தி.ச.வரதராசன்

 

வரதர் என்ற தி.ச.வரதராசனின் படைப்புலகப் பணியில் அவரின் அச்சுவாகனமேறிய படைப்புகளை அன்னாரின் நினைவுப் படையலாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் கருக்கட்டியிருந்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற அவர்தம் படைப்புக்களை முன்னர் வாசித்த பலருக்கு இதுவொரு நினைவு மீட்டலாகும் அதே சமயம் வரதரின் எழுத்துலகப் பங்களிப்பின் ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாயும் கூட இது அமையும். அந்த வகையில் மார்ச் 2004 இல் வெளிவந்த வரதர் 80 என்ற சிறப்பு மலரில் இருந்து இந்தப் பட்டியலைத் தருகின்றேன்.

முழுப்பெயர்: தியாகர் சண்முகம் வரதராசன்
பிறந்த திகதி: 1924-07-01
தொழில்: அச்சக முகாமையாளர், நூல் வெளியீட்டாளர்
புனை பெயர்கள்: வரதர், வரன்

முதலில் அச்சில் வெளிவந்த கட்டுரை: 1939, ஈழகேசரி – மாணவர்களுக்கான கல்வி அனுபந்தம்

முதலில் அச்சில் வந்த சிறுகதை: கல்யாணியின் காதல், ஈழகேசரி ஆண்டு மலர் 1940

படைத்த சிறுகதைகள்:

ஈழகேசரி

1. கல்யாணியின் காதல் (1940)
2. விரும்பிய விதமே (1941)
3. கல்யாணமும் கலாதியும் (1941)
4. குதிரைக்கொம்பன் (1941)
5. தந்தையின் உள்ளம் (1941)
6. ஆறாந்தேதி முகூர்த்தம் (1941)
7. கிழட்டு நினைவுகள் (1941)
8. விபசாரி (1943)

மறுமலர்ச்சி

9. இன்பத்திற்கு ஓர் எல்லை (1946)
10. வென்றுவிட்டாயடி ரத்னா (1946)
11. ஜோடி (1947)
12. அவள் தியாகம் (1948)
13. வேள்விப் பலி (1948)

சுதந்திரன்

14. மாதுளம்பழம்

ஆனந்தன்

15. கயமை மயக்கம்
16. உள்ளுறவு
17. வாத்தியார் அழுதார்

தினகரன்

18. பிள்ளையார் கொடுத்தார்
19. வீரம்
20. ஒரு கணம்

வரதர் புத்தாண்டு மலர்

21. உள்ளும் புறமும்

கலைச்செல்வி

22. புதுயுகப் பெண்

தமிழ் எழுத்தாளர் சங்கக் கதையரங்கு

23. வெறி

மத்திய தீபம்

24. கற்பு

புதினம்

25. இன்று நீ வாழ்ந்திருந்தால்…..
26. ஓ இந்தக் காதல்!

மல்லிகை

27. பொய்மையும் வாய்மையிடத்து
28. தமிழ்மொழி தேய்கிறதா
29. உடம்போடு உயிரிடை நட்பு
29. தென்றலும் புயலும் (1976)

படைத்த குறுநாவல்கள்

1. வென்றுவிட்டாயடி இரத்தினா
2. உணர்ச்சி ஓட்டம்
3. தையலம்மா (மறுமலர்ச்சி)

படைத்த கவிதைகள்

1. ஒர் இரவிலே (ஈழகேசரி)
2. அம்மன் மகள் (மறுமலர்ச்சி)
3. யாழ்ப்பாணத்தார் கண்ணீர் – குறுங்காவியம் (வீரகேசரி)

நூல்களாக வெளிவந்த ஆக்கங்கள்

1. நாவலர்
2. வாழ்க நீ சங்கிலி மன்ன!
3. கயமை மயக்கம் – (மறுபதிப்பு “வரதர் கதைகள்”)
4. மலரும் நினைவுகள் (வரலாற்றுத் தரிசனம்)
5. பாரதக்கதை
6. சிறுகதைப் பட்டறிவுக்குறிப்புக்கள்

நடத்திய சஞ்சிகைகள்

1. மறுமலர்ச்சி (1946)
2. வரதர் புத்தாண்டு மலர் (1949)
3. ஆனந்தன் (1952)
4. தேன்மொழி (1955)
5. வெள்ளி (1957)
6. புதினம் (1961)
7. அறிவுக்களஞ்சியம் (1992)

வெளியிட்ட நூல்கள்:

1. இலக்கிய வழி (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை)
2. வள்ளி (மஹாகவி)
3. கயமை மயக்கம் (வரதர்)
4. தெய்வப் பாவை (சொக்கன்)
5. மூன்றாவது கண் (கனக செந்தில்நாதன்)
6. பிரபந்தப்பூங்கா (கனக செந்தில்நாதன்)
7. இசை இலக்கணம் ( சங்கீத பூஷணம், சந்திரசேகரம்)
8. தமிழ் மரபு ( வித்துவான் பொன் முத்துக்குமாரன்)
9. சிலம்பின் சிறப்பு (வித்துவான் பொன் முத்துக்குமாரன்)
10. இலக்கியமும் திறனாய்வும் ( பேராசிரியர் கைலாசபதி)
11. கோபுர வாசல் (முருகையன்)
12. 24 மணிநேரம் (நீலவண்ணன்)
13. 12 மணிநேரம் (நீலவண்ணன்)
14. மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது (நீலவண்ணன்)
15. யானை (செங்கை ஆழியான்)
16 மழையில் நனைந்து (செங்கை ஆழியான்)
17. விடிவெள்ளி பூத்தது (சோமகாந்தன்)
18. ஒட்டுமா (சாந்தன்)
19. சிலம்பொலி (நாவற்குழியூர் நடராசன்)
20. அமிர்தலிங்கம் (சாமிஜி)
21. “நாம் தமிழராகிடுவோம்” (வி.பொன்னம்பலம்)
22. திருக்குறள் பொழிப்புரை (தி,ச,வரதராசன்)
23. ஆங்கிலத் தமிழகராதி ( கொக்கூர் கிழார்)
24. வரதரின் பலகுறிப்பு
25. திருக்குறள் – 100
26. பாதை மாறியபோது – (கலாநிதி,காரை,செ.சுந்தரம்பிள்ளை)
27. அவன் பெரியவன் (நாகராசன்)
28. சுதந்திரமாய்ப் பாடுவேன் (திருச்செந்தூரன்)
29. இராமன் கதை ( சம்பந்தன்)
30. போக்கிரி முயலாரின் சகாசங்கள் (சொக்கன்)
31. வேப்பமரத்தடிப் பேய் (சி.சிவதாசன்)
32. திருமலைக் கொடுமைகள் (கா.யோகநாதன்)
33. ஈழத்துச் சிறுகதை வரலாறு ( கலாநிதி.க.குணராசா)

நன்றி – http://kanapraba.blogspot.com இணையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *