தெ.பொ.மீனாட்சிசுந்தரம்

 

தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (08 சனவரி 1901 – 27 ஆகத்து 1980) 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர்.

இறந்த ஆண்டு: ஆகஸ்ட் 27 – 1980.

பிறந்த ஊர்: சிந்தாதிரிப்பேட்டை (சென்னை).

மொழிப்புலமை :

தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார்.

சிறப்பு பெயர்கள்: பன்மொழிப்புலவர், பல்கலைச் செல்வர்.

முக்கிய குறிப்புகள்:

தெ. பொ. மீனாட்சி சுந்தரம் சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் 1901ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் பொன்னுசாமி கிராமணியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தைக்கு தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் இருந்த பற்றினால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் பெயரை தன் மகனுக்கு இட்டார்.

இவர் 1920ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ பட்டமும், 1922ல் B.L. பட்டமும் பெற்றார். பின்பு 1923 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்று வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 1923 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

அதன் பின்னர் 1924-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்பு 1925 ஆம் ஆண்டு அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்து தொண்டு புரிந்தார்.

தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் பி. ஒ.எல் , எம். ஒ. எல் பட்டங்களை 1934ஆம் ஆண்டுக்குள் பெற்றார். பின்பு 1946ஆம் ஆண்டு நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.

இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர் “அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு” இவரை பேராசிரியராக நியமித்தார். பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ. பொ. மீனாட்சிசுந்தரம் 1944ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். மீண்டும் 1958ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். மொழிப்புலமை இவரை அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1961 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியராக பொறுப்பு ஏற்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

1966 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இவர் 1966 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இவர் 1973 மட்டும் 1974 ஆம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழக சிறப்பு ஆய்வாளராக பொறுப்பேற்றார். 1974ஆம் ஆண்டு முதல் ஆழ்நிலை தியான தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார்.

இவருக்கு தருமபுர ஆதீனம் “பல்கலைச் செல்வர்” என்றும் குன்றக்குடி ஆதீனம் “பன்மொழிப் புலவர்” என்றும் விருதுகள் அளித்து சிறப்பித்தனர்.

சிறப்புகள்:

பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்ட தெ. பொ. மீனாட்சி சுந்தரம் இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்கள் ஒருவராவார்.

இவர் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, செருமன் போன்ற பழமொழிகளை அறிந்தவராய் திகழ்ந்தார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும் நூல்களையும் திறனாய்வுகளையும் எழுதி உள்ளார்.

இவர் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று தமிழின் புகழ் பரப்பிய பெருமகனார் மீனாட்சிசுந்தரம் யுனெஸ்கோவின் “கூரியர்” எனும் இதழ் குழுவின் தலைவராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மிகச் சிறந்த இலக்கிய திறன் ஆய்வாளராகவும் விளங்கியவர். மற்றும் தமிழுக்குப் பல புதிய சிந்தனைகளைத் தன் ஆய்வின் மூலம் தந்தவர்.

ஆராய்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்தம் நூல்கள் காட்டுகின்றன. திறனாய்வுத் துறையில் பல புதிய தடங்களைப் பதித்தவர்.

உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து அதை “நாடக காப்பியம்” என்றும், “குடிமக்கள் காப்பியம்” என்றும் ஒருவரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை.

“தமிழ் மொழியை உயர வேண்டுமானால் தமிழன் உயர வேண்டும்” என சங்க நாதம் இட்ட முதல் சான்றோர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் ஆவார்.

பெற்ற விருதுகள்:

தமிழக அரசு சார்பில் – கலைமாமணி விருது

இந்திய அரசின் சார்பில்(மத்திய அரசு) – பத்ம பூஷன் விருது

தருமபுர ஆதீனம் சார்பாக – பல்கலைச் செல்வர் விருது

குன்றக்குடி ஆதீனம் சார்பாக – பன்மொழிப்புலவர் விருது

நூல்கள்:

தமிழ் இலக்கிய வரலாறு (தமிழ் மொழி வரலாறு) தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலாகும்).

இதனை ஆங்கிலத்தில் இருந்து மு. இளமாறன் என்பவரால் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.