கழுகுகள்





(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த ஆடைத் தொழிற்சாலையில் ‘நைட் ஷிப்ட்’ முடித்த பெண்கள், பரபரப்பாக வெளியே வந்தார்கள். வழக்க மான கிளிப்பாஷை – சிரிப்பு – உற்சாகம் – எல்லாம் தொலைத்த வெறுமையில் ஒட்டமும், நடையுமாக, பஸ் தரிப்பிடத்திற்கு விரைந்தார்கள். பகல் நேரத்து சந்தடிகள் ஓய்ந்து, பாதை அமைதி தட்டியிருந்தது.

இப்போது இரவு பத்து மணிக்கு மேலிருக்கும்? சூல் கொண்ட மேகங்கள், விண்ணில் புடைத்து நின்று, மழைத்திவ லைகளைச் சொரியத் தருணம் பார்த்தன.
குளிர்காற்று – கவிந்த இருள் – பளிச்சிட்ட மின்னல்! இவர்களுக்கு இவை மகிழ்ச்சி தராமல், ஒரு வித பயக்கிளர்ச் சிக்குத் தூபமிட்டன. காலம் தொலைத்த ராப்பட்சிகளின் ஊமைச் சோகம் முகங்களில் இழைந்தது. சிலர் பாதையை வெறித்து, நேரத்தைப் பார்த்து மனதால் கரைந்தனர் சிலர் – கால்கடுக்கக் காத்து சலித்து, பிரசவ அவஸ்தையில், முகம் சுளித்து, பஸ் ஓட்டுனர்களை மிக மட்டமாகத் திட்டி தீர்த்தார்கள்.
கொலம்பசின் திசைகாட்டி முள்ளாய் விரையும் காலம். அது – யாரிடமும், எதையும், யாசித்து நிற்பதில்லை, பிரபஞ்ச சுழியோடியாய், நிகழ்காலத்தில் ஒரு காலும், எதிர்காலத்தில் ஒரு காலுமாய், வீறுகொண்டு பாய்கிறது.
‘மழை வந்தா, வூட்டுக்கு போறது எப்படி? இந்த எண் ணமே எல்லோரிலும் வியாபித்து ஆட்டிப் படைத்தது. ‘ஆ! அதோ, பஸ் வருகுது! மகிழ்ச்சி நூலிழையில் தொங்க குரல்கள் ஆரவரித்தன.
ஒன்றன் பின் ஒன்றாய் பேருந்துகள் விரைந்து வந்தன.
‘இனி வூட்ட அடைஞ்ச மாதிரித்தான்!’ சலிப்பில் மிதந்த உள்ளங்கள், சாசுவதத்தில் நிலைத்தன. நெரிசலில் மூச்சடைத்த பயணிகள், பஸ்ஸுக்குள் பிணங்களாய் தொங்கினர். வெளி யில் நின்ற, அத்தனை பேரையும் உள்வாங்கிய பேருந்துகள், மீண்டும் சீறிப் புறப்பட்டன.
அந்த இருவரைத் தவிர…!
அவர்கள் போக வேண்டிய ரூட்பஸ், இன்னும் வந்த பாடில்லை! மேரியும், மெனிக்காவும், பரஸ்பரம் முகம் பார்த்து மௌனத்தை, ஏமாற்றமாகப் பகிர்ந்து கொண்டார்கள். அந்த சங்கடத்திலும் அவர்களுக்கு இரு ஆறுதல்கள்.. ஒன்று இருவரும் ஒரே இடத்திற்கு போக வேண்டியவர்கள். வெறிச் சோடிப் போன பாதையையும், கைக் கடிகாரத்தையும் பார்த்த வாறு அவள் சிங்களத்தில் சொன்னாள்.
‘பத்தரைக்கு வரவேண்டிய பஸ் இனி வராது போல, இப்படி நிற்கிறதில அர்த்தமில்லை! ரோட்டில, வெளிச்சம் இருக்கு, வா நடப்போம்!’
‘அது தான் சரி! நேரமும் சுணங்கிப் போச்சி நடப்பம்!’
ஏற்கனவே தீர்மானித்த விடயத்தை அமுல்நடத்தும் தோர ணையிலும், நம்பிக்கைச் சரடு முறிந்த அதிர்விலும் இவள், துரிதப்படுத்தினாள். மூன்று மைல்களை நேரம் பிசகிய இருட்டு வேளையில் பருவக்குமரிகள் இருவரும் நடந்தே செல்லுவது, அவ்வளவு ஆரோக்கியமான சங்கதி இல்லை தான். மாற்று வழி அறியாத அவர்கள், அதிர்ப்தியோடு நடந்தார்கள்.
வழக்கமாய், இடையை அழகாக அசைத்து, பிருஷ்டம் குலுங்க நடக்கும், நடையை மாற்றி, மிக வேகமாக அடியெடுத்து வைத்தார்கள்.
திரு விழாக் காலத்து அலிகளின், அவசர நடையைப் போல… நடை பாதை, இருளை அணைத்து, துயில் கொண்டது.
‘எனக்கு பயம்மா இருக்குடீ! அம்மாவுக்கு ஆஸ்மா வருத்தம் வேற. நான் வருமட்டும் தூங்காம றோட்டயே பார்த்துக் கொண்டிருப்பா!ம்… ஒன்பாடு தேவலடீ. றோட்டோ ரத்திலகா ரத்தில வூடு! நான் தான் இந்த இருட்டில, மூல முடுக்கெல்லாம், தாண்டிப்போவணும்’. இவளது சங்கடத்தை உணர்ந்து அவள் பரிவோடு பார்த்தாள்.
‘ஏன் மேரி! இண்டைக்கு, ஒரு ராவு, எங்கட வூட்டில தங்கிப் போனா என்ன?’
‘இல்லடி மெனிக்கா! நான் எப்படியும் போக வேண்டும். யேசு நமக்கு துணை இருப்பார்!’
லேசான மழைத் தூறலில், பாதை பிசுபிசுத்திருந்தது. நடந்து கொண்டே தூரத்து, இருளை வெறித்தவாறு, மெனிக்கா தொடர்ந்தாள்.
‘பெண்கள் வேலைக்கென்று வந்து விட்டால எத்தனை கஷ்டங்கள். வீட்டில் உள்ளவங்களோ, மத்தவங்களோ, எங்கட துயரங்கள அறிய மாட்டாங்கடி! ஏன்தான் நாங்க ஏழையா பொறந்தோமோ. இந்த ஆம்புளப் படகளோட, பஸ்ஸில மல்லுக்கட்டி, சீவன் போகுது. புள்ள பெறாத குற ஒண்டு தான்… பாக்கி…!
அவள் ஆதங்கத்தோடு தொடர்கையில்,
‘அந்தக் கதையை விடு! வூடு போற வரைக்கும், வேற எதையாவது கதைப்பம்!’
என்று பேச்சை திடுதிப்பென, வேறு திசைக்கு மாற்றினாள் இவள்.
‘அது சரி, மெனிக்கா, உன்னுடைய போய் பிரண்ட் சுனிலுடைய, கதைகள் என்ன? போன போயாவுக்கு, அவன, சந்திச்சிருப்பியே!’
அந்த கேள்வியில் உடல் சிலிர்த்து முகம் சிவத்த அவள், மகிழ்ச்சி கலந்த குரலில் எதையோ கூற அவசரப்பட்டாள்.
மேரி கதை கேட்கும் ஆவலில், தனது கட்டைக் கூந்தலை இடக்கையால் எடுத்து கழுத்திலிட்டவாறு உற்சாகமடைந்தாள். ‘போன போயா முழுநாளும், சந்தோஷமா பீச்சில இருந்தோமடி! அது ஒரு இனிய கனவு. அதை வார்த்தைகளால், விவரிக்க முடியாதுடீ!’
அவள் ஆத்மார்த்தமாய் கழித்த அந்த இனிய பொழுதை, எண்ணி ஆர்ப்பரித்தாள். பூரிப்பினால் உதடுகள் இரண்டையும் நாவினால் நனைத்துக் கொண்டாள். ‘இந்த வருஷக் கடைசி யில, அவருக்கு கண்டியில மாற்றம் கிடைக்கப் போகுதாம். நெக்ஸ்ட் இயரில, கட்டாயமா வெடிங் நடக்குறதா சொன்னா ரடி!’
‘எதுக்கும் கொஞ்சம் முன் யோசனையா நட! ஆம்பு ளைக்கு அவசர புத்தி. ஏதும் தவறா நடந்திட்டா காலம் பூராவும் நாயா சீரழிய வேண்டியது நாங்கதான். விளங்குதா?’
‘நீ எனக்கு தோழி மட்டுமல்ல பாட்டியும்கூட. உன் சொல்படியே நடப்பேன் சரிதானே?’ பளிங்குத் தரையில் முத்துக்கள் சிதறிய ஓசையில் இருவரும் குலுங்கிச் சிரித்தார்கள். மரக்கிளைகளில் காற்று சலசலத்தது
‘மேரி! நீ புத்திசாலி, நிதானமானவள். அதுசரி காதல் விஷயத்தில், எப்பவும் ஒதுங்கியே போறீயே ஏன்? அந்த ஸ்டோர் கீப்பர் என்டனி, எவ்வளவு வடிவானவன்! ஒன்ன ஒரு நாளைக்கு காணாட்டி என்னிடம் கவலையோட விசாரிப் பான். நீ அவன, லவ் பண்ணுறதில என்னடி தப்பு? எல்லா விளையாட்டும் ஒரு வயசுலதான், கிழவியானா ஒரு நாயும் திரும்பிப் பார்க்காது.’
இவள் விரக்தியாய் சிரித்தாள்.aa
‘உன்னைப் போல ஜாலியா, நான் இல்லடி. அப்பாவுக்கு வேல வெட்டி இல்ல. குடிதான் வாழ்க்கை. அம்மா பாவம், எல்லாக் கஷ்டங்களையும், தூக்கிப் போட்டுக் கொண்டு நிரந்தர வியாதிக் காரியாயிட்டா. தங்கைளின் எதிர்காலத்துக்கு நான்தான் பொறுப்பு. இவ்வளவு சுமைகள்ல, காதலை கனவுக ளில, மட்டுமே பார்க்கிறேன்…! யேசு எப்பவாவது வழிகாட்டு வார். அதுவரை…?’
இவளது நிராசையும் நெடுமூச்சும் அவளது விழிகளைக் கசியச் செய்தன. இருவரது சுவையான உரையாடலில் பாதித் தூரம் வந்ததே தெரியவில்லை.
பிரதான பாதையின் முற்சந்தியை அடைந்த போது தூறல் கள் தடித்து விழுந்தன. விடிகடையின் முன்னால் நின்ற விடலை வயது பையன்கள் இரட்டை அர்த்தத்தில் இவர்களை மட்டமாக கேலி செய்தனர். தலை குனிந்தவாறு இருவரும் வேகமாக நடந்தார்கள்.
விரைவாக வந்த ஆட்டோ ஒன்று, இவர்களை அண்மித்து நிறுத்தி ஏறுமாறு செய்தது.
இவள் அதிர்ப்தியோடு ஆட்டோகாரனிடம் வேண்டாம் என்று மறுத்தாள்.
‘மேரி! என்கிட்ட காசு இருக்கு! மழைக்கு முந்தி ஏறிப் போயிடுவம்’ என்றாள் மெனிக்கா.
‘இந்த நேரங்கெட்ட நேரத்தில், ஆட்டோவில் வந்தவன் ஒரு நேர்மையானவனாத்தான் இருப்பான், எண்டு எப்படி நம்பலாம்?’ அவளது கேள்வியில் நியாயம் இருப்பதையும், புத்தி கூர்மையாக சிந்திக்கும் ஆற்றலையும், எண்ணி ஒரு கணம் வியந்தாள் மெனிக்கா. மழைத் துளிகள் உடலில் உறைக்கும் விதமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி விழுந்தன.
மழை கொட்டும் முன், போய் ஆகவேண்டும் என்ற உணர்வில், சளைக்காது இருவரும் தீவிரமானார்கள். தோழிகளில் ஒருத்தி வீடு வர, பிரியமனமில்லாமல் விடை கூறினாள். ‘பத்திரமா போ மேரி! ஏதும் கரைச்சலெண்டா இங்க ஓடிவந்திடு!’
‘ஒண்டும் நடக்காதுடீ, எல்லாத்துக்கும் யேசு துணையிருப் பார்!’
தெருவிளக்கின் ஒளியில் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் மேரி. மணி பதினொன்றரையைத் தாண்டியிருந்தது. இவள் போக வேண்டிய இடது பக்க செம்மண் பாதை, இருள் கப்பிக் கிடந்தது. மனதில் இனமறியாத பயம் பற்றிக் கொள்ள அந்தத் தெருவே மழை இருட்டில். மயான வெளியாகி அன்னியமாய் காட்சி தந்தது அவளுக்கு. ஆளரவம் கேட்டால், நாய்கள் உறுமிக் கொண்டோ குலைத்துக் கொண்டோ வரலாம். இன்று இந்தக் குளிரில் அவை வாலைச் சுருட்டிக் கொண்டு உறங்கிப் போயிருக்கலாம்.
இருள் கப்பிய பாதையின் தொலைவில் உருவங்கள் அசைந்தன. யாரோ – யாரையோ மிக மோசமான வார்த்தைக ளால், உரத்த தொனியில் திட்டுவது கேட்டது. அறிந்தவர்கள் யாரும் தென்பட மாட்டார்களா என்று மனம் யாசித்தது. அவர்களை அண்மித்த போது மனதில் இனம் புரியாத பீதி பற்றிக் கொண்டது.
நிறை வெறியில் இருவர் தள்ளாடிக் கொண்டிருந்தார்கள். இவளது வரவு, அவர்களது சுருதியைத் தளரச் செய்து சமிக்ஞை களால் உற்சாகமடைய வைத்தது.
‘ஏய்…. நில்லு…!’ என்றான் ஒருவன். தெளிவற்ற வார்த்தைகளால். கெட்ட மதுவாடை குப்பென்று வீசியது. இவளது பாதாதி கேசம் பயத்தால் விறைத்தது. ஒரு அசட்டுத்தனமான தைரியத்தில் வேகமாக நடந்தாள். அந்த இருவரும் இவளைத் துரத்திக் கொண்டு பின் தொடர்ந்தனர்.
‘யேசுவே! என்னை காப்பாற்றி அருளும்!’ இவள் நெஞ்சு முட்டிய துயரத்தில் பிரார்த்தித்தாள்.
‘ஏய்! நில்லுடி…?’
ஒரு கணம் இவளது ஆத்மா அதிர்ந்தது. பாதையோரத்தில் ஒரு பெரிய ஒற்றை வீடு. முன் வாசல் கேட் இறுக மூடியிருந் தது. வீட்டினுள் விளக்கு எரிந்தது அந்த வீட்டின் கட்டைச் சுவரில் தாவி ஏறி மறு பக்கம் குதித்தாள் இவள்.
கையில் கிடைத்த புதையலை நழுவ விடாது ‘விடாதே! புடி!’ என்று கத்தியவாறு அவளைத் தொடர்ந்து இருவரும் சுவர் ஏறிக் குதித்தார்கள். இவள் பதறியடித்துக் கொண்டு முன் வாசல் கோலிங் பெல்லை பலமாக அழுத்தினாள்.
‘காப்பாத்துங்கள்! என்னை காப்பாத்துங்கள்!!’ என்று, கூக்குரலிட்டாள்.
மறு கணம் கதவு திறந்தது.
கையில் நீண்ட வாளுடன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், கோபாவேசமாக வாசலை வெறித்தார். கூடவே அவரது மனைவியும் பரபரப்போடு அவருக்கு அருகில் வந்து நின்றாள்.
நிலமை மோசமாகி விட்டதை உணர்ந்த அந்த இருவரும், தலை தெறிக்க ஓடினார்கள். இவளுக்கு வார்த்தைகள் வர வில்லை பயத்தால், உடல் வெடவெடுத்தது.
‘பயப்படாதே என்ன நடந்தது?’ என்று அவர் பரிவோடு கேட்டார். நடந்த சம்பவம் அனைத்தையும் இவள் துயரத்தோடு கூறினாள். அவர் துரிதமடைந்தார். ‘சரி என்னிடம் கார் இருக்கிறது. போலீசுக்குப் போய் முறைப்பாடு கொடுத்து விட்டு வரலாம்’ என்றார்.
மனைவி திடீரென எரிந்து விழுந்தாள்.
‘இப்ப எங்கேயும் போக வேண்டாம். நமக்கு ஏன் ஊர்வம்பு. இந்த நேரத்தில வெளியில போறது, ஆபத்தில முடியலாம். இவள, வெளியே போகச் சொல்லுங்க! பிறத்தியார் விஷயத்திலே தலையிட்டு, நாங்க, தொந்தரவில மாட்டிக் கொள்ளத் தேவையில்லை!’
அவளிடமிருந்து இப்படிப் பாதகமான அபிப்பிராயம் ஒன்று வருமென்று எதிர்பார்க்காத இவர் மனம் சங்கடப்பட்டு,
‘டார்லிங்! ஒரு வயதுப் பொண்ணு ஆபத்தான வேலையில், உதவி கேட்டு வாசலுக்கு வந்தா, இரக்கமே இல்லாம, துரத்திரது முறையா? நிதானமா யோசித்துப் பார். மற்றவங்கட துயரத்தில் உதவுறது எவ்வளவு புண்ணிய காரியம்.’ என்று கூறியவாறு மனைவியை கனிவுடன் பார்த்தார்.
‘மெக்ஸிம் கோர்க்கி, என்ற ருஷ்ய எழுத்தாளர், பாதையில் போகும்போது, ஒரு நாள், முரடர்கள் ஒரு பெண்ணை இரக்க மில்லாமல் அடித்துத் துன்புறுத்தினார்கள். கும்பல் வேடிக்கை பார்த்தது. அவருக்கோ மனம் பதைபதைத்தது. முரடர்களிடம், இந்தக் கொடுமையை நிறுத்துங்கள், என்றார். அவர்கள் பெண்ணை விட்டுவிட்டு கோர்க்கியை பலமாக அடித்து பாதையில் தூக்கியெறிந்து விட்டுப் போனார்கள். பெண் எப்படியோ உயிர் பிழைத்தாள்.
எழுந்திருக்கவும் முடியாத நிலையில் இவர் சிரித்தார். ஒருவன் கேட்டான். ‘உன்னை பலமாக அடித்தார்களே, சிரிக்கிறாயே, வலிக்கவில்லையா?’ என்று. கோர்க்கி பதில் சொன்னார்.
‘அந்தப் பெண்ணை துன்புறுத்தும் போது எனக்கிருந்த வலியும், வேதனையும் இப்போது இல்லை!’ என்று. ‘பிறர் துன்பத்திற்கு தன்னை தியாகம் செய்கிறவன்தான் மனிதனில் மேலானவன்!’ என்று கூறி மனைவியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
அந்த முகத்தில் இப்போது கடுமை விலகியிருந்தது.
‘சரி! என்னவோ செய்யுங்க! இப்ப வெளியில் மட்டும் போகாதீங்க!’ என்றாள் தணிந்த குரலில்.
‘சரி ஆகட்டும்! அவளுக்குச் சாப்பிடக் கொடுத்து தூங்க வை!” என்று மனைவியிடம் கூறிவிட்டு, இவளை கருணை யோடு நோக்கி,
‘ஒனக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ உடனே இங்க வரலாம், இதோ என்னுடைய விசிட்டிங் கார்ட்!’ என்றார்.
அதில், பேராசிரியர் விமல்நாத், பி.எச்.டி. என்றிருந்தது. இவளது கண்களில் நன்றிக்கடன் வழிந்தது!
– 7-6-1993, மல்லிகை.
– மீறல்கள், முதற்பதிப்பு: நவம்பர் 1996, மல்லிகைப் பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம்.