இடுக்கண் இன்பத்தின் பாதை




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘இடமறிந்து வாய்மை பகர்க,’ என்னும் நெறி முறை மறந்து ஒரு குறிகாரன், ஓர் அரசன் கோள் வட்டப்படி அவனுக்கு வரும் தீமை ஒன்றை அறிந்து அவனிடம் கூறினான். அரசன், அஃது அவன் கோள் நூலிற் கண்டது என்று கொள்ளா மல், அவனைத் தூக்கிலிடும்படி உத்தரவிட்டான்.
குறிகாரன் மலைப்படைந்து இன்னது செய்வ தென்று அறியாது கலங்கினான். அப்போது அரச னுடைய விகடன் அவனுக்கு ஒரு வழி கூறினான். அதன்படி அரசனிடம் சென்று மிகவும் வணக்க மாக அடிபணிந்து, “அரசே, நான் ஓர் ஏழை. இறந்தால் வருந்துவதற்குக்கூட ஆளில்லை. நான் இறக்கச் சிறிதுந் தடையில்லை ; ஆனால் என் இறப் புடன் இந்த நாட்டின் நிலைமையும் பிணைக்கப்பட் டிருக்கிறதே! அதனால்தான் கலங்குகின்றேன்,” என்றான்.
அரசன், “உன் இறப்புக்கும் நாட்டிற்கும் அப் படி என்ன பிணைப்பு?” என்று கேட்டான்.
குறிகாரன், “அரசே! நான் பிறந்த நாளையும் கோளையும் அடுத்தே இந்நாட்டு மன்னராகிய தங் கள் நாளும் கோளும் இருக்கின்றன; என் வாழ் நாளுக்குமேல் சரியாக ஓராண்டு தங்கள் வாழ்நாள் மிகுதி உடையது; ஆகவே, என் முடிவு தங்கள் நலனைக் குறைத்தலாகாதே என்பதுதான் என் கவலை; இதை யறிந்த என் நண்பர்களாகிய நாட்டு மக்களும் கவலைப்படுகின்றனர்,” என்றான்.
குறிகாரன் எதிர்பார்த்தபடி அரசன் அவன் தண்டனையை நிறுத்திவிட்டான்.அது மட்டுமன்று; அரண்மனைமருத்துவர் அரசனது உடல் நலத்தைப் பார்த்து வருவது போலவே குறிகாரன்உடல் நலத் தையும் பார்த்து வரவேண்டும் என்று அம்மருத்து வருக்கு உத்தரவாயிற்று. இதனாற் குறிகாரனுக்கு எத்தகைய குறைவுமில்லாமல் அரசியலிலிருந்து பொருள் உதவியும் கிடைத்து வந்தது.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.