கறிவேப்பிலையும் தாழ்த்தப்பட்டோரும்





காய்கறி, சாம்பர், ரசம் என்று எல்லா உணவுப் பொருள்களையும் சமைக்கும்போது அவையெல்லாம் கமகமவென்று மணப்பதற்கு, மலைக் கறிவேப்பிலையாகப் பார்த்து வாங்கிவந்து, நன்றாக அதனைத் தாளித்துச் சமையல் செய்வர், விருந்து வைப்பவர்.
தன் வாசனையையெல்லாம் சமைக்கும்போது கலந்து மற்ற காய்கறிகளுக்குத் தந்து விட்டு மகிழ்ந்திருக்கும் கறிவேப்பிலையை மக்கள் உண்ணும்போது முதலில் கீழே எடுத்து எறிந்துவிடுகின்றனர்.
“இப்படித்தான்—எங்கள் உழைப்பின் பலனை எல்லாம் பெற்றுக்கொண்டபிறகு, மேல் சாதிக்காரர்கள் தங்களது நலனுக்காக எங்களைப் பயன்படுத்தி, எண்ணிக்கையிலே சேர்த்துக் கொண்டும் எண்ணிக்கையிலே பயன் படுத்திக் கொண்டும், காரியம் முடிந்ததும் எங்களைத் தூக்கி எறிந்து விடுகின்றனர். நாங்கள் என்ன செய்வது?” என்று தாழ்த்தப்பட்டவர் மனம் வேதனையுறுகின்றனர். இது சிந்திக்கத் தக்கவைகளில் ஒன்றாகும்.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |