முள்முடி மன்னர்கள்






(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

“இந்த வேலையையும் போட்டு உடைத்துவிட்டு
புதிதாக வேலை தேடுவது
சிங்கள. அரசு தமிழ் மக்களின்
சுயநிர்ணய உரிமையை
ஏற்றுககொள்ளும் என எதிர் பார்ப்பது
போலாகிவிடும்”.
ஒற்றைக் காகம் விடாமல் கரைந்து கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னல் ஊடாக சூரியக் கதிர்கள் இளம் சூட்டுடன் சுகம் விசாரித்தன.
ஞானரூபன் புரண்டு படுத்தான். போர்வை ஒருபுறம், பாய் மறுபுறமாக சிதைந்து போய் இருந்தன படுக்கும் போது எல்லாமே ஒழுங்குதான்.
நித்திரைக் கலக்கம் இன்னமும் தீரவில்லை. ஜன்னல் ஊடாக நிர்மலமான வானம் தெரிந்தது. நேரம் காலை ஏழு மணிக்கு மேல் இருக்கும் என்ற ஊகம் அவனுள் எழுந்தது.
ஜன்னல் கரையோரமாக நின்ற வேப்பமரத்தின் பசுமை கண்களில் பட்டது. அதன் கிளுகிளுப்பான் மென்காற்று மெல்லென அறையினுள் புகுந்து உடலைக் கவ்விக் கொண்டது.
பக்கத்து வீட்டு மாஸ்டரின் கடைசிப் பெண் கீதா வீரிட்டு அழுவதும் தாய் வெருட்டுவதும் அட்சரம் பிழைக் காமல் கேட்டது. நர்சரிக்குப் போகும் அந்தச் சிறு பெண் போக மறுத்து, அடம் பிடித்துச் செய்யும் விஷமங்கள் வழக்கம் போலதான் இன்றும்.
அதிகாலை ஐந்துமணிக்கு முன்னரே எழும்பும் வீட் டார் பற்றி அவன் நினைத்துக் கொண்டான். அம்மா நகுலாம்பிகை வைரவர் கோயில் மணி கேட்கும்போது குசினிக்குள் அடுப்புச்சாம்பல் அள்ளிக்கொண்டு இருப்பாள். ஐயா கணேசபிள்ளை காறித் துப்பிக் கொண்டு, வெளி. விறாந்தையில் இருந்து சுருட்டுப் புகைப்பார். ஞானரூப னுக்கு மூத்தவர்களான மனோகரியும், மேனகாவும் ஏனைய வீட்டுவேலைகளில் ஆழ்ந்து போய் இருப்பார்கள்:
இப்போது வீட்டு வேலைகளில் எவ்வளவோ முடிந் திருக்கும். முற்றம் பளிச்சென்று பிரகாசிக்கும். முற்றத்து துளசிச்செடி தண்ணீரில் குளித்திருக்கும். ஆடுகள் மேயப் புறப்பட்டு ருக்கும். குசினியில் காலைச் சாப்பாடு தயா ராகி, மத்தியானத்திற்காக மனோகரி வெங்காயம் உரித்துக் கொண்டு இருப்பாள்.
ஞானரூபன் படுக்கையை விட்டு எழுந்தான். எழும்பு வதற்கு மனம் இல்லைத்தான், என்றாலும் என்ன செய்வது? வேலைக்குப் போகாவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப்போகாது முதலாளிதான் நாளை பாய்வார்.
நொடிப்பொழுதில் முதலாளி பரமசிவம் ஞானரூபன் மனக்கண் முன் வந்து நின்றார். மாரிகாலத்து மழைபோல எந்நேரமும் சிணுங்கிக் கொண்டு இருக்கும் அவர் காலை எட்டு மணிக்கு சற்று பிந்தினாற்கூட பாய்ந்து கடிக்கத் தொடங்கி விடுவார்.
இண்டைக்கு வேலைக்குப் போகாவிட்டால் என்ன'” என்ற எண்ணம் மனதில் முளைவிட்டது. நாளைக்குப் போனால் பேச்சுக் கேட்க வேண்டி வரும். கூடவே முறைப்பார்.
முறைத்தால் என்ன? “போடா நீயும் உன்ரை வேலை யும் என்று சொல்விவிட்டுப் போகவேண்டியது தான்” என வும் நினைத்தான். ஆனால் இப்படியான சிந்தனையால் எத்தனை வேலைகளை தூக்கி எறிந்தாகி விட்டது.
எந்த வேலையில் தான் ஒழுங்காக இருந்திருக்கிறேன். இது நான்காவது வேலை. இரண்டு வருடங்களுக்குள் நான் காவது வேலை. நினைத்துப் பார்த்து அழுவதா சிரிப்பதா எனப் புரியவில்லை அவனுக்கு.
இந்த வேலையையும் போட்டு உடைத்துவிட்டு புதிதாக வேலை தேடுவது சிங்கள அரசு தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்ப்பது போலாகி விடும்.
இண்டைக்கு வேலைக்குப் போகத்தான் வேண்டும்” என்ற மீள் சிந்தனை எழுந்தது. ஆனால் காலை எட்டு மணிக்கு முன்னர் போய்ச்சேர முடியாது முதலாளி பரம சிவத்தின் பாய்ச்சலை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் பாய்ச்சலா அது?
ஏனோ தெரியவில்லை. காயத்திரி மீதும் கல்யாணி மீதும் அவரது பாய்ச்சல் வித்தியாசமானது. தாமதமாக வந்தாலும் பேச்சு நடக்கும். அந்தப் பேச்சில் ஒருவிதமான குழைவு இழையோடும். கல்யாணியை விட காயத்திரி யிடம் அந்தக் குழைவு அதிகம்.
ஐம்பது வயதும், நரையோடிய தலையும், ஊதிய வயிறும், உருட்டி விடக்கூடிய உடம்புமாய் காட்சி தரும் பரமசிவத்தை நினைத்துப் பார்த்தான் ஞானரூபன்.
பாயைச் சுருட்டி மேசையின் கீழ் எறிந்தான். போர் வையை மடித்துக் கொடியில் போட்டுவிட்டு ஜன்னல் கரை யேரமாக வந்து நின்றான் ஞானரூபன்.
நேரம் காலை ஏழேகால் ஆகிவிட்டதை ரேடியோவில் இருந்து கேட்ட நிகழ்ச்சி சொன்னது. இன்னும் நாற்பத் தைந்து நிமிடங்களுக்குள் ஆகவேண்டிய அலுவல்களைப் பார்த்து, யாழ்ப்பாணம் போவது என்பது இலகுவான காரியமல்ல..
ஏழு கிலோ மீற்றரையும் எதிர்க்காற்றையும் எதிர்த் துக்கொண்டு சைக்கிளில் போய்ச்சேரவே முக்கால் மணித் தியாலம் தேவை. அதுவும் இடையில் பிரச்சனைகள் இல் லாமல், இந்திய இராணுவத்தின் செக்கிங் என்று எதுவுமே குறுக்கிடாமல் இருந்தால் தான்.
கண்கள் நன்றாக எரிந்தன: நெஞ்சையும் என்னமோ பீராண்டுவது போன்ற உணர்வு. நன்றாக முழுகினால் தான் கண்எரிவு நிற்கும். கண்எரிவு மட்டுமல்ல, உடம்பில் கூட நேற்று மாலை அடித்த மணம் பரிபூரணமாக வீசுகின்றது.
வேப்பமரத்திற்கும் வேலிக்கும் இடையில் இருந்த கயிற்றுக்கொடியில் அப்போதுதான் தோய்த்துப் போட்ட துணிகள் காய்ந்து கொண்டு இருந்தன.
அதில் அரைவாசி ஞானரூபனுடையது தான். நேற்று குளித்துவிட்டு கிணற்றடியிலேயே கைவிட்ட சாரம், நேற்றுப் போட்ட சேட், லோங்ஸ் வேறு சில உடுப்புகள் எல்லாமே பளிச்சென்று கொடியில் தொங்குகின்றன.
சட்டென்று ஞாபகம் வந்தது. நேற்று வீட்டை வந்து சேர இரவு எட்டு மணியாகி விட்டது நேற்று மட்டுமென்ன அனேகமாக ஏழு மணிக்குப் பின்னர் தான் வருவதுண்டு.
அம்மா எத்தனை தடவை அம்மன் கோயிலடியில் நின்று முறையிடுவது போல “நேரத்துக்கு வாடா” என்று மன் றாம் முறையிட்டும் பிரயோசனப்படவில்லை.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னர் அப்பாவின் தலையீடுகள் அதிகமாக இருந்த காலம். வெளியே போனால், வந்தால், நின்றால், இருந்தால் என்று எதற்கெடுத்தாலும் அப்பாவின் கேள்விகள் இருந்தன. ஆனால் எதையுமே ஞானரூபன் கேட்டதாக இல்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அப்பாவும் மகனும் முட்டி மோதும் நிலை வந்தபோது, சாடையாக வெறி இருந்த ஒருநாள் அம்மாவிடம் சொன்னான். “நான் இந்த வீட்டில் ஒழுங்காக இருக்க வேண்டும் எண்டால், அப்பா, மேன் எண்ட மரியாதை இருக்க வேணும் எண்டால், இண்டையோடை என்னைப் பற்றி எதுவும் கதைக்க வேண் டாம் எண்டு அவருக்கு சொல்லுங்கோ. நான் எங்கை போறன் வாறன் எண்டு நாய்பிடிகாரர் மாதிரி பின்னால முன்னால திரிஞ்சால் நான் என்ன செய்வன் எண்டு தெரி யுமே. இனி வாயால சொல்ல மாட்டன். ஓ… செய்கையில் காட்டுவன். இப்ப என்னைப்போல பெடியள் எல்லாம் என்ன செய்யிறாங்கள் எண்டு தெரியுமே? இருந்தாற் போல் ஒரு நாளைக்குக் காணாமல் போயிடுவன் பிறகு ..’ என அவன் கதையை முடிக்காமல் நின்றான்.
வீட்டில் அப்போது எல்லாருமே நின்றார்கள். மத்தி யானம் இரண்டு மணி இருக்கும் உள்ள கஸ்டங்கள் போ தாது என்று வெய்யில் வேறு வாட்டிக் கொண்டிருந்தது.
அம்மாவும், மனோகரியும், மேனகாவும் குசினியில் இருந்தார்கள். அப்பா வேப்பமரத்தடியில் சாய்மனைக் கதிரையில் நித்திரையாகிப் போயிருந்தார்.
குசினி வாசலில் நின்றே, ஞானரூபன் இவ்வாறு சொன் னான். அம்மாவின் விழியோரங்களில் கண்ணீர் அரும்பு கட்டியிருந்தது.
சட்டென்று அவள் நிலை குலைந்து போனாள். “தம்பி ஞானம்’ என்றுதான் சொல்ல முடிந்தது. அதற்கு மேல் அவளால் எதையுமே கூறமுடியவில்லை. பொலபொல, வென்று கண்ணீர் பாய அவள் அழத் தொடங்கினாள்.
ஞானரூபனுக்கு தாயின் அழுகை அப்போதைய நிலை யில் பெரிதாகப் படவில்லை. அப்பாவின் “வாத்தியார்” தன் வேலைகளை அடியோடு நிறுத்துவதற்கு இதைவிட வேறு சந்தர்ப்பம் இல்லை என்பதை முடிவு செய்தான்.
”அம்மா சொல்லிப் போட்டன் இனிமேல் என்னோட ஆரும் விசர்க்கதை கதைக்கக் கூடாது நான் ஒண்டும் குழந் தைப்பிள்ளை இல்லை என்னோடை எல்லோரும் கவன மாய் இருக்க வேணும். ஆர் எண்டால் என்ன ஓம் ஆர் எண்டால் என்ன. இனிமேலும் ஏதாவது சேட்டை விடு கிறதெண்டால் இப்பவே சொல்லிப் போடுங்கோ “என்று சொல்லிக் கொண்டு ஒரு காலை தூக்கி தரையை உதைத் தான். ஏற்கனவே சாடையான தடுமாற்றம் உதைவினால் அவனது நடு நிலைமை குலைய சுவரோடு சரிந்து போ னான். யாருமே அவனுக்கு கிட்ட வரவும் இல்லை. சிறு சொல்லைக் கூட பதிலாகச் சொல்லவில்லை.
அவனாகவே தன்னை நிலைப்படுததிக் கொண்டான். எல்லாருமே மௌனமாக இருப்பது அவனுக்கு அதிக உற் சாகத்தை கொடுத்திருக்க) வேண்டும்.
“எல்லாரும் கவனம் கவனம் ஆர் எண்டாலும் கவ னம். எங்கைதான் நிம்மதி இருக்கு வீட்டில் இருக்கா வெ ளியில் இருக்கா? கடைசி வேலை வெட்டியாவது. என்ன தரித்திரம் பிடிச்ச நாடும் நாங்களும் ஒண்டுக்கும் வழியில் லை. எங்களை மேய்க்கிறதுக்கு மாத்திரம் ஆட்கள் லெளிக் கிட்டு விடுவினம்” என்று சொல்லிக் கொண்டு குசினிக் கதி வை ஓங்கி உதைந்து விட்டு தன் அறைக்குள் போனான் ஞானரூபன். உடுப்புக்களைக்கூட மாற்றாமல் பாயை இழுத் துப் போட்டுவிட்டு படுத்தவன் தான் அப்படியே உறங்கிப் போனான்
மீண்டும் கண்விழித்தபோது மாலை வெய்யில் தணிந்து இருளுடன் இணைந்து கொண்டிருந்தது. வேப்பமரத்து இருப்பிடத்திற்கு வழக்கமான பறவைகள் திரும் பியிருந்தன அவற்றின் இனிமையான ஆரவாரங்கள் கேட்டன.
தலைமாட்டில் அம்மா, கண்கள் தாண்டு முகம் பெருத் துச் சிவந்து காணப்பட்டாள். ஞானரூபன் தன்முகத்தினைத் திருப்பிக் கொண்டான்.
“சாப்பிட வாவனெடா தம்பி” என்ற அம்மாவின் குரலின் கனிவினை அவன் பெரிதாக எடுக்கவில்லை.
“எனக்கு வேண்டாம்” என்றான் பதிலுக்கு.
“எழும்பு ஞானம் சாப்பிட்டு படுராசா” என்றாள் அம்மா மீண்டும்.
“வேண்டாம் எண்டால் விளங்கேல்லையோ” என் முறைத்த ஞானரூபனின் முகத்தை தன் நடுங்கும் விரல்களால் பற்றிப்பிடித்தாள் அவள். காற்றில் அவள் தலைமயிர் படபடத்தது. உதடுகள் துடித்தன. தொண்டை அடைத்திருந்தது.
“என்ரை ராசா வாடா சாப்பிட” என்னும் போதே மீண்டும் கண்ணீர் வெளிப்பட்டது.
அன்றைக்குப் பின்னர் யாருமே அவனுடன் எதைப் பற்றியுமே கதைப்பதும் இல்லை. கேட்பதும் இல்லை. தன்னுடைய தகப்பன் என்னும் ஸ்தானத்தின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள மெளனியாகி விட்டார் அப்பா மனோகரியோ மேனகாவோ அப்படியே தான்.
திருமணமாகிப் போய்விட்ட கார்த்திகா அக்காவும். கல்பனா அக்காவும் எப்போதாவது வீட்டுக்கு வருவார்கள் அவர்கள் அவனோடு முகம் கொடுப்பதைத் தவிர்த்து விட் டார்கள். ஆண்டுக்கு ஒரு தடவை வெளிநாட்டில் இருந்து வந்து சுகம் விசாரித்து விட்டுப் போகும் மூத்த அண்ணர் புவனச்சந்திரனும் அன்னியனாகி விட்டான்.
அம்மாதான் ஏதாவது கேட்பாள், சொல்லுவாள் தயங்கி தயங்கி இறைஞ்சும் விழிப்பார்வைகளுடன் சில வேளை விம்முவாள். தன் வேதனைகளை தன்னுடன் குமைந்து கொள்ளுவாள்.
ஞானரூபன் வருவான், போவான், சாப்பாட்டைக் கொடுத்தால் சாப்பிடுவான். எதையுமே கேட்பதுமில்லை. ஆனால் அவன் கேட்காமலே அவனது அலுவல்கள் பல நடந்தன.
அவன் அறையை ஒழுங்குபடுத்துவது. அவன் உடுப்பு களைத் தோய்த்துப் போடுவது என்று எல்லாவற்றையுமே அவன் கேட்காமல் மனோகரியோ, மேனகாவோ செய்து கொடுப்பார்கள்.
கொடியில் கிடந்த அவன் உடுப்புக்களைப் பார்க்க. அவனுக்கு மீண்டும் நேற்றைய சிந்தனை எழுந்தது.
ஐந்தரை மணிக்கு கடை பூட்டிய பின்னர் காயத்திரி யும் கல்யாணியும் பஸ்சுக்கு போய்விட்டார்கள். முதலாளி பரமசிவம் வரவில்லை. எனவே, இராமநாதன் வந்திருந் தார்.
பரபரப்புடன் காணப்படும் நகரம் மாலை இருள் கட்ட தளரத் தொடங்கிவிடும் அனேகமான கடைகள் முகம் மறைக்க ஆரம்பித்தன.
ஞானரூபன் சைக்கிளை எடுக்க இராமநாதன் கேட் டார் “வாவன்டா தம்பி பிளேன்ரீ குடிப்பம்”
அவன் கடை பூட்டிய பின் ஒரு பிளேன்ரீ குடித்து சிகரெட் புகைத்துவிட்டுத்தான் அறப்படுவது வழக்கம் இன் றைக்கு புதினமாக இராமநாதன் ரீ குடிக்க கேட்டதால் மறுக்கமுடியாமல் அவருடன் புறப்பட்டான். அவன் நண் பன் தவலிங்கமும் வந்து சேர்ந்தான்.
மினித் தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த அந்த தேநீர் கடையில் ஆட்கள் அதிகம் இல்லை அலங்கோலமான ஒருபாடலை முக்கி முனகித் தள்ளிக்கொண்டிருந்தது. கடையின ரேடியோ
மினித்தியேட்டர் வாசலில் தியேட்டரை விடப் பெரி தான கட்அவட் அதில் அந்தப் பாடலுக்குப் பொருத்தமா இன்றைய முன்னனி தென்னிந்திய சினிமா நட்சத்திரமும் வருங்கால தமிழகத்து அரசியல் தலைவியுமான பெண் நெஞ்சைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன மச்சான், இந்தக்கிழமை இந்தப்பக்கம் காணேல்லை” என விழிசிவந்த இளைஞன் ஒருவன் ஞான ரூபனைக் கேட்டான். அவன் அந்த மினித் தியேட்டரில் வேலை செய்பவன்.
“எப்படிப்படம்” என்று கேட்டான் ஞானரூபன்
“தொங்கல்” என்றான் அவன் சிரித்துக் கொண்டு உள்ளே போனான் ஞானரூபன். இராமநாதன் முன்னரே போய் உள்ளே இருந்துவிட்டார். வயது நாற்பத்தைந்திற்கு மேல்ஆகிவிட்டது. கலியாணம் கனவில்கூடச் செய்ததில்லை. நெற்றியிலே திருநீற்றுப்பூச்சு கோயில் தரிசனம் முதலாளி பரமசிவம் இல்லாத நேரங் களில் அக்ரிங் முதலாளி, காசியர், மனேச்சர் எனப் பல தரப்பட்ட பாத்திரங்கள், சிலவேளை முதலாளி உள்ள போதும் வருவார். பெண்களைக் கண்டால் வெட்கம் அப் படியான அப்பிராணி.
ஞானரூபன் உள்ளே நுழைய முன்னர் இரண்டு சிகரட் வாங்கினான் ஏண்டாப்பா அந்த மனுசனுக்கு முன் னால இருந்து சிகரெட் குடிக்கிறது சரியில்லை என இழுத் தான் தவலிங்கம் “பேசாமல் வா நாங்கள் என்ன அவற் றை காசிலையே குடிக்கிறம் இல்லாட்டியும் எத்தினை நா ளைக்கு மறைக்கிறது” என்றபடி சிகரெட்டுக்கு நெருப்பு மூட்டினான் ஞானரூபன்.
அவருக்கு முன்னால் போய் இருந்து கொண்டு புகை யை ஊதினான் தவலிங்கமும் சங்கடப்பட்டு புகைக்கத் தொடங்கினான்.
சிகரட் புகை அவரைக் கஸ்டப்படுத்தியிருக்க வேண் டும். அவர் பார்வையில் “நீ சிகரட் குடிக்கிறனியே” என்ற அர்த்தம் தொனித்தது.
மூன்று பிளேன் ரீ வந்தது.
“உனக்கு எத்தனை வயதடாப்பா” என்றார் இராம நாதன் தன்னுடைய அதிர்வினைத் தாங்கிக் கொள்ள முடியாமல் “இருபத்தி மூன்று” என்றான் ஞானரூபன்.
– தொடரும்…
– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.