தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,376 
 
 

ச்சே… மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள்… யார் எப்படியென்று வகைப்படுத்துவது பெரும்பாடாக இருக்கிறது” அங்கலாய்ப்புடன் ஆசிரமத்துக்குள் நுழைந்தான் சிஷ்யன்.
அவனைத் தன்னருகே அழைத்து, உட்கார வைத்தார் குரு.
பிறகு பேசலானார்-
குரு“”உனது சலிப்புக்கான காரண காரியம் எனக்குத் தெரியவில்லை! இருந்தாலும் சலிப்பில் ஒளிந்திருக்கும் கேள்விக்கான பதிலைத் தருகிறேன்…” என்று ஆரம்பித்தார்.
காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்க ஆரம்பித்தான் சிஷ்யன்.
“”பேராசைக்காரன், சராசரி மனிதன், உத்தமன், ஞானி… இப்படி நான்கு பிரிவுகளுக்குள் எல்லா மனிதர்களையும் வகை வகையாக அடக்கி விடலாம்…
“என்னுடையது என்னுடையது; உன்னுடையதும் என்னுடையது’ என்று சொல்கிறவன் பேராசைக்காரன்!
“என்னுடையது என்னுடையது; உன்னுடையது உன்னுடையது’ என்பவன் சராசரி மனிதன்!
“உன்னுடையதும் உன்னுடையது; என்னுடையதும் உன்னுடையது’ என்கிறவன் உத்தமன்!
“உன்னுடையதுமன்று என்னுடையது
மன்று; எல்லாமே இறைவனுடையது’ என்பவன்
ஞானி!” என்று முடித்தார் குரு.
குரு சொல்லி முடித்தபோது சிஷ்யனது அங்கலாய்ப்பு சுத்தமாக அடங்கிப் போயிருந்தது!

– தேனி முருகேசன் (மே 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *