கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 12,450 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 38-39 | அத்தியாயம் 40-41 | அத்தியாயம் 42-44

அத்தியாயம்-40

குழந்தைச்சாமியார் வந்தவுடன் மூடியிருந்த மாடி ஹால் கதவு மட்டும். திறக்கவில்லை. ராஜுவின் அடைபட்டிருந்த துக்கத்தின் கதவுகள் திறந்து துக்கம் கண்ணீராக மாறிப் பொழிந்தது. ஒன்றுமறியாக் குழந்தை போல் அழுதான். வளர்ந்த மனிதனின் தன்னடக்கம் சிறிதுமில்லாமல் அவன் நடந்து கொண்டான்.

ராஜுயின் உறவினர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுத்தது. உடுமலைப் பேட்டைக் கல்யாணத்தில் ராஜுவையும் மோகினியையும் சேர்த்துப் பார்த்துப் புரளியாகப் பேசியவர்கள் துக்கம் விசாரிக்க வந்திருந்தனர். கீழ்த்தர நோக்குடன், மனைவியின் மரணத்தை ராஜு விரும்பி ஏற்றுக் கொள்வான் என்றே கணக்குப் போட்டிருந்தனர் அவர்கள். இது அவனுக்கு நிம்மதி அளிக்கும் நிகழ்ச்சி என்றே வழியில் பேசி வந்தனர். ராஜுவின் வீட்டை அடைந்ததும் அவன் இறந்த மனைவியோடு பித்தம் பிடித்தவன் போல் அந்த மாடி அறையில் அடைபட்டு இருப்பது புரியாத புதிராக இருந்தது. அவர்களில் ஒரு சிலர் இதுவரை ஏமாற்றுகிற நடிப்பு என்றுகூடப் பேசினர். பருத்தி விற்று, நூல் விற்று, பணத்தைச் சேர்ப்பதே மூல மந்திரமாகக் கொண்டு வாழ்ந்த அந்தச் சமூகத்தின் முதல் படியில் இருந்தவன் ராஜு.

ராஜுவின் தந்தை வெங்கடபதியின் காலத்தில் இருந்தே அவர்களுக்கு வெங்கடபதியின் குடும்பத்தின் மீது பொறாமை யுண்டு. வெங்கடபதி வாழ்வில் உயர்ந்தாலும், அவன் தம்பி அழகிரி குற்றவாளியாகி, தண்டிக்கப்பட்டு, சிறைச்சாலையிலிருந்தது அவர்களுக்குத் திருப்தி அளித்த ஒரு விஷயம். பிறகு ராஜுவின் மனைவி காலிழந்து முடமானதில் ஒருவித திருப்தி அவர்களுக்கு.

இன்று துக்கம் விசாரிக்க வந்தவர்களில் பலர், வேடிக்கை பார்க்க வந்தவர்களே. ‘விஜயா எப்படி. இறந்திருப்பாள்? இயற்கையாகவே இறந்தாளா, இல்லை ஏதாவது நடந்திருக்குமா?’ என்று நினைக்கவும் அவர்கள் சிந்தனை தயங்கவில்லை. உதட்டளவில் ‘ஐயோ பாவம்,’ என்று வருத்தம் தெரிவித்தாலும், அவர்கள் மனம் விபரீதத்தை எதிர்பார்த்தபடியே இருந்தது. இதைப் புரிந்து கொள்ளாமல் ராஜு, “சித்தப்பா, நானே அவள் வாழ்வை முறித்துவிட்டேன். நான் ஒரு பாவி சித்தப்பா!” என்று அழுதான்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட உறவினர்கள் ஒருவிதமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மோகினியையும் தவறான நோக்கத்தோடு பார்த்தனர். சாமியார், “‘ராஜு! விஜயாவின் காலம் முடிந்துவிட்டது. உனக்கு அவள் மீதுள்ள அன்பு எனக்குத் தெரியாதா? வீணாக மனசை அலட்டிக் கொள்ளாதே” என்று அவனுக்கு ஆறுதல் அளித்துவிட்டு விஜயாவின் உடலை அடக்கம் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். பந்துக்கள் ஒவ்வொருவராக மாடிக்குச் சென்று விஜயாவின் உடலைப் பார்த்துவிட்டு வந்தனர். ஓரிரண்டு பெண்கள், இறந்த விஜயாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தனர். “ஏதாவது விஷமாக இருந்தால் உடல் நீலம் பாரிச்சிப் போயிருக்குமே? முகம் சாதாரணமாகத் தூங்குகிற மாதிரித்தானே இருக்கு?” என்று பேசிக் கொண்டனர். அறையில் மோகினி நிற்பதைக் கண்டபிறகே பேச்சை நிறுத்திக் கொண்டனர்.

இந்த வார்த்தைகள் மோகினிக்கு வேதனையைக் கொடுத்தன.

குழந்தை கௌரி முதன் முறையாக மரணத்தை இப்போதுதான் புரிந்து கொண்டாள். தந்தையின் அழும் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கும் அழுகை வந்தது. தாயைப் பற்றி ஒவ்வொருவரும் அவளிடம் பேசும் போதெல்லாம் கண்ணீர் குமுறிக் கொண்டு வந்தது. இனிமேல் அம்மா பேசவே மாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டிருந்தாள். மெள்ள நெருங்கி, தாயின் திறந்த கண்களைப் பார்த்தாள். அருகில் நின்ற மோகினிக்கு, கௌரி தாயின் கண்களை உற்றுப் பார்ப்பதைப் பார்த்ததும் மனம் துடித்தது. “கௌரி, உங்கம்மா உயிர் போறப்போ படுக்கையிலேயே மயங்கிக் கிடந்த உன்னைத் பார்த்திட்டிருந்தாள். அந்தத் திறந்த கண்கள் இன்னும் உன் உருவத்தோடுதான் இருக்கணும்” என்று சொல்லி கௌரியை அணைத்துக் கொண்டாள்.

சடங்குகள் முடிந்து வீடு திரும்பும் உறவினர்களுக்கு, தெரிந்தவர் வீட்டிலிருந்து இரவு உணவு எடுத்து வந்து பரிமாற ஏற்பாடு செய்தாள் மோகினி. ராஜு எந்த வித உணர்வும் இல்லாமல் தன் மனைவியின் இறுதிப் பயணத்தில் பின் தொடர்ந்து சென்றான். குழந்தைச்சாமியே விஜயாவுக்கு இறுதிச் சடங்குகள் செய்தார்.

வீடு திரும்பியதும் ராஜு மாடி அறைக்குச் சென்றான், உணவைப் பற்றி நினைக்கவில்லை. அப்படியே தன் அறையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். வந்தவர்கள் எல்லோரும் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். கடந்த இருபது மணி நேரங்களாக ராஜு ஒன்றுமே சாப்பிடவில்லையே என்ற கவலை மோகினிக்கு எழுந்தது. அவனிடம் நெருங்கி, “சாப்பிடுங்கள்”, என்று சொல்லவும் தைரியம் வரவில்லை, சாமியாரிடம் சொல்லிப் பார்த்தாள்.

சாமியார், “மோகினி, அவனுக்கு இப்போது துக்கம்தான் உணவு. அவனாக வாய் திறந்து உணவு என்று கேட்காத வரையில் அவனைத் தொந்தரவு செய்வது தவறு,” என்றார்.

சாமியார் சொன்னது மோகினிக்குப் பொருத்தமாகப் படவில்லை. இருந்தாலும் என்ன செய்ய முடியும்? உறவினர்கள் ஒவ்வொருவராக வீடு செல்ல ஆரம்பித்தனர். சிலர் அன்றிரவு அங்கேயே தங்க நினைத்தனர். இரவு இரண்டு மணி சுமாருக்கு அந்த வீட்டில் ஆரவாரம் ஓய்ந்தது.

கௌரி மோகினியின் அறையில் படுத்துக் கொண்டாள். அவளுக்குத் தூக்கமே வரவில்லை. நினைப்பதை யெல்லாம் நடத்தியபடி ராணி போல் வாழ்ந்த விஜயா, சில விதாடிகளில் சொல்ல வேண்டியதை யெல்லாம் சொல்லிவிட்டு, தன் மடியில் இறந்தது அவளுக்கு ஆச்சரியத்தையே கொடுத்தது.

அவள் அறையை அடுத்த வெராந்தாவில் சிலர் படுத்திருந்தனர். அவர்களில் ஒருவர், “அந்த மலையாளிப் பொண்ணு தான் விஜயா சாகறப்போ பக்கத்திலே இருந்திருக்காள். ராஜு டாக்டரைக் கூட்டிட்டு வரப்பவே உயிர் இல்லையாமே?” என்றார்.

”அப்பன் வெங்கடபதி போலத் தான் மகனும், சொந்தக்காரர்களை நெருங்க விடறதில்லை. சம்பந்தமில்லாதவர்களைத் துணிஞ்சு நம்பறான். என்ன நடந்ததோ, யாரு கண்டாங்க? அந்தக் குழந்தை கௌரியைப் பாரு. அந்த மலையாளச்சியை சொந்தத் தாய் போல நினைச்சுப் பழகுகிறாள்! என்ன மந்திரம் போட்டு மயக்கி வச்சிருக்காளோ?” என்றார் இன்னெருவர்.

“உன்னையும் என்னையும் வந்து யாராவது மயக்கினாங்களா? ஹூம்! எல்லாம் சொத்து இருந்தாத்தான்!”

“ஆமாம். சொத்து இருந்தாலும் துக்கம்தான்; அது இல்லாட்டியும் துக்கமாகத்தான் இருக்குது.”

இவ்வாறு ராஜுவின் உறவினர்கள் பேசும் வார்த்தைகளைக் கேட்டதும், மோகினிக்கு ஒரு குழப்பம் வந்தது. விஜயா இறக்கும்போது தனியாக அந்த அறையில் இருந்தது, எவ்வளவு தவறான சந்தேகத்தில் அவளைச் சூழவைக்கிறது என்பதை உணர்ந்தாள். விஜயாவின் இறுதி வேண்டுகோளை நான் வாய் திறந்து சொன்னால் இன்னும் எவ்வளவு சந்தேகப்படுவார்கள்! சொத்துக்காக ஆசைப்பட்டுக் கொலையே செய்து விட்டாள் என்று சொல்ல மாட்டார்களா? நினைத்து நினைத்து மோகினி வேதனைப்பட்டாள். விஜயா கடைசியாகத் தன்னிடம் கூறிய வார்த்தைகளை எப்படி மற்றவர்களிடம் சொல்வது என்ற பயம் எழுந்தது. குழந்தைச்சாமியாரிடம் அதைச் சொன்னால் மற்ற எல்லாவற்றையும் அவரிடம் சொல்ல வேண்டும். ராஜுவும் அவளும் சூழ்நிலையை மறந்து சில விநாடிகள் ஒருவரை ஒருவர் அணைத்து நின்ற விஷயத்தை எப்படிச் சொல்வது? அதை நினைக்கவே அவளுக்கு ஒரே வெறுப்பாக இருந்தது.

பொழுது விடியும் வரையில் மோகினி தூங்கவே இல்லை.


மறுநாள் பூராவும் ராஜு மாடியிலிருந்து இறங்கவும் இல்லை. மோகினிக்கு மாடிப்பக்கம் போகவும் துணிவில்லை. சாமியார்தான் காப்பி எடுத்துச் சென்றார். சாமியார், ராஜுவுக்கு ஒரு தோழன் போல் இருந்தார். மோகினி அவரை அந்த வீட்டிலேயே இருக்கும் படி வேண்டிக் கொண்டாள்.

அந்த வேண்டுகோளைக் கேட்டதும் சாமியார் சிரித்தார்.

“ஏன் சாமி சிரிக்கிறீங்க?” என்று மோகினி கேட்டாள்.

சாமியார், “ராஜுவும் உன்னைப் போல்தான் மோகினி சொல்கிறான், ‘சித்தப்பா, என்னைத் தனியா இந்த வீட்டிலே விட்டுட்டுப் போயிடாதீங்க’ என்று சொல்கிறான்.” என்று கேலியாகச் சொன்னார்.

மோகினி அதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை.

நாட்கள் சென்றன. ராஜு மாடியிலிருந்து இறங்கவே இல்லை. கௌரியும் தன்னுடனே இருக்க வேண்டு மென்று அழைத்துக் கொண்டான். சாமியார் அந்த வீட்டில் இருந்தது மோகினிக்குப் பெரும் துணையாக இருந்தது. அவரிடம் அந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து ஏற்பட்ட நிகழ்ச்சிகளைச் சொன்னாள். பாருகுட்டி அம்மாள் வந்ததும், சாந்தினிதான் மோகினி டீச்சர் என்று ராஜுவுக்குப் புரிந்து விட்டது என்று சொன்னாள். ஆனால் ராஜுவை அவள் விரும்பியதையோ, ராஜு அவளை விரும்பியதையோ சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள்.

“விஜயாவுக்கு நீதான் மோகினி டீச்சர் என்பது தெரியுமா?” என்று சாமியார் கேட்டார்.

”கடைசி வரையில் நான் உண்மையைச் சொல்லாமலே இருந்து விட்டேன்,” என்று சொல்லிவிட்டுத் தரையை நோக்கினாள் மோகினி. ஒரு தந்தையை விட அன்பால் நெருங்கியவர் சாமியார், அவள் வாழ்க்கையை அமைத்தவரே அவர். அவரிடம் கூடச் சில விஷயங்களைச் சொல்ல யோசனையாய் இருந்தது.

சாமியார், மோகினியை ஒருவிதக் கனிவோடு பார்த்தார். “இந்த வீட்டுக்கு நான் உன்னை அழைத்து வரும் போது நீ ஒரு குழந்னத. ஆனால் இன்று நீ ஒரு ‘ஸ்திரீ’யாகி விட்டாய் மோகினி!” என்று சொன்னார். அவர் கூறியதன் அர்த்தத்தை மோகினியால் பூராவும் புரிந்து கொள்ள முடியவில்லை, விஜயாவின் மறைவுக்குப் பின் அந்த வீட்டில் அவள் நிலையையே அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. சமையல்காரன், டிரைவர் முதலியவர்கள் அவளை ஒரு எஜமானியைப் போல் நடத்தினர். குழந்தை கௌரி தாயைப் போலக் கருதினாள். ஆனால் ராஜு அவள் எதிரிலேயே வரத் தயங்கினான். அவனிடம் அவள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நேராகச் சமையல்காரனிடம் தனக்குத் தேவையானவற்றைப் பற்றிச் சொல்லி, தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டான். எந்த முகத்தோடு தொடர்ந்து அந்த வீட்டில் இருப்பது என்று மோகினிக்குப் புரியவில்ல.

ஒருநாள் சாமியார், கோயமுத்தூருக்கு மேற்கே உள்ள பேரூர் என்ற தலத்திலுள்ள கோவிலுக்குச் சென்றார். குழந்தை கௌரியையும் உடன் அழைத்துச் சென்றார். சனமயல்காரன் சமையல் அறையில் வேலையாக இருந்தான். தோட்டக்காரன், டிரைவர் எல்லோரும் வெளிப்புறத் தோட்டத்தில் இருந்தனர். மோகினி துவைத்த தன் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அப்போது பின்புறம் கதவு ஆடும் சத்தம் கேட்டுத் திரும்பினாள்.

கதவருகில் ராஜு நின்று கொண்டிருந்தான். க்ஷவரம் செய்யப்படாத தாடி, ஒளியிழந்த கண்கள், வெளுத்த முகம், கைகளிலே ஒரு நடுக்கத்தோடு நின்றான் அவன். அவவைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது மோகினிக்கு. ராஜு என்ன பேசப் போகிறான் என்ற ஆவலோடு நின்றாள்.

ராஜு, “மோகினி, எனக்கு வாழ்க்கையே நரகமாகத் தோன்றுகிறது. அன்று இரவு நான் உன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கு என்னை மன்னித்து விடு”, என்று சொல்லிவிட்டு நிறுத்தினான்.

‘யார் யாரை மன்னிப்பது? இருவருமே குற்றவாளிகள் தானே?” என்று மோகினி நினைத்தாள். ஆனால் வார்த்தைகளால் அந்தக் கருத்தைச் சொல்ல வில்லை.

”விஜயா இறக்கும்போது கடைசி நிமிடங்களில் நீ தானே அவளோடு இருந்தாய்? அவள் என்ன நினைத்தாள், என்ன சொல்ல விரும்பினாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். அவளைக் கொன்றவன் நான்தான் என்று நினைக்கிறேன். அவள் என்னிடம் ஒரு சமயம் சொல்லியிருந்தாள். ‘நீங்கள் என்று எனக்குத் துரோகம் செய்கிறீர்களோ, அன்றுதான் எனக்கு முடிவு. வியாதி என்னைக் கொல்லாது. உங்கள் அன்பை இழந்துவிட்டேன் என்ற எண்ணம்தான் என்னைக் கொல்லும்’ என்று சொன்னாள். அவள் நினைத்தபடியே ஆகிவிட்டது. என் மனச்சாட்சி என்னை ஒவ்வொரு நிமிஷமும் கொல்கிறது. நீ இந்த வீட்டில் இருக்கும் வரையில் நான் என் மனச் சாட்சியோடு அமைதியாக வாழ முடியாது என்று நினைக்கிறேன்.” என்றான்.

மோகினி ஒன்றும் பேசாமல் நின்றாள்.

“உனக்கு எவ்வளவு ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் தருகிறேன். நீ எப்படியாவது இந்த வீட்டை விட்டுப் போய்விடு. அது தான் இறந்து போனவளின் ஆன்மா சாந்தியடைய நீ செய்யக் கூடிய பெரிய உதவி,” என்று கெஞ்சிக் கேட்டான் ராஜு.

மோகினியின் உடல் குப்பென்று வியர்த்தது. விஜயாவின் இறுதி ஆசையை இவரிடம் எப்படிச் சொல்வது? ‘நான் அவருக்கு அளிக்கத் தவறிய இன்பத்தை நீ கொடு தங்கச்சி’ என்று விஜயா சொன்னாள் என்பதை இவர் நம்புவாரா? ஆயிரக்கணக்கான பணம் கொடுத்து என்னைத் திருப்தி செய்யலாம் என்று நினைக்கும் இவர், என்னை ஒரு வேசி போல் நினைக்கிறாரே! கேவலம் ரூபாய்க்காக நான் எதையும் செய்வேன் என்று நினைக்கிறாரே! இவரை என் மனம் ஏன் இன்னும் விரும்புகிறது? – என்று துடித்தாள்.

“எனக்கும் இங்கு தங்குவது நரகமாகத்தான் இருக்கிறது. குழந்தை கௌரியிடம் நான் போவது பற்றி சொல்ல வேண்டாம். இரவில் அவள் தூங்கிய பின் நான் புறப்படுகிறேன்” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் மோகினி.

அன்று பிற்பகல் சாமியாரிடம் மட்டும் அவள் அந்த வீட்டை விட்டு வெளியேற விரும்புவதாகச் சொன்னாள். சாமியார் மோகினியின் மனத்தை மாற்றப் பார்த்தார். மோகினி பிடிவாதமாகப் போகப் போகிறேன் என்று சொன்னது சாமியாருக்கு ஆச்சரியத்தையே கொடுத்தது.

மோகினியின் பயணத்தைக் கௌரியிடம் யாரும் சொல்லவில்லை. அது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
அன்று மாலை, கௌரி, “என்ன டீச்சர், நீங்க ஊருக்குப் போகப் போறீங்களா? ராத்திரி நீங்க கார்லே ஸ்டேஷனுக்குப் போக வேண்டுமென்று அப்பா டிரைவரிடம் சொன்னாரே?” என்று கேட்டாள்.

மோகினி, “நான் எங்கும் போகப் போவதில்லை. இங்கேதான் இருக்கப் போகிறேன். நீ நிம்மதியாக தூங்கு,” என்றாள்.

கௌரி குழப்பத்தோடு காணப்பட்டாள். குழந்தையின் கேள்வியும் அதற்கு மோகினி கொடுத்த பதிலையும் கேட்டுக் கொண்டிருந்த சாமியார், மோகினி ஹாலுக்கு வந்ததும், “மோகினி! நல்லா பொய் சொல்லக் கற்றுக் கொண்டு விட்டாயே?” என்று இடக்காகக் கேட்டார்.

மோகினி புன்முறுவலோடு சாமியாரைப் பார்த்து, “ஒரு பொய்யின் துணை கொண்டு தானே இந்த விட்டுக்கு வந்தேன்? ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு வீட்டை விட்டுப் போவது. தவறா?” என்று பதிலுக்குக் கேட்டாள்.

சாமியார் சிரித்துவிட்டார். “கௌரி உன்னைப் பிரித்து இருக்க மாட்டாளே என்பதற்காகப் பொய் கூறி உன்னை இங்கு கொண்டுவந்தேன். நான் செய்தது எவ்வனவு சரி என்பது அந்தக் குழந்தை கிணற்றிலே லிழுந்தும் இன்று உயிரோடு இருக்கிறதிலேருந்து தெரியுது. என் பொய் ஒரு உயிரையே காப்பாத்தியிருக்கு, இல்லையா?” என்று கேட்டார்.

மோகினியால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. உணவருந்தியதும் தன் அறைக்கு வந்து படுத்துக் கொண்டாள்.

கௌரி, மறுபடியும் அவளிடம் வந்து, ”டீச்சர், நீங்க சொல்லாமல் போயிட மாட்டீங்களே?” என்று கேட்டாள்.

மோகினி உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு “கவலைப்படாதே. தூங்கு கௌரி,” என்று சொல்லிக் கௌரியின் அருகில் படுத்துக் கொண்டாள். குழந்தை தன் கையால் மோகினியை இறுக அணைத்துக் கொண்டு தூங்கினாள். தூக்கத்திலும் கௌரியின் பிடி தளரவில்லை.

இரவு பதினொரு மணிக்கு அறையின் கதவு திறந்தது. ராஜு நின்று கொண்டிருந்தான். மெல்லிய குரலில், ”ரயிலுக்கு நேரமாச்சு, மோகினி,” என்றான்.

மோகினி, தூங்கும் கௌரியைப் பார்த்தாள். மெள்ள அவள் கையை விலக்கித் தலையணையின் மீது வைத்தாள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

ராஜு, “என்ன மோகினி?” என்றான்.

மோகினி, ராஜுவின் முகத்தைப் பாராமலே பின்வரும் வார்த்தைகளைக் கூறினாள்:

“ஒருத்தி அவள் பெறாத குழந்தைக்குத் தாயாகவே கூடாது. கூடவே கூடாது. ஏன் என்றால் அது உரிமையில்லாத ஒரு தாய்மை, எந்த நிமிஷம் வேண்டுமானாலும் அவள் தாய்மை பிரிக்கப்படலாம்; இல்லையா?” என்று நாக்குழறச் சொல்லிலிட்டு வாயிலை நோக்கி நகர்ந்தாள். அங்கு சாமியார் நின்று கொண்டு இருந்தார். சாமியாரின் காலைத் தொட்டு வணங்கினாள்.

ராஜு மோகினியிடம் 5000 ரூபாயைக் கொடுத்து, “விஜயாவின் விருப்பத்துக்காக இதை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்,” என்றான்.

“வேண்டாம். தயவு செய்து பணத்தை மட்டும் கொடுக்காதீர்கள், என்னைப் பணத்தால் அவமதிக்க வேண்டாம்,” என்று சொல்லிக் காரில் ஏறிக் கொண்டாள்.

அத்தியாயம்-41

கார் ஸ்டேஷனை நோக்கிச் செல்லும்போது, காற்று ஜில்லென்று வீசியது.

பொய்ப் பெயரில் பொய் நாடகம் ஆடவேண்டி வந்த சுமை, ராஜுவின் வீட்டுக்குக் குழந்தைச்சாமியோடு வந்த போது இருந்தது மோகினிக்கு. ஓவ்வொரு வினாடியும் ஒவ்வொரு சோதனையாகக் கழிந்த அந்த வேதனை நாடகம் முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தாள் அவள்.

அந்த நாடகத்தின் கடைசிக் காட்சி ராஜு அவளுக்குப் பணத்தை நீட்டியதுதான். அவள் மனத்தில் அவள் ராஜுவை விரும்பியது தவறாகவோ, பாவமாகவோ படவில்லை. மலர், மணம் தருவது அதன் குற்றமாகுமா? அது போல் அவள் காதலும் அவளுக்குப் பெரிய தவறாகப் படவில்லை. குழந்தை கௌரியிடம் அவள் பாசம் வைத்தது போல், அவள் ராஜுவிடம் இன்னொரு விதமான பாசம் வைத்திருந்தாள். குழந்தைச்சாமியிடம் ஒரு விதமான அன்பு, நாராயணி அம்மாள், சங்கரன் குட்டி இருவரிடமும் ஒருவிதமான அன்பு இருந்தது.

நிரந்தரமான வெறுப்பு என்ற உணர்ச்சிக்குத் தன் மனத்தில் இடமே ஒதுக்காமல் வளர்ந்து வந்த மோகினிக்கு, அன்பு செலுத்துவது குற்றமாகத் தோன்றலில்லை. ஆனால் அவள் ராஜுவிடம் செலுத்திய அன்பு மற்றவர்களிடம் செலுத்திய அன்பைப் போல் அல்ல என்பது அவளுக்குத் தெரியும், ராஜுவை நினைக்கும் போது அவள் உடலில் ஏற்பட்ட கிளர்ச்சி, பூரிப்பு அவளுக்கு வெட்கத்தையே கொடுத்தது. அவன் திருமணம் ஆனவன், அவன் அன்புக்குப் பாத்திரமான ஒரு மனைவி இருக்கிறாள் என்பதை யெல்லாம் அவள் உணராமல் இல்லை. அந்த மனைவிக்குத் துரோகம் இழைப்பது கருணையில்லாத செயல் என்று உணர்ந்தாள், ஆனால் அது பாபம் என்று நினைக்கவில்லை.

விஜயாவுக்குத் துரோகம் இழைப்பது சமூகச் சட்டப்படி குற்றம். ஆனால் இயற்கைச் சட்டம் சமூகத்தின் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவதில்லையே! இயற்கையின் வேகம் தானே அன்று மழையும் பேய்க் காற்றும் வீசும் போது ராஜுவையும் மோகினியையும் ஒருவரை ஒருவர் மறந்து அணைத்து நிற்கும்படி செய்தது!

விஜயாவின் மரணத்துக்குத் தள்ளைக் காரணமாக்கிக் கொண்டு வருந்தும் ராஜுவின் மனநிலையை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ராஜு வின் மனத்தில் எழுந்த குற்ற உணர்ச்சிகளை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மோகினிக்குப் புண்ணியம் என்று ஒன்று இருப்பதாக உணர்வு இருந்தால் அல்லவா பாவம் என்று ஒன்று இருப்பதாக அவள் எண்ண முடியும்!

குழந்தை கௌரியின் உயிரைக் காப்பாற்றியதற்காக விஜயா அவளைப் பாராட்டியதும் அவளுக்கு மிகையாகவே தோன்றியது. அவள் எந்த விதமான வீரச் செயல் புரிந்ததாகவும் நினைக்கவில்லை. அவள் உயிருக்கும் மேலாக விரும்பிய குழந்தையைக் காப்பாற்ற அவள் கிணற்றில் குதித்தது அவளுக்கு இயற்கையாகவே தோன்றியது. மோகினியைப் பொறுத்தவரையில் அன்பு ஒன்றுதான் உலகத்தில் மனிதன் பாராட்ட வேண்டிய பண்பாகத் தோன்றியது. அன்பில்லாத ஜீவன்தான் பாவி என்று நினைத்தாள்.

குழந்தைச்சாமி அன்பின் உருவமாகத் தானே அவளுடைய குழந்தைப் பருவத்தில் தோன்றினார்! அவர் கருணையால் தானே அவள் உருவானாள்!

காரில் புறப்படும் போது ராஜு தன்னிடம் பணத்தை நீட்டியது அவளை அவமானப்படுத்தும் அன்பில்லாத செயலாகத் தோன்றியது. ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடித்துச் சுடு சொற்கள் சொல்லிய விஜயா கூட வாழ்வின் கடைசி வினாடிகளில் அவளிடம் அன்பைக் காட்டி விட்டுத்தான் இறந்தாள். அவள் வீட்டில் நடமாடும் லட்சமியாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். ஆனால், ராஜுவோ அவளிடம் பணத்தை நீட்டி அவள் மனதை நோகச் செய்துவிட்டான்.

இவ்வாறு குழம்பிய சிந்தனையோடு, ரயில்லே ஸ்டேஷனை வந்தடைந்தாள். மலையாளம் செல்லும் ரயிலில் ஏறினாள்.

அதிகாலையில் ரயில் ஷோரனூர் வந்து சேர்ந்தது. ஷோரனூர் ஸ்டேஷனில் இறங்கியதும் அவளை ஒரு சோர்வு பிடித்துக் கொண்டது. மெள்ளத் தள்ளாடியடி மலைச் சரிவில் உள்ள நாராயணி அம்மாள் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

இன்னும் இருள் நீங்கவில்லை. பட்சிகளின் ஓலம் எங்கும் நிறைந்திருந்தது. மழை பிசுபிசுவென்று தூற ஆரம்பித்தது. பெட்டியைத் தூக்கிக் கொண்டு வேகமாக நடக்கவும் முடியவில்லை.

விட்டை நெருங்கியதும் நிசப்தமாக இருந்தது. வீட்டின் வெளிக் கதவு திறந்து கிடந்தது. திடீரென்று மோகினிக்கு அவள் ஞாபகக் குவியலின் அடியிலிருந்து ஒரு ஞாபகம் எழுந்தது. ஞாபகம் அவ்வளவு தெளிவாக இல்லை.

அவன் சிறு குழந்தையாய் அந்த வீட்டுக் கதவைத் தட்டுவதும் கதவு திறக்கப்படுவதும், நாராயணி அம்மாள் அவளை வீட்டுக்குள் அழைத்துக் கொள்வதும் தான் அந்கக் காட்சி. அந்தக் காட்சி ஏன் இப்போது மோகினியின் நினைவுக்கு வந்தது என்று மோகினியால் சொல்ல முடியவில்லை. வீட்டின் உட்புறம் அடியெடுத்து வைத்தாள்.

அவள் கால்கள் நடுங்கின. ஓடிப் போய் நாராயணி அம்மாளின் மடியில் தலை வைத்து, கோயம்புத்தூரில் நடந்தவற்றையெல்லாம் சொல்லி அழ வேண்டும் போல் தோன்றியது. ஒன்றையும் ஒளிக்காமல் தன்னை வளர்த்த தாயாகிய நாராயணியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். பெட்டியை வைத்துவிட்டுச் சமையல் அறைப் பக்கம் திரும்பினாள். அடுப்பு அணைந்து கிடந்தது. சங்கரன்குட்டியின் மடியில் நாராயணி அம்மாள் படுத்திருந்தாள். சங்கரன்குட்டி, “கஷாயம் சாப்பிடம்மா. கஷாயம் சாப்பிடம்மா.” என்று வற்புறுத்திக் கொண்டிருந்தான்,

“குட்டி, அம்மாவுக்கு என்னடா உடம்பு?” என்று கேட்டபடி குட்டியை நெருங்கினாள் மோகினி.

குட்டி, நிமிர்ந்து பார்த்து விட்டு, “மோகினி, நீயா? வந்துட்டியா? பாரு மோகினி. அம்மா மருந்து சாப்பிடாமல் அடம் பிடிக்கிறாங்க. நீ சொன்னாத்தான் அம்மா கேப்பாங்க. நீயே மருந்து கொடு,” என்று சொல்லி, சின்னக் கண்ணாடி அவுன்ஸ் கிளாஸில் இருந்த மருந்தை மோகினியிடம் நீட்டினான்.

மோகினி அவுன்ஸ் கிளாஸை வாங்கிக் கொண்டு நாராயணி அம்மான் நெருங்கினள், நெருங்கியதும், அதிர்ச்சி அடைந்தாள், நாராயணி அம்மாளின் கண்கள் திறந்த படி இருந்தன. அவள் உடல் கட்டை போல் கிடந்தது. கையைத் தொட்டுக் பார்த்தாள். பனிக்கட்டி போல இருந்தது. மோகினி, “அம்மா… அம்மா!” என்று கூறியபடி அழ ஆரம்பித்தாள்.

நாராயணி அம்மாள் இரவே இறந்திருக்க வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாமல் சங்கரன் குட்டி தன் தாய்க்கு மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறன்.

“என்ன மோகினி, ஏன் அழறே?” என்று குட்டி கேட்டான்.

“அம்மெ மரிச்சுப் போயி! போய் மஹேசன் நம்பூதிரியைக் கூட்டிட்டு வா குட்டி….” என்று சொல்லி அனுப்பினாள் மோகினி.

குட்டி வெளியே ஓடினான்.

“இப்போதுதான் ஒரு சாவு வீட்டிலிருந்து வருகிறேன். இங்கும் ஒரு சாவா?” என்று மோகினி நினைத்து மனம் புழுங்கினாள். நாராயணி அம்மாளின் உடல் உலர்ந்து சருருபோல் கிடந்தது. வெகு நாட்களாக வியாதியால் வாடிய உடம்பு போல் தெரிந்தது. உழைத்து உழைத்து ஒரு நாள் இன்பம் கூட இல்லாமல் மடிந்தவள் நாராயணி என்று நினைத்த போது, மோகினிக்கு வாழ்வே அர்த்தமற்ற ஒரு பயங்கரகி குழப்பமாகத் தோன்றியது. எவ்வளவோ விஷயங்களைப் பேச வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்த மோகினிக்கு நாராயணியின் மரணம் அதிர்ச்சியைக் கொடுத்தது.

எங்கும் சாமான்கள் சீரில்லாமல் கிடந்தன. நாராயணி அம்மாள் லிருந்து அனுப்பிய பணம், செல் வழிக்கப் படாமல் அப்படியே ஒரு சுவரில் சுற்றி வைக்கப் பட்டிருந்தது. அதன் மீது ‘மோகினி’ என்று எழுதப் பட்டிருந்தது.

சனமயல் அறையில் படுத்திருப்ப திலிருந்தே ஒரு விஷயம் மோகினிக்குத் தெளிவாயிற்று. சில நாட்களாகவே நாராயணி அம்மாள் எழுந்து நடமாட முடியாமல் போயிருக்க வேண்டும். உட்கார்ந்த நிலையிலே கஞ்சி வைத்துக் குடித்துவிட்டுச் சமையல் அறையிலேயே படுத்துக் கிடந்திருக்கிறாள் என்பது தெளிவாயிற்று. கோயம்புத்தூரில் உள்ள மோகினிக்கு ஏன் ஒரு கடிதம் கூட எழுதவில்லை என்று புரியவில்லை.

அடுத்த அறைக்கு வந்து பார்த்தாள். அங்கு மரப் பெட்டியைத் திறந்து பார்த்தாள், அதில் பணம் கற்றை கற்றையாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் மோகினியின் சம்பளத்திலிருந்து அனுப்பிய பணம், செலவழிக்கப் படாமல் அப்படியே ஒரு கவரில் சுற்றி வைக்கப் பட்டிருந்தது.

மஹேசன் நம்பூதிரி வந்ததும் அவர் விக்கி அழுதபடி துக்கம் விசாரிக்க ஆரம்பித்தார். குட்டி ஒரு பக்கம் உட்கார்ந்து அழத் தொடங்கினான். நம்பூதிரி கூறியதிலிருந்து நாராயணி ஒரு மாதமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறாள் என்பது தெரிந்தது.

“மோகினி நல்ல இடத்தில் வேலையாயிருக்கிறாள். அவள் அங்கேயே நிம்மதியாய் இருக்கட்டும். அவளுக்கு என் உடல் நிலை பற்றித் தெரியக்கூடாது என்று நம்பூதிரியிடம் சொல்லியிருக்கிறாள்” என்ற விஷயமும் தெரிந்தது. அதோடு குட்டி ஓரிரண்டு மாதம் குழந்தைச்சாமியோடு இருந்தவன் அந்த வாழ்க்கை பிடிக்காமல் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான் என்பதும் தெரிந்தது. குழந்தைச்சாமியும், அவளிடம் சங்கரன் குட்டியைப் பற்றிக் குறை குறைவாகச் சொல்லவில்லை. என்ன காரணத்துக்காகவோ அவர் அவன் பேச்சையே எடுக்கவில்லை. நல்லவேளை, தாயின் மரணத்தின்போது குட்டியாவது அருகில் இருந்திருக்கிறான் என்பது மோகினிக்குத் திருப்தி அளித்தது. நாராயணி அம்மாள் தன் கல்யாணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தை நாராயணி அம்மாளின் ஈமக் கடன்களுக்காகவே செல்வழித்தாள் மோகினி.

அந்தச் சிறிய கிராமத்தார் நாராயணி அம்மாளின் சடங்குகள் இன்ளைவு சிறப்பாக நடக்குமென்று எதிர்பார்க்க வில்லை, கோதானம், பாத்திர தானம், பூசானம் போன்ற’எல்லாவித தானங்களும் செய்தான், அந்த வீட்டுக்கு அருகில் இருந்த சிறு தோட்டத்தையும் தானமாகக் கொடுத்துவிட்டாள்.

நம்பூதிரி, “குட்டியின் எதிர்காலத்துக்கு என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.

“குட்டி உயிருள்ளவரை அவன் பசியால் வாடாமல் கவனிக்க வேண்டியது என் பொறுப்பு. நான் சம்பாதித்து அவனைக் காப்பாற்றுவேள், ” என்று சொன்னாள் மோகினி.

எர்ணாகுளத்தின் ஒரு பள்ளியில் வேலை இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு செல்வது என்று முடிவு செய்தாள் மோகினி – வீட்டை மஹேசன் நம்பூதிரியிடம் விட்டு விட்டு.

குட்டியுடன் எர்ணாகுளத்துக்கு ரயிலில் புறப்பட்டாள். ரயில் திருச்சூர் ஸ்டேஷனை அடைந்ததும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் அவள்.

தூரத்தில் ஸ்டேஷன் வெளிப்புறம் ராஜுவின் பெரிய கார் நிற்பதைக் கவனித்தாள். அடுத்த வினாடி ராஜு ஸ்டேஷனில் நுழைவதையும் கவனித்தாள். அவனுடன் குழந்தைச்சாமியும் இருந்தார். ராஜுவின் முகம் களையிழந்து கவலையோடு இருந்தது. அவன் முகத்தைப் பார்க்கவும் அவளுக்கு வேதனையாக இருந்தது. அவர்கள் கண்ணில் படவேண்டாமென்று ஜன்னலோரத்தில் அமர்ந்திருத்தவள் எழுந்து வேறு பக்கம் சென்றாள்.

ராஜுவும், குழந்தைச்சாமியும் வண்டியின் உட்புறம் பார்த்தபடி அவள் இருந்த பெட்டியைத் தாண்டிச் செல்வதைப் பார்த்தாள். சில விநாடிகளில் அவர்கள் திரும்பவும் அந்தப் பெட்டியைப் பார்த்தபடி எதிர்த் திசையில் சென்றனர். அவர்கள் யாரையோ ரயில் வண்டியில் தேடுவது போல் தெரிந்தது.

அவர்கள் அவளைத்தாள் தேடுகிறர்கள் என்பது அவளுக்குப் புரியவில்லை. முந்திரிப் பருப்பு விற்பவன் ஒருவன் தட்டோடு செல்வதைப் பார்த்த சங்கரன் குட்டி, “மோகினி, முந்திரிப் பருப்பு வாங்கட்டா?” என்று பயத்தோடு கேட்டான்.

மோகினியால் அவன் வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. அவனிடம் எட்டணா கொடுத்தாள். அவன் வண்டியிலிருந்து இறங்கி முந்திரிப் பருப்பு விற்பவனைத் துரத்திக்கொண்டு சென்றான். குட்டி முந்திரிப் பருப்பு வாங்கித் கொண்டு திரும்புவதற்குள், ஸ்டேஷன் மணி அடித்து, கார்டு விசில் ஊதினார். குட்டி ரயில் ஏற மறந்துவிட்டானோ என்ற கவலையோடு மோகினி கதவருகே ஓடினாள். அதே சமயத்தில் வண்டியினுள் சங்கரன் குட்டி முந்திரிப் பருப்பைத் தின்று கொண்டே நுழைந்தான். அவன் பின்னால் குழந்தைச்சாமியும் ராஜுவும் மூன்றுவது வகுப்பு வண்டியில் நுழைந்தனர், ராஜுவைப் பார்த்ததும் மோகினிக்கு ஒரே குழப்பமாகப் போய் விட்டது. வண்டியும் நகர ஆரம்பித்தது.

மோகினி ஒன்றும் பேசாமல் தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

குழந்தைச்சாமி, “என்ன மோகினி, உனக்கு அடையாளம் தெரியல்லியா? பார்த்தும் பேசாமல் இருக்கிறாயே! என் தாய்க்கு என் மேலே கோபமா?” என்று கேட்டார்.

ராஜுவின் பார்வை அவள் முகத்தின் மீது இருந்தது. அவனை நிமிர்ந்து பார்க்க மோகினிக்குக் கஷ்டமாக இருந்தது. தலை குனிந்தபடி, “சாமி, அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க. உங்களை நான் எதிர்பார்க்கல்லே. அதான் பேசல்லே,” என்று சொல்லி மழுப்பினாள்.

“நாராயணி அம்மா இறந்த செய்தி ஊருக்கு வந்தப்புறம்தான் தெரிஞ்சது. அப்போதான் நீயும் எர்ணுகுளத்துக்குப் புறப்பட்டு ரயில்லே போனதாக மஹேசன் சொன்னாரு. உடனே ரயிலைத் துரத்திட்டுக் கார்லே வந்தோம். திருச்சூர்லே உன்னைப் பார்த்திடலாம்ணு நினைச்சு, ஒவ்வொரு வண்டியாய்த் தேடினோம். ஆனால் உன்னைக் காண முடியல்லே,” என்றார் குழந்தைச்சாமி.

– தொடரும்…

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *