சுட்ட பழம், சுடாத பழம்





(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஜெகதீசன் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் பதினைந்து வருடத்தில் அவர் கண்ட தேட்டம் இதோ உங்கள் முன்னாலே நிற்கும் இந்த ‘வசந்த மாளிகை’ தான்.

வசந்தமாளிகை மூன்று மாடிகள் கொண் டது. அடித்தளம் நிலமட்டத்திற்கும் கீழே இருப்பதால் சிலர் அதை, “உது இரண்டு மாடிகள் தான்” என்று சீண்டுவார்கள். அவரது காணித் துண்டைச் சரிவு நிலம்’ என்று யாராவது சொன் னால் ஜெகதீசனுக்குக் கோபம் வரும். ‘சிலோ லான்ட்’ என்று திருத்திச் சொல்லுவான். பேஸ் மன்றில் (basement) றம்பஸ் றூமும் (rhombus room) ஸ்ரோர் றூமும் (store room) உண்டு. அவரது வீடு பெயருக்குத் தக்கமாதிரி வசந்த மாளிகை தான்.
வேலையால் வந்த ஜெகதீசனுக்குப் பிளேட்டில் உணவைக் கொடுத்து விட்டு, அறைக்குள் சென்று உடுப்பு மாற்றத் தொடங்கினாள் மனைவி வனிதா மணி. பெண்பிள்ளைகள் இருவரும் ஏற்கனவே ஆடை அணிந்து மணம் கமிழும் சென்ற் வாசனைகளுடன் ரி.வி.க்கு முன்னால் இருந்தார்கள்.
ஜெகதீசனின் பள்ளி நண்பன் ரவிச்சந்திரன் புற்ஸ்கிறே என்னுமிடத்தில் தொடர்மாடி ஒன்றில் வாடகைக்கு இருக்கின்றான். அவன் சமீபத்தில்தான் நாட்டிற்கு வந்திருந்தான். அவனது தாயாருக்குச் சுகமில்லை என்று தகவல் அறிந்ததும் மனைவி பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு இலங்கைக்குப் போய்விட்டான். அவனது வீட்டிற்குச் சென்று, லெட்டர் பொக்ஸ்ஷிற்குள் கிடக்கும் கடிதங்கள் மற்றும் இதர துண்டுப் பிரசுரங்களை எடுத்து வைக்கும் பொறுப்பு இவனிடம் வந்தது. அவனது வீடு அந்தக் கட்டத்தில் இரண்டாவது மாடியில் இருந்தது. வீட்டின் குறுகிய நிலாமுற்றத்தில் சில பூச்சாடிகள் வைத்திருந்தான். அதற்கு நீரும் விட வேண்டும். வாரத்தில் வியாழக் கிழமையும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையும் சென்று வருவான்.
சாப்பாட்டு மேசையிலிருந்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெகதீசனைத் திடீரென்று அந்த எறும்புக் கூட்டம் திசை திருப்பியது. அதிர்ந்து விட்டான் ஜெகதீசன். அவனது நெற்றிக்கண் பார்வையை அசட்டை செய்த படி, பளபளக்கும் மொசைக்தரை மீது ஊர்கோலம் போயின அந்தக் கூத்தாடி எறும்புகள். நாலாபுறத்திலிமிருந்து புறப்படும் வீதிகள் ஒரு சந்தியை அடைவது போல அவை குசினியை முற்றுகை யிட்டன. உணவுத் தட்டை மேசை மீது அதிரும்படி வைத்து விட்டு, குசினிக்குள்ளிருந்த அலுமாரியைத் திறந்து பார்த்தான். உள்ளே ஒரு பிஸ்கெற் பெட்டியை சம்ஹாரம் செய்து கொண்டிருந்தன அவை.
“வீடு மணக்கப்படாது எண்டு தான் செப்பறேற்ரா இன்னொரு குசினி கட்டித் தந்தனான். இப்ப இந்த எறும்புக் கூட்டம் என்னெண்டு வீட்டுக்குள்ளை நுழைஞ்சது? கத்திய படியே பிஸ்கெற் பெட்டியைத் தூக்கி எறிந்தான். அது ரி.வி. பார்த்துக் கொண்டிருந்த பெண்களின் தலைக்கு மேலால் பறந்து சென்று பேகோலா விற்குள் விழுந்தது. பிஸ்கெற் பெட்டி பறப்பை மேற்கொண்டிருக்கும் போதே எறும்புகள் பொலபொல வென்று உதிர்ந்து விழுந்தன.
“உது சிட்னியிலையிருந்து போன கிழமை விஜயன் வரேக்கை கொண்டு வந்தது. எக்ஸ்பென்ஷிவ் பிஸ்கெற் பெட்டியப்பா! இன்னும் உடைக்கேல்லை. அப்பிடியே புதுசாக் கிடந் தது.’ மாஸ்டர் பெட்றூமிற்குள் இருந்து குரல் வந்தது. எக்ஸ்பென் ஷிவ் என்ற சொல்லுக்கு எதிர்க் குரலாக, “வீட்டை விடவா?” என்ற கேள்வி வந்தது.
“நான் போய்க் காருக்கை இருக்கிறன். வெளிக்கிட்டு முடிய வாங்கோ.”
“உந்தாளுக்கு இனி கொதி கிழம்பி விட்டுது.”
காரிற்குள் ஏறிய வனிதாமணி நுனி சீற்றில் இருந்தாள். இனி வனிதா மணிக்கு கொஞ்ச நேரம் டென்ஷன். கார் சிலவேளைகளில் ரெட் லைற்றில் நிற்காது. வேகம் கூடிக் குறையும். எல்லாவற்றையும் வனிதாமணி தான் பார்க்க வேண்டும். காரிற்குள் பாட்டு ஒலிக்கும்போது தான் அவனது கொதி அடங்கிவிட்டது என்பதைப் அறிவார்கள்.
‘முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே’ என்று தொடங்க, “அப்பாஹைப்பொயின்ற் ஷொப்பிங் சென்ரர்” என்று பின்னால் இருந்து ஒரு பெண் குரல் கொடுத்தாள். இரண்டு பெண்களும் ஒருபோதும் ரவிச்சந்திரனின் வீட்டிற்குப் போனதில்லை. ரவிச்சந்திரனது வீட்டு மணம் அவர்களுக்கு அலர்ஜி. மணம் மாத் திரம் ஒவ்வாமையைக் கொடுக்கும் என்பதல்ல. சில நேரங்களில் சில மனி தர்களும். அதனால் அவர்கள் இருவரையும் Highpoint shopping center இல் இறக்கிவிட்டுப் போவார்கள். திரும்ப வரும்போது ஏற்றி வருவார்கள்.
ஹைப்பொயின்ற் வந்தது. பெண்கள் இருவரும் இறங்கிக் கொண்டார் கள். இனி ரவிச்சந்திரனுடைய வீடு தான். தூரத்தே வரும்போதே அழகான காட்சி தெரிகிறது. தொடர் மாடியிலுள்ள பன்னிரண்டு தபால் பெட்டிகளில் ஒன்றைத் தவிர மிகுதி எல்லாவற்றிலும் வழித்துத் துடைத்து விடப்பட்டிருந்தன. ரவிச்சந்திரனது லெட்டர் பொக்ஸ் தெருவில் சின்னாபின்னமாக இறந்து கிடக்கும் மிருக மொன்றை நினைவூட்டியது.
“காரை ஸ்லோ பண்ணுங்கோ. நான் எல்லாத்தையும் எடுத்து வாறன்.” இறங்கிக் கொண்ட வனிதா மணி, பறந்தது போக இருந்ததில் முக்கியமான கடிதங்களைப் பத்திரப் படுத்திக் கொண்டாள். இரண்டாவது மாடிக்குச் செல்லும் வாசலில் பழைய ஃபிரிஜ் ஒன்று வாய் திறந்தபடி இருந்தது. இரண்டொரு தலையணைகளும் வெளிறிய குசன்களும் சிதறிக் கிடந்தன.
“நீங்கள் வேலையாலை களைச்சுப் போய் வந்தனியள். உந்த ஈசிச் செயரிலை படுத்திருங்கோ. நான் பூச்சாடிகளுக்கு தண்ணி விட்டிட்டு வாறன்”. துரிதகதியில் காரியத்தில் இறங்கினாள் வனிதாமணி.
ஈசிச் செயரிற்குள் சரிந்த ஜெக தீசன் அதன் துணியை இழுத்துப் பார்த்து அதன் பலத்தைப் பரீட்சித்துக் கொண்டான். பலம் பார்க்கக் குனிந்த வனுக்கு அதிர்ச்சி எறும்பு ரூபத்தில் காத்திருந்தது. ஒன்றையுமே காணாத வன் போலத் தனது இரண்டு கால் களையும் ஈசிச்செயரின் சட்டகத்தில் தூக்கிப் போட்டுக் கொண்டான். வனிதாமணி தனது கடைக்கண் பார் வையை அவனை நோக்கி எறிந்து விட்டு தனது வேலையைத் தொடர்ந் தாள்.
வேலை முடிந்ததும் எறும்புகள் செல்லும் தடத்தின் வழியே நடந்து சென்றாள். ஆதி எங்கே என்று தெரியா விட்டாலும், அதன் அந்தம் பெரும் பாலும் குசினிதான் என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும். அந்தம் இருந்த இடம் ஒரு மலிபன் மாறி பிஸ் கெற் ரின். அதை எடுத்து தூர எறியும் நோக்கில் ஒரு ஷொப்பிங் பாக்கிற்குள் போட்டு இறுகக் கட்டினாள். வீட் டிற்கு முன்னால் உள்ள வேஸ்ற்பின் னிற்குள் போடுவதற்காகப் படிகளில் இறங்கினாள்.
“மணி! எங்கை போகிறீர்?”
“பிஸ்கெற் எல்லாம் எறும்பு. தூர எறிஞ்சு போட்டு வாறன்.”
“இஞ்சை கொண்டு வாரும். ஊதிப்போட்டு சாப்பிடலாம்!”
“நிறைய எறும்பாக் கிடக்கு!”
“அதனாலென்ன? எறும்பு சாப்பிட்டா கண் பார்வை நல்லா வரும் எண்டு விஞ்ஞானிகளும் சொல்லுறான்கள்!” –
“…….”
– மல்லிகை ஜூலை – ஆகஸ்ட் 2012.