கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: January 16, 2024
பார்வையிட்டோர்: 13,970 
 
 

மறுபடி எனது போர்டிங் பாஸை பார்த்தேன். புறப்பட இன்னும் பதினைந்து நிமிடங்கள்.

நான் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனைவியிடம் திரும்பி கண்ணீர் மல்கக் கேட்டேன், “ரம்யா, நீ என்னுடன் திரும்பி வர போவதில்லையா?”

அவள் என் கையைப் பிடித்து, “டியர், நான் இந்த இடத்தையும் இங்குள்ள மக்களையும் நேசிக்கிறேன். இங்கிருக்கும் சிக்கலற்ற, எளிமையான வாழ்க்கையை விரும்புகிறேன். இனி மேல் இங்குதான் என் வாழ்க்கை.” என்றாள்.

நான் அவள் கையை அழுத்தி பெருமூச்சு விட்டேன். கால யந்திரத்தில் 1955-ம் ஆண்டுக்கு சென்று ஒரு மாதம் சந்தோஷமாக இருந்த எங்கள் காலப்பயண விடுமுறை இப்படி ஒரு சோகத்தில் முடிவடையும் என்று நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

கேட்டில் நின்று கொண்டிருந்த ஏஜென்ட் கரகரத்த குரலில் அறிவித்தார்:

“இது 2445 ஆம் ஆண்டுக்கு பயணிக்கும் பயணிகளுக்கான கடைசி அழைப்பு.”

கடைசியாக ஒரு முறை என் மனைவியை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

2 thoughts on “கடைசி குட்-பை

  1. மிக்க நன்றி புவனா விஜய். சுஜாதாவின் பெரும் ரசிகனான எனக்கு உங்கள் வார்த்தைகள் சந்தோஷத்தையும் பெருமையையும் கொடுக்கின்றன.

  2. மிக அருமை… சமீப காலமாக உங்கள் எல்லா சிறுகதைகளையும் இந்த தளத்தில் வாசிக்க முடிந்தது… very unique … சுஜாதா அவர்களுக்கு பிறகு உங்கள் போல் மிகச் சிலரே அறிவியல் கதைகள் சுவாரஸ்யமாக எழுதுகிறார்கள்… மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *