முள்முடி மன்னர்கள்





(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11

“நாங்கள் உங்களோடை சண்டை
பிடிக்கவோ வந்தனாங்கள். ஏன்
எங்களோடை தேவையில்லாமல் சண்டைப்
பிடிக்கிறியள் எண்டெல்லாம் சொல்லுவான்
இஞ்சை என்னகுறை, என்னத்துக்கு
உங்களுக்குத் தனிநாடு எண்டெல்லாம்
கேட்டவன்”
வாசலில் கார் நின்றது. ஞானரூபன் மெதுவாகப் படிஇறங்கினான். இப்போது ஆறுதலாக நடக்கக் கூடிய தாக இருந்தது. என்றாலும் சைக்கிள் ஓட முன் போல முடியவில்லை.
கையில் சிகரெட் தொங்கிக் கொண்டிருக்க. கனகசபை கடையில் சாராயம் குடித்துவிட்டு, உடலும் உள்ளமும் கிளர்ந்தெழ உலகத்து இன்பங்களை யெல்லாம் தலையில் சுமப்பது போலவும். எங்களுக்கு என்ன குறை என்று நினைத்துக் கொண்டு, ஒழுங்கையால் பவனி வருவதையும் அப்போது நினைத்துக் கொண்டான்.
எப்போது சைக்கிளில் முன் போல சுற்றிக் கொண்டு வருவது, புகையை விழுங்குவது, தண்ணி அடிப்பது என்றெல்லாம் நினைத்தான்.
பௌர்னமி தினத்தன்று ஒழுங்கையில் இளைஞனை இராணுவம் அடித்து நொருக்கிய அன்றையதினம் ஞான ரூபன் நினைவில் வந்தது. அந்தச் சம்பவம் நடந்த பின்னர் தவலிங்கம் வந்திருந்தான்.
வேதனையும், சலிப்பும் சேர்ந்து குழம்பிப் போய் இருந்த ஞானரூபனுக்கு தவலிங்கத்தின் வருகை சற்று ஆறு தலைக் கொடுத்திருந்தது.
“வழியிலை ஒண்டும் பிரச்சினை இல்லையே தம்பி,” என்று தான் அம்மா தவலிங்கத்தைப் பார்த்துக் கேட்டாள்.
ஏன் தம்பி இந்த நேரத்தில வாறாய் எண்டோ. வேறு விதமாகவோ. தவலிங்கத்திடம் கேள்விகள் கேட்க முடி யாது. கேட்டால் ஞானரூபன் கோபித்துக் கொள்வான் என்று அம்மாவுக்குத் தெரியும்.
“ஒண்டுமில்லை, என்ன நடந்தது?” என்று தவலிங் கம் கேட்டான்
“ஆமிக்காரர் வந்தவங்கள்” என்று தொடங்கிய அம்மா நடத்தவைகளைச் சொன்னாள்.
“எனக்கு அடிக்க மாட்டான்கள்” என்ற தவலிங்கம் அந்தக் கதையை பெரிதாக எடுக்கவில்லை.
அவன் நிலைமையை உணர்ந்ததால் அம்மா கதையை நிறுத்திக் கொண்டாள். தவலிங்கம் அறைக்குள் வந்தான். முகம் வெளிறி, சோர்ந்து போய்க் காணப்பட்ட ஞான ரூபனைக் கண்டான்.
“என்னடாப்பா உனக்கு நடந்தது. ஒரு மாதிரிக் கிடக்கிறாய்”
“அம்மா சொன்னதைக் கேட்டனி தானே”” என னரூபன் கேட்டான்.
”ஓமோம்””
“எப்படி இருக்கும் என்ரை மனநிலை எண்டு யோசிச்சுப்பார்” என்று ஞானரூபன் பதில் சொன்னான்.
“போடா மடையா – உதுகளை யெல்லாம் பெரிசாய் எடுத்தால் சீவிக்கலாமே”.
ஞானரூபனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. வியர் வையில் குளித்திருந்த தவலிங்கத்திடமிருந்து நன்கு பழக்க மான அந்த வாடை வீசியது.
தீப்பிடித்துக் கொண்டாற் போல ஞானரூபனின் புலன் களில் சிலிர்ப்பு ஏற்பட்டது. வெகுதுல்லியமாக அவன் தவ லிங்கத்தைப் பார்த்தான்.
“என்னடாப்பா – வடிவாய்ப் பாக்கிறாய். இண்டைக்கு சாடையாய் அடிச்சனான். உன்னை விட்டுப் போட்டு எனக்கு தண்ணியடிக்க மனமில்லை மச்சான். கனகசபை தான் விடமாட்டன் எண்டு பெரிய கரைச்சல் குடுத்திட்டான். கடைசியாய் கொஞ்சம் குடிச்சன்” என்று சொல் லிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.
தவலிங்கம் வருவதற்கு முன்னர் குடித்தால் நல்லது என்று நினைத்துக் கொண்டிருந்த ஞானரூபன் தவலிங்கம் குடித்து விட்டு வந்திருப்பதால் மேலும் அவா கொண்டான்.
“நீ அடிச்சிட்டு வாறாய். என்னைக் கொஞ்சம் தன் னும் யோசிச்சனியே. இப்ப எத்தினை நாளாச்சு. ஒரு சொட்டு தண்ணியடிச்சு,
“கோவிக்காதை மச்சான் என்ன செய்யிறது. நீ இல்லா மல் எனக்கு குடிக்க விருப்பமில்லைத்தான். எண்டாலும் டைக்கிடை தவிக்கேலாமல் குடிக்க சான்ஸ் வந்திடும்: இந்த உலகத்தில நாங்கள் சந்தோஷமாய் இருக்க இதை விட்டிட்டு வேறை நாங்கள் செய்யிறது,”
“எண்டாலும் நான் இருக்கிற நிலையை நீ கொஞ் சமும் யோசிச்சுப் பாக்கேல்லை. எவ்வளவு கவலையும் தேவதி னையும் தெரியுமே. இஞ்சை இருந்து நான் படுகிற பாடு உனக்குத் தெரியுமே. அம்மா வின்ரை அழுகிற முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்க சங்கடமாய் இருக்கு. அக்கா மாரும் அப்பிடித்தான். முந்தின மாதிரி எல்லாத்தையும் முறிச்சடிச்சுக் கதைக்கவோ தூக்கியடிக்கவோ ஏலாமல் இருக்கு”
“சரி – சரி இப்ப ஏன் அவசரப் படுகிறாய். உனக்குச் சுகம்வர எல்லாம் சரிவரும். பிறகு என்ன பிரச்சினை. வடிவாய் தண்ணியடிச்சு முந்தின மாதிரி சந்தோஷமாய் இருக்கலாம் தானே. என உற்சாகமாக தவலிங்கம் சொன்னான்.
“அது சரி – இப்ப சிகரெட் ஒழுங்காய் அடிக்கிறாய் தானே அண்டைக்கும் ஒருபைக்கற் வேண்டிக் கொண்டு வந்து தந்தனான். தானே,” எனத் தொடர்ந்து கேட்டான் அவன்.
“எட விசரா உன்ரை கதை என்ன? நான் ஒரு நா ளைக்கு ஒருபைக்கெற் சிகரெட் ஊதித்தள்ளுறனான். எனக்கு நீ தந்த சிகரெட் பைக்கற் எத்தினை நாளைக்குக் காணும். என்னவோ ஒரு சங்சடத்தால இஞ்சை
சங்கடத்தால இஞ்சை இருந்து ஒளிச்சு ஒளிச்சுக் குடிக்கிற படியால் ஒரு மாதிரிச் சமாளிச்சனான்.”
இப்போது படியிறங்கும் ஞானரூபன் அன்றைய உரை யாடலில் இருந்து சுயநிலைக்கு வந்தான்.
தவலிங்கம் மெல்லியதாக புன்னகைத்தபடி காரின் பின் கதவினைத் திறந்தபடி நின்று கொண்டிருந்தான். சேலை யினால் உடம்பை மூடிக்கொண்டு சோர்ந்து இமை சுருங்கி ருந்த அம்மா ஞானரூபனைத் தொட்டபடி நடந்தாள்.
அவளின் உடலின் வெம்மை கடுமையாய் ஞானரூப னைச் சுட்டது. அம்மாவுக்கு ரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சல்,
அது காரணமாக இன்று ஆஸ்பத்திரி போகும் ஞானரூ பனுடன் அம்மா வரவில்லை. வழக்கமாக ஆஸ்பத்திரி போ கும் போது காரில் முன்னுக்கு சாரதியின் ஆசனத்திற்குப் பக்கத்தில் தவலிங்கம் இருப்பான். பின்னால் அம்மா ஞான ரூபனுக்குத் துணை இருப்பாள்.
இன்று தவலிங்கம் மாத்திரம் தான். மனோகரியையோ, மேனகாவையோ, கூட அனுப்பவா? என்று பல முறை கேட்டும் தவலிங்கம் மாத்திரம் காணும் என ஞானரூபன் மறுத்து விட்டான். அவனது அந்தப் பதிலில் அம்மாவுக்கு பூரண திருப்தி இல்லை. என்றாலும் அவனுடன் முரண் பட முடியாது என்பதால் பேசாமல் இருந்து விட்டாள். கார் புறப்பட்டது. அம்மா இல்லாமல் தவலிங்கத்து பிரயாணத்தைத் தொடங்கியது உற்சாகத்தைக் கொடுத்தது.
“என்னடாப்பா வரேக்க கனகசபை கடைக்கும் போட்டு வருவமோ,” என்று கேட்டபடி கண்களைச் சிமிட்டினான் தவலிங்கம்.
ஞானரூபன் பதில் சொல்லாமல் சிரித்தான். கார் ஒழுங் கையை விழுங்கிக் கொண்டு விரைந்தோடி பிரதானவீ வீதியைத் தொட்டது.
தார்ச்சாலையில் நழுவியபடி சிறிது தூரம் தான் போ யிருக்கும். முன்னால் சென்ற வாகனங்கள் நிரைவகுத்திருந் தன. எதிர் புறப்பக்கமாக ஆட்கள் சைக்கிள்களை உருட்டிய படி வந்து கொண்டிருந்தார்கள்.
“என்னடாப்பா,” என்றான் ஞானரூபன்.
கார் நின்ற இடத்திற்கு எதிர்ப்பக்க வீடுகளின் மதில் களுக்குப் பின்னால் தொப்பிகள் தெரிந்தன. முரட்டுத்தன மான பார்வைகளுடன் அவர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.
“செக்கிங் நடக்குது போல,” என்றான் காரின் சாரதி.
“இண்டைக்கு ஆஸ்பத்திரிக்கு நேரத்துக்குப் போன மாதிரித்தான்.” எனச் சலித்துக் கொண்டான் தவலிங்கம்.
“என்னடாப்பா செய்யிறது.”
“என்ன செய்யிறது. ஒண்டு, இரண்டு மூண்டு எண்டு எண்ணிக் கொண்டு இரு, வேறை என்னத்தைச் செய்யப் போறாய். ஆரேன் சும்மா சுட்டுப் போட்டு ஓடிப்போயிருப் பான்கள். அதுதான் செக்கிங்போல” என்றான் தவலிங்கம்.
மதில் கரையோரமாக நின்ற இராணுவத்தினுள் ஒரு வன் தங்களைப் பார்த்துச் சிரிப்பதை ஞானரூபன் கண்டான்.
“இதென்ன புதினமாய் இருக்கு.” என்றபடி தவலிங். கத்தைத் தட்ட அவனும் சிரித்துக் கொண்டு இருப்பதை ஞானரூபன் கண்டான்
“என்னடாப்பா. இது,”
“அது மச்சான் தெரிஞ்ச ஆமிக்காரன். கடைக்கு சாமான் வாங்க வந்த இடத்தில் பழக்கம், அடிக்கடி காணுறனான் கண்டால் சிரிப்பான். ஹிந்திக் காரன் தான். கொஞ்சம் தமிழ் வரும் நல்லவன்.”
“மெய்யே,”
“ஓமடாப்பா நாங்கள் உங்களோடை சண்டை பிடிக்கவோ வந்தனாங்கள். ஏன் எங்களோடை தேவையில்லா மல் சண்டை பிடிக்கிறியள் என்டெல்லாம் சொல்லுவான் இஞ்சை என்ன குறை என்னத்துக்கு உங்களுக்குத் தனிநாடு என்டெல்லாம் கேட்டவன்” என்று சொல்லிக் கொண்டு போனான் தவலிங்கம்.
கார்ச் சராதி மெல்லத் தனக்குள் சிரிப்பதை ஞானரூபன் கண்டான். அவர் எப்போதுமே தேவையில்லாமல் கதைப் பது இல்லை. மௌனமாகவே இருப்பார். மெல்லியதாகச் சிரித்துக் கொண்டு.
தவலிங்கம் வெகு ஆனந்தமாகவே மேலும் சொல்லிக் கொண்டிருக்க அவர்கள் இருந்த காருக்கு முன்னால் இருந்த கார் நகரத் தொடங்கியது.
சிறிது தூரம் அந்த நகர்வு நடந்தது. திடீர் என இராணு வத்தினர் கும்பலாக நின்றார்கள். முன்னால் போன காரில் இருந்தவர்கள் இறங்கினார்கள். வரிசை ஒன்று தெரிந்தது.
தேர்தல் காலத்து வாக்குச் சாவடியில் நிரையாக நிற் பது போல அடையாள அட்டைகளுடன் ஆட்கள் நின்றார் கள். ஒரு புறத்தில் தடுக்கப் பட்டவர்கள். இருந்தார்கள். அவர்கள் வந்த சைக்கிள்கள் மறுபுறம் குவிந்திருந்தன. மருளும் விழிகளுடன் காணப்பட்டவர்களைப் பார்க்க ஞான் ரூபனுக்கு உடம்பும் மனமும் வலித்தன
தவலிங்கமும் காரைவிட்டு இறங்கினான்.
“டேய் நீ இறங்காதை மச்சான் நான் சொல்லு றன்” என்றான் அவன்.
“ஏன்டாப்பா பிரச்சனையை நான் இறங்கிறன்” என பதிலுக்கு ஞானரூபன் சொன்னான்.
“ஏன்டாப்பா பயப்பிடுறாய் பேசாமல் இரு” என்ற தவலிங்கம் காருடன் சேர்ந்து நடந்தான்.
கார் நின்றது.
இரண்டு பக்கங்களாலும் எட்டிப் பார்த்தவர்கள் காரினுள் ஞானரூபனைக் கண்டனர். தவலிங்கம் முந்திக் கொண்டான்.
“சுகமில்லை. கொஸ்பிட்டலுக்கு கொண்டு போறம்” என்றான்.
மீசை தடித்து இரக்கம் கிலோ என்ன விலை என்று கேட்கும் முகம் உடைய இராணுவத்தினன் ஒருவன் முறைத் தான்.
இளம் வயதினனான ஒருவன் கட்டுகளுடன் காரினுள் இருப்பது என்றால்,
“சேர் அக்சிடன் பட்ட ஆள்சேர்,” என்றான் அவனது முறைப்பினைப் புரிந்து கொண்டு.
“இறங்கு – இறங்கு” என்றான் ஞானரூபனைப் பார்த்து முறைத்துக் கொண்டு.
“சேர் நடக்கக் கஷ்டம் அக்சிடன் பட்டவர் சேர்’ என்று இழுத்துக் கொண்டு போன தவலிங்கத்தின் கன்னத்தில் படீர் என்று ஓர் அறை விழுந்தது.
ஞானரூபனுக்கு நெஞ்சு அதிர்ந்தது எப்படி காரை விட்டு இறங்கினான் என்று புரியவில்லை.
கடவுளே – கடவுளே – என்ரை அம்மாளே,” என்றும் சொன்னான். ஒரு நாளும் இல்லாத தன்மையாக கடவுளை அழைத்ததைக் கூட அவன் புதினமாக நினைக்கவில்லை.
தொடர்ச்சியான அதிர்வுகளின் மத்தியில் அந்த எண் ணம் பளிச்சென்று உதயமானது. கையில் இருந்த வைத் தியசாலையின் வைத்தியக் குறிப்புக்கள் அடங்கிய அட்டை யைக் காட்டினான்.
அதனை அவன் விரித்து மேலோட்டமாகப் பார்த் தான். வாங்கிய மாதிரியே திருப்பி ஞானரூபனிடன் கொடுத்தான்.
“என்ன செய்யிறாய்”,
“கடையில் சேல்ஸ் மன்னாக இருக்கிறன் சேர்”
“எங்கை,”
“யாழ்ப்பாணம்,”
“ஏறு,”
ஞானரூபன் தயங்கித் தயங்கி மீண்டும் காரினுள் ஏறி னான். தவலிங்கத்தின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்துவிட்டு.
“நீ எங்கை போறது” என்றான் இராணுவத்தான்.
“இவரோடை துணைக்குப் போறன் சேர்,” என்றான் தவலிங்கம் அவன் கன்னம் சிவந்திருந்தது. கண்களில் கண்ணீர்.
மீசைக்காரனின் கையொன்று விரைந்து சென்று தவலிங் கத்தின் வயிற்றுப்பக்க லோங்வீசைப் பிடித்திழுத்தது.
“அடேய், பொய் சொல்லாதே,”
”இல்லை சேர்,”
“கையைக் காட்டு”
தவலிங்கம் கைகளைக் காட்டினான். அவனது முழங் கைகளை யெல்லாம் வெகு நுட்பமாகப் பார்த்தான் இராணுவ மீசைக்காரன்.
இன்று மொருவனும் கூடவே வந்தான். மீசையில்லாத அவன் முகம் சிவந்து பளிச்சிட்டது. முகத்தில் கேலி தவழும் சிரிப்பு இருந்தது. அவனும் தவலிங்கத்தைப் பார்த்தான் பிறகு….
“பக்கா…” என்றான் அவன்.
தவலிங்கத்தின் முகம் வெளிறியது.
“அடேய் நீ காரை எடு,” என்று கார்ச் சாரதியைப் பார்த்து மீசைக்கார இராணுவத்தான் சொல்ல மற்றவன் காரின் பின் கதவை ஓங்கியடித்தான்.
தவலிங்கத்திற்கு அந்தக் கணமே நிலைமை புரிந்தது. “சேர் நான் வேலைக்குப் போக வேணும்” என்று சொல்லும் போதே அழுகை வெடித்தது,
“எடடா காரை”. என்ற குரல் கர்ண கடூரமாக வெளிப்பட காரைச் சாரதி இயக்கினான்.
ஞானரூபன் தவலிங்கத்தைப் பரிதாபமாகப் பார்த்தான் கார் மெதுவாக அசையத் தொடங்கியது.
– தொடரும்…
– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.