‘குரு வாக அமரவில்லை; பீஜபூர் குடிகெடுக்கும் துரோகியானார். அப்சல்கானுடன் போர் வேண்டாம்-பணி வதாகச் சொல்லி அனுப்பு பாவனைக்கு—அப்சல்கானிடம் நேரடியாகப் பணியத் தீர்மானித்திருப்பதாகச் செய்தி அனுப்பு — தனியாக அப்சல்கான் இங்கே விஜயம் செய்யட் டும். நான் அவரிடம் சரண் புகுந்துவிடுகிறேன்- சமர் வேண்டாம் என்று அப்சல்கானிடம் தூது அனுப்பு என்று யோசனை கூறினார் பண்டிட் கோபிநாத்-டண்டிட்? இல்லை- பாதகன்!
“அப்சல்கான் வருவானா?”
“அனுப்பி வைக்கிறேன். அதாவது, அவன் இங்கே தனி யாக வரும்படி நான் செய்கிறேன்.
“வந்த பிறகு…?”
“வந்த பிறகு! மராட்டியத்தை, உன் மண்டலத்தை, உன் எதிர்காலத்தைக் கருக்கக் கூடிய எதிரி, துணையின்றித் தனியாக வருகிறான் உன்னைச் சந்திக்க!வந்தபிறகு…என்று என்னைக் கேட்கிறாயே, வகை கெட்ட…”
“அறிந்தேன் ஆரிய! ஆனால் அப்சல், ஆயுதபாணி யாகத்தானே வருவான்?”
“பைத்யக்காரா! அப்சல்கான், அஞ்சி அடிபணியக் காத்துக் கொண்டிருக்கும் சிவாஜிக்குத் தஞ்சமளிக்கவன்றோ இங்கே வருவான் – நிராயுதபாணியாகவே வருவான். அவ் விதம் ஏற்பாடு நடக்கும்.”
“பண்டிட்ஜி! தங்கள் பாதாரவிந்தம்…”
கோபிநாத் பண்டிட்டின் சதியாலோசனையே, சிவாஜி யைத் தனியாகக் காண, அப்சல்கான் வருவது என்ற ஏற் பாட்டை உருவாக்கிற்று! வீர சிவாஜிக்கு, வாள் ஏந்தத் தெரிந்த அளவுக்கு வஞ்சனை வீசத் தெரிந்திருக்க முடியாது! வேதிய குலத்தவராம் கோபிநாத் பண்டிதர், அந்தக் கைங் கரியத்தில் ஈடுபட்டார், பரம்பரைப் பழக்கத்தின்படி!! சிவாஜி, மகத்தானதோர் ‘ராஜதந்திர வெற்றி’ பெற்றதாகச் சந்தோஷித்தான்! பண்டிட் கோபிநாத், மராட்டியத்தை ஆரிய சேவா பீடமாக்கிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தான். அப்சல்கானோ, ‘திறமைமிகுந்த தூதுவர்’ திரும்பி வருவார், சீறிப் போரிட்ட சிவாஜியின் சரணாகதிச் செய்தியைத் தூக் கோபி கிக்கொண்டு என்று எண்ணிச் சாய்ந்திருந்தான். நாத் பண்டிட்ஜி வந்துசேர்ந்தார்-அப்சல்கானின் கொலைக் கான ஏற்பாடு செய்து வைத்துவிட்டு! அப்சல், படை அறி வான், போர் அறிவான், பாதகம், சதி, கசப்பு இவைகளைத் தாங்கி நடமாடும் மனித உருவங்கள் தன் பக்கத்தில் இருப் பதை எங்ஙனம் அறிவான்?
“சலாம் பண்டிட்ஜி!” என்று சந்தோஷமாக, கோபி நாத்தை வரவேற்றான். அன்று மட்டுந்தானா! 1946ல் கூடத்தான்! வாங்க ஸ்வாமி’ என்று கோபிநாதர்களை வரவேற்கிறார்கள்!
“சரண் அடையச் சம்மதித்துவிட்டான்!”
“புஹுத் அச்சா! பண்டிட்ஜி! அவன் மகா முரடன் என்பார்களே, எப்படிப் பணியச் சம்மதித்தான்?”
“முரடனாக இருக்கட்டுமே, சைன்யாதிபதி! அவன் என்ன குருடனா, இந்தப் பிரம்மாண்டமான படை நம்மி டம் இருப்பதை அறியாதிருக்க!”
“கோபிநாத் உமது வெற்றி இது!’
‘ஒரு விதத்தில் என் வெற்றிதான்.’
ஒரு விதத்தில் மட்டுமா, சகல விதத்திலும் கோபிநாத் தின் வெற்றிதான் அது. போரிடப் புறப்பட்ட அப்சல், போரிடாமலேயே மாவீரனை மண்டியிடச் செய்துவிட்ட மகிழ்ச்சிப் பெருக்கால், கேளிக்கையாகத்தானே இருந்திருப் பான். ஏன் இராது? எந்தப் பக்கமும் எந்த வீரனுடைய வெற்றிமுரசு கேட்டு வந்ததோ, எந்த வீரனின் வெற்றிக் கொடி மலை உச்சிகளிலெல்லாம் மகோன்னதமாகப் பறக்க விடப்பட்டதோ, அந்த வீரன், மண்டியிடச் சம்மதிக்கிறான் என்றால், மகிழ்ச்சி பிறக்காதிருக்குமோ, அப்சல்கானுக்கு!
அந்த மகிழ்ச்சி பன்மடங்கு அதிகமாயிற்று. சிவாஜியால் அனுப்பப்பட்ட தூதன், அப்சலிடம், சரணாகதியை உறுதிப் படுத்த வந்தபோது, கோபிநாத் பண்டிட்ஜி, அப்சல்கானால் அனுப்பப்பட்ட தூதன்! சிவாஜி அனுப்பிய தூதனும்,ஓர் பிராமணனே! பெயர் கிருஷ்ணாஜீ பாஸ்கர்.
“சிவாஜி,சமர் செய்ய விரும்பவில்லை. பீஜபூர் ஆட் சிக்கு அடங்கி நடக்க ஒப்புக் கொள்கிறார். பீஜபூர் சுல் சரண் தானின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட இசைகிறார். அடைய விரும்புகிறார். வீராதி வீரனே! எங்கள் சிவாஜி யின் இந்த வேண்டுகோளைத் தயைகூர்ந்து ஏற்று அருள வேண்டுகிறேன்,” என்று பாஸ்கரன் கூற, அது கேட்டுப் பர மானந்தம் அடைந்த அப்சல்கான், “நமது படையுடன், பிர தாப்கார் நகருக்குள் பவனி வருவோம். அங்கு சிவாஜி பணியட்டும்; பீஜபூர் ஆட்சியின்கீழ் வாழச் சம்மதிக்கும் சிவாஜிக்கு நாம் சுல்தானின் பிரதிநிதி என்ற முறையிலே பேட்டி தருகிறோம்” என்றுகூற, பாஸ்கரன் பயந்து, தழ தழத்த குரலில், “ஒரு விண்ணப்பம்! சிவாஜி, சரணாகதி சம்பந்தமாகப் பேசுவதற்காகத் தங்களைத் தனியே சந்திக்க விரும்புகிறார்.இங்கேயே வர எண்ணினார்…” என்று வலை வீசும் பேச்சைத் துவக்கினார். சதிக் கூட்டத் தலைவன், கோபிநாத், ‘இங்கே இருக்கும் பெரும் படை முன்வர, அஞ்சுகிறான் உங்கள் அசகாயசூரன்! பிராமணரே! ஏன் மறைக்கிறீர்? வெட்கமோ!” என்று கூறினார். அப்சல்கானின் ஆனந்தம் அளவுகடந்ததாகிவிட்டது. “கோபிநாத்பண்டிட்ஜி! அவ்வளவு பயங்கொள்ளியா சிவாஜி?” என்று கேட்டான் அப் சல். அந்தக் கேள்வியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த கோபிநாத், முகஸ்துதியை வாரி வாரி வீசினான், அப்சல்கானின் யூகம் அழியுமளவு.
“இதிலென்ன ஆச்சரியம், சேனாதிபதி! அவன் உமது ஜெயங்களைப்பற்றிக் கேள்விப்படாமலா இருந்திருப்பான்? ஏதோ இதுவரையில், நாதியற்ற நகரங்களையும், நெஞ்சில் உறுதியற்ற கும்பலையும் தாக்கி, வெற்றி கண்டேன் எனறு வீராப்பு பேசித் திரிந்தான். இன்று மகத்தானதோர் களத் படையை நடத்தும், தீரபுருஷனாகிய அப்சல்கான் திலே, சிம்மம்போல் நிற்கும் தலைவன்’ வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் நடுநடுங்கிப் போய்விட்டான். பீஜபூர் சமஸ்தானத்தின் பெருமையை அறியானா? தன் பக்கம், பீஜபூரின் திருஷ்டி படாதிருந்த வரையிலே தப்பிப் பிழைத் தான். இப்போது?”
இந்த முகஸ்துதி, அடியோடு அப்சலைக் கவிழ்த்து விட்டது.
”சரி! பயம் வேண்டாம் என்று சொல்! நாளை நாம் தனியாக, ஆயுதமின்றி வருகிறோம், சிவாஜியின் சரணாகதிக் கான சம்மதத்தைப் பெற” என்று கிருஷ்ணாஜீ பாஸ்கருக் பயங்காளியை குக்கூறி அனுப்பிவிட்டு, “இப்படிப்பட்ட நான் கண்டதே இல்லையே!” என்று எண்ணி எண்ணிப் பூரித்தான்.
சதியாலோசனைத் திட்டத்தின்படியே சந்திப்பு நிகழ்ந் தது. போர் வீரர்களின் துணையின்றி,ஆயுதமுமின்றி, சிவாஜி யைச் சந்திக்க அப்சல்கானை அழைத்து வந்தான் கோபி நாத். சிவாஜி, நேசத்தையும், சமரசப் பாசத்தையும் காட்டு வதுபோல, அப்சல்கானைத் தழுவினான். ‘ஐயோ!’ என்று அலறினான் அப்சல்கான். அவன் அடிவயிற்றிலே புகுந்தது சிவ ஜியின் கரத்தில மறைத்து வைக்கப்பட்டிருந்த புலி நகம்! சரணாசதி யை ஏற்றுக்கொள்ள வந்த அப்சல்கான், வஞ்சகமாக வதைக்கப்பட்டான். இதற்குள், அப்சல்கானின் படை, புகக்கூடிய பாதை அடைக்கப்பட்டுவிட்டது. சிவாஜி யின் படை, இனிப் போர் இல்லை என்று எண்ணி, ஆயத்தம் ஏதும் செய்யாது, ஆனந்தத்திலே மூழ்கியிருந்த அப்சல்கா னின் படை மீது பாய்ந்தது; அங்கேயும் படுகொலைதான்!! கோபிநாத் பண்டிட்ஜியும், கிருஷ்ணாஜீ பாஸ்கரும் சிவா ஜியை, வீரனை, வஞ்சனையில் ஈடுபடச் செய்து, சதிச்செயல் புரியவைத்து மறைக்கமுடியாத பழியை மாவீரர் தலை வனுக்கு வாங்கித் தந்தனர். அப்சல்கானின் உயிரையும் போக்கினர். அப்சல்கானை சிவாஜி அக்ரமமாகக் கொன்ற வரலாற்றுச் சம்பவத்தையே மக்கள் அறிவர்; வரலாற்று ஆசிரியர் கூறுவர். ஆனால்,கோபிநாத் பண்டிட், கிருஷ்ணாஜீ பாஸ்கர் என்பவர்களைப் பற்றிக் கூறார்! சரித்திரம் என் றால் மன்னர்கள் கதைதானே என்று மக்களும் எண்ணிக் கொண்டு, கோபிநாத், பாஸ்கர் போன்றவர்களைக் கண்டுபிடிக்க முயல்வதில்லை. ஆனால், இந்த உபகண்டத்து வரலாற்றிலே கோல்கொண்டவர்களைப் பற்றி அறிந்து கொள்வதைவிட, கோபிநாதர்களைப் பற்றித் தெரிந்து கொண்டால்தான், உட்பொருள் விளங்கும்; உண்மை துலங்கும். அப்சல்கானின் மரணம், புலிநகத்தால் என்று கூறுவதைவிட பூசுரனின் புன்னகையால் என்று கூறுவதே பொருந்தும்!
– இரு பரம்பரைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, பூம்புகார் பிரசுரம் பிரஸ், சென்னை.
![]() |
காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க... |