தங்களின் சிறுகதைகள் இணையதளம் என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமல்லாமல், நானும் பங்கு கொள்ள வேண்டுமென்கிற ஆவலையும் ஏற்படுத்தியது. தமிழின் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தமிழாகவே வாழ்ந்து மறைந்த அற்புதக் கதையாசிரியர்களின் கதைகளையும் வெளியிடுவதோடு, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றி வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சியால் சிறுகதைகள் சாகாவரம் பெறும் என்பது எனது கணிப்பு!