இரு பரம்பரைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 12, 2025
பார்வையிட்டோர்: 219 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஜூலியா! என்ன கண்ணு, கோபம்? ஜிம்மி! துஷ் டன் நீ. போ! போய்ச் சமாதானம் செய் ஜூலியாவை”. 

“ஜூலி! ஜூலி! இதோ பார் இப்படி அடடா! புரு ஷன் மேலே கோபம் வந்துவிட்டால் நம்ம ஜுலியா செய் கிற அட்டகாசம் இருக்கே, சொல்லி முடியாது. எப்படி முறைத்துப் பார்க்கிறாள் பார்! ஜிம்மி, பாவம் கெஞ்சிப் பார்த்துத் தோற்றுப்போய், ஜூலியாவின் கோபம் தானா கத் தணியட்டும்” என்று போய்விட்டான். 

“என்ன இருந்தாலும், ஜூலி! உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது.” 

“உங்களுக்கும் நாளைக்கு ஒரு புருஷன் வந்தால்…” என்று கேலி செய்ய ஆரம்பித்தாள் மாரி. தேவா, அவள் காதைத் திருகிக் கொண்டே, “பேசாதே! எப்போது பார்த் தாலும், இந்தக் கல்யாணப் பேச்சே பேசிக் கேலி செய்வது தானா வேலை?” என்று வேடிக்கையாகக் கண்டித்தாள். மாரி, இதுபோல் கல்யாணப் பேச்சைக் கேட்டுக் கேலி செய்த எத்தனையோ ”தேவா’க்கள், தொட்டிலாட்டிவிட்டுத் தூங்கிய குழந்தைக்கு முத்தமிட்டதைப் பார்த்தவள். தேவா, கல்யாணப் பேச்சைக் கேட்டுக் கோபித்தால், மாரி அடங்கிவிடுவாளா, என்ன! 

“ஜுலியா எவ்வளவு ரோஷக்காரியோ அவ்வளவு ரோஷக்காரிதானேம்மா நீயும்!” என்று மாரி மேலும், கேலி செய்து கொண்டிருந்தாள். ஜுலியாவைச் சாந்தப்படுத்த முடியாமல், சோகமடைந்த ஜிம்மியின் பரிதாபப் பார்வை யைக் கண்டு, தேவா, ஓடிச்சென்று, பிஸ்கட் துண்டுகளைக் கொண்டு வந்து போட்டாள். ஜிம்மிக்கு, ஜூலியாவிடம் சரசமாடுவதிலே இருக்கிற சுவை, பிஸ்கட் தின்பதிலே ஏற் படுமா? தின்னவில்லை! ஜுலியாவும் ஒருமுறை ஜிம்மியின் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு மறுபடியும் அலட்சியமாக வேறு பக்கம் திரும்பிக் கொண்டது. 

“அப்பா! அந்தக் குச்சு நாய்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன பார்த்தாயா? நேற்று, ஜுலியாவைத் தொட் டுத் தடவிக் கொடுத்தேன். பட்டு மெத்தை மேலே கை வைப் பதுபோல இருந்ததப்பா!” 

“அழகான நாய்கள்தான்! ஜுலியா, ஜிம்மி இரண் டையும், பெங்களூரில் வாங்கினாராம்! விலை என்ன தெரி யுமா? போன மாதம், நமது கம்பங்கொல்லையை விற் றோமே, என்ன விலைக்கு?” 

“250க்கு” 

“ஜூலியா ஜிம்மியின் விலையும் 250-தான்”. 

சுகானந்த முதலியாரும் அவர் மகன் சிங்காரமும், மார்வாடியிடம் அடமானத்திலிருந்த தங்கள் ஓட்டு வீட்டிலே உட்கார்ந்து கொண்டு, தனபாலச் செட்டியாருடைய பங்க ளாவிலே, ‘தர்டார்’ நடத்திக் கொண்டு வந்த ஜுலியா, ஜிம்மி எனும் குச்சு நாய்களைப் பற்றிப் பேசிக் கொண்டார் கள் இதுபோல – வீடு, ஈடு காட்டப்பட்டது.கம்பங்கொல்லை விற்றாயிற்று! அந்தக் கொல்லையின் விலையும், குலைக்கும் போதும் நாசுக்காகக் குலைக்கும் நாய்களின் விலையும் ஒன்று. அங்கே 250-ரூபாயில் நாய் வாங்கினார்கள். இங்கே இரண்டு தலைமுறையாகக் குடும்பச் சொத்தாக இருந்த க கம்பங்கொல்லையை 250 ரூபாய்க்கு விற்றுவிட்டார்கள். இந்த நிலையிலே, பெயர் சுகானந்தம் என்று இருந்து பயன்? சுகமும் கிடையாது: ஆனந்தமும் கிடையாது! 

தனபாலச் செட்டியார், ஒரு காலத்தில், சுகானந்தத் தோடு சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர். சுகானந் தம் இன்னமும், அந்தச் ‘சுவல்ப வியாபாரத்திலேதான் இருந்து வருகிறார். தனபாலச் செட்டியாரோ, எப்படியோ இலட்சாதிபதியாகிவிட்டார்! என்றாலும், பழைய சினேகத்தை மட்டும் விட்டுவிடவில்லை. வீட்டிலே நடைபெறும் எந்தக் காரியத்துக்கும் சுகானந்த முதலியாரை அழைப்பார். ‘சிலதுகள், அதிர்ஷ்டம் வந்ததும் தலைகால் தெரியாமல் ஆடும். நம்ம தனபாலு, அப்படிப்பட்டவனல்ல’ என்று சுகா னந்தம் தன் நண்பர்களிடமெல்லாம் கூறுவார். 

‘ஏம்பா தனபாலு!’ என்றுதான் சுகானந்தம் அழைப் பது வழக்கம். நேரிலே பேசும்போதும், தன் நண்பர்களிடம் பேசும்போதும், ‘தனபாலு’ என்று அழைத்த அதே சுகா னந்தமே, சில சமயங்களில் ‘செட்டியார்’ என்று அழைக்க நேரிட்டுவிடும்! பங்களாவுக்கு ஒரு காவல்காரன் ஏற்பட்டு விட்டான். அவன் யார் உள்ளே போவதானலும், ‘யார்? என்ன வேலையாக வந்தீர்கள்?’ என்று கேட்டுவிட்டுத்தான் அனுப்புவான். சுகானந்தமும் தனபாலும் ஒரே வியாபாரம் செய்தவர்கள்; நண்பர்கள் என்று அவன கண்டானா? தெரிந் அவனுக்கு தாலுந்தானென்ன! தனபாலச் செட்டியார், எஜமான். சுகானந்தம், யாரோ ஒரு ஆசாமிதானே! அப் படித்தானே அவன் கொள்ள முடியும்? ஒருநாள் சுகானந்தத் தையும் அவன் வாயிற்படியண்டை நிற்க வைத்துவிட்டான். 

“யார் நீங்கள்?’’ 

“நானா! நீ யாரடாப்பா? புதுசோ? ஏற்பாடே புது சாகத்தான் இருக்கு. நான் அவருக்குச் சினேகிதன்.” என்று சுகானந்தம் பதில் கூறினார். கூறிவிட்ட பிறகு யோசித்தார். ‘அவர், இவர்’ என்றல்லவா கூறவேண்டி வந்துவிட்டது, நம்ம தனபாலுவை என்று கொஞ்சம் கோபமும் அடைந்தார். 

“நீங்க யாரைப் பார்க்க வேண்டும்?” என்று மீண்டும் கேட்டான் காவற்காரன். என்ன சொல்ல முடியும்? ‘தன பாலுவை’, என்று சொல்வதா? மரியாதையாக இருக்குமா? உடனே, சுகானந்தம், “நான் தனபாலச் செட்டியாரைப் பார்க்க வேண்டும்.” என்று கூறினார். கூறிவிட்டு மறுவிநாடி யோசிக்கலானார். ‘செட்டியார்’ என்று கூற நேரிட்டதே, நம்ம தனபாலுவை; நாமும் அவனும் எவ்வளவு அன்யோன்ய மாகப் பழகினோம்; ஒரே கடையிலே இருந்திருக்கிறோம். ஒரே வியாபாரம் செய்தோம். இன்று அவன் ஒரு பணக்கார னாகிவிடவே, நாமே அவனைச் ‘செட்டியார்’ என்று சொல்ல வேண்டி நேரிட்டது என்று கோபந்தான். அந்தக் கோபம் மேலும் அதிகரித்தது. ‘இங்கேயே இரு! உள்ளே போய், ‘ஐயா’ ‘வைக் கேட்டுவிட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டு, வேலையாள் உள்ளே போனபோது, ‘ஐயாவாம் ஐயா! இவனுக்கு அவன் ஐயா! எனக்கென்ன? சே! நாம் இவனைப் பார்க்க வருவதே தவறு. பேசாமல் போய்விடு வேரம்!’ என்றும் நினைத்தார். ஆனால் ஒரு யோசனை வந்தது.வந்ததே வந்தோம். இந்தத் தடவை மட்டும் தனபாலுவைப் பார்த்து, இங்கே நடக்கும் அமுலைப் பற்றிச் சொல்லிக் கண்டித்துவிட்டுப் போய்விட வேண்டும் என்று தீர்மானித்தார். 

“ஏம்பா, தனபாலு! அற்பனுக்கு வாழ்வு வந்தா… அர்த்தராத்திரியிலே குடைபிடித்து நடப்பான் என்பார்களே, அதே கதையாத்தான் இருக்கு. ஏது, பெரிய அமுல் நடக் தே இங்கே? இப்போ என்னமோ அதிர்ஷ்டம் அடிச்சுது; பணம் சேர்ந்தது! இதற்காகப் பழைய மரியாதை, பாசம், நேசம் எல்லாம் போயிடணுமா? நான் என்னமோ, மற்ற வங்களைப் போல தலை துள்ளிப் போகாமெ, நீ மட்டு மரியாதையோட இருந்து வருவேன்னுதான் நினைச்சேன். பணம் சேர்ந்ததும் நீயும், ‘அதுக’ போலத்தான் நடக்கறே இது சரியல்ல! செல்வமிருக்கே, அது சாஸ்வதமல்ல. என்ன பணம் இருந்தாலும் பிரயோஜனமில்லை. குணம் இருக்க ணும். அப்போதுதான் லட்கமி தங்குவா!” என்று மளமள வென்று, தன் மனதிலுள்ளதைப் பூராவும் கொட்டிவிட வேண்டுமென்ற கோபத்தோடுதான் மடமடவென்று வேலைக் காரன் பின்னாலே சென்றார் சுகானந்தம். அவ்வளவு கோப மும் பறந்து போகும்படிச் செய்துவிட்டார் தனபாலச்செட்டி யார்! சுகனந்தத்திடம் பேசி அல்ல; வேலைக்காரனை ஏசி! 

“ஏண்டா, தடியா! இவரையா, தடியா! இவரையா, யாரோ வந்திருக்காங்க என்று சொன்னே? முட்டாளே! இவர் யாரு? நம்ம சினேகிதரடா! இந்த உலகத்திலேயே, என் குடும்ப விஷயமா  அக்கரை கொண்டவர் யாராவது இருக்கிறாங்க ளான்னா, அது இவர்தாண்டா. மடப்பயலே! இனி, எப் போதானாலும் சரி, இவர் வந்தா, நீ நிறுத்தக்கூடாது. கேள்வி கேட்கக் கூடாது. இவர் தான் நான்: நான்தான் இவர்! போ! மனுஷாளுடைய தராதரம் தெரியலை” என்று தன பாலச் செட்டியார் வேலையாளைக் கண்டித்தார். உச்சி குளிர்ந்தது சுகானந்தத்துக்கு. மெய் மறந்தார். தனபாலுக் குக் கோடி கோடியாகச் சேர்ந்தாலும் தகும் என்று எண் ணிக் கொண்டார். பழைய சினேகிதத்தை எவ்வளவு மதிக் கிறான் தனபாலு! எவ்வளவு அருமையான குணம்! குணம் அப்படி இருப்பதால்தான் பணம் சேர்ந்தது என்று எண் ணிக் கொண்டார். தன்னைப் பெருமைப்படுத்திய நண்ட னைப் பற்றி அன்று முதல், சுகானந்தமும் தானாகவே மரி யாதையோடு பேசிப் பெருமைப்படுத்தலானார். இந்த நிலை யிலே இருந்தது, இருவரின் நட்பும். 

சிங்காரத்துக்கு அந்தக் குச்சு நாய் மீது ஏற்பட்ட ஆசை அடிக்கடி அவனைத் தனபாலச் செட்டியாரின் பங்களாவுக்கு இழுக்கலாயிற்று. ஜிம்மியும் ஜுலியாவும் ஊடலோடு திருப்தி அடைந்துவிடுமோ! அழகான இரண்டு ”குட்டிகளை’” ஈன் றெடுத்த, ஜுலியா, பெருமையோடு, அவைகளையும், அவைகளைக் கண்டு பூரிக்கும் ஜிம்மியையும் பார்த்து மகிழ்ந் தாள். குட்டிகளிலே ஒன்று வெள்ளை; மற்றொன்று கருப்பு. நிறத்திலே மாறுபாடு இருந்தது. அழகோ சமம். சிங்காரமோ இரண்டிலே எதையாவது ஒன்றைப் பெறத் தவம் இருக்கவும் தயாரானான். தகப்பனாரிடம் மன்றாடினான், ஒரு ‘குட்டி’யை வாங்கித் தரச்சொல்லி. 

”அப்பா….” 

“என்னடா….?” 

“அந்த நாய்க்குட்டி..” 

“அடே, நமக்கேண்டா அந்தச் சனியனெல்லாம்!” 

”போ, அப்பா! எவ்வளவு அழகாக இருக்கு!” 

“ஆமாம், அழகுதான்! ஆனால் அதற்குப் பாலும் பிஸ்கட்டும் வேண்டுமே, ஒரு நாளைக்கு எட்டணாவுக்கு.”

“எப்படியாவது வளர்க்கலாம் அப்பா! நீங்கள் கேட்டுப் பாருங்களேன் செட்டியாரை!’’ 

“கேட்டால் கட்டாயம் கொடுப்பான் தனபாலு, ஆனாலும் நமக்கு ஏண்டா நாயும் பூனையும்?” தந்தைக்கும் மகனுக்கும் இது பேச்சு. 

“கருப்பு நிறம்? செச்சே! டர்ட்டி; நமக்கு வேண்டாம்!”  

“வெள்ளை நிறத்திலும் ஒரு குட்டி இருக்கிறது சார். இன்கம்டாக்ஸ் ஆபீசருக்கு ஒன்று. உங்களுக்கு ஒன்று தருவ தாக நான் முன்பே தீர்மானித்துவிட்டேன்.” 

”சரி! வெள்ளை நிறத்திலே இருப்பதைக் கொண்டு வா. ப்யூன், இப்போதே வேலைகளைச் சரியாகச் செய்வ தில்லை. இந்த நாய்க்குட்டியும் வந்துவிட்டால் தீர்ந்தது. அவன் முழுச் சோம்பேறியாகிவிடுவான். 

டிப்டி கலெக்டர் தாமோதரன் பிள்ளைக்கும் தனபா லச் செட்டியாருக்கும், அதே நாய்க்குட்டி விஷயமாக நடந் தது இந்த உரையாடல். டிப்டி கலெக்டர் செட்டியார் போன பிறகு, தனது ப்யூனிடம் அந்தச் செட்டியார் பெரிய தொல்லை தருகிறார் என்றுகூடக் குறை கூறினார். செட்டி யாரோ, கலெக்டர் துரை வீட்டிலே, தான் கொடுத்த நாய் வளரப் போவது தெரிந்து பெருமை அடைந்தார். 

சிங்காரத்தின் தொல்லை தாங்காது சுகானந்தம் தன பாலச் செட்டியாரிடம் சென்று நாய்க்குட்டி வேண்டுமென்று கேட்டபோது, செட்டியார் மறுப்பார் என்று கொஞ்சம்கூட எண்ணவே யில்லை. கேவலம் ஒரு நாய்க்குட்டியை, பால்ய சிநேகிதனுக்குத் தர, தங்கமான குணம் படைத்த தனபாலு” தடை சொல்வானா என்று நினைத்தார். ஆனால், செட்டியார் சொன்ன பதிலைக் கேட்டபோது, சுகானந்தத்துக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. 

“நாய்க்குட்டியா? சரிதான். டிப்டி கலெக்டர் இருக்கி றாரே, அவர் இந்தக் குட்டி தனக்கு வேண்டுமென்று, கெஞ் சிக் கூத்தாடினார். ‘என்ன சார் இது, ஒரு குட்டியை இன்கம் டாக்ஸ் ஆபீசர் வேண்டுமென்றார். ‘சரி’ என்று அரை மன துடன் ஒப்புக் கொண்டேன். இருப்பது இன்னும் ஒன்றுதான். அதையும் கொடுத்துட்டு எப்படித்தான் சார் மனசு நிம்மதியா யிருக்கும்!’ என்று எவ்வளவோ சமாதானம் சொன்னேன். அந்த ஆள் பிடிவாதக்காரன். ‘நூறானாலும் ஆயிரமானா லும் தருகிறேன். குட்டி கட்டாயம் கொடுத்தாக வேண்டு’ மென்று “ஆர்டரே” போட்டு விட்டார். நான் என்ன செய் வது? அடுத்த தடவை, கட்டாயம் உனக்குத் தருகிறேன்” என்றார் தனபாலச் செட்டியார். சுகானந்தத்துக்குக் கோபந் தான். ‘கேவலம் ஒரு நாய்க்குட்டி! அதைத்தர மறுக்கி றா னே’ என்று கோபந்தான். ஆனால் அந்தக் ‘கேவலம்’, கலெக்டர் துரை வீட்டுக்கு அல்லவா குடிபோகிறது? என்ன செய்வது! அடுத்த தடவை ஆகட்டும் என்ற பதிலை, சுகா னந்தம் தன் மகனுக்குக் கொஞ்சம் மெருகு பூசித் தந்தார். சிங்காரத்துக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. என்ன செய் வது? டிப்டி கலெக்டர், இன்கம் டாக்ஸ் ஆபீசர் என்று செட்டியார் சொல்லிவிட்ட பிறகு, இவன் என்ன கூற முடி யும்? சிங்காரத்தின் சார்பிலே தேவா ஆஜரானாள்! 

“என்னப்பா இது! நமக்கு எவ்வளவு வேண்டியவர் இன்கம் சுகானந்தம்! அவருக்குக் கொடுத்தால் என்ன? டாக்ஸ் ஆபீசருக்கு நாய் வேண்டுமென்று யார் கேட்டார் கேட்கிறீர் கள்? நீங்களாகத்தான் வலிய வலியப் போய்க் கள், ‘நாய்க்குட்டி வேண்டுமா?’ என்று”. தேவா வழக்கு தொடுத்தாள். தனபாலச் செட்டியார் சிரித்தார், தோ வின் உலக ஞான சூனியத்தைக் கண்டு! 

“பைத்யமம்மா நீ! நானாக வலியப் போவதாகக் கேலி செய்கிறாயே, இன்கம்டாக்ஸ் ஆபீசர் வீட்டுக்கு மட்டு மல்ல, டிப்டி கலெக்டர் வீட்டுக்கும் நானாகத்தான் சென்று, நாய்க்குட்டி வேண்டுமா?’ என்று கேட்டேன். இன்னும் ஒரு குட்டி இல்லையே என்று வருத்தமும் படுகிறேன். உனக் கென்ன தெரியும் அந்த விஷயம்?” என்று கூறினார். 

“இன்னொரு குட்டி இருந்தால் சுகானந்தத்துக்குத் தரலாம் என்று நினைக்கிறீரா? ஐயோ, பாவம்! அவ்வளவா வது உங்க சிநேகிதர்மீது அன்பு இருக்கிறதே, அதுபோதும்.” என்று தேவா கொஞ்சம் படபடப்பாகப் பேசினாள். அந்தப் படபடப்பைக் கண்டு தனபாலச் செட்டியார் ஆச்சரியப்பட வில்லை. தேவாவுக்குத்தான் ஆச்சரியம் பிறந்தது, அதற்கு அவர் அளித்த மறுமொழி கேட்டு… 

“முட்டாள் பெண்ணே! மூன்றாவது குட்டி இருந்தால் அந்த விடியா மூஞ்சிக்குத் தருவேன் என்றல்ல நான் சொன்ன தற்கு அர்த்தம்? மூல்தானி இருக்கிறானே, நமக்குக் கேட் கும்போது கடன் தருகிறானே, அவனுக்குக் கொடுத்திருப் பேன். நமது வீட்டு நாய்க்குட்டி ஒன்று கலெக்டர் பங்களாவி லும்,மற்றொன்று இன்கம்டாக்ஸ் ஆபீசர் வீட்டிலும் உலாவி னால் எவ்வளவு லாபம் தெரியுமோ நமக்கு? ‘ஏது சார், நாய்க்குட்டி?’ என்று யாராவது கேட்கிற போதெல்லாம், டிப்டி கலெக்டரும், ஆபீசரும், ”இதுவா! தனபாலச் செட் டியார் தந்தார்’ என்று கூறுவார்களே! எத்தனை முறை என் பெயரை உச்சரிப்பார்கள். என்னைப் பற்றிப் பெரிய ஆபீசர்கள் பேசினால், ஊரிலே எனக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும். தனபாலச் செட்டியாருக்கும் கலெக்டருக்கும் பிராண சிநேகிதம். கலெக்டர் வீட்டிலே இருக்கிற நாய்க் குட்டிகூட, செட்டியார் கொடுத்ததுதான் என்று பெரிய மனிதர்களெல்லாம் பேசுவார்கள். இந்த நாய்க்குட்டிகள், நமது ‘ஏஜண்டுகள்’ போல அல்லவா அங்கே இருக்கும்! பேசு இது தெரியாமல் சுகானந்தத்துக்குக் கொடு என்று கிறாயே!பைத்யமே! அவன் இந்த நாய்க்குட்டி தரவில்லையே என்று கொஞ்சம் கோபித்துக் கொள்வான். அதனாலே நஷ்டம் என்ன? கெலெக்டர் வீட்டிலும், ஆபீசர் வீட்டிலும் இந் தக் குட்டிகள் போய்ச் சேருவதால் வருகிற லாபம் எவ் வளவு? அதைக் கவனிக்க வேண்டும். நீ வியாபாரியின் பெண் தான். இருந்து என்ன பயன்? சூக்ஷம புத்தி இல்லையே உனக்கு?” என்று செட்டியார் உபதேசமே செய்துவிட்டார். 

தேவா தெளிவு பெற்றாள், தகப்பனார் காட்டிய வழி சரி என்றல்ல; அவர் ஒரு பணம் திரட்டும் கருவி என்று தெளிவு பெற்றாள். ஏழையும் செல்வவானும் இணை பிரியா நண்பர்களாக இருப்பினும், இளமை முதலே பிராண சிநே கிதர்களாக இருந்தாலும், இருவர் உலகமும் வேறு வேறு; எண்ணம், ஏற்பாடு, திட்டம், தத்துவம் சகலமும் வேறு வேறாகத்தான் இருக்கும் என்பதை அறிந்தாள். 

அன்றிரவு அவளையும் அறியாமல் கண்ணீரும் சிந் தியது. அந்த அளவு உருக்கம், காரணமில்லாமல் பிறக்க வில்லை; சிங்காரத்திடம் தேவாவுக்குக் காதல், அதற்கு முன்பே பிறந்து தவழ்ந்து கொண்டிருந்தது! கலெக்டர் வீட் டிலே வாழ வேண்டிய நாய்க்குட்டியை, கடன் சுமை ஏறிக் கிடக்கும் வீட்டிலே கொண்டுவரச் சிங்காரம் முயற்சித் தான். மாளிகையிலே வாழ வழி வகுத்துக் கொண்டிருந் தார் தனபால் தன் மகளுக்கு. அவள் அந்த மண் சுவர் வீட் டிலே தன் ‘மனோஹரன்’ இருக்கக் கண்டாள்! நாயைக் கொண்டே, ‘இலாபம்’ பெறும் எண்ணங்கொண்டவரின் மகளுக்கு, ‘காதல்’ பூத்துப் பயனென்ன? கருகும் அல்லது அவர் கசக்கி வீசி எறிவார்,கோபத்தோடு! 

“அடுத்த தடவை” வந்தது; சிங்காரத்தின் சார்பிலே தேவா மனு போட்டாள். ம்முறை தாயார் அதை நிரா கரித்தாள், கடுமையான பேச்சுடன். 

“ரொம்ப இலட்சணம்தான்! அதுக பாவம், ஏழைக. அதுக வீட்டிலே நாயைக் கொடுத்தா, என்ன ஆகும்? பாலும் பிஸ்கட்டும் வாங்கப் பணம் ஏது? நாய் நாலு நாளிலே சாகும்” என்றாள் தேவாவின் தாயார். உண்மைதான். ஆனால் உள்ளத்தைக் குமுறச் செய்யும் உண்மை. பாழாய்ப் போன ஜூலியா கர்ப்பமாகாமலிருக்கக் கூடாதா? குட்டி யும் பிறந்து, அவருக்குக் கொடுக்க முடியாது என்றும் சொன்னால், அவர் எவ்வளவு வேதனைப்படுவார் -பாவம், என்று குழம்பிக் கொண்டிருந்தாள் தேவா. அவர், அதா வது சிங்காரம், அடுத்த வீட்டு அன்னத்துக்கும் தனக்கும் மார்கழி போனதும், கல்யாணம் என்ற ஆசையிலே இருந் தான். நாய்க்குட்டி ஆசையும் விடவில்லை. மறுபடியும் செட்டியார் வீட்டுக்கு நடந்தபடிதான் இருந்தான். ஊரிலே எந்த ஆபீசரும் இணங்கவில்லை, நாய்க்குட்டியை ஏற்றுக் கொள்ள! எனவே, ‘பழைய சிநேகிதம் மறக்கலாமா? கவர் னரே கேட்டால்கூடத் தரமாட்டேன், உனக்குத் தருவதாகக் என்ற கூறிவிட்ட பிறகு…பேச்சு என்றால் பேச்சுதானே’ மொழிகளைச் சேர்த்து, தனபாலர் நாய்க்குட்டியைத் தந் அன்னத்துக்குத் தர தார், சுகானந்தத்திடம். சிங்காரம், எண்ணியிருந்த முத்தங்களிலே அரைப் பாகத்துக்கு மேலா கவே தந்துவிட்டான், ஜார்ஜுக்கு–அதாவது, நாய்க்குட் டிக்கு! 

நாய்க் குட்டியைப் பராமரிக்க வேண்டிய முறைகளை விளக்கமாகக் கூறினாள் தேவா. பால் இந்த அளவு, பிஸ் கூறினாள். கட் இத்தனை துண்டு தரவேண்டும் என்று இராத்திரி வேளையிலே, ‘மெத்து, மெத்து ”என்று துணி போட்டுப் படுக்க வைக்கவேண்டும் தெரிகிறதா?’ என்று கூறி னாள். தனபாலர் கூறினதிலே தவறு என்ன! பைத்யக்காரப் பெண்தானே தேவா! சிங்காரத்தின் நிலை என்ன, நாய் வளர்ப்புக்காகத் தேவா போதிக்கும் முறை அவனால் நடத் தக் கூடியதா? எண்ணிப் பார்த்தாளா? அவள்தான் அவனை “அவர்” என்று மனதிலே கொண்டிருந்தாளே! ஆகவே அவரால் பாலும் பிஸ்கட்டும்,பட்டு மெத்தையும் சம்பாதிக்க முடியும் என்று எண்ணிவிட்டாள். பித்தத்தில் ஒரு வகை தானே காதல்! அந்தப் பித்தமும் ஒரே விநாடியிலே, ஒரே வாக்கியத்திலே போய்விட்டது தேவாவுக்கு. சிங்காரத்துக் குத் தேவாவின் மனநிலை தெரியாது. நாய்க் குட்டியை எப்படி வளர்ப்பது என்று தேவா கூறி முடித்ததும், சிங்காரம், “அதையெல்லாம் அன்னம் கவனித்துக்கொள்ளும்.’ என்று கூறினான் புன்னகையுடன். அன்னம் என்ற உச்ச ரிப்பே புன்னகைக்குக் காரணம் என்பது தேவாவுக்கு விளங் கிற்று. அன்னம் யார்?” என்று தேவா கேட்டாள். “ஏன், உனக்குத் தெரியாதா? அவளைத்தான் தை பிறந்ததும் அவன் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான்” என்று தேவாவின் தாயார் கூறினாள். அவன் புன்னகை பூத்த முகத் தோடு நின்றான். பித்தம் தெளியும் நிலை பிறந்தது தேவாவுக்கு. 

சோப்பாக 

‘ஜார்ஜ்”, சிங்காரத்தின் சினிமா, காபி, சீட்டாட்டம் முதலிய பல வழக்கங்களைப் போக்கிவிட்டான். கையில் கிடைக்கும் ‘காசு’ – பிஸ்கட்டாக, பாலாக, மாறும்போது, சீட்டாட்டமும் சினிமாவும் ஏது? அன்னத் துக்கு அன்புடன் என்றேனும் ஒருநாள் வாங்கித்தரும் கன காம்பரம்கூட, பிஸ்கட்டாகிவிட்டது! ‘ஜார்ஜ்’ நன்றாக வளர வேண்டும் என்பதிலே அவன் அவ்வளவு அக்கரை காட்டினான், செலவைப் பொருட்படுத்தாமல், ஆனால் ஜார்ஜ், இந்த ஏழை வீட்டுக்கு ஏற்றதா,திருப்தியோடு வளர? மெலிந்தான்.உடலிலே சொறி கண்டது, ஓயாது அழுவான். ‘ஜார்ஜ்’ வரவர அவலட்சணமாகவும் ஆகி வந்தான். சிங் காரம், இந்த நாய்க்குட்டிக்காகப் பணத்தைப் பாழாக்கு வது, அன்னத்துக்குப் பிடிக்கவில்லை. “அதன் வயிறு என்ன வயிறோ! ஒரு நாளைக்கு நாலணா பிஸ்கட்டைத் தின்று விடுகிறதே! இவ்வளவு தின்றும், எலும்பும் தோலுந்தான் மிச்சமாக இருக்கிறது” என்று ஏசுவாள் அன்னம். இந்த வீண் செலவை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்தாள். 

“சோறு போடலாமே ஜார்ஜுக்கு” என்று யோசனை கூறி னாள், செலவைக் குறைக்க. “சேச்சே! ஒரு ஆறுமாத காலம் பாலும் பிஸ்கட்டுந்தான் தரவேண்டும். தேவா அதை வற்புறுத்தி வற்புறுத்திக் கூறினாளே, தெரியுமா?” என் றான் சிங்காரம். “பொழுது சாயும்போது அந்த நாய்க்குட்டி யைக் குளிப்பாட்டுவானேன்?” என்று கேட்பாள் அன்னம். 

“இது தேவாவின் யோசனை’ என்பான் சிங்காரம். கை தவறி நாய்க் குட்டியைக் கீழே போட்டுவிட்டாலோ அன்னத் தைக் கண்டிப்பான். அந்தக் கண்டனம்கூட அவளுக்கு அவ் வளவு கஷ்டமாக இல்லை. இடையிடையே, ‘தேவா,தேவா!” என்று அவன் பேசியதுதான் கஷ்டத்தைத் தந்தது. தேவா மீது அன்னத்துக்கு அசூயையே பிறந்தது. தேவாவையே கொண்டு வந்து வளர்ப்பதுதானே என்று கேலியாகக் கூறி விட்டாள், ஒருநாள். அந்தச் சமயம் சிங்காரம் பார்த்த பார்வை அன்னத்தின் கண்களிலே நீரைப் பெருக்கிவிட்டது. தேவா மீது பிறந்த கோபம், அன்னத்தின் வீட்டை விட்டுக் கிளம்பி, தனபாலச் செட்டியாரின் அழகான மாளிகைக்குள் நுழையுமா? ‘ஜார்ஜ்’ மீதுதான் பாய்ந்தது. அதுவும், சிங் காரம் வீட்டில் இல்லாத சமயங்களில்! 

அன்று மழை! தெருவெல்லாம் சேறாகிவிட்டது. சிங் காரம் வசித்து வந்த வீதியிலே, ‘தார் ரோடு’ இருக்குமா? அவன் என்ன தனபாலனா? அந்தச் சேற்றிலே உருண்டு புரண்டு, ‘ஜார்ஜ்’ தன்னுடைய வெள்ளை நிறத்தைக் கெடுத் துக் கொண்டு, வீதி சுற்றி, வீட்டு இலைக்குக் குலைத்துக் கிடக்கும் ‘மட்டரக’ நாயாக நின்றான். அன்னம் தேவாவை எண்ணி, ஒரு வகையான திருப்தி பெற்றாள். அந்தத் தேவாவும், வாழ்க்கையிலே சேறும் அழுக்கும் நிறைந்த இடத் திலே போய்ச் சேர்ந்தால், இந்த ஜார்ஜ் போலத்தான் உரு மாறிப் போவாள். இப்போது உள்ள மினுக்கும் தளுக்கும் இராது என்று எண்ணினாள். கொஞ்சம் சந்தோஷம் அடைந் தாள். அர்த்தமற்ற ஆனந்தம்தான்!ஆனால் அன்னம் அதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்? ஏழையின் கண்ணீருக் குத்தான் ஆழ்ந்த பொருள் இருக்க முடியும்; களிப்பு பெரும் பாலும் காரணமற்றதாகத்தானே இருக்கும்! ஜார்ஜின் நிலை யைக் கண்டான் சிங்காரம். அதை இந்தக் கதிக்கு ஆளாக விட்டுவிட்டு, இளித்துக் கொண்டிருக்கும் அன்னத்தையும் கண்டான். கடுங்கோபம் கொண்டான். சீறினான்: கண்ட படி ஏசினான்; அன்னத்தை அடிக்கவும் கை ஓங்கினான். தெருக்கோடியிலே ஒரு கூட்டம் வரக்கண்டு அடங்கினான். 

தனபாலச் செட்டியாரின் தூரபந்து, குழந்தைவேலு முதியோர். செட்டியாருக்கு முதலியார் பந்துவா?’ என்று சந்தேகம் பிறக்கும். விஷயம் இது. ‘செட்டியார்’ என்று சில பகுதிகளில் வாழும் முதலியார்களுக்குப் பட்டம் உண்டு. தனபாலர் அந்த வகை. குழந்தைவேலரி ஒரே குமாரர் அருமைநாதன்; சமூக சேவா சங்கத் தலைவர். அந்தச் சங் கத்தை ஆரம்பித்தவர், நடத்துபவர், தலைவர் அருமைநாதனேதான்! சர்க்கார் மானியமும், கனதனவான் களின் நன்கொடையும், அந்தச் சங்கத்துக்கு ஏராளம். அரு மைநாதன், ஏழை எளியவரின் நல்வாழ்க்கைக்காகத் தமது உடல்,பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணிக்கத் துணிந்து விட்டவர் என்று அவரைப் புகழாத பத்திரிகையே கிடை. யாது. சமூக சேவா சங்கத் தலைவரின் அபாரமான பணி யினால் ஏழையின் எந்தப் பிணியாவது போயிற்றா என்று மட்டும் யாரும் கணக்குப் பார்த்ததில்லை: பார்க்கவும் கூடா தல்லவா? அருமைநாதர் என்ன, அன்னக்காவடியா? சீமான் மகன். அவர் ‘அடிக்கடி’ ஏழைகளின் விடுதிகளைப் பார்வை யிடுவார்; பிய்ந்து போன கூரைகள், உடைந்த மண்பாண் டங்கள், சரியும் சுவர்கள், குப்பை கூளக் குவியல்கள், ஈ மொய்க்கும் இடங்கள், புழு நெளியும் சாக்கடைக் கால்கள் ஆகியவற்றைப் பார்வையிடுவார். பிறகு இந்த அசுத்தங்களி னாலேதான் பிளேக், இன்புளூயென்சா, காலரா முதலான நோய்கள் பிறக்கின்றன. அவை ஏழைகளைச் சாகடித்து விட்டுப் பிறகு நகரெங்கும் பரவி, மக்களை அழிக்கின்றன என்பது பற்றிய விளக்கத்தை உரைப்பார். இந்த அசுத்தம் நிரம்பிய இடத்திலேயே இருந்து தீர வேண்டிய நிலை ஏன் ஏழைக்கு வந்தது என்பது பற்றி அவர் பேசினதில்லை; பேசும்படி கேட்டவர்களுமில்லை. அருமைநாதரின் கண்கள் இந்த ஏழை விடுதியிலே உள்ள அசுத்தத்தைக் காண்பதோடு ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை.அழுக்கு ஆடையை அணிந்து கொண்டிருந்த அழகிய அபலைகளையும் கூர்ந்து கவனித்து வந்தார். கண்ணடியிலே விழும் கனியைச் சுவைப்பார். மற் றதுகளைப் பற்றி, “சீச்சி! இந்தப் பழம் புளிக்கும்” என் பார். அவர், “சமுக சேவா சங்க” வேலை செய்ய தேவா சகிதம் வந்தார் அன்று; அழகான மங்கையும் ஆடம்பர ஆட வனும், ஏழைகளின் விடுதிப் பக்கம் வந்தால், கும்பல் சேரத் தானே செய்யும்! ‘ஜார்ஜை’யும் மறந்து, சிங்காரம் அந் தக் கும்பலைக் கவனிக்கத் தொடங்கினான். 

தேவாவின் கண்கள் சிங்காரத்தின் மீது கோபத்தைக் கக்கிற்று. “இதுதானா, நீ நாய் வளர்க்கும் இலட்சணம்?’ என்று கேட்டாள். அருமைநாதன் விஷய விளக்கம் கேட் ‘அப்பா டான். கோபத்தோடு பதிலளித்தாள் தேவா. கொடுக்க இஷ்டப்படவே இல்லை. அம்மாவும் இந்த அன் னாடிகளுக்குக் கொடுக்கக் கூடாது என்று சொனனார்கள். நான்தான் பிடிவாதமாகப் பேசி, நாய்க்குட்டியை வாங்கிக் கொடுத்தேன். அதை இந்த இலட்சணமாக்கிவிட்டார்கள்” என்றாள். 

தேவா கோபத்தைக் கக்கிக் கொண்டிருந்தபோது சிங் காரம் பயத்தோடு நாய்க்குட்டியைத் துடைத்து விட்டுக் கொண்டிருந்தான். 

“அன்னாடிகள்’” என்ற சொல், சிங்காரத்தின் இருத யத்திலே வேல் பாய்வதுபோல் பாய்ந்தது. இருதயத்திலே ஆயிரம் வேல் பாய்வதுபோல் ஆகிவிட்டது,அருமைநாதனின் பேச்சு! 

அவன் சொன்னான்: ‘என்ன தேவா! இந்த ஏழை களிடம் தரலாமா, இந்த அருமையான நாய்க்குட்டியை? இதுகளுக்கே சுத்தமாக வாழத் தெரியாமல், குப்பையில் சீர்திருத்தி, புரண்டு கொண்டிருக்கின்றன. இதுகளைச் கழுவிக் குளிப்பாட்டும் வேலையிலே நாம் ஈடுபட்டிருக்கி றோம். நீ இவன் நாய்க்குட்டியைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்று குறைபடுவது தவறு. ஜார்ஜின் உடல் அழுக்கு இருக்கும்; இவன் தலையைப் பார்! வறண்டு கிடக் கிறது. சட்டையிலே பார்! எவ்வளவு அழுக்கு? காலிலே பார் -சேறு; கண்ணிலே பார் தூசு; இவன் இருக்கும் இலட் சணத்தைக் கவனிக்காமல், நாய்க்குட்டியைக் கவனிக்கிறாயே, நீ ஒரு பைத்யம்!” என்றான். 

“ஆமாம்” என்றாள் தேவா. ஆனால் அருமைநாதன கூறியதை எண்ணியல்ல; ‘இப்படிப்பட்டவனைக் கல்யாணம செய்துகொள்ள வேண்டுமென்றுகூட ஒரு சமயத்திலே நினைத்தோமே’ என்ற எண்ணத்தாலேதான். சிங்காரத்தால் அழத்தான் முடிந்தது. அன்னம் முணுமுணுத்தாள், கையை நொடித்தாள்; வேறு என்ன செய்வாள்? சேவா சங்கத் தலை வர் சேல்விழியாளுடன் போய்விட்டார் போருமுன்பு, அன் னத்தின் அழகை ஒருமுறை பார்த்துவிட்டார். 

சிங்காரம், தன் உலகை உணர்ந்து கொண்டான். செல்வவான்களின் வாழ்க்கை அம்சங்களிலே சிலவற்றை யாவது தானும் அனுபவிக்க வேண்டும் என்ற ‘வீணான மோகம்’ ஏற்பட்டதற்காக வருந்தினான், ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’யானதால் ஏற்பட்டதை உணர்ந்தான். வீணான சஞ்சலமே 

நாலைந்து நாட்களுக்குப் பிறகு ஓர் நாள் அருமைநாதன் மோட்டாரை ஓட்டிக்கொண்டு, அந்த வீதிப் பக்கம் வந் தான். சமூக சேவைக்காக அல்ல; அன்னத்தைத் தரிசிக்க லாம் என்று. ‘ஜார்ஜ்’ கவனிப்பாரற்றுக் கிடந்த சமயம் அது. புழுதியிலே படுத்துக் கிடந்தது, மோட்டாரின் சக்கரத்தில் சிக்கிற்று; நொறுங்கிச் செத்தது. அன்னத்தைப் பிறகு பார்த் துக் கொள்வோம் என்று, அருமைநாதன், மோட்டாரை ஓட்டிக்கொண்டு போய்விட்டான். 

“அட பாவி” என்று அலறினாள் அன்னம். ஜார்ஜை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள். கூக்குரல் கேட்டு உள்ளே இருந்து ஓடிவந்தான் சிங்காரம். மோட்டாரைக் காட்டினாள் அன்னம். பேசாமல் ஜார்ஜை அன்னத்திடம் இருந்து வாங்கிக் கொண்டான் சிங்காரம். இரண்டு சொட் டுக் கண்ணீர்விட்டான். 

“உடலிலே சேறு பூசிக் கொண்டதற்கு உருகிப் போனான் படுபாவி! இப்போது சாகடித்துவிட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் போகிறான்” என்று கூறி அழுதாள் அன்னம். புறக்கடையிலே ஒரு பள்ளம் தோண்டிப் புதைத்தான், இறந்துபோன ஜார்ஜை! ஜார்ஜை மட்டுமல்ல, அன் னத்தின் மீது கொண்ட கோபத்தை, ஆடம்பரப் பிரியத்தை, பழைய நாளைய எண்ணங்களை… 

நாலைந்து வருஷங்களுக்குப் பிறகு ஓர் நாள், ‘வெள்ளை’ மீது கருப்பனை உட்கார வைத்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அன்னம். “கருப்பண்ணசாமி” தயவால் பிறந்தான் என்று எண்ணி, தன் குழந்தைக்குக் கருப்பண்ணன் என்று பெயர் வைத்தான் சிங்காரம். வெள்ளை அவன் வீட்டு நாய்; அது பிஸ்கட்டும் தின்றதில்லை; பாலும் குடித்ததில்லை. எங்கோ, எதையோ, எப்போதோ, தின்றுவிடும். சிங்காரத்தின் வீட்டுக்குத்தான் காவல் புரியும். குழந்தைக்குக் குதிரையாக இருக்கும். கோலால் அடிபடும்! ஆனால் வீட்டையும் மறக்காது; குடும்பத்தில் யாரைக் கண் டாலும் வால் ஆட்டிக் களிக்கவும் தவறாது.என்றைக்கேனும் ஓர்நாள், எச்சில் இலையிலே இரண்டு பிடி சோறு வைத்து, அன்னம் கூப்பிடுவாள், ‘வெள்ளே! வெள்ளே’ என்று. வெள் ளைக்’கு அதுவே விருந்து. வெள்ளை பிறந்த இடம் தெருக் காடி பாழ்மண்டபம். தாயும் தந்தையும் தெருப் பொறுக் டுகள்; தனபாலச் செட்டியாரின் வளர்ப்புகள் அல்ல. அந்தப் ‘பரம்பரையில்’ பிறந்த ‘வெள்ளை’க்கு விருந்துதானே அது. மனிதர்களிலே மட்டுமல்ல, சகல ஜீவராசிகளிலும், இரண்டு வகையான “பரம்பரை” இருப்பதைச் சிங்காரம் தெரிந்து கொண்டான்; தெளிவு பெற்றான். 

– இரு பரம்பரைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1980, பூம்புகார் பிரசுரம் பிரஸ், சென்னை.

Peraringnar_Anna காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *