தானம்





(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கங்காணிமார் இருவர் வாட்டில் இருந்து ஆஸ்பத்திரி முகப்பை நோக்கி வந்துகொண்டிருந்தனர் அவர்கள் வரவை எதிர்பார்த்து நின்றவர்போல் டாக்டர் காணப்பட்டார்.
“அந்தப் ‘பேசன்’ரைத் தள்ளிக்கொண்டு போய் ‘அக்சிடன்ற்’ வாட்டில் ‘அற்மிற்’ பண்ணச் சொல். இதோ வந்துவிடுகிறேன்.” சொல்லிக்கொண்டே எங்கோ விரைந்துகொண்டிருந்தார். ‘பூட்ஸ்’ ஒலி தேய்ந்து ஓய்ந்து கொண்டிருக்கின்றது. டக்-டக் டக்…
கங்காணிமார் இருவரும் தள்ளுவண்டியைத் தள்ளிச் செல்கிறார்கள். அக்சிடன்ற் வாட்டிற்கு முகப்பிலிருந்து இரண்டு பெர்லாங் வரை கிழக்கே செல்லவேண்டும். தள்ளுவண்டிப் பாதையில் ஒவ்வொரு கம்பமாகத் வண் தாண்டிச்செல்கிறது. சிமெந்துத் தரையில் நாலு சில்லும் உராய்வதால் கிறீஸ்…… கிறீஸ்….. என்ற சத்தம் அசுர வேகத்தில் எழுகிறது.
இந்த வாட்டுக்கு பொறுப்பானவள் கன்னிமேரி இருபத்தைந்து வயதுகூட இருக்க ஞாயமில்லை. பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவும். மொழு, மொழு முகம் ஒளி வீசுகிறது. பறங்கிப் பூசினிப் பழம் போன்ற கன்னம், அணிந்திருந்த அங்கியின் மாறுதலில் பொலிந்து உருண்டு தானிருப்பதைப் பறைசாற்றிக்கொள்ளும் தனக்கட்டுக்கள்; கருகிய தடல்களை உரித்தபின் காணப்படும் தண்டு போன்ற உருவப் பொலிவு; இத்தனையும் அவளை அழகு ராணிப் பரிசுக்கு முன் இழுத்துச் செல்லக்கூடிய தகுதி இருந்தும் இப்படி நேரத்தைக் களிப்பதில்தான் விருப்பம் கொள்கிறாள்…
வண்டி அவளைத் தாண்டிச் செல்கிறது. அந்த வண்டியைப் பார்த்ததும் ஏன் அவள் முகம் விகாரமடை கிறது? வண்டி சிமென்ற் தரையில் உருண்டு செல்லும் சத்தம் மேரியின் இதயத்திலுள்ள விலா எலும்புகளை முறிக் கும் சப்தத்தை நினைவுபடுத்துகிறது. வேதனையின் தாக் கத்தில் அவள்… மனம்.. அவஸ்தைப்படுகிறது. காலை உணவுக்காகப் போய்க்கொண்டிருந்த மேரி அதிர்ந்து போய்விட்டாள். அவளுக்குப் பசியென்பதே நினைப்பி லில்லை. எல்லாவற்றையும் மிஞ்சி அந்தக் குருவானவரின் உருவே அத்தக் கணம் நிறைந்திருந்தது.
திரும்பியும் வாட்டுக்குள்போய் அவர் முகத்தை உற் றுப் பார்க்கிறாள். இமைகள் மூடித் திறக்க மறுக்கின் றன. தலையிலிருந்து கால்வரை ஒல்வொரு அணுவாகச் சோதனை போடுகிறாள்.
குருவானவரின் தலையில் கட்டுப் போடப்பட்டிருக் கிறது. மெதுவாகக் கட்டைத் தளர்த்துகிறாள். அவள் கரம் நடுங்குகிறது. இரத்தம் கட்டுப்பட்டிருந்தது. பலத்த அடி காரணமாக இரத்தம் சீறி எழுந்திருக்க வேண்டும். அவர் அணிந்திருந்த அங்கியின் மேல்பகுதி தாடி, முத்துமாலையும் சிலுவையும் இரத்தக் கறையில் தோய்ந்து காய்ந்த சுவடு….
அதைப் பார்த்தபொழுது பிலாந்துவின் தளகர்த்தன் யேசுகிறிஸ்துநாதரின் பரிசுத்தமான உடலில் முக்கிய பகுதியாக விளங்கிய தலையின் நெற்றிப் பகுதியில் முள் முடியை அழுத்தியபொழுது பீறி எழுந்த இரத்தம் அவர் முகத்தில் எப்படிப் படிந்திருக்கும் என்பது மனதில் வந்து ஒருவித மறைவுமின்றி அப்பட்டமாக படி கம்போல மின்னுகிறது.
யேசுவுக்கு நடந்தது கொடுமை; குருவானவர் விடயம் தற்செயல், ஆனால் கன்னிமேரிக்கு இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லை.
மேரியின் கலங்காத இதயம்… குருவானவருக்காக ஏங்குகிறது. பந்தம்… பாசம்… என்பன அற்றுப் பொது நலமே தன்னலமாய்க் கருதி வாழும் கன்னியின் இதயத் தில் இவருக்கு மட்டும் ஏன் இந்தச் தனிச்சலுகை….
யேசுவே குருவானவர் எப்படியும் குணமாகிவிடவேண் டும். அவர் பிழைக்கவேண்டும்… நெஞ்சில் சிலுவைக் குறியை நிறுத்துகிறாள் கன்னிமேரி.
இவர்கள் இருவரும் ஒருமுறை இளமையில் சந்தித்த வர்கள். அவர்கள் நினைத்தவை கைகூடாமல் அவற்றிற் குப் பதில் அவர்களிடம் சந்தேகம் ஏற்பட்டது. அதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதனால் அவர் அதை மறக்கக் கருதி மதகுருவாக மாறிவிட்டார். ஆனால் மேரி தன்னை நம்பாமல் மற்றவர்களின் வாக்கைப் பொய்யா மொழி என்று கருதித் தன்மீது வெறுப்புக்கொண்டதை நினைக்க வெறுப்பும், அறியாமையை நினைக்க அனுதாப மும் ஏற்பட்டது உண்மை, பலமுறை அவரிடம் அதற்கு விளக்கங் கோரி மண்டியிட்டும் பயன்படாமற்போகவே வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் கன்னியாகச் சேர் தலே இதற்கு வழியென்று நினைத்துச் சேர்ந்துவிட்டாள்…
ஆனால் அவளுக்கு கூட ஒரு சபலம் தோன்றியது. இன்றைய நிலையைப் பொறுத்தவரை உணர்ச்சி அழிந்து கருகிவிட்டநிலை…
ஆனால் அவள் மண்ணிலே மனிதப்பிறவி எடுத்துவிட் டாளே, என்ன செய்வது? மனிதனது சந்ததியின் குணம் ஒரு கணம் பழைய நினைவுகளை கொண்டுவந்தது மெய்.
இவரைக் கண்டதும் ஏன் எனது இளமை நிகழ்ச்சிகள் தளிர்விடுகின் றன. பிறக்கும்போதே இப்படியொரு சிக் கலைக் கொண்டுவந்து நிறுத்தும் எனக் கருதினேனோ? அதுவும் எனது நெஞ்சச் சிறையில் ஏன் இந்த ஆசை… அவர் திரும்பவும் என்முன் வரமாட்டார் என எண்ணியிருந்தேனே! இதோ உயிரைக் காப்பாற்று என்று வந்துவிட்டாரே! எதிர்பாராது நடந்துவிட்டது.
என்மேல் அன்பாக இருந்தாரே. அந்த நிலையை எப்படி மறந்தார்; வெறுத்தார். அப்படியானால் மனிதன் நிலையானது என்று கருதுவது அத்தனையும் பொய்யானது என்றுதானே அர்த்தம்…
மேரிக்கு இவை தெரிந்த பின் மனதை ஒருவழிப்படுத்த முடிந்ததா…? காதல் மலர் அன்பு என்ற முலாம் பூசி இன்ப மென்ற தேன்சுவை மிகுந்து நிற்கும் ஒருகால்…
துன்பம் என்ற முள்ளாகி இதயமென்ற மென்மலரைக் கிழித்து உறுத்திப் பதை பதைத்து ஏங்க வைத்து வாடி வதங்கி கரிந்து சுருங்கி துர்நாற்றம் வீசி
துர்நாற்றம் வீசி மண்ணில் வீழ்ந்து கானல் நீர்தானா என்ற வினாவெழும் ஒருகால்……
காதல் ஒரு மலரா…?
ஆம், மென்மையும் தன்மையும் மாறிக் கசங்கிவிட்டால்… மலரின் மணம் மணப்பதில்லை. ஒரு மலர் கருகிவிட்டால்… அந்த மரம் வேறு மலரைத் தோற்றுவிக்காமலா போகிறது?
தோற்றுவிக்கத்தானே செய்கிறது. மேரி என்ற மரத் தில் உணர்ச்சி என்ற மலர் வாடி வீழ… தியாகம் என்ற மொட்டு அரும்பி பொருமிப் பூரித்து ஆனந்தம் என்ற களை சொட்டத் தனது உடலைச் சிலுப்பி உள்ளத்தை வெண்மையாக்கி உருண்டுகொண்டிருக்கும் மனிதனின் உலக வாழ்வைப் பார்த்து இதழ்களைப் பரப்பித் தனக்கே உரித்தான புதிய மெருகுடன் புன்னகை பூர்க்கிறது.
சபலம் கணப் பொழுதில் கருகி மண்மேல் விழுந்து விட்டது. இப்பொழுது தனது காதலர் என்றே நினைக்க வில்லை. தனது மதகுரு என்றே மதிப்பிடுகிறாள்.
டாக்டர் பரிசோதித்துப் பார்த்தார். இரத்தம் போத வில்லை என்பது தெரியவந்தது.
“அளவுக்கதிகமான இரத்தம் சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. குறைந்தது இரண்டு பைந்து இரத்தம் என்றாலும் தேவை…”
“என்ன குறூப்…”
“B குறூப்…”
விழுந்தடித்துக்கொண்டு இரத்த வங்கியில் விசாரித்த பொழுது இல்லை என்பது தெரியவந்தது. ‘அப்படியானால் அவர் இவ்வுலகத்தை விட்டு பிரிந்து போய் விடவேண்டியது தான. யேசுவே இன்னும் ஏன் சோதனை அதற்கு மார்க்கம் இல்லையா…?’
‘ஏன் இல்லை … நான் இருக்கிறேன் எனது இரத் தத்தைத் தானம் செய்தால் என்ன .? நான் இருந்து தான் என்ன பிரயோசனம். குருவானவர் பிளைத்தால் எமது சமுதாயத்தில் ஏற்படும் ஊழலை மாற்றி தெய்வ சக்தியை அடைய நல்வழியைப் போதித்துக் கெட்ட எண்ணங்களுக்காக செலவிடும் நேரந்தை நன்மைக்காக நமக் கும் பிறர்க்கும் தீங்கு நேராத வழியில் இளை ஞர்களை ஈடேற்றிச் செல்ல ஒரு வரப்பிரசாதமாக இருக்குமல்லவா?’
‘அவரது சேவையின் முன் எனது சேவை எங்கே …?’
‘ஏன் நான் இரத்தம் கொடுத்தால் என்ன …? இவ ருக்கு மட்டும் நான் இரத்தம் கொடுக்க முன் வந்ததில் என்மீது சிலர் கழங்கம் கற்பிக்கலாம் அல்லவா….? நமக் கென்ன மற்றவர் எது வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டுமே … ‘ஒரு உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது எனக்கிருக்கட்டும். அதுவும் தூய அன் போடு, கெட்ட எண்ணமில்லாமல் நான் உதவி செய்கி றேன். பின் ஏன் பயப்படவேண்டும் … ?’
எங்கள் தாயைக் கேட்காமல் எப்படி … ? அவளைக் கேட்டு வருவதற்குள் உயிர் பிரிந்துவிட்டால் என் முயற் சியில்தான் என்ன நன்மை…
இது எங்கள் கட்டுப்பாட்டுக்கு முரணானதா…? முரணானதுதான், ஆனால் ஆபத்து வேளையில் உதவிசெய் யும்போது அவள்கூட என்னை மன்னிப்பாள் தானே …
நான் இரத்தம் கொடுக்கச் சம்மதித்து விட்டால் போதுமா …? என் இரத்தம் பொருந்துமா…? பொருந்தும் என்பதில் என்ன நம்பிக்கை. அப்படிப் பொருந்தாது விடுமா… பொருந்தாவிட்டால்…
மீண்டும் ஒருமுறை குருவானவரைப் பார்க்கிறாள். இதயத்துடிப்பும் சுவாசமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரைப் பார்த்தபொழுது அவள் முகத்தில் குப்பென்று வியர்வை சிலிர்த்து விட்டன. அவற்றை அகற்ற மனம் இடங் கொடுக்கவில்லை.
இப்பொழுது அவள் இதயத்தில் முளைவிடும் கேள் விக் குறிகள் ஒன்றல்ல, பல.
இரத்தம் பொருந்தாவிட்டால்…?
அதை நினைத்த பொழுது பெரிய ஆலவிருட்சம் சரிந்து தலையில் விழுவது போன்ற பிரமை …
அவருக்குப் பொருந்தும்…கட்டாயம் பொருந்த வேண்டும்…! மனதை ஓடாமல் கட்டுப்படுத்தி விட்டாள்.
“டாக்டர் நான் இரத்தம்கொடுக்கத் தயார், சோதித்துப் பாருங்கள்.”
விழிகளை உருட்டி கண்ணிமையை நிமிர்த்திப் பார்க்கிறார். “உன்னைப்போல் கடமையைக் கருத்தாகக் கொண் டவர்களை நான் கண்டதில்லை” என்பது போல் அவர் பார்வையின் பொருள் தொனித்தது.
பரிசோதனை சாலைக்காக குண்டூசியால் விரலில் குத்தி இரத்தத்தை எடுத்துச் செல்லப்பட்டது.
மேரியின் உணர்வுகளும் அந்தக் குருவானவரில் லயித்துவிட்டது. பல வருடங்களின் பின் பார்க்கும் உள் ளம் மௌனமாக இயங்கிக் கொண்டிருந்தது, பசியை மறந்த நிலையில்… எல்லாம் அவர்….
“சிஸ்டர் மேரி உங்கள் இரத்தம் 0 குறூப் என டாக்டர் சொன்னார்.”
“அப்படியா…!”
மேரியின் இதயத் தாமரை விரிந்து மலர்ந்து மணம் பரப்பியது. உதடு மகிழ்ச்சியில் வெடித்தது; உடம்பு சிலிர்த்தது.
கண்களில் கண்ணீர் குளமாக ஊற்றெடுத்தது.
0 குறூப் இரத்தம் என்றால் அது எந்த மனித உடம்புக்கும் ஏற்றக்கூடியது. நமக்குப் பயன்படாவிட்டாலும் பிறருக்காவது உதவுகிறது.
“ஆனால் ஒன்று…!”
“என்ன டாக்டர்…” மேரியின் குரல் நடுங்கியது.
“உன்னிடமிருந்து எடுத்து ஏற்றுவதாக இருந்தால் உனது சுகத்திற்கு இடைஞ்சல். உனக்கு அது ஒரு பெலவீனம். சிலவேளை உயிரைக் கூட இழக்கும் அளவுக்கு ஏற்படலாம்…. உன் நிலைமையை உணர்ந்து தான் மற்றவர்களுக்கு தானம் வளங்க வேண்டும். எனக்கென்ன நீர் சொல்வது போல் செய்யமுடியும். எதற்கும் யோசித்துப் பதில் சொல்…”
“சிந்திக்க இதுவா நேரம்! என்னைப்பற்றிக் கவலை யில்லை. என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். நான் அவரின் காலில் அணியும் மிதிவடிக்குக் கூட இணையா காதவள். எனது உயிர் இதற்கு மேல் இருந்தும் என்ன பயன் ? இதுபோன்ற பாக்கியம் எனக்குக் கிடைக்குமா..? உடனடியாக எடுத்து ஏற்றுங்கள் டாக்டர்…”
“சரி! உன் இஷ்டம்…” நெடுமூச்சொன்று எழுந்து தேய்கிறது.
இரத்தம் எடுத்து குருவானவரின் உடலில் ஏற்றுவ தற்காக குழாய் மாட்டப்பட்டு விட்டது.
ஒவ்வொரு துளி துளியாக அவரது உடலில் இரத்தம் ஏறுகிறது. குருவானவரின் மூடியிருந்த விழிகளின் இமைகள் திறக்கின்றன. அகல விரிந்த இமை களினூடே விழிகளை உருட்டி நிமிர்ந்து பார்க்கிறார். அவ ருக்கு ஆச்சரியம் தாளவில்லை.
உடல் அசைவைப் பார்த்து அவரிடம் அன்பு காட்டிய அதே மேரி புன்னகை பூர்க்கிறாள். ஆனால் அவள் சிரிப் பில் கள்ளமில்லை; கபடமில்லை. ஒரு தியாகியின் வெற்றிப் பெருமிதம் நெளிகிறது. அன்பின் கனிவு கசிந்து முகமலரின் வெளிப் பாளைகளில் பொசிந்து கொண்டிருந்தது. அவளது இதயம் மலர்ந்து குளிருகிறது. முகத் தில் என்றுமில்லாத தனிப் புத்தொளி மின்னுகிறது…!
அன்பு வைப்பது எளிது. தனக்கு அது கனியாத போதும் கசந்தபோதும் அதற்காக தன்னுயிரையும் துச்ச மென மதித்து தன் உயிரையே தானஞ் செய்யும் அவளை பூப்போட்டுக் கும்பிட்டாலும் பாதகமில்லை என்றிருந்தது குருவானவருக்கு… அவரின் கலங்காத கண்களில் கூட கண்ணீர் கோடிட்டது.
கைவிரல்களால் சுண்டியெறிந்து மகிழ்கையில் மேரி மயங்கிவிட்டாள்… டாக்டர் முகத்தில் அரும்பிய வியர்வை அவரையே குளிப்பாட்டிவிட்டது. தனது வல்லமை எல்லாம் பிரயோகித்தாயிற்று ஆனால்…?
அவள் கொடுத்த அந்தத் தானம் நிச்சயம் அவர் நினைவில் – குருவானவர் நினைவில் நிலைத்துவிட்ட ஒருகல்…
– தேனருவி, புரட்டாதி 1963.
– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.