ஜீவஜோதி






(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9

மறுநாட்காலை ஜோதியும் பாலாஜியும் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தவுடன் முதல் நாள் காலையைப் போலவே அவர்களுக்குப் சாப்பிட்டுக் பலகாரமும் சூடான காப்பியும் வந்தன. கொண்டே “சித்ராவுக்கு ஏற்பட்ட கதியை அறிந்தால், பாவம் உக்கிரசேனர் எப்படி துடிதுடித்துப் போவார்?” என்றான் ஜோதி.
“ஆமாம் ஜோதி! பாவம், அந்த மனிதர் சித்ராவை அருமையாக வளர்த்து வந்தார். அவள் மரணத்துக்கு நாம் காரணமாகவிருந்ததை நினைக்கும் பொழுதுதான் எனக்கு துக்கமாயிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் விதி எந்த உருவத்தில் எப்படி வருகிறது பார்த்தாயா?” என்றான் பாலாஜி.
“விதியைத் தடுக்க நாம் யார்?” என்று யாரோ ஒருவர் வாசற்படியிலிருந்து கேட்பதைப் போலிருந்தது. ஜோதியும் பாலாஜியும் திரும்பிப் பார்த்தபொழுது தளபதி உக்கிரசேனர் உள்ளே வந்துகொண்டிருந்தார்.
“ஓ! விஷயம் உங்களுக்குத் தெரியுமா?” என்று விஷயத்தைச் சொல்லாமல் அடக்கமாகக் கேட்டான் பாலாஜி.
“என் மகள் சித்ராவின் முடிவைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்? தெரியும். சற்று முன்புதான் மகாராணியே சொன்னாள். சித்ரா என் பெண்ணென்று சொல்லிக் கொள்ளவே நான் வெட்கப்படுகிறேன் அய்யா! அப்படிப்பட்ட ஒரு பெண் இருப்பதைவிட இல்லாமற் போனதே நல்லது?” என்று மனக்கசப்புடன் சொன்னார் உக்கிரசேனர்.
“அப்படிச் சொல்லாதீர்கள்! பெண்களிலே மாணிக்கம் போன்றவள் சித்ரா! அவள் மரணத்தை என்னால் தடுக்க முடியாமற் போய் விட்ட பொழுதிலும் அந்த உத்தமியை என் உயிருள்ளவரையில் நான் மறக்கவே முடியாது. பாவம், என்னால் அவள் இறக்க நேரிட்டதை நினைக்கும். பொழுதுதான் என் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது!” என்றான் ஜோதி. இதைச் சொல்லுகையில் அவன் குரல் தழுதழுத்தது. கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.
“அவள் எவருடைய அனுதாபத்துக்கும் உரியவளில்லை இந்நாட்டின் ராணியை நிந்தித்தாள் அந்தப் பேதைப் பெண். மகாராணி தெய்வத்துக்குச் சமானம். ராணியை எதிர்ப்பவர்கள் தெய்வத்தை எதிர்ப்பவர்கள். தெய்வத்தை எதிர்ப்பவர்களுக்கு உலகில் வாழ உரிமையே யில்லை. இதுதான் போகட்டும். மகாராணி தன்னுடைய அந்தஸ்தையும் அதிகாரத்தையும் மானத்தையும் விட்டு தனது வரலாற்றைச் சொல்லி மன்றாடிய பொழுதாவது பண்புள்ள பெண்ணாயிருந்தால் சித்ரா என்ன செய்திருக்க வேண்டும்? தன் சுகத்தையும் காதலையும் இந்நாட்டின் ராணிக்காக, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாய் உங்களுக்காகக் காத்திருக்கும் தெய்வாம்சம் பொருந்திய தேவிக்காக அவள் தியாகம் செய்திருக்க வேண்டும். அப்படித் தியாகம் செய்திருந்தால் இன்று அவள் பெருமை உயர்ந்து சரித்திரத்தில் அவள் இடம் பெற்றிருப்பாள். தலை முறை தத்துவமாக ராஜ விசுவாசிகளாயிருந்து வரும் என் குலத்தின் பெருமையும் உயர்ந்திருக்கும். பெண்குலத்தின் பெருமையையே அவளுடைய மகத்தான தியாகம் வானளவுக்கு உயர்த்தியிருக்கும். இதை விட்டு சுயநலனைப் பெரிதாக மதித்து தெய்வத்தின் பிரதிநிதியான இந்நாட்டின் ராணியையே எதிர்த்து என் குலத்துக்கும் பொறுமைக்கும், தியாகத்துக்கும், இருப்பிடமான பெண் குலத்துக்கும் அவள் என்றும் அழியாத மாசு கற்பித்துவிட்டாள். ராஜ துரோகம் மன்னிக்கமுடியாத குற்றம்; அக்குற்றத்தைச் செய்தவர் யாராயிருந்தாலும் தண்டனையடைய வேண்டியவர்கள் தான்” என்றார் உக்கிரசேனர்.
அவர் இவ்விதம் சொல்லுவதைக் கேட்டுக்கொண்டே வந்த மகாராணி தேவதேவி “சபாஷ் உக்கிரசேனா, சபாஷ்! உன் ராஜ விசுவாசத்தை மனப்பூர்வமாக மெச்சுகிறேன். உன் போன்ற ராஜ விசுவாசியை எங்கும் கண்டதில்லை யென்று நேற்றுத்தான் பாலாஜி சொன்னார். அது வெறும் முகஸ்துதியல்ல வென்பதை நன்றாக உணருகிறேன். உன்னைப் போன்ற உண்மையான ஊழியர்கள் இருப்பதினால்தான் இந்த ராஜ்யத்தை என்னால் நிர்வகிக்க முடிகிறது. இப்படிப்பட்ட மெய்விசுவாசமுடைய தளபதிக்கு இந்த ராஜ்யம் வெகுவாகக் கடமைப்பட்டிருக்கிறது உக்கிரசேனா! மற்றவர்களைப் போலில்லாமல் நீ நீடூழி வாழவேண்டும். உன் சேவை இந்நாட்டுக்குக் காலவரையறையில்லாமல் என்றென்றும் நிரந்தரமாகக் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? இன்று பிற்பகல் நாங்கள் ஜீவஜோதியை நாடிச்செல்லும் பொழுது உன்னையும் எங்கள்கூட அழைத்துச் செல்லப் போகிறேன். ஜீவஜோதியில் ஸ்நானம் செய்வித்து உன்னையும் அமரனாக்கப் போகிறேன். உன் தன்னலமற்ற தியாகத்துக்கும், ராஜவிசுவாசத்துக்கும் உகந்த பரிசு இது தான்” என்றாள்.
“ஆஹா! இவரல்லவா உண்மையான தியாகி. சொந்தப் பெண்ணின் மரணத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் ராஜசேவையே பெரிதென மதிக்கும் உக்கிரசேனரைப் போன்ற ஊழியரை உலகத்தில் வேறு எங்கு பார்க்க முடியும்?” என்று பாலாஜி தன்னை மறந்து சொன்னான். உக்கிரசேனர் சொல்லியதையும், மலைக்கன்னி பதில் சொல்லியதையும் கேட்டு ஜோதிவர்மன் மலைத்துப் போய் நிற்கையில், “உக்கிரசேனா! நீ போய் மகாமந்திரியிடம் சொல்லி பிரயாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய். எங்கு போகிறோமென்பது யாருக்கும் தெரிய வேண்டாம். இரண்டு நாள் பிரயாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் தயாராகட்டும். நம்முடன் ஆறு ஈட்டி வீரர்கள் வந்தால் போதும்!” என்று உக்கிரசேனரிடம் சொல்லியனுப்பினாள் மலைக்கன்னி.
உக்கிரசேனர் சம்பிரதாய முறைப்படி வணக்கம் தெரிவித்துவிட்டு வெளியேறியபின் தேவதேவி ஜோதியைப் பார்த்து “இரவு நன்றாகத் தூங்கினீர்களா?” என்று கேட்டாள்.
”இல்லை தேவி! சரியான தூக்கமில்லை. பரபரப்பான பல சம்பவங்கள் நடந்த இரவில் எப்படி நிம்மதியாக தூக்கம் வரும்?” என்றான் ஜோதி.
“நானும் சரியாகத் தூங்கவில்லை. நம் வாழ்க்கையிலேயே ஒரு அதிமுக்கியமான மாறுதல் ஏற்படவிருக்கும் தருணத்தில் தூக்கம் எப்படி வரும்? இன்னும் ஓரிரண்டு தினங்கள் வரையில் இப்படித்தான். இன்று நண்பகல் சாப்பாட்டுக்குப் பிறகு நாம் சிரஞ்சீவி பர்வதத்துக்குப் பிரயாணமாகிறோம். நாம் அந்த இடத்துக்குப் போய் எவ்வளவோ நூற்றாண்டுகளாகிவிட்டன. என் குருநாதரின் சமாதியில் அஞ்சலி செய்வதற்காக சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தடவை அங்கு போய் வந்தேன். போகும் வழி மறக்காமலிருக்க வேண்டுமே யென்றுதான் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள் தேவி. “ஜீவஜோதி உண்மையாயிருக்கும் பட்சத்தில் வருங்கால உலகுக்கு அதை நாம் கண்டுபிடிப்பது பாரதூரமான முக்கியத்துவம் வாய்ந்ததாயிருக்கும்!” என்று கூறிய பாலாஜி சட்டென்று தனது மனைவி ராதையை நினைத்துக் கொண்டு, “ஏன் ஜோதி! உனக்கு இவ்வளவு வயதாகியும் உன் பெரியம்மா உன்னை இன்னமும் குழந்தை, குழந்தை யென்று வாஞ்சையோடு தடவிக்கொடுப்பாளே ! நீ ஜீவஜோதியில் ஸ்நானம் செய்து உன்னை அவள் தொட முடியாமல் போய்விட்டால் ராதைக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றமாயிருக்கும்?” என்றாள்.
“ஜீவஜோதிக்கு உண்மையாகவே இவ்வித சக்தி இருக்குமானால் பெரியம்மாவையும்…” என்று ஜோதி ஆரம்பிக்கவும் தேவதேவி இடைமறித்து “பெரியம்மா என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“நான் அமரனாகி என்னை யாரும் தொட முடியாமல் போய்விட்டால் என் பெரியம்மாவுக்கு பெரிய ஏமாற்றமாயிருக்குமே யென்று பெரியப்பா சொல்லிக்கொண்டிருந்தார்!” என்றான் ஜோதி.
“உங்கள் பெரியம்மாவுக்கு ஏன் ஏமாற்றமேற்பட வேண்டும்? என் மாமிக்கும் அவள் பிள்ளையைப் போலவே அமரத்துவமளித்து விட்டால் போகிறது. தென் பாரதத்தில் மாமி எங்கிருக்கிறாளென்று சொல்லுங்கள். இப்பொழுதே கருட விமானத்தையனுப்பி இங்கு அழைத்து வரச்சொல்லி விடுவோம்!” என்றாள் தேவி.
“வேண்டாம் தேவி வேண்டாம். தென்பாரதத்துக்கு உன்னுடைய கருட விமானம் போனால் ஏகக் களேபரமாகி விடும். பறக்கும் தட்டுகளில் ஒரு புதுமாதிரியான தட்டு என்று எண்ணி அதை யாரேனும் சுட்டு வீழ்த்தினாலும் வீழ்த்திவிடுவார்கள். தவிர விமானத்தில் ஏறிக் கொண்டு வர என் பெரியம்மா பயப்படுவாள். பிறகு ஒரு சமயம் நாமே பெரியம்மாவை இங்கு அழைத்து வந்தால் போகிறது. அதற்கு இப்பொழுது அவசரமில்லை!” என்று மழுப்பினான் ஜோதி.
“சரி உங்கள் இஷ்டம்! சாப்பாடு முடிந்த பிறகு நடு ஜாமத்திற்கு இரண்டரை நாழிகை நேரம் கழித்து நாம் புறப்படுகிறோம். ஜோதிடர்கள் அதுதான் நல்ல நேரம் என்கிறார்கள்” என்று மலைக்கன்னி சொல்லிவிட்டுப் போனாள்.
பிற்பகல் சாப்பாட்டிற்குப் பின்னர் தேவதேவி ஜாஜ் வல்யமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு கையில் – திரிசூலமும் இடையில் வாளும் தலையில் நவரத்தின கிரீடமுமாக ராஜரீக உடையுடன் ஜோதியின் அறைக்கு வந்தாள். அப்பொழுது பாலாஜியும் ஜோதியும் பிரயாணத்துக்கு ஆயத்தமாயிருந்தார்கள்.
தேவியைக் கண்டவுடன் “எங்கள் வேலைக்காரன் முனிசாமியைக் காணோமே!” என்றான் ஜோதி.
“முனிசாமியும் நம்முடன் சிரஞ்சீவி பர்வதத்துக்கு வருகிறான். அவனும் உக்கிரசேனரும் ஏற்கனவே மலையடிவாரத்துக்குப் போய் காத்திருக்கிறார்கள். நாமும் புறப்படுவோம் வாருங்கள்” என்றாள் தேவி.
அம்மூவரும் கீழ்த்தளத்துக்கு வந்தார்கள். மலையில் இருந்து கீழே இறங்க மின்சார ஏணி போன்ற “தொட்டில் ஏணி”யிருக்கும் உப்பரிகைப் பகுதியை அடைந்ததும் உள்ளங்கால்களில் இருந்து கழுத்துவரை எஃகுக் கவசம் தரித்த பொறுக்கியெடுத்த ஐம்பது ஈட்டி வீரர்கள் அணி வகுத்து நின்று தேவதேவிக்கு ராணுவ மரியாதைகள் செய்தனர். திரிசூலத்தைக் கம்பீரமாகப் பிடித்துக் கொண்டு அந்த வீரர்களை தேவதேவி பார்வையிட்ட காட்சியை ஜோதியும் பாலாஜியும் அவர்களுடைய வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது.
அணிவகுப்பு முடிந்து வீரர்கள் சுவற்றின் ஓரமாகப் போய் நின்று கொண்டதும் ஏணியிருக்கும் இடத்தில் தேவதேவியும் பாலாஜியும் ஜோதியும் வந்து கொண்டார்கள். அவர்கள் நின்ற இடம் சமதரையில் இதர பாகங்களில் இருந்து பெயர்ந்து மளமளவென்று கீழே இறங்கியது! எந்த வழியாக அவர்கள் அமரகிரியின் மீது ஏறினார்களோ அதே வழியாகத்தான் கீழே இறங்குகிறோமென்பதை ஜோதியும் பாலாஜியும் தெரிந்து கொண்டனர். ஏணி கீழே நின்றவுடன் அந்தக் குகைப் பகுதி முன்போல இருட்டாயிராமல் தீவட்டிகள் சகிதம் பலர் அங்கு வரிசை யாக நின்று கொண்டிருந்தார்கள்.
குகைக்கு வெளியில் அவர்கள் வந்ததும் வெளியில் நின்ற ஒரு ஸ்வர்ணப் பல்லக்கு சூரிய வெளிச்சத்தில் தக தகவென்று பிரகாசித்தது. பல்லக்குக்கு முன்னால் கவச மணிந்த ஆறு ஈட்டி வீரர்கள் வெண் புரவிகளில் கம்பீர மாக வீற்றிருந்தார்கள். பல்லக்கிற்குப் பின்னால் ஒரு குதி ரையில் உக்கிரசேனரும் மற்றொன்றில் முனிசாமியும் உட் கார்ந்திருந்தனர். இன்னொரு குதிரையை ஒருவன் பிடித் துக் கொண்டிருந்தான். பல்லக்கை பக்கத்துக்கு நால்வரா கத் தூக்கிக் கொண்டு நின்றவர்கள் தேவியைக் கண்ட தும் பல்லக்கைக் கீழே வைத்துவிட்டு கை கட்டிக் கொண்டு நின்றார்கள். ஜோதிவர்மன் தனக்காகக் குதிரையோ அல் லது இன்னொரு பல்லக்கோ அங்கில்லாததைக் கண்டதும். சற்றுத் திகைத்துப் போனான். அவர்கள் பல்லக்கு நிற்கும் இடத்தை நெருங்கியதும் தேவதேவி ஜோதியைப் பார்த்து “நாமிருவரும் இந்தப் பல்லக்கில் சேர்ந்து பிர யாணம் செய்கிறோம். உங்கள் பெரியப்பாவுக்கு அதோ ஒரு குதிரை நிற்கிறது’ என்று சொல்லிவிட்டு பல்லக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.
“நீ பல்லக்கில் வா ஜோதி! நான் குதிரையில் வரு கிறேன்” என்று சொல்லிய பாலாஜி தனக்காக நின்ற குதிரையில் போய் ஏறிக் கொள்ளவும் ஜோதிவர்மன் பதில் பேசவழியில்லாமல் பல்லக்கில் ஏறித் தேவிக்கு எதி ரில் உட்கார்ந்து கொள்ள வேண்டியதாயிற்று. சரியாக பிற்பகல் இரண்டு மணிக்குப் பிரயாணம் ஆரம்பமாகியது. பல்லக்கின் முன்னால் சென்ற குதிரை வீரர்களில் ஒருவன் மாத்திரம் மற்றவர்களிடமிருந்து பிரிந்து சுமார் 100 கஜ தூரத்துக்கு முன்னால் சென்றான். அவன் காது செவிடு படும்படி இடையிடையில் சங்கநாதம் செய்து கொண்டு போனான்.
கொஞ்சத் தூரம் வரையில் பல்லக்கும் குதிரைகளும் ஒரு முறையான ரஸ்தாவின் வழியாகச் சென்றன. பிறகு ரஸ்தாவைவிட்டு இறங்கி ஒரு சமவெளிப் பிரதேசத்தின் வழியாக அவர்கள் பிரயாணம் செய்தார்கள்! அவர்கள் சென்ற வழியில் ஒரு மனிதன் கூட குறுக்கே தென்படா தது ஜோதிக்கு ஆச்சரியமாயிருந்தது. யாரும் எதிரில் தென்படக் கூடாதென்று எச்சரிக்கவே முன்னால் போகும் வீரன் சங்கநாதம் செய்து கொண்டு போகிறானோவென்று அவன் நினைத்தான். இதை அவன் தேவியிடம் கேட்ட பொழுது ஆம்! சங்கநாதத்தின் பொருள் எவரும் குறுக்கே
வரக்கூடாதென்று எச்சரிப்பதுதான். இப் பொழுது ஜனசஞ்சாரமற்ற பிரதேசத்தின் வழியாக நாம் போகிறோம். ஆகையால் சங்கநாதமும் நின்று விட்டது பாருங்கள்! என்றாள் தேவி.
“இரவு முழுவதும் நாம் பிரயாணம் செய்ய வேண்டுமா? என்று கேட்டான் ஜோதி.
“இல்லை! சந்தனக்கட்டு மடம் வரையில் இன்றிரவு நாம் பிரயாணம் செய்வோம். அநேகமாக இரவு 8 மணிக்கு முன்னால் நாம் அங்குபோய்ச் சேர்ந்துவிடலாம். அங்கிருந்து சிரஞ்சீவி பர்வதத்துக்கு நாம் கால் நடையா கத்தான் போக வேண்டும். மடத்திலிருந்து மலைக்குப் போக முறையான பாதை இல்லாததால் பல்லக்குப் போக முடியாது?” என்றாள் தேவி.
“கால் நடையாக எவ்வளவு தூரம் போக வேண்டும்?” என்று மறுபடியும் கேட்டான் ஜோதி.
“மடத்திலிருந்து சிரஞ்சீவி பர்வதம் பதினைந்து நாழிகை நேரப் பிரயாணம். சூர்யோதயத்தில் கிளம்பிவிட்டால் நண்பகல் கழிந்த சிறிது நேரத்துக்கெல்லாம் நாம் மலையடி வாரத்தை அடைந்து விடலாம். எப்படியும் பொழுது சாய்வதற்குள் நாம் மலையிலிருந்து இறங்கிவிட முடியும் என்று நினைக்கிறேன். கால்நடையாகப் போவதற்குப் பதி லாக சாத்தியமானால் குதிரையில்போக முயற்சிப்போம்” என்றாள் தேவி.
“எனக்கு ஒரு சந்தேகம் தேவி. சிரஞ்சீவி பர்வதத் தில் ஜீவஜோதியிருக்கும் ரகசியம் இந்நாட்டில் வேறு யாருக்கும் தெரியாதா?” என்றான் ஜோதி.
“தெரியாது. சந்தனக் காட்டின் பக்கம் யாருமே போகக் கூடாதென்பது கண்டிப்பான உத்தரவு. அங்கு இறந்தவர்களின் ஆன்மாக்களும் தேவதைகளும் சஞ்சரிப் பதாக ஒரு ஐதீகமிருப்பதினால் அந்தத் திசைக்கே யாரும் துணிந்து போவதில்லை. காட்டைச் சுற்றிக் கட்டுக் காவல் களும் பலமாக உண்டு. வடதிசை திக்கு பாலகனின் பாசறை அந்தக் காட்டின் விளிம்பில்தான் இருக்கிறது” என்றாள் தேவதேவி.
சொல்லியதைப்போல இரவு ஏழரைமணி சுமாருக்கு அவர்கள் சந்தனக் காட்டு மண்டபத்தை அடைந்தார்கள். அவர்கள் வரவை எதிர்பார்த்து முன்னேற்பாட்டின் பிர காரம் அங்கு அறுசுவை உண்டி அவர்களுக்குக் காத்திருந் தது: சாப்பாட்டை முடித்துக் கொண்டு இரவை அங்கு கழித்தனர்.
மறுநாட் காலையில் அவர்கள் ஸ்நானம் செய்து காலைப் போஜனத்தை முடித்துக் கொண்டு பிரயாணத்தைத் தொடங்கினார்கள். இப்பொழுது அவர்கள் பல்லக்கில் செல்லவில்லை. பல்லக்கையும் பல்லக்குத் தூக்கிகளையும் ஈட்டி வீரர்களையும் விட்டு தேவதேவி, ஜோதிவர்மன், உக்கிரசேனர், பாலாஜி, முனிசாமி ஆகிய ஐவர் மாத்திரம் ஐந்து குதிரைகளில் பிரயாணத்தை ஆரம்பித்தனர். குதி ரையின்மீது மரத்தினால் கவசம் போட்டிருப்பதைக் கவ னித்த பாலாஜி அதைப்பற்றி விசாரித்த பொழுது “சிரஞ் சீவி பர்வத்திலிருந்து திரும்பும்பொழுது நீங்கள் புது மனி தர்களாக வருவீர்கள். உங்களிடமிருந்து குதிரையைப் பாதுகாக்கவே இந்த மரக் கவசம்! என்றாள் தேவதேவி. போகும்பொழுது பழங்கால வரலாறுகளைப் பற்றி கதை கதையாக அவள் சொல்லிக் கொண்டே வந்தாள். கிட் டத்தட்ட நடுப்பகல் நெருங்கும்பொழுது தூரத்தில் தென் பட்ட ஒரு மலையைக் காட்டி அதோ தெரிகிறது பாருங் கள்! அதுதான் சிரஞ்சீவி பர்வதம்!” என்றாள்.
இன்னும் கொஞ்சம் நெருங்கியதும் “அப்பாடா! கட வுள் என்னைக் கைவிடவில்லை!” என்றாள் தேவி.
“எதைக் குறிப்பிடுகிறாய் தேவி!” என்றான் ஜோதிவர்மன்.
“மலை உச்சியைப் பாருங்கள்! வெண்மையான புகை தெரியவில்லையா?” என்று கேட்டாள் தேவி.
ஜோதியும் பாலாஜியும் பார்த்துவிட்டு “ஆம் தெரிகிறது!” என்றார்கள்.
“அதுதான் ஜீவஜோதி! ஜீவஜோதி இடம் மாறி யிருக்குமோ என்று நான் சந்தேகப்பட்டுக் கொஞ்சம் பயந்தேன். கடவுள் அருளால் ஜோதி அதே இடத்தில் இன்னமும் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு அவள் ஒரு பெரு மூச்செறிந்தாள். கட்டுக் கதையென்று எண்ணிய ஜீவஜோதி கண் பார்வைக்கே வந்துவிட்டதில் ஜோதிவர் மனும் பாலாஜியும் பேசுவதற்கும் சக்தியை இழந்து மிகுந்த பரபரப்பு அடைந்திருந்தார்கள். ஜோதியை அமர னாக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காத்திருந்த காத லனை அடையப்போகிறோமென்ற பெருமிதத்தில் தேவதேவியும் மெய்மறந்திருந்தாளென்று கூறினால் மிகையாகாது.
அரைமணி நேரத்துக்கெல்லாம் அவர்கள் மலையடி வாரத்தில் ஒரு சிறு கோவிலை அடைந்தார்கள். தேவதேவி குதிரையிலிருந்து இறங்கி கோவிலின் முன்னால் சாஷ்டாங்க மாக விழுந்து வணங்கினாள். ஜோதிவர்மனையும் மற்றவர் களையும் பார்த்து “இறங்கி வந்து வணங்குங்கள். இது தான் என்குருநாதர் சர்வஞான யோகீஸ்வரரின் சமாதி!” என்றாள். அவள் சொல்லியதைப் போலவே ஜோதியும் மற்றவர்களும் அந்தச் சமாதிக்கு அஞ்சலி செய்தார்கள்.
குதிரைகளைப் பக்கத்திலிருந்த மரங்களில் கட்டிவிட்டு தேவதேவி முன்னால் செல்ல அவளைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் சிகரத்தின்மீது ஏற ஆரம்பித்தார்கள். மலையில் ஏற சரியான பாதையில்லாதபடியினால் அவர் கள் மிகுந்த பிரயாசையுடனேயே மெதுவாக மேலே போகமுடிந்தது. உச்சிநேர வெயிலும் அவர்களைக் கடு மையாகச் சோதித்தது இடையில் சற்று உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏறினார்கள். சிரமம் தெரியாமலிருக்க வேண்டுமென்பதற் காக செம்பவளத்தீவின் மீது நடந்த பல படையெடுப்பு களைப் பற்றியும் தேவதேவி ரசமான கதை சொல்லிக் கொண்டே வந்தாள். சிறைப்பிடிக்கும் கைதிகள் மூலம் அவர்களுடைய நாட்டு வரலாறுகளை எழுதி வாங்கியதை யும் அரண்மனைப் புத்தகசாலையில் இவ்விதம் உலக சரித் திரத்தை வர்ணிக்கும் ஆயிரக்கணக்கான ஏட்டுச் சுவடி கள் இருப்பதையும் அந்நியர்களின் வருகையினால் பல மொழிகளையும் தான் கற்றுக் கொண்டதையும் அவள் சொல்லிக் கொண்டே வந்தாள். பாரதநாட்டுக்குத் திரும் பிய பின் அங்கு என்னென்ன செய்ய உத்தேசித்திருக்கிறா ளென்பதையும் அவள் சொன்னாள்.
இப்படிப் பேசிக் கொண்டே அவர்கள் மலை உச்சியை அடைந்தபொழுது ஜீவஜோதி அப்பொழுதுதான் மும் முறை சுடர்விட்டு எழுந்து பிரகாசித்துவிட்டு மெதுவாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மாத் திரத்தில் ஜோதியும் பாலாஜியும் தங்களையே மறந்து இருகரங்களையும் குவித்துக் கொண்டு நின்றார்கள்.
கருநீல நிறத்துடனும் கண்ணைப்பறிக்கும் மின்னொளி யுடனும் கம்பீரமாக கொழுந்துவிட்டு எரிந்து தணிந்த ஜீவஜோதி பார்ப்பவர்களுக்கு பயத்தை உண்டுபண்ணு வதைவிட அவர்களுடைய பக்தியைக் கவருவதாகவே இருந்ததென்று கூறவேண்டும். மலையை இரண்டு பாகங் களாகப் பிளந்ததைப் போல நடுவில் நீண்ட வெடிப்பு இருப்பதையும் அதன் அடியிலிருந்து ஜீவஜோதி குபீ ரென்று கிளம்பி சில வினாடி நேரம் ஜகஜோதியுடன் நின்று பிரகாசித்துவிட்டுத் தணிந்ததையும் கண்ட மாத்திரத்தில் ஜோதிவர்மனும் பாலாஜியும் தங்களையே மறந்துவிட்ட னர். இருகரங்களையும் குவித்துக்கொண்டு நின்ற அவர்கள் மனதில் அப்பொழுது தோன் றிய உணர்ச்சிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. சர்வேசுரனின் லீலா வினோதங்களை வியந்து அவன்பால் அவர்கள் மனம் பரிபூரணமாக அப் பொழுது ஈடுபட்டுக்கொண்டிருந்ததென்று மட்டும் சுருக்க மாகச் சொல்லலாம்.
இதற்கிடையில் தேவதேவி ஜீவஜோதியின் உற்பத்தி ஸ்தானத்தின் அருகில் போய் மண்டியிட்டு அஞ்சலி செய்த வண்ணம் வடமொழியில் கிணீரென்று மந்திரோச்சாட னம் செய்தாள். பிரபஞ்சத்தின் உற்பத்தி விசேஷத்தை வர்ணிக்கும் புருஷ ஸுக்தத்தை அவள் சொல்லியபொழுது ஜோதிவர்மனும் பாலாஜியும் பக்திபரவசத்துடன் அவள் பக்கத்தில் போய் கைகட்டிக்கொண்டு நின்றார்கள். மலைக் கன்னி புருஷஸுக்தம் முழுவதையும் சொல்லிமுடித்து ஜீவ ஜோதியையும் வானத்தையும் எட்டுத்திக்கு பாலகர்களை யும் வணங்கிவிட்டு ஜோதியின் பக்கம் திரும்பினாள்.
“பூமிமாதாவின் அதிசய ஜோதியைப் பார்த்தீர்களா பிரபு! படைத்துக்காத்து ரட்சிக்கும் சர்வேசுவரன் ஒளிமய மாக நமக்குப் பிரத்யட்சமாக தரிசனம் தரும் லீலா வினோ தத்தைப் பார்த்தீர்களா பிரபு! பூமிமாதாவின் மடியி லிருந்து ஆயிரம் ஆயிரம் யோசனை தூர ஆழத்திலிருக்கும் பூமியின் நடுமத்திய பாகத்திலிருந்து கம்பீரமாகக் கிளம்பி ஜகஜோதியாக வரும் அன்னையின் அருள் வடிவத்தைப் பார்த்தீர்களா பிரபு! எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக, கல்பகோடி வருடங்களாக, இப் பூமண்டலத்தைப் பஞ்ச பூதங்களைக் கொண்டு பகவான் சிருஷ்டித்த நாள் முதல் கொண்டு ஜீவாத்மாக்கள் அனைத்துக்கும் பிதாவாகிய பர மாத்மா ஜோதி வடிவாக இங்கு காட்சி தரும் சௌந்தர் யத் தோற்றத்தைப் பார்த்தீர்களா பிரபு? மனிதனின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட யுகயுகாந்திரங்களாக யோகீஸ்வரர்களும் மஹா தபஸிகளும் முனிபுங்கவர் களும் தேடித் திரிந்து அவர்கள் திருஷ்டியிலே படாம லிருந்த ஜீவஜோதி இதோ நம் கண் முன்னே நிற்கிறது. இறைவனை ஒளிவடிவத்தில் கண்டு அவரிடம் நம்மை ஒன் றிக் கலந்து ஐக்கியப்படுத்தி அவர் அருளுடன் நித்திய யுவ னாயிருக்கும் பாக்கியம் உங்களைத் தவிர வேறு யாருக்குக் கிடைக்கும்? கிடைத்தற்கரிய பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கவிருக்கிறது. நான் சொல்லுவதைச் சற்றுக் கவன மாகக் கேளுங்கள். பூமிக்கு அடியிலே மலைகள் உருளு வதைப் போன்ற பேரிரைச்சல் மறுபடியும் கேட்கும். ஜீவ ஜோதி மீண்டும் மேலே வருவதற்கு அதுதான் அறிகுறி. ஒலி பிறந்தவுடன் அதைத்தொடர்ந்து ஒளி பிறக்கும். இதோ இந்தப்பிளவின் இரு புறங்களிலும் இரண்டு கால் களை ஊன்றி, கரங்களைக் குவித்து பரமாத்மாவிடம் மனதை லயிக்கச் செய்துகொண்டு நில்லுங்கள். உங்களுக் குத் தெரிந்தால் புருஷஸுக்தம் அல்லது ஸ்ரீஸுகத்தை சுருதி சுத்தமாக உச்சாடனம் செய்யுங்கள். நெருப்புச் சுட்டுவிடுமோ என்று அஞ்சாதீர்கள். அழிக்கும் அதே அக்கினிதேவன்தான் ஆத்மனைச் சரீரத்தில் வைத்துக் காப்பவனும் அக்கினியின்றி அகிலத்தில் எதுவுமே நடை பெறாது. மூலக்கடவுளென்றும், முதற் கடவுள் என்றும் வேதங்கள் கோஷிப்பது அக்கினி தேவனைத்தான் பிரபு! ஆனந்தகுண ரூபினாகிய ஆண்டவன் நமக்குப் பிரதியட்ச மாகத் தரிசனம் தருவது அக்கினிதேவன் ரூபத்தில்தான். காக்கும் கடவுளான அந்த சர்வேஸ்வரனிடம் சஞ்சலமின்றி நெருங்கிச் சென்று உங்களை அவரிடம் ஒப்படையுங்கள். அவர் அமர வாழ்வையும் நித்திய தேஜஸையும், புஜ பல பராக்கிரமத்தையும், வீர்யம், சௌந்தர்யம் ஆகியவற் றையும் அளிப்பார். இதோ… அதோ… ஜீவஜோதி ஜகத் ஜோதியாகக் கிளம்பப் போகிறது பிரபு! அருகில் செல்லுங்கள்!”
இவ்வாறு சொல்லிவிட்டு தேவதேவி சற்று ஒதுங்கி நின்றுகொண்டிருந்தாள். ஜீவஜோதி மேலே கிளம்பும் வரையில் மனோதிடத்துடன் அதன் அருகிலே நின்ற ஜோதி வர்மன் ஜோதி கிளம்பியவுடன் பளிச்சென்று நகர்ந்து கொண்டுவிட்டான். இதைக்கண்டு மலைக்கன்னி மிகுந்த ஏமாற்றமடைந்திருக்க வேண்டும்.
அவள் ஜாதியின் அருகில் வந்து “ஏன் பயமாயிருக் கிறதா? நெருப்பைக் கண்டதும் அது சுட்டு எரித்துவிடுமோ என்று அஞ்சுகிறீர்கள் போலிருக்கிறது. அது சுட்டெரிக்கும் சாதாரண நெருப்பில்லை. ஜீவனுக்கு அமரத்துவத்தை யளிக்கும் அபூர்வமான ஜகத்ஜோதியல்லவா அந்த அக்கினி ஜூவாலை! அது எவருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யாது பிரபு! நான் இவ்வளவு சொல்லியபிறகும் இன்னுமா உங் களுக்குத் தயக்கம்? ஜீவஜோதியில் ஸ்நானம் செய்து அமர வாழ்வு வாழும் பிரத்யட்ச சாட்சியாக நான் இருப்பதைப் பார்த்தபிறகு ஏன் இந்தப் பயம் பிரபு?” என்றாள்.
ஜோதிவர்மன் பதிலே சொல்லாமல் மும்முறை பிர காசித்துவிட்டு அணைந்த அக்கினி ஜுவாலையை இமைகொட் டாமல் பார்த்துக்கொண்டு நின்றான்.
“வேண்டாம்! நீங்கள் தீக்குளிக்க வேண்டாம். உங்க ளுடைய பயத்தையும் சந்தேகத்தையும் போக்க முதலில் நானே தீக்குளிக்கிறேன். முதலில் நான் தீக்குளிப்பது இன் னொருவிதத்திலும் நல்லதுதான். சென்ற இருபத்தாறு நூற் றாண்டுகளுக்கிடையில் ஜீவஜோதியின் தன்மை மாறியிருந் தால் அதன் விளைவுகள் என் பிரபுவைப் பாதிக்காமல் என் னைப்பாதிக்கட்டும். நான் காயம் ஏதுமின்றி வெளியில் வந் தால் பிறகு உங்களுக்கு தைரியம் ஏற்படுமல்லவா? ஒரு முறை தீக்குளித்தவர் மறுபடியும் இந்த ஜீவஜோதியில் குளித்து எழுந்தால் அதன் பலன் எப்படியிருக்குமோ தெரி யாது. என்னிடம் இன்னும் என்னென்ன புதிய மாற்றங் கள் ஏற்படுமென்பதை நான் அறியேன். இது எப்படியிருப் பினும் என் பிரபுவின் சந்தேகம் நீங்க வேண்டும். என்னைப் போல அமரத்துவமும் அழியாத நித்திய செளந்தர்யமும் பெறவேண்டும். இதற்கு நான் எவ்விதத் தியாகமும் செய் யச் சித்தமாயிருக்கிறேன். இந்த அக்கினி அடியோடு என்னை அழித்துவிட்டாலும் பரவாயில்லை, அமரத்துவமளித்த ஜீவ ஜோதிக்கு காலப்போக்கில் அழிக்கும் தன்மை ஏற்பட்டிருந் தால் என் பிரபுவை அழிக்காமல் முதலில் என்னைப் பலி வாங்கிக் கொள்ளட்டும்!”
இப்படிச் சொல்லிக்கொண்டிருந்த தேவதேவி மீண் டும் ஜீவஜோதி மேலே வருவதைக் கண்டதும் திரிசூலத்தையும் நவரத்தின மகுடத்தையும் சற்றுத் தூரத்தில் வீசி யெறிந்துவிட்டு, புருஷஸுக்தத்தை கிணீரென்று உச்சாட னம் செய்து கொண்டே ஜீவஜோதியின் மத்தியில் போய் கரம்குவித்து நின்று கொண்டிருந்தாள். அக்கினி ஜுவாலை அவளை முழுவதும் சுற்றிவளைத்துக்கொண்டு ஜகஜோதியாகக் கிளம்பிப் பிரகாசித்தது.
– தொடரும்…
– ஜீவஜோதி, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.