(1921 – 1991)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். அக்காலத்தின் பிரபல வெகுஜன எழுத்தாளர்களுள் ஒருவர். தந்தை பிரிட்டிஷ் அரசில் போலீசாக இருந்தவர். பல எதிர்ப்புகளை மீறி துணிவாக பதிவுத் திருமணம் செய்துகொண்டவர். இவரின் ‘பனித் துளி’ நாவல் இவரை எழுத்துலகில் பிரபலமாக்கியது. ‘பனித்துளி சரோஜா’ என்றே அழைக்கப்பட்டார். ‘முத்துச்சிப்பி’, ‘இருளும் ஒளியும்’, ‘நவராத்திரிப் பரிசு’, ‘மாளவிகா’ இவரின் பிற நாவல்கள்.
600 சிறுகதைகள், 10 நாவல்கள் வரை எழுதியுள்ளார். இவரின் குடும்பமே எழுத்துத்துறையில் இருப்பது ஆச்சரியமே. கணவர் து.ராமமூர்த்தி, மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி என நான்கு எழுத்தாளர்களைக் கொண்ட குடும்பம்.