விலையேற்றம்





சிற்றூரிலே வாழும் குடியானவர் நகரத்திற்கு வருவார். என்னிடம் எல்லாச் சாமான்களும் விலையேறி விட்டதே என்று வருத்தப்படுவார். அவரிடம் நான் சொன்னேன் –
ஆம்,ஆம், , யானை விலை குதிரை
குதிரை விலை மாடு
மாட்டின் விலை ஆடு
ஆடு விலை கோழி
கோழி விலை குஞ்சு
குஞ்சு விலை முட்டை
முட்டை விலை கத்தரிக்காய்
ஆமாம் விற்கிறது – என்ன செய்வது? என்றேன்.
அதற்கு அவர், ஐயா, நீங்கள் சொன்னது சென்ற ஆண்டு விலை.
இப்பொழுது விற்பது – யானை விலை குதிரையல்ல மாடு; மாட்டு விலை ஆடல்ல கோழி” என்று சொல்லிக் கொண்டே போனார்.
‘எப்படி வாழ்வது’ என்று வருந்தினார். இதைக் கேட்கும் நமக்கும் விருத்தமாக இருக்கிறது – என்ன செய்வது?
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |