சுருட்டும் திருட்டும்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,193 
 
 

ஓர் ஊரிலே சுருட்டு வியாபாரிகள் இருவர். அவர்களுக்குள் போட்டி அதிகமாக இருந்தது.

போட்டி போட்டு ஒருவர்க்கொருவர் சுருட்டு விலையைக் குறைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.

தன் போட்டி ஆசாமி அசலுக்கும் குறைவாக விற்பதைக் கண்டு, மற்றவரால் அதைச் சமாளித்துப் போட்டி போட முடியவில்லை. எப்படிக் குறைந்த விலைக்கு விற்கிறார் என்பதும் விளங்கவில்லை.

இரவு கடையைப் பூட்டியதும். இவர் அவர் (போட்டி வியாபாரி) வரும் வழியையே – எதிர்பார்த்துக் கொண்டு நின்றார். அவரும் கடையைச் சாத்திவிட்டு வருகிறார்.

அவரை நோக்கி, “ஐயா, “நான், புகையிலையைத் திருடிக்கொண்டு வந்து விற்கிறேன்; எனக்கே இந்த விலை கட்டுப்படி ஆகலையே? உங்களுக்கு எப்படிக் கட்டுகிறது?” – என்று கேட்டார்.

அதற்கு அவர், “உன்னைப் போல முட்டாள் அல்ல நான்: சுருட்டையே திருடிக் கொண்டுவந்து விற்கிறேன் என்றார்.

எப்படி,

இந்த வணிகம்?

‘சுருட்டும் திருட்டும் அது கலந்த உருட்டும்’ எப்படி?

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *