பொருள் செயல்வகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 2,558 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

செல்வத்தைச் சம்பாதிக்கும் முறை

இராசராசன் தன் காலத்தில் சோழமக்களிடம் ஆறில் ஒருபங்கு வரியே வாங்கினான். விளைவில்லாத நிலங்களுக்கு வரி வேண்டாம் என்று தள்ளினான். இவ்வித முறையில் இவன் செல்வம் தேடியதால் தானும் உண்டு, இன்பம் அனுபவித்து ஏனைய பொருள்களைக்கொண்டு தஞ்சையில் உலகோர் போற்றும்படியாகத் தன் பெயரால் “இராஜராஜே சுவரம் என்ற” கோயிலையும் கட்டினான். இதனால் இவன் புகழ் இன்றும் நிலைத்திருக்கிறது. வள்ளுவரும்; “குற்றமில்லாத வழியில் தேடிய செல்வம் அறத்தையும் இன்பத்தையும் அளிக்கும்,” என்று கூறி உள்ளார்.

அறன் ஈனும்; இன்பமும் ஈனும்; திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். (57)

திறன் அறிந்து = (சம்பாதிக்கும்) வகையை அறிந்து

தீது இன்றி -= (அரசன்) கொடுங்கோன்மையாகிய குற்றமில்லாமல்

வந்த = உண்டான

பொருள் = செல்வம்

அறன் ஈனும் = அவனுக்குத் தர்மத்தையும் கொடுக்கும்

இன்பமும் ஈனும் = சுகத்தையும் கொடுக்கும்.

கருத்து: குற்றமில்லாது வந்தபொருள் அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும்.

கேள்வி: எவ்வித முறையில் தேடும் பொருள் அறத் தையும் இன்பத்தையும் தரும்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *