கடல் மேல் எழும் கதிரவன் நீ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,692 
 
 

வெற்றிக்குக் கட்டியங் கூறி, குருதிக் கறை படிந்த வாட்கள் ஆயிரம் ! அவை, செவ்வானத்தின் வனப்புப் போன்றன!

கால்கள் ஓடுவதாலே கழல்கள் அறுந்து விழ்ந்தன. அவை, கொல்லேற்றின் கொம்பு போன்றன…

அம்பு பட்டதால் மார்புக் கவசங்களில் துளைகள் தோன்றின. அவை, இறந்து பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கம் போன்றன…

பரிகள், வலமும் இடமும் பாய்ந்து, வாய்களிற் குருதி படிந்து, எருதைக் கவ்விய புலி போன்றன …..

களிறுகள், கோட்டைக் கதவம் பிளந்து, கோடு முறிந்து, உயிர் உண்ணும் கூற்றுவன் போன்றன ….

ஆனால் அவனோ தாவும் குதிரையொடு தகதகக்கும் தேர் ஏறிக் கருங்கடலில் ஞாயிறுபோற் காட்சி தருகிறான்.

அவன் தேரோடு போராடும் பகைவர் வேரோடு பெயர்ந்து விழுவர்..தாயற்ற குழந்தை போற்கதறி அழுவர்!

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *