கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,011 
 
 

ஒரு தவசி சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் இருந்தது. அப்போது, அங்கே ஒருவன் தூண்டில், முள்ளிலே புழுவை மாட்டிக் குளத்திலே மீன் பிடிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தான்.

குளத்தின் ஒரத்தில் இருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த தவசி, அவன்மேல் இரக்கம் கொண்டு மிகவும் உளம் விருந்தி தம்பி, நீ எப்போது கரையேறப் போகிறாய்? என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.

அவனோ உடனே பதில் சொன்னான். ‘என் பறி நிரம்பினால் கரையேறுவேன்’ என்று அவன் சொன்னதும் அவருக்கு உண்டான அதிர்ச்சி சொல்லில் அடங்காது.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *