அர்த்தமுள்ள தீபாவளி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2025
பார்வையிட்டோர்: 209 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வருஷத்துக்கு ஒரு தடவை வருவது தீபாவளி, அந்தத் தீபாவளியைச் சிறப்பா கொண்டாடலாம்னு ஆசைப்பட்டா வேண்டாம் வேண்டாம்னு ஏன்பா தடை சொல்றீங்க… என்னோட மற்ற நண்பர்கள் எல்லாம் அவுங்க பண்டிகையை எவ்வளவு சிறப்பா கொண்டாடறாங்க… நீங்கதான் எங்களை இப்படி இம்சை பண்றீங்க” என்று கோபத்துடன் சொல்லிக்கொண்டே உணவு மேசையில் இருந்து எழுந்து போனான் அருண்குமார். அவனுக்கு அவனது தீபாவளி திட்டம் தவிடு பொடியானதில் பெரிய ஏமாற்றம்! அதனால் அப்பாவிடம் கோபம்..! உணவின்மேல் கோபம்!

உர்ரென்று சோபாவில் உட்கார்ந்திருக்க, அம்மா இப்போது அப்பாவைப் பிடித்துக் கொண்டாள். “உங்க அப்பா அம்மா காலத்தில் நீங்க தீபாவளி கொண்டா டினதுக்கும், இப்ப தீபாவளி கொண்டாடுவதற்கும், நெறைய வித்தியாசம் இருக்குங்க… அப்ப அவுங்கள்லாம் வறுமையில் வாடினாங்க, அதனால் சிக்கனமா கொண்டாடினாங்க. இப்ப நாமெல்லாம் வசதியா இருக்கோம், கை நெறைய வருமானம் வருது. ஏன் சந்தோஷமா கொண்டாடக் கூடாதா? ஏன் தாராளமா செலவு செய்யக் கூடாது.”

அவள் பேசிக் கொண்டிருக்க அவர் தனது சாப்பாட்டில் கவனமாய் இருந்தார். உணவை முடித்துக் கொண்டு எழுந்து போய்க் கையைக் கழுவித் துடைத்துக் கொண்டு வந்து அருணுக்கு நேராய் அமர்ந்தார். மனைவி மரகதமும் கூடவே வந்து உட்கார்ந்து தனது வம்பைத் தொடர்ந்தாள். அவனுக்கு உதவியாய் வானொலியும் சேர்ந்து கொண்டது.

“பார்த்தீங்களா… பார்த்தீங்களா.. எத்தனை வகை கடைகள் எவ்வளவு மலிவு விற்பனை… எல்லாமே நம்ம மாதிரி தீபாவளி கொண்டாடறவங்களுக்காகத் தானே சொல்றாங்க. செலவு செய்யாதீங்க, ஆடம்பரமா கொண்டாடதீங்கன்னா சொல்றாங்க…

“பிள்ளைங்க இதைக் கேட்டா அவங்களுக்கும் ஆசை வராதா என்ன… அவுங்களுக்காக நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகத் தெரிஞ்சுக்குங்க. இந்த வயசில உங்களுக்கு இவ்வளவு கோபமிருந்தா உங்க பிள்ளைக்கு எவ்வளவு கோபம் வரும்..”

அவர் அவளைப் புன்னகையோடு பார்த்தார். மகனையும் பார்த்தார். கொஞ்சம் மௌனம் சாதித்தார்.

“நீங்க ரெண்டு பேரும் பேசினால் போதுமா. இந்த வீட்ல இன்னொரு உறுப்பினரும் இருக்கிறாங்களே அவுங்களும் வந்ததும் பேசுவோம்… அப்புறம் சமாதானமா.. சண்டையான்னு முடிவு பண்ணுவோம்.”

சொல்லிக் கொண்டே மேசையில் கிடந்த தமிழ் முரசைக் கையில் எடுத்து அதைப் படிக்க ஆரம்பித்து விட்டார். அம்மா விசுக்கென்று எழுந்து அடுப்படிக்குப் போனாள். அவள் பின்னாலேயே போன அருண் அம்மாவைக் கெஞ்ச ஆரம்பித்தான். “நீ சொல்லுமா…நீ சொன்னா அப்பா கேட்பாங்கம்மா” என்று முணகத் தொடங்கினான். பத்திரிகையில் படித்த சில விஷயங்கள் அப்பாவின் மனத்தை வருந்தச் செய்யக் கூடியதாக இருந்தாலும் நல்ல சில செய்திகளையும் கண்டான்.

அண்மையில் நீ சூன் சவுத் சமூக நிலைய இந்திய நற்பணிக் குழுவும்இணைந்து உள்ளூர் பேச்சாளர்களைக் கொண்டு படைத்த பட்டிமன்றமும் அவர் கண்ணி லிருந்தும் தப்பவில்லை. “இன்றைய இளைஞர்களின் கலாசாரச் சீரழிவும் குறைந்தபாடில்லையே!” என்னும் கருத்துக்கிணங்க “மேலைநாட்டுச் செல்வாக்கினால்தான் தமிழர் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது” என்னும் தலைப்பையே பேச்சாளர்கள் ஒட்டியும் மறுத்தும் வாதிட்ட செய்தி அவரின் மனத்தில் அசைபோட்டது.

மேல்நாட்டு நாகரிக மோகத்தில் தங்களையும் தங்கள் கலாசாரப் பண்புகளையும் மறந்து வரும் இளையர்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற சிந்தனையுல் ஆழ்ந்தவரை அப்போதுதான் பணி முடிந்து வீட்டுக்குள் நுழையும் மகள் வளர்மதியின் இனிய முகமும் கனிவான குரலும் வசந்தத்தில் ஆழ்த்தியது.

“மாலை வணக்கம் அப்பா… தேசிய நூல் நிலையத்தில் கொஞ்சம் அதிகமான வேலைகள் வந்துவிட்டன. அதனால் தாமதமாகிவிட்டது. அப்பா சாப்பிட்டாச்சு இல்லையா..?

கேட்டுக் கொண்டே அவர் அருகில் வந்து சோபாவில் அமர்கிறாள். அப்பாவுக்காக இனிமையும் கனிவும் அவளிடம் காணப்பட்டபோதும் உண்மையில் அவள் சோர்ந்துதான் இருந்தாள். இருந்தாலும் தன் சோர்வை வெளிக்காட்டாது பம்பரமாய்ச் சுழல்வது அவளது இயல்பு.

மகளை அன்போடு பார்க்கிறார். ஆதரவாய் அவளின் தலையில் கை வைத்துத் தடவுகிறார்.

“அப்பா சாப்பிட்டேன்மா… நீ போய் குளிச்சிட்டுச் சாப்பிட்டு வா..” என்கிறார்.

வளர்மதி தன் கையிலிருந்த சில புத்தகங்களை மேசை யில் வைத்துவிட்டுப் பிறவற்றுடன் உள்ளே போகிறாள்.

அம்மாவும் தம்பியும் அடுப்படியில் இருப்பதைப் பார்த்து ஒரு புன்னகையை வீசியவளாய்ப் பாத்ரூமுக்குள் நுழைகிறாள்.

கணேஸ்வரன் மரகதம் தம்பதிகளின் வாரிசுகள் இந்த வளர்மதியும் அருண்குமாரும், வளர்மதி படித்து மொத்தம் பட்டம் பெற்ற “உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் ஓர் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாள். அவள் தம்பி தன் படிப்பை நிறைவு செய்யும் கட்டத்தில் “குயின்ஸ் டவுன்’ உயர்நிலைப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தான்.

கணேஸ்வரனின் மனைவி மரகதம் ஒரு பேரங்காடியில் விற்பனையாளராக இருந்தாள். கணேஸ்வரன் அரசாங்கப் பொது மருத்துவமனையில் சுகாதாரத் துறையில் மூத்த அதிகாரியாய்ப் பணியாற்றி வந்தார்.

அளவான குடும்பம், அறிவான குடும்பம், மற்றவர்கள் பாராட்டும் வகையில் பண்பாடு மாறாமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு மிக்க மனிதர் கணேஸ்வரன். அவருக்கு எல்லாமே அர்த்தமுள்ளதாகவும் அறிவார்த்த மாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புள்ளவர். ஆனால் அவர்தம் மனைவி கொஞ்சம் தாராளம்.

குழந்தைகளைக் கட்டுப்படுத்தக் கூடாது. அவர் களுக்குத் தேவையில்லாமல் கட்டளை பிறப்பிக்கக் கூடாது என்பவள். காலத்துக்குத் தகுந்ததுபோல் பிள்ளைகள் வாழ வேண்டும் என்ற போக்கில் அவர்களின் சந்தோஷத்தை ஊக்குவித்து அதன்வழி அவர்களின் அன்பைப் பெறுபவள். அவளின் ஒரே மகன் அருண் அதைத்தான் பெரிதும் விரும்பினான். அதனால்தான் தீபாவளியைத் தன் விருப்பம் போல் கோலாகலமாகக் கொண்டாட விரும்பினான். அதற்காக ஆர்ப்பாட்டமான திட்டம் ஒன்றையும் தீட்டினான். அதை அவன் அமல்படுத்தப் புறப்பட்டபோது, அங்கே அப்பா குறுக்கிட்டு நிற்கிறார்.

தீபாவளி ஓர் உல்லாச பண்டிகை, நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட அந்தச் சந்தோஷத்தைக் கொண்டாடும் நாள். அதை வெளிப்படுத்த ஆட்டம் பாட்டம் மது, மாமிசம் என்றெல்லாம் கூத்தடிக்க வேண்டும். மற்ற நண்பர்களை மகிழ்விக்க இதை எல்லாம் செய்யாவிட்டால் அவர்கள் விழாக்களிலும், பண்டிகைகளிலும் நம்மை அழைக்கமாட்டார்கள் என்று அவன் நினைத்தான். அப்பா அதை மறுத்தது அவனுக்கு வெறுப்பை உண்டாக்கியது.

வளர்மதி சாப்பிட்டு முடித்து அப்பாவிடம் வந்தாள். கையிலிருந்த திருக்குறளை மேசையில் வைத்துவிட்டு அப்பா அவளிடம் பேசத் தொடங்கினார்.

“வயசு கூடிப்போனதும் வாழ்க்கையில் சில விஷயங்கள் எனக்குப் புரியாமல் போகுது மகளே… இப்ப உள்ள பிள்ளைகளுக்கு நீ தீபாவளியைப் பத்தி என்னம்மா சொல்றே உன் மாணவர்கள் என்ன சொல்றாங்க.”

மகள் அப்பாவை அதிசயமாய்ப் பார்த்தாள் அப்பாவின் கேள்வி ஆச்சர்யத்தை உண்டுபண்ணினாலும் உடனடியாக அவருக்குப் பதில் சொன்னாள்.

“சொல்லவே கஷ்டமா இருக்குதுப்பா… இப்ப உள்ள நம்ம பிள்ளைகளுக்கு நம்ம நாட்டு வரலாறு தெரியல்ல. நம்ம நாட்டுத் தலைவர்கள் யாருன்னு தெரியல்ல… ஆனா எங்கேயோ இருக்கிற சினிமாக்காரன் பேரும், அவன் ஆடுற ஆட்டமும் பாட்டும் அப்படியே தெரியுது. அதுகள குற்றம் சொல்லிப் பிரயோசனம் இல்லப்பா… இன்னிக்கும் கூட ஒரு இந்துக் குழந்தை தீபாவளின்னா என்ன டீச்சர்ன்னு என்னைப் பார்த்துக் கேட்கிறா. தீபாவளிக்கு ஏன் பலகாரம் புதுச் சட்டை எல்லாம் வாங்குறாங்கள்னு கேட்கறாங்க.. அதைப் பெரியவங்க பிள்ளைகளுக்குச் சொல்லாம விடறதாலதான் இந்தக் குறைகளெல்லாம் வருதுன்னு நினைக்கிறேன்.

“நம்ம நூலகங்களில் பலமுறை அலசிப் பார்த்ததில் மாணவர்கள் தமிழ்ப் புத்தகத்தை மிகக் குறைவாகவே எடுத்து வாசிக்கிறாங்க. சிங்கப்பூர் படைப்புகள் இன்னும் புதுமை மாறாமல் தூசு படிந்து கொண்டுதான் இருக்கு. ஆசிரியர்க்கு முன்பே பெற்றோர்கள்தாம் வாசிக்கும் பழக்கத்தைக் கத்துக் கொடுக்கணும்னுதான் என் மனசுல பட்டதைச் சொன்னேன்பா…

“தீபாவளி என்று சொல்லுகிறபோது அது எல்லோ ராலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிற திருநாள். ஒளி என்பது தீபம், தீபாவளியை ஒளித்திருநாள் என்றே அழைக்கிறோம். சாதாரணமாய் இறைவனை வணங்கும் போது சூடம் ஏற்றித் தீபாராதனை காட்டி வழிபடுவதாகும். நன்றாகக் கூர்ந்து கவனித்தால் அதில் ஓர் ண்மையை விளக்கும். சூரியன் ஒரு நெருப்பு அதாவது ஒளிக்கோளம். எல்லாம் வல்ல பரம்பொருளான கடவுளும் அவனே சூரியன் தான்னு நீங்கதான்பா எனக்குக் கத்துத் தந்தீங்க.

“அறியாமை இருளைப் போக்கி, அகமும் புறமும் சுத்தமா இருக்க ஆன்மீக ஒளியை ஏற்றி வணங்கும் இந்தப் பண்டிகை அன்புத் திருநாள்தான்னு நான் மாணவர் களுக்குச் சொன்னேன்.

“இதுக்காக ஆர்ப்பாட்டம் ஆரவாரமெல்லாம் தேவையில்லை. அதிகாலையில் எழுந்து குளிச்சி சுத்தமான ஆடையுடுத்தி ஆண்டவனைத் தரிசித்துப் பெரியவங்கள, பெற்றோர்களை வணங்கி ஏழைகள், அங்கவீனர்கள் முதியோர்களைப் பார்த்து அவர்களுக்குத் தன்னால் முடிந்த பரிசுகளைக் கொடுத்துச் சந்தோஷமா இருக்கணும்னு சொன்னேன். குழந்தைகள் ஆர்வமா கேட்டாங்க..”

“ஏம்மா அப்படிச் சொன்னே…” இடைமறித்தார் கணேஸ்வரன்,

“ஆமாம்பா.. வசதியா உள்ளவங்க, எப்பவும் எதையும் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ச்சியா இருக்கிறவங்களுக்காக விருந்தும் வேடிக்கையும் வெச்சிப் பெருமைப்படறதை விட இப்படிப்பட்டவங்களுக்கு அந்தச் கொடுத்தா அதுதான் உண்மையான மகிழ்ச்சியைத் தரும், சந்தோஷத்தைக் நிலையான பெருமையைத் தரும்னு சொன்னேன்பா… வளர்மதி முடிக்கவில்லை. அருண் நடந்து வந்து அப்பா காலடியில் உட்கார்ந்தான்.

“என்னை மன்னிச்சிடுங்கப்பா.. என் என் மன இருள் ஓடிப்போச்சு..அறியாமையினால் பெரிய தப்பைச் செய்ய இருந்த என்னை அக்காவை வெச்சு திருத்திட்டீங்க… நான் இனி அர்த்தமில்லாம எதையும் செய்ய மாட்டேன்” என்கிறான். அம்மா அதிசயமாய்ப் பார்க்க அப்பா குழந்தைகளை ஆரத்தழுவி வெற்றிப் புன்னகை பூக்கிறார்.

– தமிழ் முரசு தீபாவளி சிறப்பிதழ் 10-11-96

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *