
வாழ்க்கைக்குறிப்பு:
இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம்
புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி
காலம் : 15.08.1900 – 04.12.1976
ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர்.
எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
முதல் கவிதை : காதல் (1934)
முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி
சிறப்பு பெயர்கள்:
- சிறுகதையின் சாதனை
- புதுக்கவிதையின் பிதாமகன்
- புதுக்கவிதையின் முன்னோடி
- தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
- புதுக்கவிதையின் முதல்வர்
- புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
புனைப் பெயர்:
- ரேவத
- பிச்சு
- ந.பி
சிறுகதைகள்
- பதினெட்டாம் பெருக்கு
- ராகு கேது
- தாய்
- வானம்பாடி
- ஆராய்ச்சி
- மருதாணி விரலெங்கே? அழகெங்கே?
- விழிப்பு
- முள்ளும் ரோஜாவும்
- சொக்கு
- மீனி
- புருஷன் எழுதின கதை
- காபூலிக் குழந்தைகள்
- அடகு
- அரைப்பைத்தியம்
- மீனலோசனி
- ஜம்பரும் வேஷ்டியும்
- மோஹினி
- குடும்ப ரகசியம் (குறு நாவல்)
- மாங்காய் தலை
- இரட்டை விளக்கு
- காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்)
- வானம்பாடி
- தரிசனம்
- பலூன் பைத்தியம்
- நெருப்புக் கோழி
- புலியின் வரிகள்
- முதல் பிடில்
- காவல்
- வெறும் செருப்பு
- ஞானப்பால்
கவிதைகள்
- காட்டு வாத்து (1962)
- வழித்துணை (1964)
- குயிலின் சுருதி (1970)
நாவல்
- குடும்ப ரகசியம்
- கட்டுரைகள்
- மனநிழல் (1977)
- நாடகங்கள்
- காளி (1946)
பிற செய்திகள்
- 1935-ல் கலைமகள் பத்திரிக்கையில் “புதுமைப்பெண்” என்ற இவரது முதல் ஓரங்க நாடகம் வெளியானது.
- கலைமகள் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது – சிறுகதை முள்ளும் ரோசாவும்
- இவர் பணியாற்றிய இதழ்கள் – நவஇந்திய அனுமன்
- இவர் நடித்த படத்தின் பெயர் – ஸ்ரீராமானுஜர்
நூல் விவரப் பட்டியல்
- பதினெட்டாம் பெருக்கு-சிறுகதைகள். முதல் பதிப்பு: ஹிமாலயப் பிரசுரம் 1944, இரண்டாம் பதிப்பு, எழுத்து பிரசுரம், 1964. பதினைந்து கதைகள் கொண்ட தொகுப்பு
- ஐம்பரும் வேஷ்டியும்- சிறுகதைகள்-கஸ்தூரிப் பதிப்பகம், திருத்துறைப்பூண்டி-1947- எட்டு கதைகள் அடங்கிய தொகுப்பு
- மோஹினி- சிறுகதைகள்-கலைமகள் காரியாலயம், சென்னை-1951; பதினெட்டு கதைகள் அடங்கிய தொகுப்பு
- பிச்சமூர்த்தி கதைகள் – சிறு கதைகள்-ஸடார் பிரசுரம், சென்னை-1960; இருபது கதைகள் அடங்கிய தொகுப்பு
- மாங்காய்த் தலை – சிறுகதைகள்- கலைமகள் காரியாலயம், சென்னை-1961 இருபத்தைந்து கதைகள் அடங்கிய தொகுப்பு
- இரட்டை விளக்கு-சிறுகதைகள்- மல்லிகைப் பதிப்பகம், சென்னை-1967; இருபத்திமூன்று கதைகள் கொண்ட
தொகுப்பு
(இச்சிறுகதைகள் தவிர நூல் வடிவம் பெறாத கதைகள் எனப் பத்தொன்பது கதைகளின் பட்டியல் க.மீனாகுமாரி எழுதிய ந.பிச்சமூர்த்தி ஆய்வடங்கல் நூலில் தரப்பட்டிருக்கிறது.)
- குடும்ப ரகசியம்- நாவல்-கலைமகள் காரியாலயம் சென்னை-1959
8 காக்கைகளும் கிளிகளும்-சிறுவர் கதைகள் – எழுத்து பிரசுரம், சென்னை- 1977 - குயிலின் சுருதி- கவிதைகள்- வாசகர் வட்டம், சென்னை- 1970; ஐந்து கவிதைகள் கொண்ட தொகுப்பு.
- காளி- நாடகம் -கலைமகள் காரியாலயம் சென்னை- 1946 (இந்த நாடகம் நேரடியாக நூல்வடிவம் பெற்றது.)
- பிச்சமூர்த்தி கவிதைகள்- எழுத்து பிரசுரம், சென்னை- 1975
பிச்சமூர்த்தி நூற்றாண்டு விழாவை யொட்டி வெளியான நூல்கள்
- ந.பிச்சமூர்த்தி கதைகள்- 1- மதி நிலையம், சென்னை 600017 – ஆகஸ்ட் 2000 – நாற்பத்திரண்டு சிறுகதைகள்
அடங்கிய தொகுப்பு - ந. பிச்சமூர்த்தி கதைகள்- 2-மதி நிலையம் சென்னை 600017 ஆகஸ்ட் 2000 – நாற்பத்தைந்து சிறுகதைகள்
அடங்கிய தொகுப்பு - ந.பிச்சமூர்த்தி கவிதைகள் – பிச்சமூர்த்தி எழுதிய கவிதைகளில் தேர்ந்தெடுத்த 83 கவிதைகள் – மதி நிலையம், சென்னை 600017-ஆகஸ்ட் 2000; இந்த மூன்ற நூல்களுக்கும் பதிப்பாசிரியர்கள்: ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், அழகிய சிங்கர்.
- ந.பிச்சமூர்த்தி நினைவாக- தொகுதி1- தொகுப்பு: வெங்கட்சாமிநாதன்- மதி நிலையம்சென்னை 600017-2000
பிச்சமூர்த்தி வாழ்ந்திருந்த காலத்திலேயே அவரைப் பற்றி வெளியான பல கட்டுரைகளும் சில புதிதாக எழுதப்பட்ட கட்டுரைகள் மொத்தம் 37 கட்டுரைகள் கொண்டது. யொருளடக்கத்தில் காணப்படும் பெயர்கள் இந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் நவீன தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் திசையை நிர்ணயித்தவர்கள்.
- ந.பிச்சமூர்த்தி நினைவயாக – சிறுகதைகள் கட்டுரை கவிதைகள் தொகுதி-தொகுப்பு; எஸ். வைதீஸ்வரன் மதி நிலையம் சென்னை 600017- 2009
- ந.பிச்சமூர்த்தியின் கலை-மரபும் மனித நேயமும்- சுந்தர ராமசாமி, வானதி பதிப்பகம். சென்னை 600017-1991
- ந. பிச்சமூர்த்தியின் தோந்தெடுத்த கதைகள்- தொகுப்பு வெங்கட் சாமிநாதன் – சாகித்திய அக்காதெமி, சென்னை 6000113- 2000
- ந.பிச்சமூர்த்தி ஆய்வடங்கல்- & மீனாகுமாரி-மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 625001-1982.
முன்னுரை – மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.
மணிக்கொடி காலத்தில், மணிக்கொடி களத்தில் சிறு கதைகளை படைத்தவர்கள் கட்டுரைத் துறையிலும் ஈடு பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் ந. பிச்சமூர்த்தி, ‘பிக்ஷ’ என்ற புனை பெயரில் ‘மன நிழல்’ என்ற தலைப்பில் அவர் கட்டுரைகள் எழுதி வந்தார். பிச்சமூர்த்தி எழுதிய கட்டுரைகளுக்கும் மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளுக்கும் வித்யாசம் இருந்தது. வித்யாசம் உருவத்தில் மட்டும் இல்லை. தொனி, நோக்கு, வெளியீடு இந்த தன்மைகளிலும் வித்யாசம் இருந்தது. கட்டுரை என்கிற “எஸ்ஸே” ‘ஸ்கெட்ச் ‘ஸ்கிட்’ என்ற ஆங்கிலப் பிரிவுகளின் குணங்கள் இவற்றில் காணப்பட்டாலும் இந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஒரு புதுமைப் பாங்கு இவற்றில் காண முடிகிறது. மன ஓட்டங் களையும் இயற்கை வர்ணனையையும் தத்துவ நோக்கையும் கதையம்சத்தையும் ஒன்றுகூட கலந்திருக்கும் இவை தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய ‘ஷெனர்’ (genre) என்கிறோமே உருவப்பிரிவை தந்திருக்கின்றன. வ. ரா. வின் புதிய உருவக் கண்டுபிடிப்புகளான ‘நடைச் சித்திரம்’ ‘ஆளுக்குள்ளே ஆளு’ முதலியவை போன்றதாகும். ஒரு சம்பவமோ காட்சியோ அவரது மன நிழல் வார்ப்பில் அகப்புற அநுபவத்தை, ஒரு அடிப்படைத் தத்துவ தரிசனத்தை, பேருண்மையை வெளிப்படுத்துவதை, உணர்த்துவதை நாம் உணர முடியும்,
பிச்சமூர்த்தி வாழ்ந்த நாட்களிலேயே இதை வெளியிட வேண்டும் என்று விரும்பினார். நானும் விரும்பினேன். நடக்க வில்லை. அவர் முன்னுரை எழுதி இருந்தால் என்ன எழுதி இருப்பாரோ?
இந்த மனநிழல் தற்கால தமிழ் இலக்கியத்துக்கு ஒரு அபூர்வ சேர்க்கை.
சி. சு. செல்லப்பா
1-4-77
சென்னை.
ந.பிச்சமூர்த்தி
கும்பகோணத்தில் பிறந்த ந. பிச்சமூர்த்தி நீண்ட காலம் பிறந்த மண்ணில் இருந்து கொண்டே இலக்கிய தோழர்களுடன் சேர்ந்து சிறுகதை இலக்கியத்திற்கு புதுப்பொலிவை தந்தவர்.
அவர் எழுதிய கதைகளில் வடிவமும் உத்தியும் காலப்போக்குக்கு ஏற்றவாறு மாற்றமடைந்து அவரைச் சிறுகதை எழுத்தாளரின் முன்னணியில் வைத்துக் காண்பிக்கிறது. பல வகையான கருப்பொருள்களைக் கொண்ட அவரது கதைகளில் காணப்படும் ஓர் அடிப்படையான தத்துவநோக்கு அக்கதைகளுக்கு ஆழம் கொடுக்கிறது. அதனால் தான் க.நா.சு. “பிச்சைமூர்த்தியின் கதைகள் வேதாந்த தத்துவம் உடையது” என்று கூறி உள்ளார்.
“நடையிலும், உத்தியிலும் அவசியமற்ற போலிப் புதுமைகளின்றி எந்த விஷயத்தையும் அவர் பொலிவோடு சொல்லும் திறமை பெற்றிருந்தார். மனிதவாழ்வின் நியதியில் அசையாத நம்பிக்கை எப்போதும் கைகொடுக்கும் ஒரு நிதானப்போக்கு இரண்டும் சேர்ந்து பிச்சமூர்த்தியின் சில கதைகள் அமர இலக்கியங்களாகிவிட்டன” என்று சிட்டி-சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.
“எனக்கு எப்போதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்க ரீதியான அறிவுக்கு இரண்டாவது இடந்தான் தருவேன். ஆகையால், எப்போதுமே ஒரு திட்டம் போட்டு, குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதியது இல்லை …” தனது கதைகள் எழுதப்படுதலை குறிப்பிட்டுள்ளார். இந்த பார்வையோடு பார்க்கும்போது பிச்சமூர்த்தியும் கு.ப.ராவும் இவ்வகையில் மனித மனத்தின் ஆழத்தை அளந்துப்பார்த்தவர்கள் என்று உணர முடிகிறது.
கவிதை நடையால் நம்மைக் கட்டிப்போடும் பாங்கு இவரின் தனித்துவம். ‘சிறுகதை இலக்கணத்தைப் பயில இலக்கியமாக விளங்குவன பிச்சமூர்த்தியின் கதைகள்’ என்று சொன்னால் மிகை இல்லை.
– தஞ்சைச் சிறுகதைகள், தொகுப்புரிமை: சோலை சுந்தரபெருமாள், முதற் பதிப்பு: டிசம்பர் 1999, காவ்யா வெளியீடு, பெங்களூர்.
முன்னுரை – சி.சு.செல்லப்பா – காக்கைகளும் கிளிகளும், முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.
தற்கால தமிழ் இலக்கியத் துறையில் சிறுகதை, கவிதை ஆகிய இரு பிரிவுகளும் வளம் பெருக கணிசமாக பங்கு செலுத்தி இருப்பவர் ந. பிச்சமூர்த்தி.
அவரது நாலைந்து சிறுகதை தொகுப்புகளும் இரண்டு கவிதை தொகுப்புகளும் ஒரு நாடகமும் வெளி வந்திருக்கின் றன. அவர் இவை தவிர பல எழுதி இருக்கிறார். ஓரங்க நாடகங்கள், ‘மனநிழல்’ என்ற கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகளும் எழுதி இருக்கிறார்.
இவற்றோடு பிச்சமூர்த்தி சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருக்கிறார். அவற்றை தொகுத்து ‘காக்கைகளும் கிளிகளும்’ என்ற இந்த கதை தொகுப்பு வெளிவருகிறது. இவை 1934 முதல் 1968 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை ஆகும்.
பிச்சமூர்த்தி 1900ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி பிறந் தவர். ஏழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்து 1967-ல் டிசம்பர் 4-ம் தேதி காலமானார்.
சி.சு.செல்லப்பா.
15-3-77.
சென்னை.