ஆர்வம்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2023
பார்வையிட்டோர்: 2,969
(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விக்னேஷ் கிளினிக்.
டாக்டரின் அறையில் ராஜேஷ் அமர்ந்திருந்தான். உயரமான இளைஞன் ஒருவர் உள்ளே நுழைந்தான்.

‘வணக்கம் நான் ராஜேஷ், உங்களை பார்த்து இருக்கேன் சந்திக்க இன்னிக்கு தான் வாய்ப்பு.
‘உங்களுக்கு உடம்பு சரியில்லையா?’ நின்றபடியே கேட்டான் அந்த இளைஞன்.
‘உடம்புக்கு ஒண்ணும் இல்ல. என்னோட யூட்யூப் சேனலுக்காக இந்த இரட்டைப் பிறவிகள் பத்தி ஒங்க கிட்ட பேட்டி எடுக்க வந்திருக்கேன். இரட்டையர் பத்தி நிறைய பேசுறாங்க ஒரே மாதிரி சிந்திப்பாங்க ஆசைப்படுவாங்கன்னு சொல்றாங்க அதெல்லாம் உண்மையா? சொல்லுங்க காமிரா ஆன்ல தான் இருக்கு’
‘அப்படியா? நான் டாக்டருக்கு படிக்கல. நான் டாக்டர் விக்னேஷோட ட்வின் பிரதர். அவன் வருவான் அவன்கிட்ட பேட்டி எடுங்க ‘ என்றான் அந்த இளைஞன்.
– ட்வின்ஸ் கதைகள் 10, முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
