யோசனை! – ஒரு பக்க கதை

1
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 18,453 
 
 

அலுவலகத்திற்குச் செல்லும் திவ்யாவைக் கண்ட ஆதவன் முகத்தில் மின்னல் மலர்ச்சி.

அவள் அருகில் வண்டியை நிறுத்தி, ”ஒரு உதவி…? ” என்றான்.

”சொல்லுங்க ? ”

”போற வழியில உள்ள தபால் பெட்டியில இந்த கவரை சேர்க்கனும்.” நீட்டினான்.

”கண்டிப்பா…” கை நீட்டி வாங்கி நடந்தாள்.

நாலடி நடந்தவள் உறையைப் பார்த்து தன் கைபேசியை எடுத்து எண்கள் அழுத்தி காதில் வைத்து…….

”ஹலோ..!” என்றாள்.

”சொல்லுங்க திவ்யா.? ”

”இப்போ பேசுறது என் நம்பர். சேமிச்சு வைச்சுக்கோங்க.” சொன்னாள்.

”முகத்தைப் பார்த்து மனசைப் படிச்ச நமக்கு எப்படி பேசன்னு யோசனை. அதான் என் கைபேசி எண், விலாசத்தைத் தெரிவிக்க இந்த அஞ்சல் உறை யோசனை.” என்றான்.

”நன்றி !” திவ்யா மலர்ந்தாள்.

1 thought on “யோசனை! – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *