பத்தாயிரம்




அந்த அலுவலகத்தில் பத்து வருடங்களுக்கு முன்னாலுள்ள பேப்பர்களை எல்லாம் கட்டி லாரியில் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ராம் கம்பெனியில் வந்திருந்த டென்டர் கவரை பிரிக்காமல் அப்படியே அந்தக் காகிதங்களோடு அனுப்பி விட்டு “ஹலோ லஷ்மண் கன்ஸ்ட்ரக்ஷன்” என்று போனை எடுத்தான்.
“என்ன கமல் காரியம் சக்சஸ்தானே?”
“கவலைப்படாதீர்கள் சார், ராம் கம்பெனியில் இருந்து வந்த டென்டர் இந்நேரம் கோடவுனுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் லலிதா பவுண்டேஷன் டென்டரை எம்.டி.டேபிளில் வைத்தாகி விட்டது.” என்றான் கமல்.

“சரி சாயங்காலம் லலிதா பவுண்டேஷன் வந்து எங்கள் மானேஜரிடம் போய் பத்தாயிரம் வாங்கிகிட்டுப் போங்கள்” என்றார் லலிதா பவுண்டேஷன் நிர்வாகி.
சாயங்காலம் லஷ்மண் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி சேர்மன் வந்திருந்த எல்லா டெண்டர்களையும் எடுத்துப் பெட்டியில் போட்டுக் கொண்டு இந்த முறை ஏன் ராம் கம்பெனிக்காரன் டெண்டர் அனுப்ப வில்லை என்று யோசித்துக் கொண்டே லிப்டில் இறங்கினார்.
“சார் இது உங்கள் கம்பெனிக்கு வந்த கடிதம். ரோட்டில் இந்தப் பக்கம் கிடந்தது.” என்று ராம் கம்பெனி டெண்டரை சேர்மனிடம் கொடுத்து விட்டுப் போனான் அந்தக் கட்டிட வாட்ச்மேன்.
என் தந்தை கர்நாடகாவில் இருந்தபோது எழுதிய கடிதம் இப்படி “மகனே! நீ என்னைப் பார்க்க விரும்புகிறாயா.? ஆனால் இங்கு மனிதருக்குள்ள கெட்ட குணங்கள் அதாவது வஞ்சகம், சூது, பொறாமை,சண்டை சச்சரவுகள் எனச் சர்வமும் இந்தக் கோழிக் குஞ்சுகளிடமும் குறைவின்றி இருக்கிறது. இவைகளை விட்டு வருவது எளிதல்ல” என்று நன்றி, என்ற ஒரே ஒரு சொல்லில் ஏற்புரை முடித்து வைத்ததற்காக தங்களுக்கு என் நன்றி”
கதைச் சிற்பி, சரத் சந்திரர், ஒரு இலகக்கியவாதியின் மரணத்திற்குப்பின் நடந்த கூட்டத்தில் இப்படி பேசினார் “அவள் வறுமையில் இருந்த போது நாம் யாரும் கண்டு கொள்ள வில்லை. அவரது எழுத்தை நாம் பாராட்டி புகழவில்லை. அவர் இறந்து விட்டார். அவரது இரங்கல் கூட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம்” என்றாராம்.
ஐயா! மரணம் வரும்வரை நம் வழியில் நாம் சோராது நடப்போம், செயல்படுவோம். நாடு நாசமாய் போவதுதான் விதி என்றால் நம்மால் முடிந்த அணைக்கட்டுவோம். பெரிய மலையை எலி துளைப்பதைபோல.