கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 20, 2025
பார்வையிட்டோர்: 2,083 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேலாயுதம் சந்தையிலிருந்து புறப்பட்டான். மூட்டை தலையில் ஏறியது. வீட்டிற்குச் சரியாக எட்டு மைல் நடந்தாக வேண்டும். 

பாரம் தலையை நெரித்தது. கழுத்தே முறிந்து விழு வது போன்ற பிரமை. தலையின் இரு பக்கங்களையும் கிட்டிபோட்டு நெருக்கிப் பிடிப்பது போல ஒரு விறைப்பு. இத்தனைக்கும் மேலாக அடிவயிற்றிலிருந்து நெருப்புப் போலக் கிளம்பிய அகோரப் பசி. 

காலையில் பொன்னம்மா தந்த கோப்பிதான். வயிறு கடகடா’ என்று தந்திப் பாஷையில் தன் அவல நிலையை அறிவித்தது. அந்தச் செய்திக்குப் பதில் கொடுக்கக் குறைந்தது, இருபத்தைந்து சதமாவது வேண்டாமா? 

சந்தையிலேதான் எத்தனை வகையான உணவுகள் ! அவித்த மரவள்ளிக்கிழங்கு, வாய்ப்பன், பனங்காய்ப் பணியாரம் ! அடடா! மனிதனின் கண்களுக்குக் கண்ணியல்லவா வைக்கின்றன? 

வேலாயுதத்தின் வாயில் நீர் ஊறியது. மரவள்ளிக் கிழங்கையும், பச்சை மிளகாய்த் துவையலையும் உருசித்து, உருசித்துச் சாப்பிடுவதுபோல அவன் கனவு கண்டான். ஆனால், கனவு கனவாகவே நின்றுவிட்டது! வாய்க்கும் வயிற்றிற்கும் அடிமையாகும் நிலையிலா அவன் இருக்கிறான்? அவன் கையையே எதிர்பார்த்திருக்கும் பத்துச்சீவன்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டுமே!

இப்படியாகக் காலையிலிருந்து மாலைவரை பாசத்திற்கும். கடமைக்கும் நம்பிக்கையூட்டி, அதே சமயத்தில் வயிற்றை ஏமாற்றிக்கொண்டு நேரத்தைப் போக்கி விட்டான் அவன். 

ஒரு விதமாக வியாபாரமும் முடிந்தது. வேட்டித் தலைப்பின் ஒரு மூலையிலே முடிந்து வைத்திருந்த பணத் தோடு, அன்றைய பங்கான பத்துச் சதத்தையும் சேர்த் துப் பார்த்தபொழுது அவன் முகத்திலே ஓர் அலாதி யான மலர்ச்சி ஏற்பட்டது. “அப்பாடா! பத்து ரூபா சேர்த்தாய் விட்டது.” என்று நிம்மதிப் பெருமூச் சோடு சொல்லிக் கொண்டான். கடந்த நூறு நாள்க ளாய் வயிற்றிற்கு வஞ்சகம் செய்து மிச்சம் பிடித்த காசல்லவா அது? 

“பாவம்! பொன்னம்மா! நான் மத்தியானத்தில் அவித்த மரவள்ளிக்கிழங்கு வாங்கிச் சாப்பிடுகிறேன் என்றதை நம்பி விட்டாள்.” 

இப்படி நினைத்துக் கொண்டபொழுது சிரிப்புச் சிரிப் பாய் வந்தது அவனுக்கு. 

பொன்னம்மா அவனுக்குச் சொந்த மைத்துனி கடந்த பன்னிரண்டு வருஷங்களாய் ‘மனைவி’ என்ற ஸ்தானத்தில் அவன் குடிசையிலே அவள் இருந்தாலும், சின்ன வயதிலே அவர்கள் ஒன்றாய்க்கூடி விளையாடித் திரிந்தவர்கள் தாம்! 

அந்தக் காலத்திலேகூடப் பொன்னம்மாவை ஏமாற்றுவதில் அவனுக்குப் புரிபடாத ஓர் உற்சாகம்! இருவரும் கீச்சுமாச்சுத் தம்பலம்’ விளையாடுவார்கள். மண்ணைக் கைகளால் கூட்டி கீச்சுமாச்சுத் தம்பலம் தீயா மாயாத் தம்பலம்” என்று சொல்லிக் கொண்டே ஈர்க்கைக் கையிடுக்கிலே ஒளித்துவிடுவான் வேலாயுதம். பொன்னம்மா மண்ணைக் கிளறிக் கிளறி அலுத்துவிட்ட பிறகுதான், ஈர்க்கைக் காட்டுவான். நினைவை இனிக்க வைக்கும் பழைய சம்பவங்கள் அவை. 

வேலாயுதம் பெருமூச்சோடு எழுந்துபோய்ச் சில்ல றையை மாற்றித் தாளாக்கினான் ; அதோடு வீட்டிற்குத் தேவையான சாமான்களையும் வாங்கினான். இந்தக் காலத்திலே ஆறு ரூபாவுக்குச் சந்தை முழுவதையுமே வாங்க முடியுமா என்ன ? ஏதோ ‘பொன் வைக்கிற இடத்திலே பூ வைப்பது போல’ அவள் சொல்லிவிட்ட சமான்களிலும் அரைக்சுரைவாசிதான் வாங்க முடிந்தது. 

ஒருபடியாகச் சாமான்களும் வாங்கியாயிற்று. ஒரே ஒரு பத்து ரூபாவைத் தவிரத் துடைத்து விட்டது போலக் ‘கொட்டப் பெட்டி’ வெறுமையாகவே இருந்தது. 

வேலாயுதம் நடந்துகொண்டிருந்தான். சிந்தனையோ அந்தப் பத்து ரூபாவின் மேலேயே வலைபின்னிக் கொண்டிருந்தது. 

பத்து ரூபா ! அதில் ஒரு பெரிய சரித்திரமே புதைந்து கிடக்கிறது. வேலாயுதம் கொட்டப்பெட்டியை ஒரு தடவைக்கு, இரண்டு தடவையாய் நசித்துப்பார்த் தான். அதற்குள் மடித்து வைக்கப்பட்டிருந்த தாள் ஓர் இன்பக் கிளுகிளுப்பையே ஏற்படுத்தியது. வேலா யுதம் சிந்தித்தான், 

ஊரிலே அவன் செய்யாத வேலைகளே இல்லை. நாழி அரிசிக்கு நாய்படாத பாடுபட்டான், அவன். தோட்ட வேலையிலே தொடங்கி, வேலி அடைப்பது, கிடுகு வண் டிக்காரனுக்கு உதவியாளனாய்ப் போவதுவரை எல் லாமே செய்து பார்த்து அலுத்துவிட்டான். குடும்பம் பெருகியதுபோல, வறுமையும் பெருகியதுதான் கண்ட பலன்! 

இந்த நிலையிலே, உழைப்பிற்காக மாங்குளத்திற்குப் புறப்பட்டதை நினைத்துக் கொண்டான். போவதற்குப் பணம் வேண்டுமே? அழைத்தவர்கள் நீ அங்கே வா. வயலிலை வேலை பிடிச்சுத் தாறம்” என்று மட்டுந்தானே சொன்னார்கள்? பணத்திற்கு வழி என்ன? 

இரண்டு நாள்களாய் வேலாயுதம் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டான். பிரயாணச் செல விற்கு ஒன்று கடன்படவேண்டும்; அல்லது களவு எடுக்க வேண்டும். இரண்டுமே அவனுக்குத் தெரியாத விஷயங் கள். வேறுவழி ஒன்றுமே விளங்கவில்லை. வீட்டிலே பசி, முணுமுணுப்பில் தொடங்கி, ஓலமாய் வளர்வதையும் சகிக்கமுடியவில்லை. 

அப்பொழுதுதான் பொன்னம்மா ஒரு யோசனையைச் சொன்னாள். அதனைக் கேட்டபொழுது அவனுக்கு ஏற் பட்ட அதிர்ச்சி இருக்கிறதே? அதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இப்பொழுது நினைத்தாலும் மயிர் சிலிர்க்கிறது. 

ஒருவன் எதையும் செய்யலாம். பெண்சாதியின் தாலியை அடகு வைக்கலாமா? பரம்பரை பரம்பரை யாய், பவித்திரத்திற்கு எடுத்துக் காட்டாய் விளங்கி வரும் ஒன்றை அடகுக் கடைக்காரனிடம் கொடுப்பதா? வேலாயுதம் இப்படித்தான் நினைத்தான். கடைசியில், “சேச்சே! அது கூடவே கூடாது என்று முடிவும் செய்து விட்டான். 

“அவளின் இரட்டைவடச் சங்கிலியிலிருந்து மூக்கு மின்னிவரை எல்லாவற்றையும் விற்றேன். அதிர்ஷ்டம் வரும், வரும் என்று எண்ணித் தோட்டத்தில் கொண்டு போய்க் கொட்டினேன். ஒவ்வொரு முறையும் புயலும், மழையும் வந்து எல்லாமே பாழாகிவிட்டன. கடைசியில் தோட்டமும் போய்விட்டது.” 

“அவைதான் போகட்டும். தாலியிலுமா விளை யாட்டு? சரி ! மனத்தைக் சுல்லாக்கி, நம்பிக்கையை யும் பொசுக்கிவிட்டுத் தாலியை அடகு வைக்கப் போகி றேன் என்றே வைத்துக்கொள்வோம். அடகு வாங்கு பவன்கூட என்னை ஏளனமாகப் பார்ப்பானே? அந்தப் பார்வை ஒன்றே என் உயிரை எடுக்கமாட்டாதா?” என்று எண்ணி வேலாயுதம் மனம் புழுங்கினான். வேதனை அவன் நெஞ்சைக் குத்திக் குதறிய வண்ணம் இருந்தது. மனச்சாட்சி சிந்தனையைக் கீறிக் கிழித்துச் சித்திரவதை செய்தது. 

எல்லாம் சில நிமிஷங்களுக்குத்தான். வேறு வழி எதுவும் புலப்படாத நிலையில், பொன்னம்மாவின் தாலி அடகுக்கடைக்காரக் கந்தரின் உடுக்குப் பெட்டியைச் சரணடைந்ததுதான் மிச்சம்! 

வட்டி என்ற செயற்கைச் சுவாசத்தில் வாழ்ந்த கந்தருக்குக்கூட வேலாயுதத்தின் நிலை பரிதாபமாகத் தான் இருந்தது. ஆனால், அவரும் பிழைக்க வேண்டுமே ! தாலிக்கு ஈடாக ஒன்பது ரூபா வாங்கி வந்தான். 

ஆயிற்று. நாலாவது மாதமும் இன்றோடு முடி கிறது. முதலும் வட்டியுமாக எப்படியோ பத்து ரூபா சேர்த்தும் ஆயிற்று. 

‘கடமை தீர்ந்தது’ என்ற மனக் குதிப்பிலே வேலா யுதம் பாரத்தை மறந்து நடந்தான். அந்தப் பத்து ரூபாவின் மேற் பரப்பப்பட்ட நம்பிக்கை என்ற பூக் குவியலின்மீது, நடப்பது போலக் கம்மீரமாய் நடந்தான். 

பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. தை மாதத் துப் பனிப்புகார் வானத்துக்கும் பூமிக்குமிடையே மண்டலமிட்டது. வெளிச்சக் கம்பங்களைச் சுற்றி, ஈசல் கள் ‘ஙொய்’ என்று சப்தமிட்டுப் பறந்தன. வானத்து நீலப்பட்டாடையின் ஒரு மூலையிலே குளிர்சாந்து வட்ட மாய் வழிந்து தெறித்துக் கிடந்தது. 

தெருவின் இரண்டு பக்கங்களிலும் இருந்த வயல் கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. பயிர்த்தலையே தெரியாத அவ்வளவு வெள்ளம். 

நேற்றும், இன்றுந்தான் மழை இல்லை. அதற்கு முதல் மழையா பெய்தது? மேகத்தைத் தாறுதாறாய், வாழைத் தாறைக் கிழிப்பது போலக் கிழித்துக் கொண்டல்லவா மழை கொட்டியது? யாழ்ப்பாணக் கமக்காரனின் எதிர்காலக் கனவுகள் எல்லாம் அந்த மழையோடு சேர்ந்து சுரைந்துதான் போய்விட்டன. இனி அடுத்த வருடம்வரை யாழ்ப்பாணக் கிராமங்களில் கலியாணச் சந்தடி. இருக்காது. இந்த மழை வேண்டு மென்றுதானா யாழ்ப்பாணத்தார் ‘கொடும்பாவி ‘ கட்டி இழுத்தார்கள் ? 

நாலு மாதங்களின் முன்னால் மாங்குளத்தில் பெய்த மழையோடு இந்த மழையை ஒப்பிட்டுப் பார்த்தான். அந்த மழைக்கு இந்த மழை ஒரு தூசு ! 

‘தாலி! தாலி ! தாலி ! ‘ இதை மறக்கவே முடி யாதோ ? வேலாயுதத்தின் நெஞ்சை அந்த நினைவு சாறாக அல்லவா பிழிகிறது? அவன் தாலியை மீட்கத் தான் போகிறான். ஆனால் ஆனால்… செய்த அந்தப் பிழை மறைந்துவிடப் போகிறதா? 

இத்தனைக்கும் காரணம் பொன்னம்மாதானே? அவள் தூண்டாவிட்டால் அவன் இதைச் செய்திருப் பானா ? ஏன் அவளைக் கோபிக்க வேண்டும்? அவள் செய்த தியாகங்களுக்குப் பிரதியுபகாரமா இது? 

வேலாயுதத்தின் கால்கள் தளர்ந்தன. தலையில் இருந்த மூட்டையின் பாரம் திடீரென நூறுமடங்கு கூடிவிட்டது போல இருந்தது. மூட்டையை வலது தோளுக்கு மாற்றினான். இருந்தாற்போலிருந்து நெஞ் சைக் குடைவது போன்ற வலி’ ஏற்பட்டு வளர்ந்தது. அடிக்கடி இந்த வலி ஏற்படுவது வழக்கந்தான். ஆனால், இன்றோ அதைத் தாங்க முடியவில்லை. அலுப்போடு மூட்டையை இறக்கி வைத்துவிட்டு ஒரு விளக்குக் கம் பத்தின் கீழ் உட்கார்ந்தான், 

நோவுக்கிடையிலும் நினைவுகள் பொன்னம்மாவைச் சுற்றியே படர்ந்தன. அவள் மிகுந்த அழுத்தக்காரி! எந்தத் துன்பத்தையும், தன் இதழ்க்கடையிலே சிறை வைத்து, முறுவல் பூப்பதில் அவள் வல்லவள் ! இரண்டா யிரம் கன்றுப் புகையிலையும் மழையில் அழுகி நாசமான போதும், அவள் எப்படிச் சகித்துக் கொண்டு, ஒன்றும் நடவாதபடி முகம்மலர்ந்து திரிந்தாள்! 

பொன்னம்மா அழுததை அவன் கண்டதேயில்லை. வேதனைகள் புயலாக வந்து மோதியபொழுதெல்லாம் தன் இமைக்கதவுகளை மூடி, நெஞ்சைப் பாதுகாத்துக் கொண்டாள் அவள். 

வேலாயுதம் வெறுப்போடு எழுந்தான். விறைத்துப் போன கால்களை உதறிவிட்டுக் கொண்டான் பில் வலக்கையை வைத்து, உடலை வளைத்து, இடக்கையை இடுப் உதறினான். இடுப்பில் ‘படக்’ என்றசப்தம். இடுப்பே முறிந்து விட்டதோ? இருக்காது. ஆனால் இடுப்பில் ஏற்பட்ட வேதனை ? அதனையும் மீறிய நெஞ்சுவலி. ‘உம்! எப்படியும் வீட்டிற்குப் போய்த்தானே ஆக வேண்டும்?’ 

வேலாயுதம் மூட்டையைத் தூக்கித் தலையில் வைத்த படி மெதுவாக நடந்தான். 

(2) 

”பொன்னு! இண்டைக்கு நான் ஓர் உண்மை சொல்லப் போறன். சொல்லட்டே? கோபிக்க மாட்டாயே? என்ன? தலையை ஆட்டுறியா?” 

“உன்ரை தாலியை அடகுவைச்ச நாளிலிருந்து எனக்கு ஒரே வேதனை. மரம் மாதிரி உனக்கு முன்னாலை இருந்து கொண்டு உன்னை அறுதலிக் கோலம் பண்ணி யதை நினைக்க…” 

“பஞ்சானுங் குஞ்சுமாய் எட்டுச் சீவன்களுக்குச் சாப்பாடும் குடுத்து, பத்து ரூபா மிச்சமும் பிடிக்கிறது இலேசுப்பட்ட சங்கதியே ? அதனாலைதான் மத்தியானத் திலை சாப்பிடுறதை விட்டுட்டன். ”சந்தையிலை கிழங்கை முழங்கைச் சாப்பிடுறனான்” என்று உனக்குச் சொன் னது ஞாபகமிருக்கே? அது பொய்! உண்மையிலை நான் ஒண்டும் சாப்பிடுறதில்லை. அந்தச் சாப்பாட்டுக் காசைக் கொஞ்சங் கொஞ்சமாய் மிச்சம் பிடிச்சுத்தான் இண் டைக்கு வாறவழியிலை கந்தர் வீட்டுக்குப் போய்த் தாவியையும் மீட்டுக்கொண்டு வந்தனான்.” 

“எங்கை உன்ரை முகம் ? அழுகிறியே? ஆ இல்லை ! நீ அழேல்லை! ஆனா ஏன் கண்ணை மூடியிருக் கிறாய்? பொன்னு! நீ வேணுமெண்டால் அழு. ஆனால், உன் கண்ணை மட்டும் மூடாதை. எனக்குத் தெரியும் உன்ரை வேதனையெல்லாம் இரண்டு இமைக்குள்ளையுந் தான் எண்டு எனக்குத் தெரியும். சத்தியமாய் உன்ரை அத்தானாணை உன்ரை கண்ணைத்திற. திறந்திட்டியே? அதுதான் சரி.” 

“அப்பாடா! நான்பட்ட கடன் இண்டைக்குத் தான் தீர்ந்தது.” 

இதைச் சொல்லியதும் வேலாயுதம் பொன்னம்மா வின் மார்பிலே தொங்கிய தாலியை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். 

பொன்னம்மா தன் கரங்களை அகல நீட்டி வேலா யுதத்தைத் தழுவிக்கொண்டு, அவனது மார்பிலே நெஞ் சைப் புதைத்து முதன் முறையாகத் தன் கண்களி லிருந்து திறந்த நீர் மடையினால் அவன் மார்பைக் கழுவினாள். 

வேலாயுதத்தின் நெஞ்சுநோ சிறிது சிறிதாகக் குறையலாயிற்று. அவன் நீண்ட பெருமூச்சு விட்டான். அன்றிரவு அவர்கள் இருவரும் நெடுநேரம் விழித் திருந்தார்கள். 

– தினகரன், 1961.

– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *