கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 5,027 
 
 

செவ்வாய் கிரகத்தின் ஜெஸெரோ க்ரேட்டரில் (Jezero Crater) பெர்செவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது அதன் சக்கரம் ஒன்று மண்ணில் சிக்கிக் கொண்டது. கம்ப்யூட்டர் வழங்கிய குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகு, ரோவர் வெற்றிகரமாக தன்னை விடுவித்துக் கொண்டது. பின்னர் அந்த இடத்தை சுற்றி வந்து சில புகைப்படங்களை எடுக்கத் தொடங்கியது.


நாசா தலைமையகத்தில், விஞ்ஞானி ஜேம்ஸ் ஒரு கப்பில் சூடான காபியை ஊற்றிக் கொண்டு, செவ்வாய் கிரகத்தில் இருந்து கடைசியாக வந்த எழுபத்து மூன்று புகைப்படங்களின் தொகுப்பை ஆராயத் தொடங்கினார். முப்பது நிமிடங்களுக்குப் பிறகு கம்ப்யூட்டரில் தோன்றிய புகைப்படம் #24 அவரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திடுக்கிட்டு எழுந்த அவர் கையிலிருந்த காபி கப் விசைப்பலகையில் கவிழ்ந்தது.

சுற்றிலும் செவ்வாய் கிரக குன்றுகள் இருக்க புகைப்படத்தின் நடுவில் ஒரு பெரிய மண்டை ஓடு மண்ணுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தது.

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *