முள்முடி மன்னர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2025
பார்வையிட்டோர்: 208 
 
 

(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

“அவள் மூகம் சிவந்திருந்தது. அவன் அவள் முகத்தினையே விடாமல் பார்வையினால் அலைந்தான். பரிபூரணமான சௌந்தரியம் நிறைந்த அதன் பின் னணியில் மறைந்து போய் இருக்கும் வேதனைச் சுவடுகளின் ஆழம் தான் என்ன?” 

நியூமார்க்கட் எழுச்சி பெற்றிருந்தது. கடைகளும் வண்ணம் வண்ணமாய் முகம் மலர்ந்திருக்க இரைதேடும் பறவைகள் போல ஆண்களும் பெண்களும் கடைகளில் தேடிக் கொண்டிருந்தார்கள். 

றோட்டுக் கரையோரமாக இந்திய இராணுவத்தின் இரண்டு வாகனங்கள் நின்றன. தலைப்பாகைகள் சகிதம் கடும் பச்சை உடுப்புக்களுடன் இராணுவத்தினர் நின்றனர். 

இளவெய்யில் மறைந்து வெய்யில் உடலை வாட்டத் தொடங்கியிருந்தது. கடைகளின் முன்புறம் மினிபஸ்களும் சைக்கிள்களும் இடம் பிடித்திருந்தன. இடையில் நடைபா தை வியாபாரிகள் இவர்களின் வியாபாரப்-பொருட்கள் ஞானரூபன் படியேறிய பொழுது முதலாளி பரமசிவம் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார். வழக்கமான இடத்தில் கல்யாணி அவனைப் பார்த்ததும் முகத்திலே எந்தவிதமான உணர்வையுமே காட்டாமல் நின்றாள். காய்த்திரியைக் காணவில்லை. 

“இப்ப நேரம் என்ன?” என்ற முதலாளியின் கேள்வியில் சூடு இருந்தது. 

“ஒன்பதேகால் “என்றான் ஞானரூபன். 

“எத்தினை மணிக்கு வேலைக்கு வரவேணும் எண்டு தெரியாதே? எதுக்கும் ஒரு ஒழுங்கு முறை இருக்கு. நீ ஆடி ஆடி ஒன்பது மணிக்கு வா, அவ ஒருத்தியை இன்னும் காணேல்லை வியாபார நேரத்தில நான் இஞ்சை இருந்து வாற ஆட்களோடை மல்லுக் கட்டுறன்” 

ஞானரூபன் பதில் சொல்லாமல் நின்றான். கல்யாணி தலையைக் குனிந்து கொண்டாள். 

“ஏன் நேரஞ் செண்டது.” 

அவன் திரும்பி றோட்டைப் பார்த்தான். றோட்டின் நடுவே இருந்த நடை பாதைக் கடை ஒன்றில் இருந்து இரண்டு பேர் பெரிதாகச் சத்தம் போட்டுக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். நகரத்தின் அத்தனை சத்தங்களையும் மீறி அவர்கள் பேச்சுச் சத்தம் கேட்டது. 

முதலாளியின் கேள்விக்குப் மதில் சொல்லாததால் அவருக்கு கோபம் வந்திருக்க வேண்டும், நான் கேட்டது காதிலை விழேல்லையே. ஏன் நேரஞ் செண்டது. வேலை எண்டால் ஒரு பொறுப்பு இருக்க வேணும் அக்கறை வேணும்’” 

ஞானரூபனுக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரிய வில்லை. சட்டென்று என்ன பதிலைச் சொல்வது “எங்கடை பக்கம் சின்னப் பிரச்சினை. அதுதான் ஆமிக்காதர் கால மை மறிச்சு வைச்சவன்கள். இப்பதான் விட்டாங்கள்” என்றான். 

சட்டென்று இப்படியான டூப் எப்படி அடிக்க முடிந்தது என்பதை நினைத்து அவனுக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. 

முதலாளியின் முகத்தில் இருந்த தீவிரம் மறைந்தது சில்லறை வேலைகளுக்காக இருக்கும் சிறுவனான கணேசன் தலையில் சுமையுடன் உள்ளே வந்தான். அது ஒரு பெரிய. கார்ட் போட் பெட்டி. 

ஞான ரூபன் கணேசனுடன் சேர்ந்து பெட்டியை இறக்கினான். 

“உதிலை இறக்கிறதை அந்த ஸோக் கேசில அடுக்கு” என்றார் முதலாளி. 

ஞானரூபன் செயல்பட ஆரம்பிக்க கல்யாணியும் துணைக்கு வந்தாள் காயத்திரி இல்லாததன் வெறுமையை அப்போதுதான் ஞானரூபன் உணர்ந்தான். 

“காயத்திரியை ஏன் காணேல்லை” என்று கல்யாணியைக் கேட்டான் ஞானரூபன். 

“அந்துப் பக்கத்தில இருந்தும் பஸ் ஒண்டும் வரேல்லை. ‘ஏதேனும் பிரச்சினையோ தெரியாது. இராத்திரி அந்தப் பக்கம் செல் சத்தமும் கேட்டது ”என்றாள் கல்யாணி 

என்னவோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு கா யத்திரி இல்லாததன் காரணத்தால் எழுந்திருக்க வேண் டும். அவள் இருந்தால் ஏதோ ஒரு பிரகாசம் பரவியது போல இருக்கும். 

பெட்டியில் இருந்த பௌடர் ரின்களை அடிக்கும் போது அதன் இனிய வாசம் மூக்கைத், துளைத்தது. இரண்டு இளம் பெண்கள் உள்ளே நுழைந்தார்கள். 

“ரெட்கலர் லேஸ் இருக்கா “என்றாள் ஒருத்தி. கல்யாணி அவர்களை நோக்கி நகர்ந்தாள். 

ஞானரூபனுக்கு மீண்டும் காயத்திரியின் நினைவே வந் தது. முதன் முதலாக ஒரு மாதத்திற்கு முன் இந்த பான் சிக் கடைக்கு வேலைக்கு வந்த போது முதலாளி பரம சிவம் கடையில் இருக்கவில்லை கணேசனோ இராமநாதரோ கூட இல்லை. 

இதே போலத்தான் ஒன்பது மணி நேரக் காலைப் பொழுது சோக் கேசில் இருந்த பொருட்கள் ஒரு விதமான கனவு உலகு பிரம்மையை ஏற்படுத்தியிருந்தது. 

ஞானரூபன் தயங்கித் தயங்கி கடைவாசலில் நின்றான். “என்னதம்பி வேணும்” ‘என்று’ காயத்திரி கேட்டாள். 

அவனுக்கு உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அவனது மௌனம் காயத்திரிக்குச் சிரிப்பை உண்டாக்கி யிருக்க வேண்டும். அவள் கல்யாணியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு, 

“என்ன வேணும் எண்டு சொல்லும் தம்பி” என்றாள் மீண்டும். 

“முதலாளி நிற்கிறாரோ” 

‘இல்லை ஏன்” எனக் கேட்ட காயத்திரியின் விழிகளில் மின்னிய ஜொலிப்பு ஞானரூபனை வெகுவாகத் தாக்கியது 

“இல்லை இண்டைக்கு வரச் சொன்னவர்” 

“என்னத்திற்கு” 

“வேலைக்கு” என்றான் ஞானருபன் 

காயத்திரியின் விழிகள் வியப்பால் மலர்ந்தன. 

“நீரே புதிசாய் வேலைக்கு வாற ஆள்” எனக் கேட் டாள் ஆர்வத்துடன் 

“ஓம்-” 

“முதலாளி இன்னும் ஒரு மணித்தியாலத்தில வந்திடுவார். பாங்கிற்குப் போட்டார். ”என்ற குரலில் ஆதரவு தொனித்தது. 

அவள் முகம் மலரச் சிரித்தாள். கன்னங்களில் மெல்லிய தாகக்குழி விழுந்து மறைந்தது. விழிகளில் பிரகாசம் கொப் பளித்தது.ஞானரூபனுக்கு இனம் தெரியாத விபரிக்க முடி யாத ஒருவகை மகிழ்ச்சி உண்டானது. 

ஏற்கனவே முன்று இடங்களில் இரண்டு வருடங்க ளைக் கடத்திய போதும் இவ்விதமான அனுபவம் ஏற் படட்தில்லை. 

“முந்தி எங்கை வேலை செய்தனீர்” 

“சுந்தரலிங்கம் பார்ட்ஸ் கடையில்” 

“அதை விட்டுக் கனநாளே- ” அடுத்த கேள்வி காயத்திரியிடம் இருந்து பிறந்தது. எதுவிதமான சலனமும் இல்லாமல் இயல்பாக அவள் கதைக்கத் தொடங்கினாள். 

கல்யாணி இந்த உரையாடலில் எதுவிதமான சம்பந்த மும் இல்லாதவள் போல இருந்தாள். ஞானரூபனுக்கும் வ்வளவு நேரமும் இருந்தபதட்டம் சற்றுத் தணிந்திருந்தது 

“மூன்று கிழமை இருக்கும்” 

“ஏன் அந்த வேலையை விட்டனீர்” 

ஞானரூபன் சிறிது நேரம் பதில் கூறாமல் நிற்க காயத்திரி சிரித்தாள். 

”முதலாளியோடை பிரச்சினையோ’” 

“அந்தாள் எந்த நேரமும் பாய்ஞ்ச படிதான் மரியா தையாய் கதைக்கத் தெரியாது. ஆட்களுக்கு முன்னால பேசும்” என்றான் ஞானரூபன். 

காயத்திரி மீண்டும் சிரித்தாள். 

‘உதுகளை எல்லாம் எதிர்பார்த்தால் எங்களைப் போல ஆட்கள் இப்படியான பிறை வேற் செக்டரில வேலை செய் யேலாது. அப்பிடி எண்டால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வேலை தேட வேணும். எத்தனை பேர் வேலையில்லாமல் இருக் கேக்க அதெல்லாம் சுகமான அலுவலே வீட்டுக்கு வீடு வாசற்படி மாதிரி எல்லா இடமும் இப்பிடித்தான்’ என்ற காயத்திரி தொடர்ந்து சிரித்துக் கொண்டு சொன்னாள் 

“உப்பிடி எண்டால் நீர் இஞ்சை தன்னும் கன காலத் திற்கு நிண்டு பிடிக்க மாட்டீர்” 

ஞானரூபனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவள் முகம் சிவந்திருந்தது. அவன் அவள் முகத்தினை விடாமல் பார்வையினால் அழைந்தான். பரிபூரணமான சௌந்தரியம் நிறைந்த அதன் பின்னணியில் மறைந்து போய் இருக்கும் வேதனைச் சுவடுகளின் ஆழம்தான் என்ன? எவ்வளவு படிச்சனீர்” என காயத்திரிதான் கேட்டாள். 

“அட்வான்ஸ் லெவல்”

“எத்தினை பாடங்கள்” 

“வன் சீ – வன் எஸ்” 

“மட்ஸ் சோ பயோ-வேர்” 

“மட்ஸ் ஒருக்காத்தான் எடுத்தனான் பிறகு எடுக் கேல்லை” 

“ஏன்” 

“எடுத்து என்ன பிரயோசனம். எந்த வழத்தால எங் கைளப் போல ஆட்களுக்கு பிரயோசனம் இருக்கு. மேலை தான் படிக்க வசதியிருக்கா. படிச்சால்த்தான் வேலை இருக்கா? படிச்சுப் போட்டு வேலையில்லாமல் இருக்கிறதை விட இப்பிடியே திரிஞ்சால் நல்லது தானே. உயிரோடை நிம்மதியாய் இருக்க ஆர்தான் லிடுறாங்கள். சந்தோஷமாய் இருக்க எங்கை வழி இருக்கு.” 

வெறுப்பும் விரக்தியும் வெளிப்பட ஞானரூபன் சொன்ன தை காயத்திரி கேட்டாள். 

“நீர் சொல்லுறது சரிதான். எல்லாரும் நிம்மதியா யும் சந்தோஷமாயும் இருக்கத்தான் விரும்பிறம். ஆனால் எங்கடை மண்ணில் ஆர்தான் சந்தோஷமாய் இருக்கினம். எல்லாரும் கவலையும் வேதனையுமாய் இருக்கேக்கை மற்ற வையால எப்படி சந்தோஷமாய் இருக்க முடியும்”, என்றாள் காயத்திரி இப்பேரது தான் அறிமுகமானவனுடன் நான் அதிகம் பேசிவிட்டேனோ என்ற எண்ணமும் ஏற்பட்டது. 

ஞானரூபன் அவளை வினோதமாகப் பார்த்தான். ன்ன சொல்கிறாள் இவள் என்ற மாதிரி.

“விரக்தியும் வெறுப்பும்தான் வாழ்க்கை அல்ல, அதுக்கு மேலேயும் சில விசியங்கள் இருக்கு, அப்பிடி இல்லாட்டி வாழேலாது. எப்படியும் நாங்கள் வாழத்தான் வேணும். இண்டைக்கு இல்லாட்டியும் எண்டைக்கோ ஒரு நாளைக்கு நாங்கள் சந்தோஷமாய் இருப்பம். அப்ப எங்க-ை- நாடு விடுதலை பெற்றிருக்கும். எனச் சொல்ல நினைத்தாள். ஆனால் சொல்ல முடியவில்லை. 

ரீ டம்ளர்களுடன் கணேசன் அப்போது உள்ளே நுழைந்தான். 

“இதை வைச்சிட்டு இன்னுமொரு ரீ வாங்கிக் கொண்டு வா கணேசா என அவனைத் திருப்பி அனுப்பினாள் காயத்திரி, 

கணேசன் ஞானரூபனைப் புதினமாகப் பார்த்துக் கொண்டு திரும்பப் போனான், காயத்திரி ஒரு டம்ளரை எடுத்து ஞானரூபனிடம் நீட்டினாள். 

“நீங்கள் குடியுங்கோவன்” என்று மறுத்தான் அவன். இது எல்லாருக்கும் தான் வாறது, நீரும் இனி இஞ்சை தானே வேலை செய்யப் போறீர் குடியும்,’ என்றாள் கரிசனையுடன். ஞானரூபன் ரீயை வாங்கிக் கொண்டான். 

இப்படித்தான் அவர்களின் அறிமுகம் ஆரம்பமாயிருந்து வளர்ச்சியும் கண்டது. 

யாழ்ப்பாணத்தில் அவன் பலவிதமான ளம் பெண் களைக் கண்டிருக்கின்றான். அவனோடு படித்தவர்கள், தெரிந்தவர்கள் என்று விதம் விதமான ஆடைகளுடன் புதிது புதிதாக முளைத்தெழும் பாஷன்களை அங்கீகாரம் செய்து கொண்டு திரியும் பெண்களையும் பார்த்திருக்கின்றான். பொழுது போவதற்காகவே வெளிக்கிட்டுத் திரிபவர்கள், இருக்கும் உடைகளை அணிவதற்காகப் புறப்பட்டு விட்ட வர்கள். கையில் இருக்கும் காசை எப்படியாவது செலவழித்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் பஸ் எடுப்பவர்கள் என்று எத்தனை ரகம். 

வேலைக்கு வருபவர்களில் கூட அனேசும் பேர் பொழு தினைப் போக்காட்டத்தான் வருகின்றார்கள். தாங்கள் எடுக்கும் சம்பளத்தினை வீட்டுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லா தவர்கள் தங்கள் மேக்கப் செலவுகளை ஆடைகளை, தென்னிந்திய சினிமாச் சரக்குகள் நிறைந்த சஞ்சிகைகளை வாங்குவதில் கரைத்துக் கொள்ளுபவர்கள். 

ஆனா எத்தனை பெண்கள் தங்கள் குசினிகளில் நெருப்பு எரிவதற்காக வேலைக்கு வருகின்றார்கள். வயது போன பெண்கள் நெருப்புடன் வீட்டில் அமுங்கிக் கொண்டு இருக்க மற்றப் பெண்கள் கொஞ்சச் சம்பளங்களுக்காக தனியார் தொழில் நிறுவனங்களில் நொறுங்கிக் கொண்டு உள்ளனர். 

குடிப்பதையே சுதந்திரமான மனிதனின் கடமையாக எண்ணும் தகப்பனார் மதியாபரணம், வெளி உலகம் தெரி யாமல் அம்பாள் வழி விடுவாள் என நம்பிக் கொண்டு இருக்கும் அம்மா, வாழ்க்கை என்பது விபரம் தெரியாத குழந்தைப்பிள்ளைப் பருவம் வரை தான் இனிமையானது பின்னர் அது வசதி படைத்தோருக்கு மட்டுமே என்று நம்பும் ஐந்து பெண்கள் கொண்ட அந்தக் குடும்பத்தில் காயத்திரி இரண்டாவது பெண். 

“என்ரை வயது உனக்குத் தெரியுமா ஞானரூபன்,'” என ஒரு தடவை அவள் கேட்ட போது திக்கு முக்காடிப் போனான் அவன். 

சதாகாலமும் மலர்களாகவே பூத்துச் சொரியும் பூஞ் செடியைப் பார்த்து வயதைக் கேட்ப தென்றால் 

“போன மாசி மாதத்தோடை காயத்திரி சிரித்தாள். எனக்கு இருபத்தியெட்டு வயது முடிஞ்சிட்டுது.” என்றாள் அவள். 

தன்னை விட ஐந்து வயது முத்தவள் என்பதை ஞானரூபனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

ஐந்து பெண்களில் மூத்த பெண் வீட்டில் தாய்க்கு குசினியிலும், குடித்து விட்டு வந்து தகப்பன் சத்தியெடுக்க அதனைத் துப்பர வாக்கவும் துணையாக இருக்கின்றாள். 

காயத்திரிக்கு அடுத்தவள் கமலா உள்ளூரிலேயே ரொபிக் கொம்பனிக்கு வேலைக்குப் போகின்றாள். கமலாவுக்கு அடுத்த கற்பகத்திற்கு ஒரு கால் ஊனம் நடப்பதே சிரமம் எல்லோருக்கும் சுமையாக இருக்கின்றேனே என்ற கவலை வேறு அவளுக்கு கடைசிப் பெண் ரோகினி மாத்திரம் படித்துக் கொண்டு இருக்கின்றாள். 

“இருந்த தோட்டக் காணிகள் எல்லாம் வித்துக் குடிச்சிட்டார் ஐயா இப்ப மிஞ்சியது வீடும் வளவும் தான். அதுகூட ஈடுதான். மிச்சமாய் இருக்கிறது வறுமையும் எங்கடை வயதுகளும் தான்,” என்று காயத்திரி சொல்லியிருந்தாள். 

“யாழ்ப்பாணத்தில் இருக்கிற எத்தனையோ குடும் பங்கள் என்னென்ன மாதிரியெல்லாம் முன்னேறி விட்டுது கள் எண்டெல்லாம் ஆட்கள் சேர்ந்து கதைப்பீனம் ஒவ் வொரு வீட்டுக்கு ஒண்டோ இரண்டு பேர் வெளிநாடு களுக்குப் போய் உழைச்சு அனுப்புறாங்கள் பிறகென்ன பிரச்சினை எண்டெல்லாம் கதைக்கிற ஆட்கள் யாழ்பாணத் தின்ரை ஓரு பகுதியைத்தான் பாக்கினம். எங்களைப் போல கஸ்டப் படுகிற எத்தனையோ குடும்பங்கள் இஞ்சை தான் இருக்கினம். எண்டதை அவை மறந்து போகினம்,” என அவள் சொன்ன போது விழிகளில் ஈரம் பளபளத்தது. 

நேரம் காலை பத்து மணியான பின்னரும் காயத்திரி வரவில்லை. வியாபாரம் சூடு பிடித்த நிலையில் காயத்திரி இல்லாததன் தாக்கத்தினை உணர முடிந்தது. 

“இந்த பட்டின் என்ன விலை? பிங்கலர் நெயில் பொலிஸ் இருக்கா?” என்ற எல்லாக் கேள்விகளுக்கும் டக்டக் என்று பதில் சொல்லக் கூடியவள் அவள் தான் 

மூன்று வருடங்களாக இந்தக் கடையில் தொடர்ந்து இருக்கின்ற படியால் வியாபாரத்தில் நெழிவு, கழிவுகளை யெல்லாம் அட்டகாசமாக அறிந்து வைத்திருக்கின்றாள். 

மத்தியானம் ஒரு மணிக்கு சாப்பாட்டுக்கு முதலாளி புறப்பட்டு விட்டார். வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு அவர் மூன்று மணிக்குத் தான் வருவார். 

அவர் திரும்பி வரும் வரை காயத்திரி தான் பொறுப்பு அந்த நேரங்களில் தான் மூன்று பேரும் கதைக்க வசதியுண்டு முதலாளி நிற்கும் போது ஆளை ஆள் பார்க்கலாமே தவிர கதைக்க முடியாது. 

முதலாளி புறப்பட்ட கையுடன் ஞானரூபனும் புறப் பட்டான். வழக்கமாகச் சாப்பிடும் கடையில் தவலிங்கம் சாப்பிட்டு விட்டு சிகரெட்டுடன் இருந்தான். 

“ஏன்டாப்பா லேட்” என கேட்டான் தவலிங்கம். 

‘”னா இப்பதான் போறார். அதோடை கொஞ்சம் கடையில் சனமுமாய்ப் போச்சு,” என்றான்.. 

கடைப் பெடியன் இலை போட்டு இடியப்பம் வைத் தான். 

“ஏன் சோறு சாப்பிடேல்லையோ,” எனத் தவலிங்கம் கேட்டான். 

“இல்லை, பின்னேரம் வீட்டை போய்ச் சாப்பிடுவம்,“

“வீட்டில் சோறு வைச்சிருப்பினமே” 

“அம்மா ஒவ்வொரு நாளும் வைச்சிருக்கிறவ தானே நான் தான் அதைப்பற்றி அக்கறைப் படுகிறேல்லை” 

“நீ ஒரு சரியான விசித்திரமான பிறவியெடாப்பா,” 

“நீ சொல்லுறது உண்மைதான். மச்சான். சிலவேளை தனிய இருந்து யோசிச்சுப் பாக்க எல்லாம் வித்தியாச மாய்த் தான் இருக்கு, ஆனால் என்ன செய்யிறது. என் னால ஆரோடையும் ஒத்துப் போகேலாமல் இருக்கு. எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கத் தான் மனம் அந்தரப் படுகுது. எந்த நேரமும் சந்தோஷ மாக இருக்க வேணும் நினைச்சபடி எந்த குறுக்கீடும் இல்லாமல் வாழ வேணும்” இதுதான் என்ரை மனதில் இருக்கு’ என்றான் ஞானரூபன். 

“நேற்று நான் எட்டு மணிக்குப் போக – வீட்டாக்கள் பெரிய அமளிப்பட்டுக் கொண்டு நிண்டினம்,” 

”நான் போகேக்க றோட்டில ஒரு சனம் இல்லை. இப்ப ஆறு மணிக்கே ஊர் அடங்கிப் போகேக்க நாங்கள் எட்டு மணிக்குப் போனால் எப்படி இருக்கும். நான் போ கேக்க வீட்டில எல்லாரும் வெளி விறாந்தையில் தான் இருந்தினம் ஒருதர் ஒரு கதையில்லை. வீட்டுப் படியேற எனக்குச் சத்தி வந்திட்டுது. ஓவெண்டு எடுத்தால் உடுப் பெல்லாம் சத்தி போட்ட சேட் லோங்ஸ் எல்லாம் சரி,” என ஞானரூபன் தொடர்ந்து சொன்னான்.

– தொடரும்…

– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *