தெப்போ-76






(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16
அத்தியாயம்-10
“சாம்பசிவ சாஸ்திரிகளைக் காணோமே, எங்கே?” என்று கேட்டார் கோபால் ராவ்.

“அவரும் ஜப்பான் சாஸ்திரியும் சேர்ந்து ஷாப்பிங் போயிருக்கா. அப்படியே ஹோட்டல் ஒகூராவுக்குப் போய் சமையல் வைத்தாவைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொன்னார்கள்” என்றார் அம்மாஞ்சி.
“நல்ல மழை கொட்டுகிறதே! இப்பத்தானா ஷாப்பிங் போவதற்கு நேரம் கிடைத்தது? கையிலே குடை ஏதாவது எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்களா?” என்று கவலை யோடு விசாரித்தார் கோபால் ராவ்.
“ஜப்பான் சாஸ்திரி கையிலே விசிறி மட்டும் இருந்தது பார்த்தேன். குடை எடுத்துக் கொண்டு போனதாகத் தெரியவில்லை” என்றார் அம்மாஞ்சி.
“மழையிலே நனைந்து தெப்பமா திரும்பி வரப் போறாங்க” என்றார் கோபால் ராவ்.
“தெப்பம் விடத்தானே வந்திருக்கோம்?…” என்று சிரித்தார் அம்மாஞ்சி வாத்தியார்.
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே சாம்பசிவ சாஸ்திரியும் ஜப்பான் சாஸ்திரியும் வந்து சேர்ந்து விட்டார்கள்.
“ஆயுசு நூறு உங்களுக்கு! இப்பத்தான் பேசிக் கொண்டிருந்தோம் உங்களைப் பற்றி… எங்கே போயிட்டீங்க ரெண்டு பேரும் இந்தக் கொட்டுகிற மழையிலே?” என்று கேட்டார் கோபால் ராவ்.
“ஷாப்பிங்” என்றார் பெருமையோடு சாம்பசிவம். “மழையில் துளிக்கூட நனையாமல் வந்திருக்கிறீர்களே, எப்படி?” என்று கேட்டார் கோபால் ராவ்.
“ஜப்பான்லே மழையிலே நனையாமல் ஷாப்பிங் பண்ணுவதற்கு ஒரு வழி இருக்கு” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அதென்ன வழி?” என்று கேட்டார் கோபால் ராவ்.
“அண்டர்கிரவுண்ட் வழிதான்! அண்டர்கிரவுண்ட்லே போயிட்டால் அங்கே எல்லாக் கடைகளுமே இருக்கு. மழையைப் பற்றிக் கவலையே இல்லை. எவ்வளவு மழை பெய்தாலும் துளித் தண்ணீர் வராது. அது மட்டுமா? நல்ல காற்று வேறே ஜிலுஜிலுன்னு வீசும். டிராபிக் இடைஞ்சல் இல்லாமல் நிம்மதியாக நடக்கலாம். இரைச்சல், சத்தம் எதுவும் கிடையாது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“பொதுவா ஜப்பானிலேயே சத்தம் குறைச்சல் தானே!” என்றார் கோபால் ராவ்.
“அண்டர்கிரவுண்ட்லே அதைவிடக் குறைச்சல்!” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“ஜப்பானில் தரைமட்டத்துக்கு மேல் ஒரு நகரம் இருக்கிறதென்றால் பாதாளத்தில் ஒரு நகரம் இருக்கு. இட நெருக்கடி; அகலக் கால் வைக்க முடியவில்லை. ஆழக்கால் வைத்திருக்கிறார்கள். பூமிக்கடியில் ‘குடை குடை’ என்று குடைந்து தள்ளியிருக்கிறார்கள்” என்றார் கோபால் ராவ்.
“கோபால் ராவ் சார்! ஒரு பெரிய தமாஷ் நடந்து போச்சு. அது தெரியுமா உங்களுக்கு?” என்றார் சாம்ப சிவம் சிரித்துக்கொண்டு.
“என்ன அது?” என்று ஆவலோடு விசாரித்தார் கோபால் ராவ்.
“ஒகூரா ஓட்டலுக்கு எனக்கு வழி தெரியும், சப்வே’ வழியாப் போகலாம் வாங்கன்னு சொல்லி என்னை அழைச் சிண்டு போனார் இந்த ஜப்பான் சாஸ்திரி.ஒகூரா ஓட்டல் அகாஸாகாவிலே இருக்கு. அகாஸாகாவுக்கும் அஸாகுஸா வுக்கும் வித்தியாசம் தெரியாமல் அஸாகுஸாவுக்கு இரண்டு டிக்கெட் வாங்கிட்டார். அவன் அஸாகுஸாவிலே கொண்டு விட்டுட்டான்!”
“அப்புறம் என்ன ஆச்சு?”
“என்ன ஆச்சு! ஒகூரா ஓட்டலைத் தேடி அஸாகுஸா வெல்லாம் சுற்றி அலைஞ்சோம். அது எப்படிக் கிடைக்கும்? கடைசியா அங்கே ஒருத்தர், ‘இது அஸாகுஸா ஏரியா.. கூரா ஓட்டல் அகாஸாகாவிலே இருக்கு’ என்று சொன் னார். அப்புறம் அங்கிருந்து அகாஸாகாவுக்குப் போய் ஒகூரா ஓட்டலைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.”
“ஒகூரா ஓட்டலுக்கு எதுக்குப் போனீங்க?” என்று கேட்டார் கோபால் ராவ்.
“சமையல் வைத்தா அங்கேதானே தங்கியிருக்கான்? அவனிடமிருந்து பொடி வாங்கிண்டு வரப் போயிருந்தோம்…!”
“அதானே பார்த்தேன். அதுக்குத்தான் அவ்வளவு அவசரமாப் புறப்பட்டுப் போனீங்களா?” என்று கேட்டார் கோபால் ராவ்.
“நான் போனது மஞ்சள் பொடிக்கு. ஜப்பான் சாஸ்திரி. என்னோடு வந்தது வேறே பொடிக்கு” என்று பொடி வைத்துப் பேசினார் சாம்பசிவம்.
“மஞ்சள் பொடி எதற்கு?” என்று கேட்டார் கோபால் ராவ்.
“நாளைக்குக் காலையில் தேர் வேலை தொடங்குவதற்கு முகூர்த்தம் பார்த்திருக்கிறோமே! அப்போது பிள்ளையார் ஆஜை செய்ய வேண்டாமா? பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி வேண்டுமே!” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“காலையிலே வைத்தாவை வரச் சொல்லுவதுதானே? நாளைக்கே இங்கு சமையலை ஆரம்பிச்சுடலாமே!” என்றார் கோபால் ராவ்.
“சொல்லாமல் இருப்போமா! ராத்திரியே கார் அனுப்பிக் கூட்டி வந்துவிட வேண்டியதுதான். ரெடியா இருக்கச் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அப்பம், எள்ளுருண்டை வடை, சுண்டல், வெண் பொங்கல் இவ்வளவும் செய்யச் சொல்லியிருக்கேன். பிள்ளையாருக்கு நைவேத்தியம்” என்றார் சாம்பசிவ சாஸ்திரி.
“அப்படியே கொஞ்சம் கொழுக்கட்டையும் செய்யச் சொல்லுங்க. பிள்ளையாருக்கு ரொம்பப் பிடிக்கும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“பிள்ளையாருக்கா, உமக்கா? என்று கேட்டார் அம்மாஞ்சி.
“பூஜைக்கு சக்கரவர்த்தியும் மகாராணியும் தங்கள் குடும்பத்தாருடன் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்றான் பஞ்சு.
“தேங்காய், சந்தனம், புஷ்பம், ஊதுவத்தி, சாம்பிராணி, வெற்றிலை பாக்கு சகலமும் வந்திருக்கு மெட்ராஸ்லேருந்து…” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“மாலை வந்திருக்கா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“பத்து ரோஜா மாலையும், ஒரு டஜன் மல்லிகைப் பூ மாலையும் ஸ்பெஷலாகக் கட்டி அனுப்பியிருக்கிறார்கள்” என்றார் சாம்பசிவ சாஸ்திரி.
“பிள்ளையார் பூஜை முடிந்ததும் சக்கரவர்த்தி குடும்பத்தாருக்கு அந்த மாலைகளைப் போடணும்” என்றார் கோபால் ராவ்.
“உதிரிப் பூக்கள் வேறு நாலு கூடை வந்திருக்காம். வாசனை ஓகூரா ஓட்டலையே தூக்கிண்டு போறது” என்றார். ஜப்பான் சாஸ்திரி.
“தேரோட்டத்தன்று பூ மட்டும் ஒரு பிளேன் நிறைய வரப் போகிறது. அன்றைக்குப் பூ வாசனை ஜப்பானையே தூக்கிண்டு போகும் பாருங்கள்”, என்றான் பஞ்சு.
“அவ்வளவு பூவையும் என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“கின்ஸாவிலே தேர் ஓடுகிறபோது மேலே ஹெலிகாப்டரிலிருந்து பூமாரியாப் பொழிவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்றான் பஞ்சு.
“ஆமாம், சக்கரவர்த்தி தேர் ஓட்டத்தை எங்கிருந்து பார்க்கப் போகிறார்? கூட்டம் நெருக்கித் தள்ளுமே?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“கின்ஸாவிலே ஒரு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்கு. அதன் மொட்டை மாடியிலே ஹெலிபோர்ட்டே இருக்காம். சக்கரவர்த்தியும் அவர் குடும்பத்தாரும் அந்த மாடியிலே வந்து இறங்குவாங்க. அதே கட்டடத்திலே மூன்றாவது மாடி ஜன்னல் வழியாகத் தேர் ஓடுவதைப் பார்ப்பார்கள்” என்றான் பஞ்சு.
“தேரை அப்படிப் பார்த்தால் மட்டும் போதாது. தெருக் கோடியில் திரும்புகிறபோது பார்க்கணும் அந்தக் காட்சியை!” என்றார் கோபால் ராவ்.
“சரி, அதற்கும் ஏற்பாடு செய்து விடுகிறேன்” என்றான் பஞ்சு.
“ஆமாம், நாளைக்கு பூஜைக்கு பிரைம் மினிஸ்டர் வருகிறாரா? யார் யாருக்கு இன்விடேஷன் போட்டிருக்கீங்க?” என்று கேட்டார் அம்மாஞ்சி வாத்தியார்.
“எல்லோருக்கும் போட்டிருக்கோம். பிரைம் மினிஸ்டர் அமெரிக்கா போயிருக்கிறார். திரும்பி வந்ததும், தேர் வேலை நடக்கிறபோது இங்கே வந்து பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்” என்றான் பஞ்சு.
“ஒகூரா ஓட்டலில் இன்னொரு தமாஷ் நடந்ததே, அது தெரியுமா?” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அதென்ன?” என்று பஞ்சுவும் கோபால் ராவும் ஆவலோடு கேட்டார்கள்.
“அந்த ஓட்டல் லௌஞ்சில் எங்களுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னான் என் மருமான். நானும் சாம்பசிவ சாஸ்திரியும் அங்கே போய்ப் பார்த்தோம். ஆனால் அவனைக் காணவில்லை”.
“அப்புறம்?… “
“ஒருவேளை இகிடாவுடன் எங்காவது ஊர் சுற்றப் போயிருப்பான் என்று எண்ணிக் கொண்டு அங்கேயே ஒரு சோபாவில் உட்கார்ந்திருந்தோம். ஒரு மணி நேரம் கழித்து வந்தான் ரமேஷ்! வந்தவன், “என்ன மாமா! இங்கே வந்து உட்கார்ந்திருக்கீங்க? இது ஐந்தாவது மாடி லௌஞ்ச் அல்லவா?” என்று கேட்டான்.
“ஏண்டா இந்த ஓட்டல்லே மொத்தம் எத்தனை லௌஞ்ச்?” என்று கேட்டேன். “இரண்டு லௌஞ்ச் ஒண்ணு க்ரவுண்ட் ப்ளோர்லே இருக்கு. இன்னொன்று ஐந்தாவது மாடியிலே இருக்கு. இந்த ஓட்டல் ஒரு மலைச் சரிவிலே இருக்கு. அதனாலே பின்பக்கமாக ஒரு வழி. முன் பக்கமாக ஒரு வழி. முன்பக்க வழி கிரௌண்ட் ப்ளோருக்கு வந்து சேரும். பின்பக்க வழி உயரத்திலுள்ள ஐந்தாவது மாடிக்கு வந்து சேரும்” என்றான். எங்களுக்கு அப்புறம் தான் விஷயம் புரிந்தது!” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“பூஜைக்கு நேரமாகிறது. எல்லாரும் வாங்க” என்று பூஜை மணியை எடுத்து கிணு கிணுவென்று அடித்தார் சாம்பசிவ சாஸ்திரி சமையல் கட்டில் தயாராகிக் கொண்டிருந்த வெண் பொங்கலிலிருந்து வீசிய் நெய் மணமும் முந்திரிப்பருப்பு வாசனையும் சாஸ்திரிகளின் மூக்குகளைத் துளைத்தன. அந்த வாசனையோடு ஊதுவத்தி வாசனையும் சேர்ந்து கொண்டபோது தமிழ்நாடே ஜப்பானுக்கு வந்துவிட்ட மாதிரி இருந்தது.
பூஜைக்கு, கார்டனிலுள்ள ஓர் அழகான இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
அம்மாஞ்சி வாத்தியார் பூஜைக்கு வேண்டிய புஷ்பங் கள்,பழங்கள், தேங்காய், கற்பூரம், வெற்றிலை பாக்கு, அருகம்புல், எருக்கம் பூமாலை, கரும்பு, சந்தனம், ஊதுவத்தி, சாம்பிராணி எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, குத்துவிளக்குகளை ஏற்றுவதற்குத் தீப் பெட்டியைத் தேடினார். அதைக் கவனித்த யோஷினாரி தம் சட்டைப் பையிலிருந்த தீப் பெட்டியை எடுத்து அம்மாஞ்சியிடம் கொடுத்தார்.
“நீங்களே ஏற்றி விடுங்கள்; பரவாயில்லை” என்றார் அம்மாஞ்சி.
யோஷினாரி தீக்குச்சியை எடுத்து ஜப்பானியர் வழக்கப்படி எதிர்த் திசையில் உரசினார்.
“விரல் விட்டு எண்ணும்போது கட்டை விரலிலிருந்து ஆரம்பிக்கிறாங்க. தீக்குச்சியை எதிர்த்திசையில் கிழிக்கிறாங்க’ என்று சொல்லிச் சிரித்தார் கோபால் ராவ்.
சமையல் வைத்தா பிரசாதங்களைக் கொண்டு வந்து வைத்தார்.
காரைக்குடி ஆசாரிகள், திருவாரூர் ஆசாரிகள், மலபார் ஆசாரிகள் எல்லாரும் ஸ்நானம் செய்து, விபூதி அணிந்து, சிவப்பழமாகப் பூஜைக்கு ஆஜராகியிருந்தார்கள்.
காலையில் எட்டு மணிக்கு முகூர்த்தம் வைத்திருந்தார்கள். குறித்த. நேரத்துக்குள் எல்லோரும் வந்து சேர்ந்து விட்டனர். பிரஸ் ரிப்போர்ட்டர்களையும் முக்கிய பிரமுகர் களையும் யோஷினாரி, ரமேஷ், இகிடா மூவரும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.
குறித்த நேரத்தில் சக்கரவர்த்தியும் அவரது குடும்பத். தினரும் வந்து அவர்களுக்காகப் போடப்பட்டிருந்த. வெல்வெட் ஆசனத்தில் அமர்ந்தனர். விநாயகர், நடராஜர் விக்ரகங்களின் அழகைக் கண்ட மகாராணி “பியூட்டிபுல் ஐடல்ஸ்!” என்று வியந்தார்.
“பூஜை ஆரம்பிக்கலாமா?” என்று சக்கரவர்த்தியின் முன் விநயத்தோடு குனிந்து கேட்டான் பஞ்சு. சக்கரவர்த்தி தலையசைத்தார்.
அம்மாஞ்சி மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்யத் தொடங்கினார். அடுத்தாற்போல் திருவாரூரிலிருந்து வந்திருந்த ஓதுவார் தமிழ்ப்பாடல் ஒன்றைக் கணீரென்ற குரலில் இனிமையாகப் பாடி முடித்தார்.
மஞ்சள் பொடியில் பிடித்து வைத்திருந்த பிள்ளை யாரைப் பார்த்துவிட்டு, “அது என்ன?” என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“பிள்ளையார்” என்றான் பஞ்சு.
“அப்படியானால் விநாயகர் என்பது யார்?” என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“விநாயகர், பிள்ளையார், விக்னேசுவரர், கணபதி எல்லாப் பெயர்களும் ஒன்றேதான்” என்றான் பஞ்சு.
அடுத்தாற் போல் கணபதி ஸ்தபதியை சக்கரவர்த்திக்கு அறிமுகப்படுத்தினார் கோபால் ராவ்.
“கணபதி! ஸேம் நேம்!” என்றார் சக்கரவர்த்தி சிரித்துக்கொண்டே.
பூஜை முடிவுற்றதும், சாம்பசிவ சாஸ்திரிகள் பிள்ளையாருக்கு சூறைக்காய் உடைத்தார். சூறைக்காய் உடைப்பதன் தத்துவத்தை சக்கரவர்த்திக்கு விளக்கினார் கோபால் ராவ்.
கடைசியாக ரோஜா மாலைகளை எடுத்து சக்கரவர்த்தி, மகாராணி, சக்கரவர்த்தியின் குடும்பத்தினர் எல்லோருக்கும் அணிவித்தான் பஞ்சு. தேரோட்டத்தன்று சக்கரவர்த்திக்கு யானைகள் மாலை போடப் போகும் காட்சியை மனக் கண்ணால் பார்த்து மகிழ்ந்தார் கோபால் ராவ்.
கடைசி கடைசியாக எல்லோருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
“கொழுக்கட்டை ரொம்ப ருசியாயிருக்கிறது. வெரி ஸ்வீட். பூர்ணத்தை இதற்குள்ளே எப்படி வைத்தீர்கள்?’ என்று வியப்போடு கேட்டனர் சில நிருபர்கள்.
சமையல் வைத்தா நிருபர்களை சமையல்கட்டுக்கு அழைத்துச் சென்று கொழுக்கட்டை செய்யும் விதத்தைக் காட்டினார்.
“இதற்கே இப்படி ஆச்சரியப்படுகிறார்களே, இவர் கள்! காராபூந்தியைப் பார்த்தால், ‘அத்தனை சின்ன காரா பூந்திக்குள் எப்படி காற்றடைத்தீர்கள்?’ என்று கேட்பார்கள் போலிருக்கிறது!” என்றார் அம்மாஞ்சி.
‘கருமருது, இரும்பகம்’ என்ற இரண்டு மரங்களை எடுத்துத் தேர் வேலையை ஆரம்பித்து வைத்தார் காரைக்குடி ஆசாரி.
கணபதி ஸ்தபதி வள்ளுவர் சிலைக்காக வந்திருந்த பாறைக்கு மஞ்சள் பூசி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்துவிட்டு, கல்லுளியை எடுத்துச் சிற்ப வேலையைத் தொடங்கினார்.
11
“அகாஸாகா ஏரியாவில் கெய்ஷாக்கள் நடமாட்டம் அதிகமாம்…” என்றார் சாம்பசிவம்.
“அங்கே கைரிக்ஷாக்கள் நடமாட்டமும் அதிகம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
‘இந்த கெய்ஷாக்கள் கைரிக்ஷாக்களில் ஒய்யாரமாக ஏறி உட்கார்ந்து போகிற அழகே தனி” என்றார் சாம்பசிவம்.
“உலகத்திலேயே டோக்கியோவை ரொம்ப மாடர்ன் ஸிடி என்கிறார்கள். ஆனால் இவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ள இந்நகரில் இன்னமும் கைரிக்ஷாக்கள் ஓடுவது ஆச்சரியமாயிருக்கிறது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அந்த விதத்தில் தமிழ்நாடு தேவலை. கைரிக்ஷாக்களை ஒழித்தாயிற்று!” என்று பெருமைப்பட்டார் கோபால் ராவ்.
“இங்கே டிராம் வண்டிகள் கூட ஓடுகின்றன. அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“எவ்வளவு முன்னேறினாலும் ஜப்பானியர் தங்களுடைய பழமைச் சின்னங்களை மறப்பதில்லை” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அது மட்டுமல்ல. நன்றி பாராட்டுவதிலும் ஜப்பானியர்களை யாரும் மிஞ்சிவிட முடியாது. நம்மவர்கள் வள்ளுவர் குறளை மேற்கோள் காட்டி நன்றியைப் பற்றி வாய் கிழியப் பேசுவதோடு சரி. காரியத்தில் நேர்மாறாக நடந்து கொள்வார்கள். ஜப்பானியர் அப்படியில்லை. அவர்களுக்கு யாராவது ஒரு சின்ன உதவி செய்தாலும் அதைப் பெரிதாக மதித்து நன்றி பாராட்டத் தவற மாட் டார்கள். ஒரு நாய்க்குச் சிலை செய்து வைத்துள்ள நாடு இது ” என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினார் கோபால் ராவ்.
“அது இடத்தின் விசேஷம். ஏழுமலை வாசிகள் ஆயிற்றே!” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அதென்ன ஏழுமலை?” என்று ஆர்வத்தோடு கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி.
“திருப்பதி மாதிரி இந்த டோக்கியோவும் ஏழு மலைகள் மீது அமைந்துள்ளது. வாடிகன் ஸிடி இல்லையா? அதே மாதிரி!” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அப்படியா! இத்தனை நாள் எனக்கு இது தெரியாதே! உமக்கு யார் சொன்னது?” என்று கேட்டார் அம்மாஞ்சி வாத்தியார்.
“ஜப்பான் சாஸ்திரி என்று பெயர் வைத்துக்கொண்டு இது கூடத் தெரியாமல் இருக்கலாமா?” என்றார் குள்ள சாஸ்திரி.
“நாய்க்குச் சிலை வைத்திருக்கிறார்களாமே, அதை நாம் போய்ப் பார்க்க வேண்டாமா?” என்று கேட்டார் அம்மாஞ்சி வாத்தியார்.
“இப்போது அங்கேதான் போகப் போகிறோம். கைவசம் பூ மாலைகள்கூட நிறைய இருக்கு. ஆளுக்கொரு மாலை எடுத்துக் கொண்டு போய் அந்த நாய்க்குப் போட்டு விட்டு வரலாம்'” என்றார் கோபால் ராவ்.
“நாய்க்கு மாலை போடுவதா! அது சரியாயிருக்குமா?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“அது நாய்க்குப் போடும் மாலை அல்ல. நன்றி உணர்வை மதித்துப் போடுகிற மாலை” என்றார் கோபால் ராவ்.
“பஞ்சு ஸார்! அப்படியானால் இப்போதே போன் செய்து பிரஸ் போட்டோகிராபர்களை அங்கே வரச் சொல்லுங்க. நாம் மாலை போடுவதை அவர்கள் போட்டோ எடுத்துப் பத்திரிகைகளில் போடுவார்கள்” என்றார். அம்மாஞ்சி.
“நீர் என்ன அரசியல்வாதியா? இப்படி ஒரு பப்ளிஸிடி ஆசை வேண்டாம் உமக்கு!” என்றான் பஞ்சு.
“என் சொந்த பப்ளிஸிடிக்காகச் சொல்லவில்லை. நன்றி உணர்வுக்குத் தமிழர்கள் கொடுக்கும் மதிப்பு நாலு பேருக்குத் தெரியட்டுமே என்றுதான் சொல்கிறேன்” என்றார் அம்மாஞ்சி.
கோபால் ராவ்,பஞ்சு,அம்மாஞ்சி, சாம்பசிவம், ஜப்பான் சாஸ்திரி ஐவரும் ஒரு காரில் ஏறிக் கொண்டு ஷிபுயா ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
அந்த ஸ்டேஷன் வாசலில்தான் ‘ஹச்சிக்கோ’ என்ற நாய்க்குச் சிலை செய்து வைத்துள்ளார்கள்.
ஜப்பான் சாஸ்திரியைத் தவிர மற்ற நால்வரும் மாலைகளை அந்த நாயின் கழுத்தில் போட்டனர்.
நாய்ச்சிலை உயரத்தில் இருந்ததால் குள்ள சாஸ்திரிக்கு அது எட்டவில்லை. எனவே, அம்மாஞ்சியும் சாம்பசிவ சாஸ்திரியும் அவரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டார்கள். இந்த அபூர்வக் காட்சியைப் பத்திரிகை நிருபர்கள் போட்டோ எடுத்து அதன் கீழே A Short man from Tamil Nadu pays homage to Hachiko என்று செய்தியும் வெளியிட்டனர்.
“நாயின் முகத்தில் ஒரு சோகம் தெரிகிறதே, அந்த சோகபாவத்தை சிலையில் எப்படித்தான் கொண்டு வந்தார்களோ?” என்று வியந்தார் ஜப்பான் சாஸ்திரி.
“எதையோ பறி கொடுத்த மாதிரி ஒரு சோகம்!” என்று பரிதாபப்பட்டார் அம்மாஞ்சி வாத்தியார்.
“ஆமாம்; இந்த நாயின் எஜமானர் ஒரு புரொபஸர். அவர் 1925-ல் இறந்துவிட்டார். பாவம், இந்த நாய்க்கு அப்போது இரண்டரை வயதுகூட ஆகவில்லை” என்றார் கோபால் ராவ்.
“அது சரி; இந்த ஸ்டேஷனுக்கும் அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம்? இங்கே எதற்காக அதற்குச் சிலை செய்து வைத்திருக்கிறார்கள்?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“அந்த புரொபஸர் தினமும் இந்த ஸ்டேஷனுக்கு வந்துதான் ரயில் ஏறுவது வழக்கம். தினமும் காலையில் எட்டு மணிக்கு ரயில் ஏறி யூனிவர்ஸிடிக்குப் போவார். பிறகு மாலை ஐந்து மணிக்குத் திரும்பி வருவார். காலையில் அவரோடு ஸ்டேஷனுக்கு வரும் அந்த நாய் மாலையில் அவர் திரும்பி வரும் வரை இங்கேயே காத்துக் கிடக்கும்.
“ஒரு நாள் யூனிவர்ஸிடிக்குப் போன புரொபஸர் திரும்பி வரவேயில்லை. இதய நோய் காரணமாக யூனிவர்ஸிடியிலேயே இறந்து விட்டார். அவரை அங்கேயே அடக்கம் செய்து விட்டார்கள். அந்தச் செய்தியை நாய்க்குச் சொல்லுவார் ஒருவருமில்லை. எஜமானரைக் காணாத இந்த “ஹச்சிகோ’ ஸ்டேஷனிலேயே வெகுநேரம் வரை பட்டினியோடு காத்துக் கொண்டிருந்தது. பிறகு மிகுந்த சோகத்தோடு வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. மறு நாள் வழக்கம்போல் காலை எட்டு மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்து மீண்டும் ஐந்து மணி வரை காத்திருந்து விட்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. இப்படியே பத்து வருட காலம் அது உயிரோடு உள்ள வரை வந்து போய்க் கொண்டிருந்தது. எஜமானரைப் பிரிந்த சோகம் தான் அதன் முகத்தில் தெரிகிறது. அதற்குத்தான் இங்கே சிலை வைத்திருக்கிறார்கள்” என்றார் கோபால் ராவ்.
“அடாடா, இப்படி ஒரு தேசமா?” என்று வியந்தார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“த்சொ! த்சொ!” என்று அனுதாபத்துடன் ஒலி எழுப்பினார் அம்மாஞ்சி கண் கலங்கியபடி.
“ஜூலை பதினெட்டு தேரோட்டம். ஜூலை இருபத்தைந்து தெப்ப விழா. இரண்டுக்கும் டேட் பிக்ஸ் பண்ணியாச்சு” என்று உற்சாகத்தோடு சொல்லிக் கொண்டு வந்தனர் அப்போது தான் டயட் ஆபீஸிலிருந்து வந்த பஞ்சுவும் கோபால் ராவும்.
“பேஷ்! பேஷ் இரண்டு நாளுமே ஸண்டே! ரொம்ப சௌகரியமாப் போச்சு” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“தேர் வேலை அதற்குள்ளே முடிந்து விடுமா?” என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார் அம்மாஞ்சி.
“முடியாமல் என்ன? ஏற்கெனவே கால்வாசிக்கு மேல் முடிந்து விட்டதே!” என்றான் பஞ்ச.
“கால்வாசியா? என் தலைவாசிக்கு வந்துவிட்டது!” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
”உம்ம தலை உயரம்னா ஐந்தடி தானே? அப்படியானால் சக்கரத்திலே பாதி அளவு கூட உயரவில்லை என்று அர்த்தம்” என்று கேலி செய்தார் அம்மாஞ்சி.
“அது சரி, சக்கரம் யார் செய்யப் போகிறார்கள்?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி.
“திருச்சியிலிருந்தே செய்து வரப்போகிறது. திருவாரூர்த் தேர் போலவே ஸ்டீல் சக்கரம்” என்றான் பஞ்சு.
“தேரிலுள்ள சிற்பங்கள் கூட திருவாரூர்த் தேரில் உள்ளபடியே இருக்குமா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“தத்ரூபம் அப்படியே இருக்கும். ஒவ்வொரு சிற்பத் தையும் தனித்தனியா போட்டோ எடுத்து வந்திருக்கிறார் கள். குரங்கு ஒன்று இன்னொரு குரங்குக்குப் பேன் பார்க் கிற மாதிரிகூட அந்தத் தேரில் ஒரு சிற்பம் இருக்கிறது என்றான் பஞ்சு.
“மகாபலிபுரத்திலே இருக்கிற மாதிரியா?” என்று கேட்டார் அம்மாஞ்சி வாத்தியார்.
“இல்லை; இது வேறே மாதிரி. ரொம்பச் சின்னது. கவனிச்சுப் பார்த்தால்தான் தெரியும்'” என்றான் பஞ்சு.
“நாம் கூட “OsùCur-76′ விழா ஞாபகமாக ‘கீ செயின்’ ஒன்று செய்ய ஏற்பாடு செய்யலாம். சந்தன மரத்தில் சின்ன அளவில் தேர் செய்து அந்தக் கீ செயினில் இணைத்து, முக்கியமானவர்களுக்கெல்லாம் கொடுக்கலாமே” என்றார் கோபால் ராவ்.
“தேர் எவ்வளவு பெரிசு! அதைச் சந்தன மரத்தில் இத்தனூண்டு செய்து கொடுத்தால் நன்றாயிருக்குமா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“பெரிதாக இருப்பதைச் சிறிதாகச் செய்து பார்ப்பதில்தான் அழகு இருக்கு. பெரிய யானையைச் சின்ன சைஸில் செய்து பார்ப்பதிலும், சின்ன எறும்பைப் பெரிய சைஸில் செய்து பார்ப்பதிலும்தான் தமாஷே இருக்கு!” என்றார் கோபால் ராவ்.
“அதுவும் நல்ல ஐடியாதான்” என்றார் அம்மாஞ்சி.
“ஜூலை பதினெட்டு என்றால் நெருக்கத்தில் வந்து விட்டதே! இன்விடேஷன் போட வேண்டாமா?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி.
“ஓய்! இது ஜப்பான். எல்லாமே வேகத்திலே நடக் கும். நம்ம ஊர் பிரஸ் என்று நினைத்துவிட்டீரா?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“அது சரி, வடம் பிடித்து இழுக்கப் போகிறவர்கள், முட்டுக்கட்டை போடப் போகிறவர்கள், கொடி காட்டப் போகிறவர்கள், வெடி வைக்கப் போகிறவர்கள், நாதசுரக் காரர்கள், ஓதுவார்கள், பந்தல்காரர்கள், யானைக்காரர் கள், தேர் ஜோடனைக்காரர்கள், சமையல்காரர்கள் இவ் வளவு பேரையும் க்ரூப் க்ரூப்பாகப் பிரித்து ஒவ்வொரு க்ரூப்புக்கும் ஒவ்வொரு கலரில் டிரஸ் தைத்துக் கொடுத்து விட வேண்டும்…” என்றார் கோபால் ராவ்.
“இவர்கள் எல்லோரையும் கின்ஸா டோக்யோ ஓட்ட லில் இறக்கி விடலாம். அதுதான் தேரோட்டம் நடக்கப் போகிற வீதிகளுக்குப் பக்கத்திலேயே இருக்கிறது…” என்றான் பஞ்சு.
“யானைகளை எங்கே இறக்குவீர்கள்?” என்று கேட் டார் அம்மாஞ்சி.
“யுயேனோ பார்க்கில் இறக்கி விடலாம். அங்கேதான் மியூஸியம் இருக்கிறது. மியூஸியம் பார்க்க வருகிறவர்கள் அப்படியே யானைகளையும் பார்க்கலாம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“சரி, இன்விடேஷன் எத்தனை பேருக்கு அனுப்பப் போகிறீர்கள்?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“ஒரு லட்சம் பேருக்கு. எல்லா நாடுகளுக்கும் அனுப்பப் போகிறோம். தெப்போ ஆபீஸில் நைட் அண்ட் டே இந்த வேலைதான் நடந்து கொண்டிருக்கிறது. விலாசங்கள் டைப் ஆகிக் கொண்டிருக்கின்றன” என்றான் பஞ்சு.
“ஏற்கெனவே டோக்கியோ நகரத்தின் மக்கள் தொகை ஒரு கோடியே பத்து லட்சம். அத்துடன் இப்போது ஃப்ளோட்டிங் பாபுலேஷனும் சேர்ந்தால் ஜன நெருக்கம் தாங்காது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“தெப்போவே ஃப்ளோட்டிங் ஃபெஸ்ட்டிவல் தானே?” என்று ஜோக் அடித்தார் அம்மாஞ்சி.
“தேர் ஓடுகிறபோது வி.ஐ.பி.க்களை ஒரு வசதியான இடத்தில் உட்கார வைக்க வேண்டும். தேரோட்டம் நடக்கப் போகிற நாலு வீதிகளிலும் உள்ள மூலைக் கட்டடங்களைக் காலி செய்து அவர்களுக்கு ரிஸர்வ் செய்துவிட்டால் தெரு முனைகளில் தேர் திரும்புகிற காட்சியை அவர்கள் சௌகரியமாகப் பார்க்க முடியும்” என்றார் கோபால் ராவ்.
“இப்பவே டோக்கியோவிலே நம்மவங்க நடமாட்டம் அதிகமாகி விட்டது. தேரோட்டத்தன்று எப்படி இருக்கப் போகிறதோ?” என்றார் அம்மாஞ்சி.
“லேடி வாலண்டியர்கள் ஆயிரம் பேர் தேர்ந்தெடுத்திருக்கிறோம். எல்லாம் ஜப்பானியப் பெண்கள். பட்டர் ஃப்ளைஸ் மாதிரி இருக்காங்க. அவ்வளவு பேரும் எக்ஸ்போ-70-யில் வேலை செய்து அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் டிரஸ் ஒன்றே போதும்; அவ்வளவு ஜோராயிருக்கு!” என்றான் பஞ்சு.
“கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?” என்று ஒரு கேள்வியைப் போட்டார் அம்மாஞ்சி.
“அதுவும் எக்ஸ்போ ஸெவண்டி மாதிரிதான். குழந்தைகளோடு வருகிறவர்கள் முதலில் கின்ஸாவிலுள்ள ‘லாஸ்ட் சில்ட்ரன்’ ஆபீஸுக்குப் போய் அங்கே கொடுக்கிற நம்பர்களை வாங்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு நம்பர்கள் கொடுப்பார்கள். உதாரணமாக 1687- என்றால் அதே நம்பர் இரண்டு கொடுப்பார்கள். ஒன்றைக் குழந்தையின் முதுகிலோ அல்லது சட்டையிலோ ஒட்டிவிட வேண்டும். இன்னொன்றைக் குழந்தையின் பெற்றோர் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். கூட்டத்தில் குழந்தை காணாமல் போய்விட்டால் அந்தக் குழந்தையை வாலண்டியர்கள் லாஸ்ட் சில்ட்ரன் ஆபீஸில் கொண்டு விட்டுவிடுவார்கள். குழந்தைகளுக்கு அங்கே விளையாட்டுப் பொம்மைகள் இருக்கும். ஓடி விளையாட பார்க் இருக்கும். சாப்பிடுவ தற்கு சாக்லெட், ஐஸ் க்ரீம் எல்லாம் கொடுப்பார்கள். பெற்றோர்கள் கவலைப்படவே வேண்டாம். தங்களிடமுள்ள நம்பரைக் கொண்டுபோய் அங்கே காட்டினால் உடனே அதே நம்பருள்ள குழந்தையைக் கொண்டு வந்து அவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்” என்றான் பஞ்சு.
“அடாடா! பிரமாத ஏற்பாடு! எனக்குக்கூட ஒரு. குழந்தையா மாறி காணாமல் போகணும்போல ஆசையாயிருக்கு!” என்றார் சாம்பசிவம்.
“காணாமல் போவதில் நீர் ஏற்கெனவே எக்ஸ்பர்ட் ஆயிற்றே! உமக்கும் ஒரு நம்பர் வாங்கி உம் முதுகில் ஒட்டி வைக்க வேண்டியது தான்” என்றார் அம்மாஞ்சி.
“கோபால் ராவ்! வாங்க, வாங்க! விமானம் வருகிற நேரமாச்சு. ஏர் போர்ட்டுக்குப் போவோம். தேர் ஜோடனைக்காரர்கள், பந்தல்காரர்கள், ரங்கோலி சாந்தா நாராயணன் எல்லாரும் வராங்களாம். அவர்களை அழைத்து வந்துவிடுவோம்” என்றான் பஞ்சு.
“இதற்கு நீங்கள் போவானேன்? ரமேஷையும் இகிடாவையும் அனுப்புங்கள், போதும்” என்றார் அம்மாஞ்சி.
12
“இது டோக்கியோவா அல்லது தமிழ்நாடா என்று அடையாளமே தெரியாமல் மாறிப் போச்சு! எங்கே, எந்த இடத்தில் பார்த்தாலும், நம்மவர்கள்தான் கண்ணில் தென் படுகிறார்கள். இப்பவே இப்படி இருந்தால் பதினெட்டாம் தேதி எப்படி இருக்குமோ?” என்று வியந்தார் அம்மாஞ்சி.
“மெட்ராஸுக்கும், டோக்கியோவுக்கும் ஒரு வித்தியாசம்தான். இங்கே எருமை மாடு, சினிமா போஸ்டர் இதெல்லாம் இல்லை!” என்றார் சாம்பசிவம்.
“இந்த ஊர் மக்கள் நம் ஊர் மாதிரி நடுரோடில் நடப்பதும் இல்லை. நம் ஊரில் ஹார்ன் அடிச்சாக்கூட ஒதுங்க.. மாட்டாங்களே” என்றார் அம்மாஞ்சி.
“எருமைப்பால் காப்பி சாப்பிடுகிறவர்கள் குணம் வேறு எப்படி இருக்கும்? ரோடிலே நடக்கும் போதும் அந்த குணம்தானே வரும்?” என்றார் குள்ள சாஸ்திரி.
“பஞ்சு ஸாரையும், கோபால் ராவையும் எங்கே. காணோம் காலையிலிருந்து?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“அவங்க ரெண்டு பேரும் தெப்போ ஆபீஸுக்குப். போயிருக்காங்க. அங்கே பெரிசா தஞ்சாவூர் பாணியிலே – பந்தல் போட்டு, வாழை மரம், தேர்த் தொம்பை எல்லாம் கட்டி வைத்திருக்கிறார்களாம். சாந்தா நாராயணன் பார்ட்டி தெப்போ வாசல் பூராவும் ரங்கோலி கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அதை வேடிக்கை பார்க்க ஏராளமான கூட்டமாம்! சக்கரவர்த்தி பிறந்த. நாளன்று பாலெஸ் வாசலில் கூடுமே, அந்த மாதிரி கூட்டமாம்'” என்றார் சாம்பசிவம்.
“ரங்கோலி ரொம்ப அழகாயிருக்குமே! நம் நாட்டுக் கலைகளில் அதுவும் ஒன்று. என்ன கோலம் போட்டிருக்காங்களாம்?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“திருவாரூர்த் தேர். பூம்புகார், வள்ளுவர் கோட்டம், மாமல்லபுரம் கற்கோயில், வள்ளுவர் உருவம், நடராஜர் உருவம், விநாயகர் உருவம் இவ்வளவும் போட்டிருக்காங்களாம்” என்றார் சாம்பசிவம்.
“அது சரி, இன்னும் எட்டே நாள் தானே இருக்கு? தேர் வேலை அதற்குள்ளே முடிந்து விடுமா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“அநேகமாக முடிஞ்ச மாதிரிதான். எத்தனை ஆசாரி கள்? எத்தனை ஸ்தபதிகள்! ராத்திரியெல்லாம் வேலை நடக்கிறதே…” என்றார் சாம்பசிவம்.
”எனக்கென்னவோ வள்ளுவர் சிலையைப் பற்றித்தான் கவலையாயிருக்கு…’ என்றார் அம்மாஞ்சி.
“கணபதி ஸ்தபதி கையிலே ஒரு காரியத்தை ஒப் படைத்தாச்சுன்னா அப்புறம் அதைப்பற்றிய கவலையே வேண்டாம் நமக்கு. பதினெட்டாம் தேதிக்குள் சிலை தயாராயிடும்…” என்றார் சாம்பசிவம்.
“எப்படி முடியப்போகிறதோ, இன்னும் சிலைக்குத் தலையே தெரியலையாம்!” என்று பெருமூச்சு விட்டார் அம்மாஞ்சி.
“ஆமாம், சிலை உருவாகிற இடத்தைச் சுற்றித் திரை போட்டு மறைத்துக் கொண்டு வேலை செய்யறாங்க. நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன்.’இங்கே பதினேழாம் தேதி வரை யாருமே தலைகாட்டக் கூடாது’ என்று சொல்லி விட்டார் கணபதி ஸ்தபதி. பேசாமல் திரும்பி வந்துட்டேன்” என்றார் சாம்பசிவம்.
“ஒரு வேளை பதினேழாம் தேதிக்குள் வள்ளுவர் சிலை. முடியல்லேன்னா என்ன செய்வது?” என்று கவலைப் பட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“நம்ம சாம்பசிவ சாஸ்திரிக்கு வள்ளுவர் வேஷம் போட்டு தேருக்குள்ளே உட்கார வைத்துவிட வேண்டியது தான்” என்றார் அம்மாஞ்சி.
“வேஷம் ரொம்பப் பொருத்தமாயிருக்கும் அவருக்கு! வள்ளுவரே உயிர் பெற்று எழுந்து வந்த மாதிரி இருக்.கும்…” என்றார் குள்ள சாஸ்திரி.
“இங்கே நடக்கிற ஏற்பாடுகளைப் பார்த்தால் வள்ளுவரே நேரில் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை” என்றார் அம்மாஞ்சி.
”பாவம்! கோபால்ராவும் பஞ்சுவும் தூங்கி நாலு நாள் ஆச்சு. அவங்க ரெண்டு பேரும் இல்லேன்னா தேரோட் டமே இல்லை. வெளிநாட்டிலிருந்து தேர் பார்க்க வருகிறவர் வசதிக்காக டோக்கியோ பூராவும் கய்டுகளை நிறுத்தி வைக்கப் போகிறார்களாம். அதைத் தவிர அங்கங்கே மூலை முடுக்கெல்லாம் போர்டுகள் எழுதி வைச்சிருக்காங்க ளாம். முக்கியமான குறிப்புகளெல்லாம் அவற்றில் இருக்கு. மாம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“பதினெட்டாம் தேதி கின்ஸாவில் தேரோட்டம் நடக்கிறபோது தெருக்களில் கார்களே போகக் கூடாதுன்னு உத்தரவு போடச் சொல்லணும்” என்றார் அம்மாஞ்சி.
“ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே கார்களை அனுமதிப்பதில்லை. அன்று முழுதும் மக்கள் கின்ஸாவில் ‘ஃப்ரீ’யாக நடந்து போய் ஷாப்பிங் செய்வதற்காக இந்த ஏற்பாடு. பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான். அதனால் கவலையில்லை. அன்றைக்கு நம்ம ஸௌத் இண்டியன் டெம்பிள் கார் மட்டும்தான் கின்ஸாவில் ஓடும்…” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
யகவன் முதற்றே உலகு.
எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய அ எழுத்தைத் தமக்கு முதலாக உடையன. அது போல் உலகம் ஆதி யாகிய பகவனைத் தனக்கு முதலாக உடைத்து.
உருவகண்டு எள்ளாமை வேண்டும்; உருள்பெருந்
தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.
உருளுகின்ற பெரிய தேருக்கு, அச்சில் அமைந்து தாங்கும் சிறு ஆணி போன்ற வினைத் திட்பம் உடையாரும் உலகத்தில் உள்ளனர். ஆதலால், அச்சாணி போன் அவர்களின் உருவச் சிறுமையைக் கண்டு இகழாதிருக்கக் கடவர்.
கடலோடா கால்வல் நெடுந்தேர்; கடலோடும்
காவாயும் ஓடா நிலத்து
நிலத்தில் ஓடும் வலிமை பொருந்திய உருளைகளை உடைய பெரிய தேர்கள் கடலில் ஓடமாட்டா. அக்கடலில் ஓடும் மரக்கலங்களும் நிலத்தில் ஓடமாட்டா.
தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
ஆராயாமல் ஒருவனைத் தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவனிடம் ஐயங்கொள்ளுதலும், நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
“அகஸ்தியர் மாதிரி இருந்து கொண்டு ஜப்பானையே கரைத்துக் குடித்திருக்கிறீர் நீர்” என்றார் சாம்பசிவம்.
“சரி, தேருக்கு நாலு பக்கத்திலும் நாலு குறள் எழுதி வாங்கி அனுப்பச் சொன்னோமே, அது என்ன ஆயிற்று?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
”பாப்ஜியா, கொக்கா? எமகாதகனாச்சே. விடுவானா? குறளோவியம் ஆசிரியரையே நேரில் போய்ப் பார்த்து அவர் கையாலேயே நாலு குறள் எழுதி வாங்கி அனுப்பி விட்டான். நாலும் நாலு மணியான குறள். அதிலே வேடிக்கை என்னவென்றால் அவற்றில் இரண்டு குறள் தேர் சம்பந்தப் பட்டதாகவே அமைந்துவிட்டது. அந்த நாலு குறளில் ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற குறளும் ஒன்று” என்றார் சாம்பசிவம்.
“அந்த முதல் குறளை வள்ளுவர் கோட்டத்தின் விரதான வாயிலில் கூட எழுதி வைத்திருக்கலாம்” என்று ஒரு யோசனையை வெளியிட்டார் அம்மாஞ்சி.
அந்தக் குறையை இங்கே தீர்த்து விட்டால் போச்சு என்றார் சாம்பசிவம்.
“அந்த நாலு குறளையும் தேர் மீது எப்படி எழுதி வைப்பாங்க?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“நியான் விளக்கு எழுத்துக்களில் ஜப்பானை மிஞ்சுவ தற்கு உலகத்திலேயே ஆள் கிடையாது. அடாடா, கின் ஸாவிலே நம்ம தேர் மீது அந்தக் குறள் நாலும் கண் சிமிட்டுகிறபோது அந்த அழகைப் பார்க்கக் கொடுத்து வைக்கணும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“கலைஞர் எப்போது வருகிறாராம்?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“முதல் நாளே வந்துவிடுகிறார். வள்ளுவருக்கு அவரைப் போல் பெருமை செய்தவங்க வேறு யார் இருக்காங்க? குறளோவியம்,வள்ளுவர் கோட்டம் இந்த இரண்டும் போதுமே!” என்றார் அம்மாஞ்சி.
“அது சரி, வி. எஸ். டி. எப்ப வருகிறார் தெரியுமா?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“இரண்டு நாள் முன்னதாகவே வந்து விடுகிறார்” என்றார் அம்மாஞ்சி.
“அவர் வந்த பிறகுதான் விழா ஏற்பாட்டுக்கு ஃபைனல் டச்சஸ்’ கொடுக்க முடியும். அவர் ஒருத்தர் தான் தேர் நாலு வீதிகளையும் சுற்றி நிலைக்கு வருகிறவரை கூடவே இருந்து டைரக்ட் பண்ணுவார்” என்றார் சாம்பசிவம்.
“பாவம்! பஞ்சுவும் கோபால் ராவும் நாலு நாளா நின்ற இடத்திலே நிற்கல்லே. காலில் சக்கரத்தைப் பூட்டிக் கொண்டு சுத்தறாங்க.” என்றார் அம்மாஞ்சி.
“சக்கரம் என்றதும் ஞாபகம் வருகிறது. தேர்ச் சக் கரங்கள் எப்போது வருகிறதாம்?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“அதெல்லாம் நேற்றே வந்துவிட்டன. தேர் வேலை யும் முடிஞ்ச மாதிரிதான். அலங்கார வேலைதான் கொஞ் சம் பாக்கியிருக்கு. அதுவும் இன்றைக்குள் முடிந்து விடும்!” என்றார் குள்ள சாஸ்திரி.
“நாம் போய் முழுத் தேரையும் பார்க்க வேண்டாமா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“அரண்மனை வாசல் பக்கமே நாம் யாரும் இப்போ தலைகாட்ட முடியாது. தேரைப் பார்க்க அங்கே ஒரு பெரிய ஜன சமுத்திரமே அலை மோதிக்கொண்டு நிற்கிறது. அடேயப்பா, எவ்வளவு டெலிவிஷன் காமிரா வந்திருக்கு தெரியுமா?”
“டெலிவிஷன்லே நம்ம தலை தெரிய வேண்டாமா? நாம் போய்த் தேர் மேலே நிற்கலாமே” என்றார் அம்மாஞ்சி.
“உமக்கு ஏன் இப்படி ஓரு அல்ப ஆசை! தேரிலே உள்ள சிற்பங்களைப் படம் எடுப்பாங்களா? உம்ம தலையைப் படம் எடுப்பாங்களா?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“விருந்தோம்பும் பண்பில் தமிழ் மக்களையும் மிஞ்சி விடுவார்களோ இந்த ஜப்பானியர்?” என்று ஐயுறும் அளவுக்கு இந்த டோக்கியோ நகரம் எழுச்சியுற்று நிற்கிறது…” என்று ஜப்பான் சாஸ்திரி தீந்தமிழில் உணர்ச்சி யோடு கூறினார்.
“நல்ல தமிழ்ப் பேச்சு கேட்டு ரொம்ப நாளாயிற்று. தேரோட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசப் போகும் கலைஞர் பேச்சைக் கேட்கப் பல்லாயிரம் மக்கள் ஆவலோடு காத்திருக்காங்க!” என்றார் அம்மாஞ்சி.
“கின்ஸா மெயின் வீதி முனையில் மேடை அமைத்து ஒலிபெருக்கி ஏற்பாடுகளெல்லாம் செய்திருக்கிறார்களாம். அந்தப் பந்தலுக்கு முன்னால்தான் தேரோட்டம் தொடங்கப் போகிறதாம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“பேஷ் பேஷ்! கலைஞரின் தமிழ் முழக்கம் தெருவெல் லாம் கேட்கப் போகிறதென்று சொல்லுங்கள்” என்று உற்சாகத்தோடு கூறினார் சாம்பசிவம்.
“முதலில் கலைஞரின் தமிழ் முழக்கம். அப்புறம் நாதசுர முழக்கம். அப்புறம் வெடி முழக்கம். டோக்கி யோவே அல்லோலகல்லோலப் படப்போகிறது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“விழாவில் நம்ம ஜப்பான் சாஸ்திரியும் நாலு வார்த்தை பேசட்டும். அவருக்கும்தான் நன்றாகப் பேச வருகிறதே!” என்றார் அம்மாஞ்சி.
Greetings from the Governor
On the occasion of your arrival in this capital I feel it my happy duty to extend, on behalf of the ten million people of Tokyo, my warmest greetings to all visitors from abroad.
As you are aware, Tokyo being the political, economic and cultural centre of Japan, has a population of one tenth of the entire population of the nation, with the majority engaged in various trades and industries.
Tokyo is a place in which important international conferences. conventions and seminars of world-wide scale, as well as various international sports meets of similar magnitude have been held one after the other in recent years.
Theppo-76, (the South Indian Temple Car Festival), as you know is taking place on the 18th of this month here in our city. This is a significant milestone in the cultural history of our city and the country.
Despite the fact that this cosmopolitan city is equipped with all the up-to-date cultural facilities aud accommodations, which modern cities are supposed to have, Tokyo still retains many time honored traditions, as well as ancient cultural assets-characteristics of the Orient and conventional Japan.
I am proud of my city in the thought that foreign vitsitors to Tokyo will not only highly appreciate all the ancient relics and other inheritance which Tokyo has kept from olden times, but will be deeply inspired by the deepness, elegance and other colorful qualities which are inherent in them.
I feel certain that you will also be interested in various other aspects of Tokyo, such as the research institutes, sightseeing assets and numerous entertainment facilities, etc.
In addition to reiterating my heartiest welcome to all of you for coming all the way to Tokyo. I most ardently hope that each of you. will find your stay here an enjoyable one.
Governor of Tokyo,
Metropolis.
– தொடரும்…
– 1975-76இல் தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.
– தெப்போ- 76, முதற் பதிப்பு: அக்டோபர் 1976, பூம்புகார் பிரசுரம், சென்னை.