எண்ண முடியாத யானைகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,060 
 
 

“அண்ணே , காலையிலிருந்து இவ்வழியில் யானைகள் போனவண்ணமாய் இருக்கின்றன” என்றான் கந்தன்.

“போருக்குப் போகின்றனவா?” என்று கேட்டான் முகுந்தன்.

“போ அண்ணே போ . புலவர்கள் கொண்டு போகிறார்கள். நம் மன்னன் ஆய் பரிசளித்த யானைகள்?”

“எண்ணினாயா? எத்தனை யானைகள் ?”

”எண்ணத் தொலையாத யானைகள்!” கொங்கரை

மேலைக்கடல் ஓரம் தோற்கடித்த நாளில் அவர்கள் போட்டுவிட்டுச் சென்ற வேல்களை எண்ணியிருக்கிறாயா?

“அதை எப்படி எண்ண முடியும்!”

“ஆய் பரிசளித்த யானைகளை எப்படி அண்ணே எண்ண முடியும்?” வேல்கள் எத்தனை – யானைகள் அத்தனை!

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *