காக்கைகள் கணக்கறிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 33 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு குடியானவன் தன் வயல்களில் காக்கை கள் வாராமல் காக்க வேண்டுமென்று பற்பல சூழ்ச்சிகள் செய்தான். அவற்றைச் சுடத் துப்பாக் கியுடன் சென்றால் அவை அத்துப்பாக்கி தொலை விடம் செல்லும்வரை வருவதில்லை. ஆகவே அங்கே குடில் கட்டி அதில் துப்பாக்கியுடன் ஒளிந் திருந்து பார்த்தான். அவனும் துப்பாக்கியும் வெளிச் செல்வதைப் பார்த்தன்றிக் காக்கைகள் அண்டவில்லை. 

“ஐயறிவினும் குறைபட்டவையாகிய இக்காக் கைகள் நம்முடன் போட்டியிடுவதா? எப்படி யாவது அவற்றை ஏமாற்றுகிறேன்,” என்று, அவன் வரிந்து கட்டிக்கொண்டு முனைந்தான். 

தன்னுடன் துப்பாக்கியோடு இன்னொருவனைக் குடிலுக்குட் கூட்டிச் சென்று, அவனைத் துப்பாக்கி யுடன் வெளியே போகவிட்டு ஒளிந்திருந்து பார்த் தான். காக்கைகள் இரண்டுபேர் உட்சென்றதைப் பார்த்ததால், இன்னொருவன் வெளியே போகட் டும் என்று காத்திருந்தன. 

குடியானவனுக்குக் கடுஞ்சினம் பொத்துக் கொண்டு வந்தது. அவன் ‘இக் காக்கைகளுக்கு எண்ணக்கூடத் தெரியும்போலிருக்கிறதே! பார்ப் போம், எதுவரை அவற்றின் கணக்குச் செல்லும்’ என்று எண்ணியவனாய் மறுநாள் மற்றும் இருவரு டன் குடிலுக்குட் சென்று இருவரையும் வெளியே அனுப்பிவிட்டான். காகங்கள் அப்போதும் மூன் றாம் மனிதனுக்காகக் காத்திருந்தன. 

அடுத்தநாள் நால்வர் உள்ளிருந்துகொண்டு மூவர் வெளியேறினர். காகங்கள் சற்று ஏமாறின ஒரு காகம் சுடப்பட்டு வீழ்ந்தது. அது முதல் காகங்கள் அப்பக்கம் நாடவில்லை. 

குடியானவன் வீம்புடன், “காக்கைகளின் அவற்றிற்கு கணக்கு அறிவு இவ்வளவுதான். மூன்றுக்குமேல் எண்ணத் தெரியாது என்பது இப் போதுதான் தெரிய வருகிறது,” என்றான். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *