கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 4,156 
 
 

(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குசேலர் தன் மனைவியைக் கூப்பிட்டார். 

”சுசி…நான் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகவேண்டுமே…எதனைத் தந்துவிடப் போகிறாய்?…” 

“சுவாமி! உங்கட்குத் தெரியாமல் என்னிடம் ஏது இருப்பு?…. அடுத்த வீட்டில் கடனாகப் பெற்ற ஒரு படி அவல்தான் என்னிடம் இருக்கிறது…..” 

“அவலாஅவனுக்கு நிறையைப் பிடிக்குமேஅதுவே போதும்” 

“சுவாமி…பிள்ளைகள் பசியால் கத்துகின்றனவே…கிருஷ்ணன் தங்கள் நண்பன்தானே…. அவருக்கு நீங்கள் கையுறை கொண்டுபோக வேண்டுமா?” 

“அடி பேதாய்… கண்ணன் என் நண்பன் மட்டுமல்லஒரு பெரிய அதிகாரி என்பதனை மறந்தா போய்விட்டாய்…”

– குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்), டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்

– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.

Sembiyan_Selvan இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *