நீயும் வா




தோயமான் மாறன் மாளிகை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தார் மதுரைக்குமரனார். வழியில் பாணன் ஒருவன் எதிர்ப்பட்டான். புலவர் நெஞ்சம் நெகிழ்ந்தது.
“பாணனே! நீ எம்மோடு வருக! தோயமான் மாறன் வரையாது கொடுக்கும் பெருமை உடையவனுமல்ல; இல்லை யென்று மறுக்கும் சிறுமையுடையவனும்
அல்லன்.
நாம் அவனைக் கொண்ட கேட்கப் போவோம்! அவன் உலைக் களத்திற்குப் படைக் கருவி கேட்கப் போவான். அவன் உடலெங்கும் போர்ப்புண் பட்டவடுக்கள் மருந்து கொள்ளப்பட்ட மரம் போல் தோன்றுவான் வடுக்கள் அவனுக்கு வசை இல்லை. அவையே அவனுக்கு அழகு.”
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்