பற்றாக்குறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 8, 2025
பார்வையிட்டோர்: 4,080 
 
 

எவ்வளவு சீக்கிரமா எந்திரிச்சாலும் நம்ம நேரம் என்னவோ ஏதோ ஒன்னு இழுத்துக்கிட்டே இருக்கும் என்று அரக்கப் பறக்க கிச்சனில் வேலை செய்து கொண்டு இருந்தாள் பிரியங்கா. தான் ஒற்றை ஆளாக இருந்து தனது குடும்பத்தின் அத்தனை பிரச்சனைகளையும் அவள் ஒருவளே தன் தோளில் சுமந்து கொண்டு அதன் சுமைகளை வெளியில் தெரியாமல் புன்னகைத்தபடியே எப்பொழுதும் கல்லூரி செல்வாள். வாழ்க்கையில் எல்லாமும் எனக்கு நானே என்று செய்து கொள்ள வேண்டிய நிலையில் தன்னுடைய வாழ்க்கை இருந்த போதிலும் இந்த வாழ்க்கையின் மீது அவளுக்கு ஒரு பொழுதும் சளிப்போ வெறுப்போ வந்தது இல்லை. இறுதியில் நமக்கு புதுப்புது பிரச்சினைகள் எங்கிருந்துதான் தேடித்தேடி வருமோ என்று பயந்து புலம்பிக்கொண்டே இருப்பாள்.

ஜான் ஏறினால் தான் முழ ம் சறுக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் அவளுக்கு மட்டும் வாழ்வில் ஜான் ஏற வேண்டும் என்று நினைத்தாலே முழம் சறுக்குகிறது என்று எண்ணிக்கொண்டு புன்னகைத்து ஒவ்வொரு பிரச்சனைகளையும் கடந்து செல்கின்றாள். இந்த மாதம் குடிநீர் கட்டணமாக சரிவர செயல்படாத நிலையில் இருந்த குடிநீர் மீட்டருக்கு 2500 ரூபாய் தண்டச் செலவு செய்தாள். இதனை வீட்டின் உரிமையாளரிடம் பலமுறை இவ்வளவு தொகைக்காக நான் தண்ணீர் பயன்படுத்தவில்லை இந்த மீட்டரை சரி செய்யுங்கள் என்று பலமுறை மன்றாடி கேட்டுக்கொண்ட பொழுதும் அதை அவர் காதில் கேட்டுக் கொள்ளவே இல்லை .நீங்கள் பயன்படுத்திய தண்ணீர் தொகைக்கு நீங்கள் தான் பொறுப்பு என்று கூறி நீங்கள் இந்த தொகையை கட்டித்தான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார். தண்டச் செலவாக இந்த மாதம் கையில் இருந்த பெருந்தொகை கரைந்து போனது அவளுக்கு மிகப்பெரும் கவலையாக இருந்தது இந்த செலவை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தினமும் கவலையுடனே இருந்தாள்.

இந்த மாதம் கல்லூரியில் தொடர்ந்து பல நிகழ்வுகள் நடந்த வாரே இருக்கிறது. 9:15 மணிக்கு வழக்கமாக செல்ல வேண்டிய வேலை நேரத்திற்கு மாற்றாக பல நாட்கள் 8 மணிக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு ஏற்பட்டது. என்ன செய்ய நம் சொந்த பிரச்சினைகளை எல்லாம் யாரும் கருத்தில் கொள்வது கிடையாது என்று எண்ணியபடியே அவசர அவசரமாக கல்லூரிக்கு கிளம்பி கொண்டு இருந்தாள். இந்த கேஸ் அடுப்பு வேற ரொம்ப மெதுவாய் எரியுது..

ஆனா சரி பண்ண காசு இல்ல …என்ன செய்ய என்று அவசர அவசரமாக சமையலை முடித்து குளித்து கிளம்பிக் கொண்டு இருந்தாள். அவள் மகள் பவானியை அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு கல்லூரி சென்று வருகை பதிவு செய்யும்பொழுது மணி 8:20 ஆகிவிட்டது 20 மணித்துளி தாமதம் என்று புலம்பிய படியே அன்றைய பணிகளைச செய்ய துவங்கினாள் .அடுத்த வாரம் சம்பள நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. என்னென்ன செலவுகளுக்கு எவ்வளவு பணம் தேவை என்று ஒரு பட்டியலைத் தயார் செய்து கொண்டிருந்தாள் .வழக்கமாக வீட்டுச் செலவு குறித்து வைக்கும் நோட்டில் அதனை மறக்காமல் எழுதியும் வைத்துக் கொண்டாள்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது திடீரென்று இரவு ஒரு நாள் குறுந்தகவல் செல்பேசியில் வருகிறது .எடுத்துப் பார்த்தால் சம்பளம் அதில் வந்திருக்கிறது என்ற தகவல். அவள் வழக்கமாக வாங்கும் சம்பளத்தொகையை விட ஆயிரம் ரூபாய் அதில் குறைந்து இருந்தது . காரணம் என்ன என்று விசாரித்துப் பார்த்ததில் அன்று கல்லூரிக்கு தாமதமாக வந்த 20 மணித்துளிக்காக ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அபராதமாகப் பிடித்திருப்பதை அவள் அறிந்து கொண்டாள்.மறுநாள் கல்லூரி சென்ற பொழுது 50

ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தகவல் தெரிந்தது. இந்த 50 பேரின் குடும்பமும் சம்பளத்தில் இந்த தொகையை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று எண்ணி ,தன்னை போலவே அந்த சம்பள குறைப்பு இவர்களுக்கும் மிகப்பெரும் பேரிடியாக இருக்கும் என்று எல்லோருக்காகவும் தன்னுடைய நிலையையும் எண்ணி வருந்திக் கொண்டு சென்றாள் பிரியங்கா.

இனிமேல் நிர்வாகம் ஒரு நேரத்திற்கு கல்லூரிக்குச்வரச் சொல்லி தாமதமாக வந்தால் இப்படித்தான் ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று எல்லோருக்கும் சுற்றறிக்கை விடப்பட்டது. இது என்ன நவீன கொத்தடிமைகள் நாம் என்று நினைத்துக் கொண்டு உழைப்புச் சுரண்டலுக்கு இன்னும் கொஞ்சம் ஊக்கம் கொடுத்து வழக்கம் போல ஊமையாகவே பயணிக்க துவங்கினாள்.b இந்த மாதம் இந்த ஆயிரம் ரூபாய் தொகை முடங்கிப் போனதை எப்படி சமாளிப்பது என்று திட்டம் போட்டபடியே நகர்ந்தார் வேறு என்ன செய்ய இங்கு வாழ்தல் இனிது என்று தானே கற்பிக்கப்பட்டிருக்கிறது நமக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *