பொன்னென்ன பூவென்ன கண்ணே…!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 194

அந்த கிராமத்தில் அனைவரும் சேர்ந்து சுதந்திர திருநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுவதாகத் தீர்மாணித்தார்கள். ஆளுக்கொரு வேலையைச் சேவையாய் ஏற்றுக் கொண்டு செய்ய, பூபதி கொடியில் வைத்து மடித்துக் கட்டவும் அலங்காரத்திற்காகவும் பூக்களைத் தயார் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
வீட்டுத் தோட்டத்திலிருந்து செவ்வந்தி, செம்பருத்தி, ரோஜாப் பூவென பல பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது வேலியைத் தாண்டி வெட்டவெளியில் ஒருபொன்னரளி மரத்தில் தங்க நிறம் ததும்ப பூத்துக் குலுங்கியிருந்தது மஞ்சள் நிற பொன்னரளி பூக்கள்.
மற்ற பூக்கள் பற்றாக் குறையாய் இருக்க, ‘பறிச்சுக்கோ!! பறிச்சுக்கோ!!’ என கூவாமல் கூவி அழைத்தது பொன்னரளி!. பறித்துக் கொண்டு போனால்.. ‘சார், இதை யூஸ் பண்ண மாடாங்க! என்று ஏற்க மறுத்தார்கள் அங்கிருந்தவர்கள்!!.’ ‘என்ன செய்வது? என்று யோசித்தான் பூபதி.. ‘எதுவும் நிறைய இருந்தால் மதிப்பிருக்காதோ?’… குறிஞ்சிக்குக் கொடுக்கப்படும் மரியாதை இந்தப் பொன்னரளிக்கு மட்டுமில்லேயே ஏன்??!! பூக்களில் இது என்ன பாவம் செய்தது?!!
‘ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! என்று! ஆனால், உண்மையில் போராடும் போர்க்களம் மற்ற பூக்களுக்கு இல்லை! மலிந்து கிடக்கும் பொன்னரளிக்கு மட்டும்தானோ?!’
தேசக் கொடியில் இது, இடம் பெறாவிட்டாலும் கொடிக் கம்பப் பாதங்களாவது இதற்குப்பாத்தியப்படட்டும்., சுதந்திர வேள்வியில் பெயர் தெரியாத எத்தனையோ காரணங்களால் புகழ் மாறுதலிக்கப்பட்ட விடுதலை வீரர்களைப் போல இதற்கும் விலாசம் இல்லை!., ஏன் இந்தப் பொன்னராளிக்கு வாசம் இல்லாததால்..!!
‘பொன்னரளிபூவே…! நீ, அரளிமரத்தில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருப்பதைவிட உனக்கு உயர்வும் மரியாதையும் தேசக் கொடிமரத்தின் பாதத்தில் பாத்தியப்படட்டும் என்று.. மாறுமொழி
சொல்லாமல், கொடிக் கம்பத்தின் காலடியில் மஞ்சள் பொன்னரளிகளைப் போட்டுவிட்டு மவுனமாய் வீடு திரும்பினான் பூபதி!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
