பெருமை
(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிவன் சித்தர் வடிவாகத் தோன்றினார். அவர் தலை யில் சடா முடியில் இருந்த கங்கை நதிக்கு தற்பெருமை தோன்றிவிட்டதோ என்னமோ ! அதுதான் மனிதர்களைப் போல் நான் பெரிது, நீ சிறிசு என்று பேசிக்கொள்ளும் வியாதி. தனது என்ற நிலைமை பெரிதாகும்போது மற்ற வர்கள் பற்றிய அக்கறையே இருப்பதில்லை மனிதருக்கு; அப்படிப்பட்ட நோக்கம் கங்காவின் அடி மனதில்கூடக் கிளைத்தெழுந்துவிட்டது.
தனது மகிமையை மறந்திருந்த கங்கைநதி தன் செலவால் செழித்திருக்கும் இயற்கையைப் பார்த்ததும் நான் என்ற கர்வம் மேலோங்கிவிட்டது. எத்தனை கோலங்கள் செய்து விட்டிருக்கிறேன். ஆண் பிள்ளை யைப் பெற்ற தாயின் தோற்றம்…
விதம் விதமாக இந்தக் கரைகளிலே பூத்துக் குலுங் கும் புத்தம் புது மலர்கள் செடிகள், மரங்கள், புற்கள் பச்சையாக வழு வழுவென்றிருக்கும் தோற்றம். வண்டு கள் எண்ணற்ற பூக்களில் மதுவுண்ட களிப்பில்-வெறியில் எது பூ எது இலை என்று தெரியாது தள்ளாடி போதை ஏறி நமது நாட்டவர் வாயசைப்பதுபோல பாட்டிசைத்து விழுந்து எழுந்து கூடுநோக்கி சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றன……
குடி வெறியில் எது உண்மை எது பொய் என்றநிலை அறியாமல் சற்றுநேர இன்பத்தைப் பெரிதென நினைந்து களிப்புறு கிறார்களே… இவர்களுக்கும் இந்த வண்டுகளுக் கும் என்ன வேற்றுமை? உருவொன்றுதான். அவர்கள் உள்ளத்தளவில் வித்தியாசம் கிடையாது.
இவற்றைப் பார்த்ததும் அவர்கள் அறியாமையை நினைக்கச் சிரிப்பும் தன்னை மறந்துவிட்டார்களே! என்னை ஏன் சித்தர் சடாமுடியின் உச்சியில் அணிந்திருக்கின்றார்? நான் மற்றவர்களிலும் பார்க்க உயர்ந்த ஸ்தானத்தை வகிப்பதால் தானே!…
இதைக் கேட்ட சந்திரன் சிரித்தான்…!
கங்கை நதிக்குக் கோபம் மூக்கு நுனியில் வந்து விட்டது.
“ஏன்ரா என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்? அப்படி என் னில் என்ன குறை கண்டுவிட்டாய்!” கோபத்தின் அலை மோதுகிறது.
‘உன்பக்கத்தில் நான் இருப்பது நினைப்பிலில்லை நீ தான் பெரிதென்று மனதுக்குள்
மனதுக்குள் சொல்லிக்கொண்டாய். அதைக் கேட்டிருந்தேன். அதனால் சிரிப்பாக இருக்கிறது” என்று கூறி மறுமுறையும் சிரித்தான் சந்திரன்!
“என் ஆத்திரத்தைக் கிழறாதே. என்னைப்போல் நீ எதைச் செய்திருக்கிறாய்? என்னுடன் போட்டி போட…….”
”அதை நான் சொல்லித்தான் நீ தெரிய வேண்டுமா? உனக்கு கண்கூடாகப் பார்க்கும் ஆற்றல்கூட இல்லையா…….!”
“அதிகம் அளக்காதே, சொல் பார்க்கலாம்” என் றாள் கங்கா. உன்னால் வண்டுகளைத்தானே களிப்படையச் செய்ய முடிந்தது. படைப்பில் உயர்ந்தவர்கள் என்று கூறும் மனிதர்களுக்கே நான் மதிப்பிற்குரிய பொருள்! என் ஒளியில் குளுமை கண்ட காதல் சோடிகள் எத்தனை; என்னைக் கவிதை உருவில் வர்ணித்த கவிஞர்கள் எத்தனை; மனதில் நிம்மதியற்று வாடிவதங்கும் இதயங்களுக்குத் தூதாகவும் போய் இருக்கின்றேன்; சுருங்கக்கூறின் மனிதர்களின் இன்ப உலகமே என் நிழலடியில்தான்! இவற்றின் முன் உனது செய்கை எங்கே…? நான்தான் பெரியவன் முக்கியமானவன்” என்றான் சந்திரன்.
என்னை மறந்து தாங்கள்தான் உயர்ந்தவர்கள் எனப் பெருமை அடித்துக் கொள்கிறீர்களே நான் பேசாமல் இருந் தாற்போல மறந்து விட்டீர்களா என்ற பாவனையில் சீறி எழுந்தான் சித்தர் கையில் சுருண்டு கங்கணமாகவிருந்த சர்ப்பவரசன்…!
கங்கையும் சந்திரனும் விழிகளைத் திருப்பி சர்ப்ப வரசனை விழுங்கிவிடுவதுபோல பார்த்தார்கள்……
“பகுத்தறிவு படைத்தவர்கள் எனப் பெருமை அடித் துக்கொள்ளும் மனிதர்களாலேயே நிலத்தின் எல்லை காண முடியாமல் தவித்தபோது; அதனால் அவர்களுக்கு வர இருந்த சண்டை சச்சரவைத் தடுத்து அவர்களின் எல்லையை இவைதான் என்று காட்டியதினால் அந்நகரம் இன்றும் திருவாலவாய் என்ற எனது ஆகுபெயரைப் பெற்றுச் சிறப்புடன் இருந்து வருகின்றது. உங்களிலும் யார் பெரிது இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம்……. நான்தானே” என்று தனக்குரிய மிடுக்குடன் மறுமுறை வாலையாட்டிச் சித்தர் கையில் கிடந்து முறுகினான் சர்ப்ப வரசன்….
இவற்றைப் பார்க்கத் தோற்றுவித்த கடவுளுக்கே பொறுக்க முடியவில்லை. கேவலம் மனிதன் தான் இலக் கானவன் என இதுவரை உணர்ந்திருந்தேன். ஆனால் ஆணவ மலமும் நீங்கி எனது திருமேனியைத் தீண்டும் பேறு பெற்ற பின்பும் இந்த மூவரும் போட்டி பூசலுக்கு இலக்காகிவிட்டார்களே! படைத்த என் பெருமையைக்கூட மறந்து என்று எண்ணக் கோபம் கண்களில் அக்கினிப் பிழம்பாகப் பிரகாசித்தது. சித்தர் கூத்தாடினார். அதைக் கண்ட கங்கை, சந்திரன், சர்ப்பவரசன் மூவரும் தவறி விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் சித்தரின் அங்கங் களைப்பற்றி இருத்தார்கள்…….
– விவேகி, மே 1963.
– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.