காலப்பயண ஆர்வலர்களின் சந்திப்பு





என் நண்பன் ராம்ஜியை ஹேலோபோனில் அழைத்தேன். சில நொடிகளில் அவனது ஹேலோகிராம் உருவம் ஆவி போல் என் முன்பு தோன்றியது.

“என்ன விஷயம், எதுக்கு கூப்பிட்டே?” அவன் குரல் கிணத்துக்குள்ளிருந்து வருவது போல் கேட்டது.
“காலப்பயண ஆர்வலர்கள் கிளப்பின் உள்ளூர் பிரிவு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறது. கால இயந்திரங்களை இயக்குவது பற்றிய பல்வேறு நுணுக்கங்களை நாம் காலப்பயண நிபுணர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். வருகிறாயா?”
“கண்டிப்பாக. கூட்டம் எங்கே நடக்கப் போகிறது?”
“நாகேஸ்வர ராவ் பார்க்கில்.”
“என்றைக்கு?”
“ஜூன் 2, 1846, காலை 10 மணி.”
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |