கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: May 4, 2025
பார்வையிட்டோர்: 12,753 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 36-37 | அத்தியாயம் 38-39 | அத்தியாயம் 40-41

அத்தியாயம்-38

குழந்தையாக இருந்த போது இதே மாதிரி மின்ளல் மழையில் அவள் தாயோடு ஷோரனூரிலிருந்து பஸ்ளில் வந்தது அரைகுறையாக ஞாபகத்துக்கு வந்ததும் மோகினியின் நெஞ்சு படபடத்தது. அந்த மின்னலும் மழையும் மோகினியின் வாழ்வில் ஒரு மாறுதலைக் கொடுத்தது. இந்த மின்னலும் மழையும் என்ன செய்யுமோ என்ற எண்ண அலை அவள் மனத்தைத் தாக்கியது. மடேர் என்று ஆலமரம் முறிவது போன்ற காதுகளை ஓர் இடி ஒலித்தது. தன் காதுகளை உடனே கைகளால் பொத்திக்கொண்டாள் மோகினி. அவள் பெட்டி திறந்து கிடந்தது. அதன் மேல் புறத்தில் முதல் நாள் விஜயா கொடுத்த ரோஸ் கலர் சரிகைப் புடவையும், பிளவுசும் இருந்தன. அந்தப் புடவை, ‘என்னை அணிந்துகொள்’ – என்று அழைப்பது போல் தோன்றியது. விஜயாவும் தூங்கிவிட்டாள். அவரோ குன்னூரில் இருக்கிறார். ‘நாம் இந்தப் புடவையை ஒரு முறை அணிந்து அழகு பார்த்தால் என்ன?’ என்று நினைத்தாள் மோகினி. உடனே புடவையை எடுத்து அணிந்து, பிளவுசையும் அணிந்துகொண்டு ஹாலுக்குள் வந்தாள். அங்குள்ள ஆளுயர நிலைக் கண்ணாடி முன் நின்று தன் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆடும் விளக்கின் மங்கிய ஒளியில் சந்திர கிரணங்கள்ள நூலாக வைத்து நெய்த சேலை போல் தோன்றியது அது.

தன் அழகில் லயித்து நின்ற மோகினி காற்றின் வேகத்தில் வெளிக் கதவு திறந்து கொண்டதைக் கவனிக்கவில்லை. ஈரம் படிந்த ஆடையும், கலைந்த தலையும், சிவந்த கண்களுமாக வெறியின் உருவமாக நுழைந்த ராஜுவையும் கவனிக்கவில்லை.

கண்ணாடியில் தன் முகத்துக்குப் பின்புறம் ராஜுலின் உருவம் தெரிவதைப் பார்த்ததும் மோகினி திடுக்கிட்டாள்.

‘குன்னூரில் இருக்க வேண்டியவர் கொட்டும் மழையில் எப்படி வந்தார்? ஏன் வந்தார்? இல்லை, நாம் பார்ப்பது ஒரு நிழல் காட்சியா?’ என்று திகைத்துத் திரும்பினாள்.

காற்றுக் காரணமாக ஹாலில் தொங்க விடப்பட்டிருந்த விளக்கு அலைக்கழிக்கப்பட்டு அங்குமிங்குமாய் ஒளியையும் நிழலையும் மாறி மாறிப் பொருள்களின் மீது வீசிப் பொருள்களில்” உருவங்களையே பயங்கரத் தோற்றமாக்கிக் காட்டியது. படிக்கட்டின் நிழல் மோகினியின் முகத்தின் மீது விழுந்தபடி இருந்ததாலும், அவள் உடல் மீது வீசிய ஹால் விளக்கின் ஒளி ஊாசவாடியபடி இருந்தமையாலும், மோகினியின் உருவம் சட்டென்று அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய உருவமாகவும் இல்லை.

குன்னூர் ஐரோப்பியர் மாளிகையில் அதிசயமாக ராஜு அருந்திய மதுவின் மயக்கம், அதோடு சேர்ந்த ஆசைக் குழப்பம் – இரண்டும் அவனது நிலையை ஓர் அசாதாரண மனிதனாக்கியது. மின்னல், மழை, பேய்க்காற்று மூன்றையும் சட்டை செய்யாது ஓர் அரக்கன் போல் வீட்டை வந்தடைந்தவன் பார்வையில், முதலில் பட்டது அவன் மனைவி பல வருடங்களுக்கு முன் தேனிலவின்போது அணிந்த அந்த அழகான பட்டுச்சேலை தான். விஜயாவே படிக்கட்டுகளில் இறங்கி, பழைய இளமையோடு நிற்பது போல் தெரிந்தது. அவன் எதை அடிக்கடி விரும்பிக் கனவு கண்டு வந்தானோ, அதே காட்சியைப் பார்த்தான். “விஜயா” என்ற வார்த்தைதான் அவன் உதடுகளில் ஒளித்தது.

ஓடிப்போய், “விஜயா! விஜயா” என்று கூறியபடி மோகினியை அணைத்துக் கொண்டான்.

இருவர் உடலும் ஒன்றோடு ஒன்று உறைந்தபடி நிற்கும் போதுதான் ராஜுவிற்கு அவன் மோகினியை அணைத்து நிற்கிறேம் என்று புரிந்தது. அவன் உடலும் மனமும் அடைந்த இன்ப போதை நிலையில், மோகினியைத் தொடுவது சரியில்லை என்ற நேர்மை உணர்ச்சி வலிமையில்லாது ஆர்க்கெஸ்ட்ராவில் பின்னணியில் ஒளிக்கும் வயலின் போல் மென்மையாக ஒலித்தது. அவன் மனத்தின் முன்னணியில் பயங்கரமாக ஓலமிடும் அரக்க உணர்ச்சிகளின் கூச்சலில் மற்றது கேட்கவில்லை.

மோகினியோ புரியாத ஓர் உலகத்தில் கால்கள் பாவாமல் மிதந்தபடி இருந்தாள். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. கண்கள் மூடி உதடுகள் திறந்தன. இடம் காலம் என்ற இரண்டு பரிமாணங்களும் அவள் அனுபவத்திலிருந்து மறைந்தன. ஒரே இருள். அதன் நடுவே கண் கூசும் ஒளி. அது ஒளியா இருளா? அவளுக்குப் புரியவில்லை. பிரம்மத்தைத் தொட்ட நிலையில் சிந்தனை செத்து நிற்குமாம் சித்தர்களுக்கு. மோகினிக்கும் சிந்தனை சாய்ந்து உணர்வுகள் இன்பத்தில் ஓய்ந்து எல்லாம் ஓர் ஆனந்த சூனியத்தில் ஓடுங்கி நின்றன. ஆறு கடலில் கலப்பது போல், ஐயம் தெளிவில் மறைவது போல், மென்மையும் புனிதமும் நிறைந்த பெண்மை வலிமை நிறைந்த அவன் ஆண்மையில் கலந்தது.

வெளியே வீசிய மின்னலின் ஒலியும் புயலின் வேகமும் சேர்த்து ஒரு கலவைப் பொருளாகி, அந்தக் கலவை அவர்கள் இருவர் உடலிலும் பாய்ந்தது போல் பிரியாமல் நின்றனர். பாபமும், புண்ணியமும் இரண்டும் உணராத ஒரு நிலை சமூகம் வகுத்த சட்டங்களைப் புரிந்து கொள்ளாது. இயற்கை தன்னிச்சை யாகப் பஞ்ச பூதங்களில், புல் பூண்டுகளில் மிருகத்தில் இயங்குவது போல் அந்த இரண்டு கண்ணற்ற மனித
ஜீவன்களிடமும் இயங்கியது. ஒரு வினாடிக்கு, ஒரே ஒரு வினாடிக்கு தான்.

“டமார்!” என்று ஓர் இடி அந்த வீட்டின் கூரைமீதே விழுந்தது போல் பயங்கரமாக ஒலித்தது. அடுத்து கணமே அந்த வீட்டில் மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டு வீடு பூராவும் இருள் சூழ்ந்தது. ஹாலில் ஊசலாடிக் கொண்டிருந்த அந்த ஒரு விளக்கும் அணைந்து விடவே ராஜுவும் மோகினியும் இருளில் நின்றனர். ஒளி இருந்த போது உணர்ச்சியால் பார்வையிழந்து குருடர்களாய் நின்ற ராஜுவுக்கும். மோகினிக்கும் கும்மிருட்டில் உணர்ச்சி தணிந்து பார்வை திரும்பியது.

“என்னை விடுங்கள்,” என்று பதறியபடி மோகினி விலகிக் கொண்டாள். என்ன தவறு செய்துவிட்டோம் என்று துடித்தாள்.

‘கலந்தால்தான் தவறா? அணைத்தாலும் அது துரோகம்தானே?’ என்று வேதனைப்பட்டான் ராஜு.

அதே சமயத்தில் மாடியிலிருந்து விஜயாவின் அலறல் கேட்டது. ”சாந்தினி, சாந்தினி!” என்று தொடர்ந்து அழைத்தாள்

ராஜு, “மோகினி, மெழுகுவர்த்தியை எடுத்து வா சீக்கிரம்”, என்று எஜமானனாகிக் கட்டளையிட்டான்.

பதில் பேசாமல் மோகினி மெழுகுவர்த்தியை ஏற்றிவர ஓடினாள். மாடியில் ஜன்னல், காற்றின் வேகத்தால் திறந்து கொள்ள அதே சமயத்தில் பயங்கரமான இடி தன் தலைமேல் விழுவதைப் போல் ஒலிக்கவும் விஜயா விழித்துக் கொண்டாள். குழத்தை கௌரியும் பதறியபடி எழுந்து படுக்கையிலிருந்து மூர்ச்சையடைந்தாள். மயங்கிக் கிடக்கும் குழந்தையை எடுக்கத் தன்னை மறந்து எழுந்த விஜயா வழியிலிருந்த ஸ்டூல் தடுக்கி விழுந்தாள். உடனே அவளுக்கு மார்பு வலி எடுக்க, “சாந்தினி!” என்று கூவி உதவிக்கு அழைத்தாள்.

அந்தக் குரல்தான் ராஜுவின் காதில் விழுந்தது. மோகினி மெழுகுவர்த்தியை எடுத்து வரவும் இருவரும் மாடி அறைக்கு ஓடினர். மோகினி மேஜை மீது மெழுகுவர்த்தியை வைத்து விட்டுத் திறந்திருந்த ஜன்னலை மூடினாள்.

ராஜு தரையில் கிடந்த மனைவியைத் தூக்கிப் படுக்கையில் கிடத்தினான். கீழே கிடக்கும் குழந்தையை எடுத்துப் படுக்கையில் விட்டான்.

விஜயா, “குழந்தை கௌரியைப் பாருங்க. மயங்கிப் போயிட்டா.” என்றாள்.

ராஜு குழந்தையிடம் ஓடினான். விஜயா மூச்சுத் திணறுவதைக் கவனித்த மோகினி, “அம்மாவுக்கு மூச்சு விடமுடியல்லே, டாக்டரைக் கூட்டிவாங்க,” என்று கட்டளையிட்டாள்.

ராஜு மயங்கிக் கிடக்கும் குழந்தையைப் பார்த்தான். வெளுத்த மூகத்துடன் மூச்சு வாங்கியபடி கிடக்கும் விஜயாவைக் கவனித்தான். உடனே அறையை விட்டு ஓடினான். டிரைவரைக் கூட அழைக்கவில்லை!. அவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பான் என்று ராஜுவுக்கும் தெரியும். தானே காரை எடுத்துக் கொண்டு டாக்டரை அழைத்துவரச் சென்றான்.

மாடி அறையில் விஜயா மெள்ளக் கண் திறந்தாள். அவளுடைய மங்கிய பார்வையில் மோசினியின் உருவம் தான் தெரிந்தது. மோகினி, ”அம்மா, இந்தத் தண்ணியைக் கொஞ்சம் சாப்பிடுங்கம்மா,” என்று சிறிது தண்ணீர் கொடுத்தாள்.

விஜயா, ”சாந்தினி,….சாந்தினி,” என்று கூறியபடி மோகினியைப் பார்த்தாள்.

மேஜை மீது வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியின் ஜூவாலை காற்றில் ஆடியது. அதன் வெளிச்சத்தில் குனிந்து விஜயாவைக் கவனித்துக் கொண்டிருந்த மோகினியின் நிழல் ராட்சசப் பரிமாணத்துக்கு எதிர் சுவரில் விழுந்தது. விஜயாவின் பார்வை அப்படியே மோகினியின் மீது குத்திட்டு நின்றது. அவள் பார்வையில் வெறுப்பு என்ற ஓர் உணர்ச்சிதான் வெளிப்பட்டது. சுண்ணாம்பு போல் வெளுத்து விட்ட விஜயாவின் முகத்தில் கறுப்பான கண்கள் ஒளி வீசின. விஜயாவின் உயிரெல்லாம் ஒருங்கே அவள் கண்களில் நிற்பது போல் தெரிந்தது.

விஜயா, “குன்னூரில் இருந்தவர் எப்போ வந்தார்? இல்லை, அவர் குன்னூருக்குப் போகாமல் இங்கேயேதான் இருந்தாரா?” என்று கேட்டாள். அந்தக் கேள்வி கேட்பதற்குள் விஜயாவின் மூச்சு முட்டியது.

“இல்லேம்மா, குன்னூருப் போனவர் ஐந்து நிமிஷத்துக்கு முன்னாலே தாம்மா வந்தாரு,” என்றாள் மோகினி.

விஜயா சந்தேகத்தோடு மோகினியைப் பார்த்தாள். “ஐந்து நிமிஷத்துக்கு முன்னால் வந்தவர் மாடிக்கு வராமல் கீழே என்ன செய்து கொண்டிருந்தார்? இந்தப் பேய் மழையில் நீ அவருக்காக அலங்காரம் செய்து கொண்டு காத்திருந்தாயா?”

மோகினியின் உடல் சிலிர்த்தது. விஜயா அளித்த பட்டுச் சேலையை அணிந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். அந்தச் சேலையை இந்த வீட்டில் இருக்கும் வரை கட்டிக்கொள்ள வேண்டாம் என்று விஜயா எச்சரித்திருந்ததையும் உணர்ந்தாள். மெழுருவர்த்தியை ஏற்றிக் கொண்டு வரும் அவசரத்தில் சேலையை மாற்றி வேறு சேலை கட்டிக்கொண்டு வர அவகாசம் ஏது?

விஜயாவின் கணவன் மனத்தில் ஏற்பட்ட ஆசைக்குக் காரணம்? அவள் அந்தச் சேலையில் நின்றது தான் காரணமா? ஆம், அவர் அவளை வந்து அணைத்த போது கூட, “விஜயா..” என்று கூறித்தான் அணைத்தார்.

இவ்வாறு மோகினி சிந்திக்கும் போதே விஜயா தொடர்ந்து ஆத்திரத்தோடு கேட்டாள்: “நீயும் அவரும் சேர்ந்துதானே மாடிக்கு வந்தீர்கள்? கீழே என்ன நடந்தது? சொல்!”

மோகினி, “ஒன்றுமில்லையம்மா, அவர், ‘மெழுகுவர்த்தி கொண்டுவா!’ என்று உத்தரவிட்டார். நான் உடனே ஓடி போய் மெழுகுவர்த்தியை ஏற்றி எடுத்துக்கொண்டு வந்தேன், அவ்வளவு தாம்மா,” என்றாள் நடுங்கியபடி.

விஜயா ஆத்திரம் தொனிக்க, மெள்ள எழுந்தவள் மோகினியைப் பலம் கொண்டவரையில் இழுத்துப் படுக்கையில் தன் அருகில் தள்ளிவிட்டாள், அடுத்த வினாடியே விஜயாவின் நடுங்கும் கை, பக்கத்து டேபிளில் பழம் நறுக்க வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்துக் கொண்டது. விஜயாவின் ஒரு கரம் மோசினியின் நெஞ்சைப் படுக்கையில் அழுத்தியது. இன்னெரு கையில் சுகத்தி இருந்தது. விஜயா ஒரு பேய் போல் தோற்றமளித்தாள். “சாந்தினி, சாகிறவளிடம் பொய் சொல்லாதே. கீழே என்ன நடந்தது? சொல்லு? முன்னேற்பாடாகக் குன்னூரிலிருந்து அவர் வந்தாரா? அவர்தானே உன்னை இந்தப் புடவை அணிந்து கொள்ளச் சொன்னது?”

“இல்லேம்மா. நான்தாம்மா சேலையைக் கட்டிக்கிட்டு கண்ணாடி முன் நின்னேன். குன்னூரிலிருந்து அவர் இந்த மழையில் வருவார்னு நான் நினைக்கல்லேம்மா,” என்று கெஞ்சினாள்.

“இல்லே. நீ பொய் சொல்றே. கீழே ஏதோ நடந்திருக்கு. என்னதான் நடந்தது. சொல்லு?” என்று சொல்வதற்குள் மூச்சு விஜயாவின் பேச்சைத் தடுத்தது. “உண்மையைச் சொல்லு. என் கணவன் என்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை நினைச்சாரா என்கிற உண்மை எனக்குச் சாகிறதுக்கு முன்னாடி தெரியனும், சொல்லு. உண்மையைத் தெரிஞ்சுக்காமல் நான் இந்த உலகத்தை வீட்டுப் போக விரும்பலே! சொல்லுடி. பொய் சொன்னே, உன்னைக் கொன்னுடுவேன். ரெண்டு பேருமே இந்த உலதத்தை வீட்டுப் போய்விடுவோம்,” என்று கூறிக் கத்தினயக் கழுத்துக்கு நேரே கொண்டு வந்தாள்.

மோகினி திமிறிப் பார்த்தாள். முடியவில்லை. உலர்ந்து போன விஜயாவின் கை மோகினியின் கழுத்தை இரும்புபோல் பிடித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு பலம் விஜயாவுக்கு எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை. விஜயாவின் உடல் தன் கடைசி நிகழ்ச்சிக்கு என்று அவளுக்குப் பலத்தைப் பரிந்து கொடுத்ததா? இல்லை அவள் உள்ளத்தில் குடியிருந்த வெறுப்பு அவளுக்கு அந்தப் பலத்தைக் கொடுத்ததா என்று புரியவில்லை.

“என்னடி முழிச்சுப் பார்க்கிறே? கீழே என்ன நடந்தது? சொல்லு. அவருக்கும் உனக்கும் இடையே ஒன்றுமில்லையா? சில விநாடிகள் உயிரோடு இருக்கப் போறேன். எங்கிட்டே பொய் சொல்லாதே. உண்மையைச் சொல்லு. என் கணவர் தவறிவிட்டாரா?” என்று கேட்டாள்.

உடனே மோகினி பீதியோடு, “அவர் தவறு செய்யல்லேம்மா, சத்தியமாச் சொல்றேன். அவர் என்னை அடையல்லேம்மா! நான் இன்னும் ஒரு கன்னிப் பெண்.” இதைக் கேட்டதும். விஜயாவின் பிடி லேசாகத் தளர்ந்தது.

மோகினிக்கு ஒரு திருப்தி. ராஜுவும் அவளும் ஒன்றாக இல்லை. அவள் இன்னும் உடலளவில் கன்னிதான். அதைச் ஈத்தியம் செய்து சொல்வதில் தவறில்லை என்று நினைத்தாள். விஜயா இதோடு விட்டுவிட்டால் அவள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தாள். ஆனால் ஜயா அவளை விடுவதாக இல்லை.

விஜயா தொடர்ந்து, “அவர் உன்னைத் தீண்டாமல் இருக்கலாம். ஆனால் அழகான உன்னைப் போன்ற பெண்ணுக்கு இது புரியாமல் இருக்காது. அவர் உன் அழகைக் கண்டு மயங்கவில்லை என்று சொல்கிறயா? அவர் உன்னிடம் மனத்தைப் பறி கொடுக்கவில்லை என்கிறாயா? அவர் மனம் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒளிக்காமல் உண்மையைச் சொல்” என்றாள்.

மோகினி விஜயாவைப் பார்த்தாள், விஜயாவின் கைக்கத்தி தன் கழுத்தில் பாய்ந்துவிடும் என்ற பயம் விலகிற்று. பயம் இருந்த இடத்தில் மோகினிக்குப் பச்சாதாபம்தான் மிஞ்சியது. இறுதி வேளையிலும் தன் கணவன் அவள் ஒருத்தியைத்தான் விரும்புகிறாள் என்று நினைக்க ஆசைப்படும் அந்தப் பெண் உள்ளத்தைப் புரிந்து கொண்டாள். கணவனின் காதல் – அதுதான் விஜயாவின் இதயத்துக்கு முடிவு வேளையில் தேவையான ஒளஷதம் என்பதைப் புரிந்து கொண்டாள். ஒரு பொய், ஆன்மாவுக்கு நிரந்தர சாந்தியளிக்கு மென்றால் அந்தப் பொய் பல சத்தியங்களுக்கும் மேல் என்று நினைத்தாள். குழந்தைச்சாமி வளர்த்த பெண் அல்லவா! குழந்தைச்சாமியும் மற்றவர்கள் இன்பமாக வாழப் பொய் சொன்னவர் தானே? அவர் தானே மோகினியை இந்தப் பொய் நாடகத்தில் கொண்டு வந்து மாட்டியவர்? அவர் ஆரம்பித்த பொய் நாடகம் ஒரு பலன் தரும் பொய்யோடு முடியட்டும் என்று தீர்மானித்தாள்.

”அம்மா, நான் உண்மையைச் சொல்லிடறேன். அவர் உங்களைத் தவிர வேறு யாரையும் விரும்பல்லேம்மா! தவறு செய்தவள் நான்நாம்மா!. நான் தான் இந்த வீட்லே அடி எடுத்து வைத்த நிமிஷத்திலிருந்து அவரை மானசீகமாக நேசித்தேன். இவ்வளவு வசவையும் திட்டையும் கேட்டுக் கொண்டு வேலையை விட்டு விலகாமல் நான் இருக்கிறேனே என்று ஆச்சரியப் பட்டீங்களேம்மா அதுக்குக் காரணம் எனக்கு அவர் மீது ஏற்பட்ட ஆசை தாம்மா! கௌரி மீது உள்ள அன்பும் அவர் மேலே இருந்த ஆசையும்தான் என்னை இந்த வீட்லே தங்க வச்சது. முன்னூறு ரூபாய்ப் பணமில்லேம்மா. ஆனால் அவர் மனசிலே உங்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லே என்பதும் எனக்குத் தெரியும். என்னை மன்னிச்சுடுங்கம்மா,” என்றாள்.

இதைக் கேட்ட விஜயா அப்படியே மோகினியை விறைத்துப் பார்த்தபடியே இருந்தாள். அவன் கையிலிருந்த கத்தி நழுவிப் படுக்கையில் விழுந்தது. மோகினியின் கழுத்தில் விஜயா வைத்திருந்த பிடியும் தளர்ந்தது. மோகினி எழுந்து உட்கார்ந்தாள். விஜயாவின் கண்களில் நீர் நிறைந்து இருந்தது. வெறுப்பும் பொறாமையும் சில விநாடிகளுக்கு விஜயாவுக்கு அளித்த பலம் மறைந்து கொண்டிருந்தது. விஜயாவின் குரல் பலவீனமாகக் கேட்டது. விஜயா, “சாந்தினி, சாந்தினி! என்னை உன் மடி மீது வைத்துக் கொள்” என்றாள்.

மோகினி எழுந்து போய் விஜயாவைத் தன் மடி மீது வைத்துக் கொண்டாள்.

”சாந்தினி, நீ ரொம்ப நல்லவ. உன் மனசிலே இருக்கிற உண்மையை அப்படியே சொல்லிட்டே, பாவம், அவர் எனக்காக ஒரு நரகத்தையே அனுபவிச்சுட்டாரு! பணம், அழகு, பலம் மூணும் உள்ளவர் எனக்காக என் மன அமைதிக்காகச் சுகத்தைத் துறந்து சன்யாசி மாதிரி இருந்தார். இது நாள் வரை…” என்று சொல்வதற்குள் விஜயாவுக்கு இருமல் வந்தது.

“பேசாமல் இருங்கம்மா,” என்றாள் மோகினி.

“இப்ப நான் பேசல்லேன்னா நான் என்னிக்குமே பேச முடியாது. சாந்தினி,” என்று கூறிவிட்டு மேற் கொண்டு பேச ஆரம்பித்தாள் விஜயா.

“பணமும் அழகும் உள்ள ஆண்கள் எப்படி வாழுறாங்கன்னு தெரியும். அவருக்கு உள்ள பண்புதான் அவரை இவ்வளவு கஷ்டத்தையும் பொறுக்கும்படி செய்தது. நான் அவருக்கு வேதனையைத்தான் கொடுத்தேன். இன்பத்தைத் தரல்லே. சாந்தினி, என்னோடு அவர் அனுபவிக்கத் தவறிய இன்பத்தை நீ அவருக்குத் தருவியா சாந்தினி? நான் போனப்புறமாவது அவர் சந்தோஷமா இருக்கணும் என்கிறதுதான் என் ஆசை” என்று சொல்லிவிட்டு மோகினியின் மோவாய்க் கட்டையை அவள் கைகளால் பிடித்தாள்.

மோகினி பேசாமல் இருந்தாள்.

“என் குழந்தை கௌரிக்கு உன்னை விடச் சிறந்த மாற்றாந்தாய் கிடைக்க மாட்டாள். நான் இருந்த வரையில் கௌரி ஒரு தாயில்லாப் பெண்ணாக இருந்தாள். அவர் தாரமிழந்த மனிதராகத்தான் இருந்தார். நான் போன பின்பாவது இந்த வீட்டில் ஒரு லக்ஷ்மி நடமாடட்டும். உனக்குச் சம்மதம்தானே தங்கச்சி?” என்று கேட்டாள்.

‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள் மோகினி.

விஜயா முகம் புன்முறுவனுடன் சாந்தினியைப் பார்த்தது, “சாந்தினி,அவரும் இந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்வார் என்று நினைக்கிறேன்… அவரிடம் சொல்லலாம் என்றால் அவர் எங்கோ போய் விட்டாரே!” என்று சொல்லி நிறுத்தினாள்.

“கார் சத்தம் கேட்கிறது. அவர் வந்து விட்டாரம்மா,” என்று மோகினி கூறினாள்.

விஜயா கடைசி முறையாக மோகினியைப் பார்த்துவிட்டு, “என் கௌரி! என் கௌரி” என்று கூறியபடி படுக்கையில் மயங்கிக் கிடக்கும் குழந்தையைப் பார்த்தாள்.

படிக்கட்டுகளில் டாக்டரும் ராஜுவும் வரும் சத்தம் கேட்டது. அதே வினாடி தடைபட்ட மின்சாரம் திரும்பி அந்த வீடு முழுவதும் ஒளி வீசியது. ஆனால் படுக்கையில் கிடந்த விஜயாவின் உயிர் ஒளி அந்தச் சமயம் பார்த்து உடலை விட்டு விலகியது. விஜயாலின் தலை பொத்தென்று தன் உடலில் விழுவதை மோகினி உணர்ந்தாள்.

“அம்மா!” என்று தன்னையும் மறந்து அலறினாள்.

அதே வினாடி டாக்டரும் ராஜுவும் அறையில் நுழைந்தனர்.

அத்தியாயம்-39

டாக்டர், விஜயாவின் கையைப் பிடித்ததுமே அவள் இறந்துவிட்டாள் என்ற செய்தியைப் புரிந்துகொண்டார். ஆனால் ராஜுவுக்கு இது புரியவில்லை.

அவனிடம் எப்படி இதைக் சொல்வது என்று தெரியாமல் டாக்டர் தவித்தார்; ஒன்றும் பேசாமல் படுத்திருக்கும் குழந்தை கௌரியிடம் சென்று அந்தக் குழந்தைக்குச் சிகிச்சை செய்ய ஆரம்பித்தார்.

கௌரி கண் விழித்துக் கொண்டாள்.

விஜயா இறந்துவிட்டாள் என்பதை மோகினி உணர்ந்தாளாகையால், அவள் பார்வை பூராவும் ராஜுவின் கவலை நிறைந்த முகத்தில் நின்றது.

ஆனால் ராஜு மோகினியின் பார்வையைச் சந்திக்க வெட்கப்பட்டான். மோகினி, எப்படி இருந்தாலும் டாக்டர் அவனிடம் உண்மையை இன்னும் சில வினாடிகளில் கூறி விடுவார், அப்போது குழந்தை கௌரி அங்கு இருந்தால் தாய் இறந்துவிட்டாள் என்ற செய்தி கேட்டு குழந்தை மனம் அதிர்ச்சி அடையும் என்பதை உணர்ந்து கொண்டாள்.

மோகினி குழத்தையை மாடியிலியிலிருந்து அழைத்துக்கொண்டு போகத் தூக்கினாள்.

ராஜு பரபரப்புடன், “டாக்டர், டாக்டர்! ஏன் சும்மா இருக்கீங்க? விஜயாவுக்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்க டாக்டர்,” என்று சொன்னான்,

டாக்டர் மறுபடியும் விஜயாவின் அருகில் வந்து படுக்கையில் விழுந்து கிடக்கும் அவளை ஒரு முறை பார்த்தார், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். “மிஸ்டர் ராஜு, குழந்தை கிணற்றில் விழுந்து தப்பிய அன்றே அதிர்ச்சியால் விஜயாவின் இருதயம் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று எச்சரித்தேன். எந்த விதமான அதிர்ச்சியும் இல்லாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் எச்சரித்திருந்தேன். என் எச்சரிக்கை பலன் அளிக்கவில்லை என்று தோன்றுகிறது,” என்று சொல்லி விட்டு விஷயத்தை அப்பட்டமாகச் சொல்லாமல் தயங்கினார், ராஜுவின் மனம் கலவரத்தால் சூழ்ந்தது.

ஓடிவந்து விஜயாவின் அருகில் உட்கார்ந்து கொண்டான். தொய்ந்து கிடந்த விஜயாவின் கையை எடுத்துத் தொட்டுப் பார்த்தான்.

இறந்தவள் கை ஜில்லென்று கிடந்தது.

அதே வினாடி டாக்டர், “மிஸ்டர் ராஜு, விஜயா இறந்து விட்டாள். இனி எந்த வைத்தியமும் அவளுக்குத் தேவையில்லை,” என்று சொல்லிவிட்டு மெள்ள மாடி அறையைவிட்டு நகரப் போனார். ராஜுவுக்கு ஒன்றும் புரியவில்லை. டாக்டர் சொன்ன உண்மையை அவனால் நம்பவும் முடியவில்லை. விஜயா பல முறை சாவின் வாசல்வரை சென்று திரும்பியதை அவன் கண்டிருக்கிறான். இம்முறையும் அதே போல் திரும்பி விடுவாள் என்று தான் நம்பியிருந்தான்.

ஆனால் இம்முறை எல்லாம் முடிந்து விட்டது. அவள் வாழ்வின் ஜுரம் முடிந்து, அவள் நிரந்தர நிம்மதியையும், ஓய்வையும் அடைந்து விட்டாள் என்பதை நம்ப அவன் மனம் விரும்ப வில்லை.

“விஜயா, விஜயா!” என்று இரு முறை அலறிக் கூப்பிட்டான்.

எந்தப் பதிலுமில்லாமல் கிடந்தாள் விஜயா. மாடி வராந்தாவை நெருங்கிக் கொண்டிருந்த மோகினி அப்படியே நின்றாள்.

அவள் தோளில் சாய்ந்திருந்த குழந்தை கௌரிக்குத் தந்தையின் அலறலைக் கேட்டதும் அம்மாவுக்கு ஏதோ ஆபத்து என்பது புரிந்துவிட்டது.

கௌரி, மோகினியின் தோளிலிருந்து கீழே குதித்து அறைக்குள் ஓடினாள். தாயின் அருகில் சென்று, ”அம்மா, அம்மா” என்று கதறியபடி குழந்தை கௌரி அழத் தொடங்கினாள்.

கதறி அழும் குழந்தை, அதற்குச் செவி சாய்க்காமல் கிடக்கும் மனைவி, இரண்டையும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் ராஜு.

கடந்த சில வருடங்களாக எந்த நிகழ்ச்சிக்குப் பயந்து பயந்து காத்திருந்தானோ அந்த நிகழ்ச்சி திடீரென்று ஏற்பட்டுவிட்டது.

கோயமுத்தூர் ஆஸ்பத்திரியில் விஜயா இறந்திருந்தால் இவ்வளவு அதிர்ச்சி இருந்திருக்காது.

ஒவ்வொரு ஆபத்தையும் தாண்டி வாழ்ந்து வந்தவள், திடீரென்று அவனிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் மறைந்து விட்டாள்.

இத்தனை வருடங்கள் அவளைக் கட்டிக் காத்து, பாதுகாத்து வந்தவன், அவளை விட்டுப் பிரியாமல் நிழல் போல் இருந்தவன், அவள் உயிர் பிரியும் வேளையில் அருகில் இல்லை.

அவளுடைய கடைசி வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை, ‘என் உயிர் பிரியும் போது என் தலை உங்கள் மடியில் இருக்க வேண்டும்’ என்று விஜயா எப்போதோ சொன்னது ராஜுயின் ஞாபகத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்து நினைவுக்கு வந்தது.

இறந்துவிட்ட விஜயாவின் தலையை எடுத்துத் தன் மடிமீது வைத்துக் கொண்டான்.

அவன் கண்களிலிருந்து கண்ணீர் ஓடையெனப் பெருக்கெடுத்து ஓடியது.

விஜயாவின் அன்பு, அவள் கோபம், அவள் தன்னை மறந்து கூறிய சுடு சொற்கள் எல்லாம் மறுபடியும் அவன் மனத்திரையில் காட்சிகளாய் உருவெடுத்து ஓடின.

நினைவுப் பாதையில் அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். பொருத்தமில்லாத சாதாரண நிகழ்ச்சிகள் கூட இப்போது முக்கியத்துவம் பெற்றன.

அவன் மறந்தே போய்விட்ட ஒரு நிகழ்ச்சி, அர்த்தமில்லாத ஒரு நிகழ்ச்சி, மூட நம்பிக்கை என்றே சொல்ல வேண்டிய நிகழ்ச்சி இப்போது அவன் மனக்கண் முன் விபரீத அர்த்தத்தோடும். பரிமாணத்தோடும் உருவெடுத்துக் கொண்டது.


விஐயா காலிழந்த ஆரம்ப காலம் அது.

திருவனந்தபுரத்துக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள கடற்கரை கிராமம். அங்கு மூஸ் என்ற மலையாள வைத்தியன் பக்கவாதத்தைக் குணம் செய்வதில் நிபுணன் என்று கேள்விப் பட்டு ராஜு விஜயாவை அழைத்துக் கொண்டு அங்கு சென்றான்.

வசதியான பெரிய வீடுகள் இல்லாத சிறிய ஊர்.

கடற்கரையில் ராஜுவே அதிகப் பணம் செலவழித்து ஒரு மாதத்தில் வீடு அமைத்துக் கொண்டான்.

வீடு கட்ட ஒரு மாதம், வைத்தியத்துக்கு அந்த விட்டில் தங்கியது ஒரு மாதம். வைத்தியம் குணம் தராமல் போகவே, மறுபடியும் ஷோரனூர் திரும்பினர்.

கட்டிய வீட்டை வைத்தியம் பார்த்து மூஸுக்கே தானமாகக் கொடுத்து விட்டுத் திரும்பினான்.

அந்த ஒரு மாத காலத்தில் நடந்த நிகழ்ச்சிதான் இப்போது ராஜுவின் ஞாபாத்துக்கு வந்தது.

அந்தக் கடற்கரை வீட்டில் தங்கியிருந்தபோது திடீரென்று ஒரு நாள் காலை, கடற்கரையில் பெரிய கூட்டம் கூடியது. ஒரு மீனவனின் பிரேதம் கரை சேர்க்கப்பட்டது. மீனவனுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் தான் ஆகியிருந்தன.

கடலில் புயலும் இல்லை. மீனவனோ நன்றாக நீந்தத் தெரிந்தவன். கட்டுமரங்களைக் கடலில் செலுத்துவதில் தேர்ந்தவன். அவன் எப்படிக் கடலில் மூழ்கினான் என்று தெரியவில்லை.

தற்கொலை என்று சொல்லவும் முடியவில்லை. மீன் பிடிக்கப் புறப்படும் போது அவன் குதூகலமாய் இருந்ததை மீனவச் சேரி முழுவதும் உணர்த்திருந்தனர்.

கொலை என்று சொல்லவும் முடியவில்லை. ஆனால் அந்தச் சேரியில் இருந்த முதியவர் மட்டும் ‘மீனவனின் மனைவி தவறிழைத்திருக்க வேண்டும். அது தான் அவள் மாங்கல்யத்தைப் போக்கி விட்டது’ என்று சொன்னார்.

மனைவியின் நடத்தை பற்றித் தப்பான அபிப்பிராயம் ஊரில் எதுவும் இல்லை. அவள் நடத்தை தவறாத உத்தமி என்பதை ஊர் ஒருமுகமாகக் கூறியது.

ஆனால் இரண்டு நாட்களில் அவளும் தற்கொலை செய்து தன் உயிரைப் போக்கிக் கொண்டாள்.

மடியுமுன் அவள் தன் மாமியாரிடம், “என் கணவரும் உங்கள் மகனுமாகியவருக்கு நான் துரோகம் இழைத்து விட்டேன். நான் ஒரு ஆடவனுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தேன்” என்று கூறியிருந்தாளாம்.

மனைவி ஒழுக்கம் தவறினால், மீன் பிடிக்கப் போன கணவன் திரும்ப மாட்டான் என்ற மீனவரின் நம்பிக்கைக்கு இதை எடுத்துக்காட்டாகக் கூறினார் ஒரு பெரியவர்.

இதைக் கேட்டதும் ராஜு புரளியாகப் பேசினான். “தவறு செய்பவள் மனைவி. அதற்காகக் கணவன் மடிய வேண்டும்? இது அர்த்தமற்ற மூட நம்பிக்கை,” என்றான்.

ஆனால் விஜயா ராஜுவின் வாதத்தை ஒப்புக் கொள்ளவில்லை. “ஏழை மீனவர்களின் நம்பிக்கையில் அர்த்தம் இருக்கிறது. ஆபத்து நிறைந்த கடலில் அன்றாடம் பிழைப்புக்காகப் போகும் கணவன் மீது உண்மைக் காதல் உள்ள மனைவியாக இருந்தால், அவள், அவன் திரும்பும் வரை மனம் துடித்துக் கொண்டேதான் இருப்பாள். அவள் மனத் துடிப்புதான் அவள் கணவனின் உயிருக்குக் காவல். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வற்றாத அன்பு இருக்கும் வரை தான், எனக்கு வாழ்வு இருக்கும். உங்களன்பை இழந்த பின் நான் வாழ மாட்டேன், என்றைக்கு நீங்கள் தவறுகிறீர்களோ அன்றே நான் இந்த உலகத்தை விட்டுப் போக வேண்டுமென்பதே என் பிரார்த்தனை,” என்று கூறினாள்.

ராஜு உடனே சிரித்தான். “என் ஒழுக்கத்துக்கும் உன் உயிருக்கும் ஓர் இணைப்பு இருக்குமானால் எனக்கு உன்னைப் பற்றிக் கவலை இல்லை விஜயா. நீ நீண்ட நாள் வாழப்போகிறாய்.”

அன்று வேடிக்கையாகப் பேசிய நிகழ்ச்சியின் பயங்கரமான பொருள் இன்றுதான் அவனுக்குத் தோன்றியது.

‘மாடியிலே விஜயா மரணத்தை நெருங்கும்போது கீழ் ஹாலில் நான் மோகினியை அணைத்தபடி நின்றேனே” என்று நினைக்கவும் ராஜுவுக்குத் துக்கம் பீரிட்டுக் கொண்டு வந்தது. ராஜுவுக்கு அவன் மீதே கோபம் கோபமாக வந்தது.

குன்னூரில் வெள்ளைக்கார நண்பர்களுடன் மதுவருந்தியது. பிற்கு வெறியோடு காரில் புறப்பட்டுக் கோயமுத்தூர் வந்தது, அங்கு தன்னையும் மறந்து மோகினியை அணைத்தது எல்லாமே அவன் செய்யக்கூடிய செயல்களாகத் தோன்றவில்லை.

வெகுநாள், அவனுக்குள்ளே அவனுக்குத் தெரியாமல் உறங்கிய மிருகம் அவன் மனம், உடல் இரண்டிலும் ஆக்கிரமித்து அவனைக் குற்றவாளியாக்கி விட்டது போல் தோன்றியது.

அவன் தவறு செய்துவிட்டான். அவன் மனைவி இறந்துவிட்டாள்.

முன்னதற்கும், பின்னதற்கும் பிணைப்பு இருப்பதாகத் தோன்றியது.

அவன் மனைவியைக் கொன்ற குற்றவாளி அவனே என்ற எண்ணம் திடமாக எழுந்தது.

“என்றைக்கு நீங்கள் தவறுகிறீர்களோ அன்றே இந்த உலகத்தை விட்டு நான் போக வேண்டுமென்பதே என் பிரார்த்தனை” என்ற வார்த்தைகளை மடியில் படுத்துக் கிடக்கும் விஜயா வாய் திறந்து கூறுவது போல் பிரமை ஏற்பட்டது.

“விஜயா, உன் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது, உன் பிரார்த்தனை நிறை வேறிவிட்டது. என்னை மன்னித்து விடு, என்னை மன்னித்துவிடு,” என்று சொல்லி அழுதான்.

அந்த வீட்டின் கீழ் ஹாலில் டாக்டர் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தார். அவரை மறுபடியும் அந்த மழையில் வீட்டுக்கு அழைத்துப்போக யாரும் இல்லை.

ராஜுவோ மாடியில் துன்பக் கேணியில் விழுந்து கிடந்தான்.

மோகினி டாக்டரின் நிலையை உணர்ந்து கொண்டு உடனே காரேஜுக்குச் சென்று டிரைவரை அழைத்து வந்து டாக்டரை வண்டியில் அனுப்பினாள்.

டிரைவரிடம் எஜமானியம்மாள் இறந்துவிட்டாள் என்று சொன்னதும் அந்த வீட்டு வேலையாட்களுக்குச் செய்தி பரவியது.

டிரைவரின் உதவி கொண்டு விஜயாவின் நெருங்கிய உறவினர்களுக்கெல்லாம் டெலிபோன் தந்தி மூலம் செய்தி தெரிவித்தாள்.

விடியற்காலையில் ஐந்து மணி வரை மோகினி டெலிபோனில், சம்பந்தப் பட்டவர்களுக்கெல்லாம் செய்தி அனுப்பியபடி இருந்தாள்.

ஓய்வில்லாமல் வேலையில் ஈடுபட்டதால் அவளுக்குத் துக்கம் கொண்டாட அவகாசம் இல்லை.

நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்ததும் தான் அவள் இன்னும் விஜயா அளித்த அந்த விபரீதச் சேலையுடன் இருப்பதை உணர்ந்தாள். உடனே ஓடிப்போய் அதைக் களைந்து விட்டு வேறு சேலை அணிந்து கொண்டாள்.

ராஜுனின் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்தபடி இருந்தனர். ராஜு பங்களாவின் காம்பவுண்டில் கார்களாக நிறைந்துவிட்டன.

அதிகாலையில் வந்த உறவினர்களுக்குச் சமையல்காரன் காப்பி தயார் செய்ய ஆரம்பித்தான்.

மாடி அறையில் விஜயாவை மடியில் கிடந்தியபடியே உட்கார்ந்திருந்த ராஜுவின் பார்வையில் உறவினர் வந்ததும் தெரியவில்லை. அவர்கள் ஒப்புக்காகக் கூறிய உபசார வார்த்தைகளும் விழவில்லை.

பிரமித்தவன்போல் உட்கார்ந்திருந்தான்.

கௌரி அழுதபடியே ஹால் சோபாவில் தூங்கிவிட்டாள்.

பந்துக்கள் வந்தபோது ஏற்பட்ட இரைச்சலில் விழித்துக் கொண்டாள். தந்தை மாடியில் ஊமையாக வீற்றிருக்கவே, உறவுப் பெண்கள் மகளிடம் வந்து துக்கம் விசாரித்தனர். ஒவ்வொருவர் பேச்சும் கௌரியின் துக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

கௌரி அலறியபடி மாடிக்கு ஓடினாள். தந்தையிடம் ஓடிவந்து அவளுக்கே விளங்காத துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளத் துடித்தாள். ராஜு, சிலை போல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் கௌரி, “அப்பா, ஏம்பா பேச மாட்டேங்கிறீங்க? பேசுங்கப்பா,” என்று சொல்லித் தந்தையைத் தன் பிஞ்சுக் கைகளால் குத்தினாள். ராஜுவிடம் எந்தவிதச் சலனமும் ஏற்படவில்லை.

குழந்தையின் தவிப்பைப் பார்த்து மோகினி ராஜுவை நெருங்கினாள், “பாருங்க, குழந்தை தவிக்கிறா பாருங்க. அவளுக்கு நீங்க ஆறுதல் சொல்லாட்டா யார் சொல்ல முடியும்?” என்று பேச ஆரம்பித்ததும் ராஜு அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அந்த மாதிரி ராஜு என்றும் யாரையும் பார்த்ததில்லை. வெறுப்பு அவன் கண்களில் ஒளி வீசியது. ராஜுவின் பார்வையிலுள்ள வெறுப்பு மோகினியின் தேகத்தில் ஊடுருவிப் பாய்ந்தது.

அவளால் அங்கு நிற்கவே முடியவில்லை. கீழே சென்றாள். பொறுப்பாக விஷயங்களைக் கவனிக்க வேறு யாருமில்லையே என்ற கடமை உணர்ச்சி தான் அவளை அங்கு நிற்கச் செய்தது.

மோகினி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “உறவுக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க,” என்று கூறிவிட்டு மேலே சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.

ராஜு ஒரு பதிலும் சொல்லாமல் விஜயாவின் சவத்தைப் பார்த்தபடி இருந்தான்.

“மேற்கொண்டு எவ்வளவோ காரியங்கள் ஆக வேண்டியிருக்கு. பொறுப்பாக விஷயங்களைக் கவனிக்க யாருமில்லை. எனக்கும் ஒன்றும் புரியல்லே,” என்று சொல்லிவிட்டு ராஜுவின் முகத்தைப் பார்த்தாள்.

ராஜு கோபத்தோடு அவள் பக்கம் திரும்பினான்.

“மேற்கொண்டு என்ன காரியம் இருக்கிறது? விஜயாவைச் சுடுகாட்டுக்கு அனுப்பறதுதானே? அவள் உடலைச் சீக்கிரம் அனுப்பிவிட்டு நீ எஜமானியாக நினைக்கிறாயா? அதை ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன். விஜயா இங்கேயேதான் இருக்கப் போகிறாள். நீ போ வெளியே!” என்று கூச்சலிட்டான்.

குழந்தை கௌரியும் தந்தையின் கோபத்தைக் கண்டு நடுங்கினாள். மோகினி விர்ரென்று மாடி அறையிலிருந்து வெளியேறினாள். அவளைத் தொடர்ந்து குழந்தையும் வெளியே வந்தாள்.

அவள் படிக்கட்டில் இறங்கி வரும் போதே மாடி அறைக் கதவும் ஜன்னல்களும் மூடப்படுவதன் ஓசையும் கேட்டது.

துக்கம் விசாரிக்க வந்த பந்துக்கள் கீழ் ஹாலிலேயே இருந்தனர்.

யார் போய் மாடிக் கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. ராஜுவும் வெளியே வரவில்லை.

விஜயாவின் சிறிய தந்தை உடுமலைப் பேட்டையிலிருந்து பத்து மணிக்கு வந்தார்.

அவர் மாடி வரை போய், “ராஜு, நான் வந்திருக்கிறேன். கதவைத் திற,” என்று அழைத்துப் பார்த்தார்.

பதில் இல்லை. மணி பன்னிரண்டாகியது. கதவு மூடியே இருந்தது. பந்துக்களின் கூட்டம் அதிகமாகிவிட்டது.

‘இறந்த வீட்டில் சமையல் செய்வதா? வந்தவர்களைப் பட்டினியாகவே இருக்கச் செய்வதா? எது முறை? என்ன செய்வது?’ என்று தெரியாமல் மோகினி விழித்தாள்.

சிலர் ஓட்டலுக்குச் சென்று ஏதோ சாப்பிட்டுவிட்டு வந்தனர். மற்றவர்கள் அப்படியே ஹாலிலும் வராண்டாவிலும் உட்கார்ந்திருந்தனர்.

மோகினி டிரைவரின் உதவி கொண்டு ஓட்டலில் இருந்து பலகாரம் காப்பி வாங்கி வந்து பந்துக்களுக்குக் கொடுத்தாள். மாடி அறையில் ராஜு, விஜயாவின் சவத்தோடு தனியாக இருப்பதைப் பற்றி விவாதம் நடந்தபடி இருந்தது.

புரோகிதரும் இன்னும் சியரும் உடலைக் அடக்கம் செய்யாமல் மணிக்கணக்காக வைத்திருக்கக் கூடாது என்று மோகினியிடம் கூறினர்.

துணிவை வரவழைத்துக்கொண்டு மோகினி மாடிக்குச் சென்று கதவைத் தட்டினாள். பதில் இல்லை.

சூரியன் மறைந்து இரவும் நெருங்கியது. வந்து கூடியிருந்த பந்துக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. கதவை உடைத்து உள்ளே புகுந்துதான் ஆக வேண்டிய காரியங்களை செய்ய வேண்டும் என்று அபிப்பிராயம் தெரிவித்தார் ஒரு பெரியவர்.

இந்த நிலையில் குழந்தைச்சாமி அந்த வீட்டினுள் நுழைந்தார். ராஜுவின் சொந்தக்காரர் ஓடிப்போய், “அழகிரி, உங்கண்ணன் மகன் அவன் சம்சாரத்தின் சவத்தோடு உட்கார்ந்திட்டிருக்கான். யார் சொல்லியும் கதவைத் திறக்கமாட்டேங்கறான்,” என்று முறையிட்டார்.

சாமியாரைப் பார்த்ததும் மோகினி ஓவென்று அழுதுவிட்டாள்.

சாமியார், “அழாதே மோகினி. விஜயாவுக்கு விடுதலை கிடைத்து விட்டது” என்று சொல்லிவிட்டு மாடிப்படிகளில் ஏறிச் சென்றார்.

சாமியார், “ராஜு, என் மகனே! கதவைத் திறப்பா. விஜயா வாழ்ந்தப்போ தான் படுக்கையிலேயே சிறைப்பட்டுக் கிடந்தது. இன்னும் அவள் படுக்கையிலேயே இருக்கணும்னு விரும்பறியா?” என்று கூறினார்.

சில விநாடிகளுக்கு நிசப்தம் நிலவியது. பிறகு கதவு படீரென்று திறந்தது. “சித்தப்பா!” என்று அலறியபடி ராஜு வந்து அவரை அணைத்துக் கொண்டான்.

சாமியார் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “என்னப்பா செய்வேன்? இரண்டு முறை உன் வீட்டுக்கு வந்தப்போ விஜயா மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்தாள். ஆனால் இந்த முறை நான் எல்லாம் முடிஞ்சப்புறம் வந்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு மாடி அறையில் நுழைந்தார்.

– தொடரும்…

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *