எல்லாம் வரமே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 3,666 
 
 

ராதிகா ரொம்ப ரொம்ப சந்தோசமாய் நிறைய விருப்பத்தோடு கணவர் ராமுவுக்கும், தனக்கும், பிள்ளைக்கும் ஒரே நிறத்தில் அமையும் படி உடைகளை தெரிவு செய்து அதற்கேற்ற ஆபரணங்கள் காலணிகள் என எல்லாமே ஒன்றுக்கு ஒன்றுக்கு பொறுந்தும் வகையில் தேடித்தேடி பார்த்துப் பார்த்து தெரிவு செய்து ஆசை ஆசையாய் தன்னை அலங்காரம் செய்த நிலையில் காரில் ஏறினாள்.

அவளுக்கு எல்லோரையும் பிடிக்கும்.யார் என்ன சொன்னாலும் அதிலுள்ள சரி பிழையை ஓரளவு சரியாக பிரித்துப்பார்க்கும் திறன் கொஞ்சம் தனித்தன்மையைக் காட்டினாலும் நிறைய சந்தர்ப்பங்களில் குறைகளைத் தேடாது நிறையை மட்டுமே கண்டுக் கொள்ளும் திறனை தந்து விடு கடவுளே! என்று எல்லோருக்கும் பொதுவான படைத்தவனை எல்லா நேரங்களிலும் வேண்டிக் கொள்வாள்.

எந்த இடத்திலும் தனக்குத் தனித் தன்மை எல்லாம் ஒன்றும் தேவையில்லை.பத்தோடு பதினொன்றாய் நாமும் கலந்துக் கொண்டு வந்தால் போதுமென்று நினைப்பாள்.யார் எம்மைப்பற்றி குறைக் கூறினாலும் எமக்கென்ன உடம்பிலா படுகின்றது இல்லைத்தானே! சொல்கின்றவர்கள் சொல்லி விட்டுப் போகட்டும்; என நினைத்து எந்தப் பிரச்சினையையும் சமாளித்து சாதாரணமாய் கண்டுக்; கொள்ளாமல் அமைதியாய் வந்திடுவாள்;;. ஆலயங்களுக்கும்; விழாக்களுக்கும் விஷேசங்களுக்கும் சென்ற போதெல்லாம் பலரும் பல விதமாய் படித்த படிக்காத உறவுகளும் நட்புகளும் கேள்விகள் கேட்கும் போதெல்லாம் என்ன தான் எல்லாம் சகஜமே என நினைத்த போதும் இதயத்தை யாரோ முள்ளால் குத்துவது போன்றிருக்கும் இவ்வுலகில் நாம் எவ்வளவுதான் படித்தவர்களாய் நல்லவர்களாய் இருந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாமும் பிழைகள் தவறுகள் பாவங்கள் செய்திருப்போம்.

அதன் பலனாய் படித்து விட்டோம் நல்லவர்களாய் இருக்கின்றோம் என்பதற்காக அனைத்தும் நல்லதாகவே நடக்குமென சொல்லி விட முடியாதே. அப்படி நினைத்துத்தான் ராமுவும் ராதிகாவும் வாழ்கின்றார்கள்.இல்லாதோருக்கு இல்லை என்ற பிரச்சினை மட்டும் தான். இருப்பவர்களுக்குத்தான் பல பிரச்சினைகள் என்பது போல இவர்களுக்கும் வசதி வாய்ப்பு என சந்தோசமாய் வாழ்ந்தாளும் கூட சில சந்தோசங்களுக்கு கொடுத்து வைக்காதவர்கள் என்பதுதான் உண்மை. அவர்கள் என்னதான் நினைத்து நினைத்து களைத்துப் போனாலும் நேற்றுத் தீராத இந்தப் பிரச்சினை இன்றைக்கும் தீரவில்லை. நாளைக்கோ இறைவனின் தீர்ப்பு என்பது அவர்கள் தெரிந்த உண்மைதான்.

அதற்காக என்ன செய்திட முடியும்.யாரையும் கேட்டுக் கொண்டு இந்த பூமியில் யாரும் பிறக்கவில்லை. அது போலவே யாருடைய நல்ல வார்த்தைகளால் மட்டும் நாம் வாழப் போவதுமில்லை. யாரோ ஒருவருடைய இழி சொல்லுக்காக செத்துப் போகப் போவதுமில்லை.ஏன் பிறக்கின்றோம் என்று தெரியாமலேயே பிறந்து விட்டோம்.அப்படியானால் இப்படித்தான் கட்டுக் கோப்பான அமைதியான அழகான அன்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தமக்குத் தாமே ஒரு நல் வழியை அமைத்துக் கொணடு இன்பமாய் வாழப் பழகிக் கொளவது தானே சரியாயிருக்கும். அப்படித்தான் இருவரும் வாழ்க்கையை ரசனையோடு அனுபவிக்க இல்லாத இன்பத்தை வலுக்கட்டாயமாய் இருக்கு என்ற உறுதியோடு பழகிக் கொள்ள எத்தனிக்கின்றார்கள்.

ஆனால் விடுவார்களா சூழ உள்ள நல்லுள்ளங்கள். அவர்களைக் கண்டதும் ரொம்பப் பெருமையாய் அவர்களை சந்தித்திட ஆவலோடும் அக்கறையோடும் ஏங்கித் தவித்தவர்களாய் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தவர்களாய் ஓடிவந்து கட்டித்தழுவி முத்தமிட்டு நலம் விசாரிப்பு என்ற தோரணையில் முந்திக் கொணடு கேள்விகளை எழுப்பி இருவரின் மனமும் உடைந்து போகுமளவிற்கு வலிகளை ஏற்படுத்தி விடுவார்கள். என்னதானிருந்தாலும் இருவரும் எந்த அழைப்பிதல் வந்தாலும் ஏற்றுக் கொணடு கட்டாயம் பிள்ளையை அழைத்துக் கொணடு நிகழ்வில் கலந்துக்கொள்ள புரப்பட்டு விடுவார்கள் .இருந்தும் அவ்வப்போது முன்னைய நினைவுகள் குறுக்கிட்டு மனதை சங்கடப் படுத்தி விடுவதுமுண்டுதான். இன்றும் அவ்வாறு அவளுக்குப் பழைய நினைவுகள் மனதைத் தூண்டி விட்டு சிந்தனை மயமாக்கி விட்டது.

ஆமாம் ராமுவுக்கும் ராதிகாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தேறியது. இருவரின் இல்லற வாழ்க்கைக்கு ஆதாரமாய் அழகான ஆண் குழந்தையை கடவுள் பரிசாகக் கொடுத்தார் .அப்பா அம்மா என்று உறவாடிட மழலைச்செல்வம் ஒரு வரமல்லவா. அவர்கள் பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்றாற்போல் படைத்தவன் படைத்து விட்டான்.அந்தக் குழந்தையை தாலாட்டி சீராட்டி பாராட்டி வளர்க்க வேண்டியது பெற்றோர் கடமையல்லவா. ஆக அந்தக் குழந்தைக்கு குகன் என பெயர் வைத்தார்கள். குகனும் நாளுக்கு நாள் வளரத் தொடங்கினான். இயல்பான செயற் பாடுகளிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் பின் தள்ளிய நிலையை பெற்றோர் உணரத் தொடங்கினார்கள். எல்லாவற்றையும் அவனுக்கு ஏற்ற நேரங்களில் ராமுவும் ராதிகாவும் சரியான முறையில் செய்யத் தவறவேயில்லை .இருந்தும் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. அந்த வகையில் குகன் வளர்ந்து பள்ளிப் பருவத்தை எட்டிய வேளையில் அவனால் முறைப்படி வயதுக்கேற்ற கல்வியை விளங்கிக் கற்றிட சிரமப்பட்டான். பிறகுதான் பின் தள்ளிய நிலைக்கு பிறப்பிலேயே சிறிய குறையொன்று இருப்பதைப் பெற்றோர் உணர்ந்தார்கள். பல வைத்தியர்களிடம் காட்டி ஆலோசனைப் பெற்றார்கள் .அதாவது மூளைப் பகுதிக்குப் போகும் நரம்பில் இரத்தவோட்டம் தடைப்பட்டு குறைவாக செல்கின்றமையால் சிந்தனைத் திறன் குறைவடைகின்றது .இதன் காரணமாய் அவனால் எதையும் சாதாரணமாய் கற்றுக் கொள்ள முடியவில்லையென்றும் நாளடைவில் இதை சரி செய்து விடலாம் என்றும் நாம் தரும் மாத்திரைகளைத் தினந்தோறும் கொடுத்துவர சாதாரணமாகி விடும் என்றும் கூறி பலவகையான மாத்திரைகளைக் கொடுத்தார்கள்;. சோதிடரீதியாக பல சோதிடர்களை சந்தித்தார்கள். வாழ்க்கையில் தன் பிள்ளையும் சாதாரணத் தெளிவோடு வாழ்ந்திடுவதைக் காண ஆர்வமாய்த் தடுமாறினார்கள். சோதிடர்களும் இந்த சாதகத்தின் படி சூரியனும் புதனும் பகைக் கிரகங்களாய் அமைந்துளளமையால் சூரியன் புதனை மறைப்பதன் காரணமாக அவனால் படிக்க முடியவில்லை. .தினமும் பிள்ளையாருக்கு விளக்கு போடுங்கள் .குருபகவானுக்கு மஞ்சள் பூ மாலைக் கட்டி கடலை மாலைக் கட்டி பூசை செய்து வணங்கிட எல்லாம் சரியாகும் என்றார்கள். ராதிகாவும் ராமுவும் எல்லாவற்றையும் செய்வார்கள். அப்படி செய்து வருவதனால்தானோ என்னவோ ஓரளவு நல்ல குணவியல்புகளுடன் வளரத் தொடங்கினான் போலும்.அவன் விஷேடதேவை உள்ள குழந்தைகள் பட்டியளில் தான் மற்றோர் கண்களுக்குப் பட்டான்.

பெற்றோரும் கூடுதலாகவே அவனுக்கு ஏற்றாற்போல் தாம் இயங்கிடப் பழகிக் கொண்டார்கள்.அவனைத் தனிமையில் விடுவதில்லை. உடைகள் தெரிவு செய்யும் போதும் காலணிகள் தெரிவு செய்யும் போதும் இலகுவாகப் போட்டுக் கலட்டக் கூடியவற்றையே தெரிவு செய்வார்கள் . எந்தப்பொருட்கள் மீது ஆசைப்பட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். பயணங்கள் செய்யும் போதும் அவனுக்கான முக்கியத்துவத்தின் பிறகுதான் மற்றைய எல்லாம் என நினைத்து இயங்கும் சூழ்நிலமையை மனதார ஏற்றுக் கொண்டார்கள். அவனொரு விஷேடத் தேவையுள்ள குழந்தை என்பதை மறந்துப் போகுமளவிற்கு பெற்றோர் இயங்கத் தொடங்கிவிட்டார்கள். இல்லை என்ற பெயர் கிடைப்பதைவிட அம்மா என்றழைத்திட ஓர் குழந்தைப் பாக்கியம்!.இது தெய்வத்தின் வரம். பராமரிப்பு என்பது தெய்வத்தின் கட்டளை இந்தப் பெற்றோரிடம் இதை அனுபவிக்க வேண்டுமென்பது குழந்தைக்கு தெய்வம் கொடுத்த வரம். எல்லா குழந்தைகள் போன்று படிக்கவில்லையே!இடத்திற்கு ஏற்றாற்போல் நடந்துக் கொள்ள முடியவில்லையே! சுயமாகக் கடமைகளைச் செய்துக் கொள்ள முடிய வில்லையே என வருத்தப்பட்ட நேரங்களும் சந்தர்ப்பங்களும் பல முறை மனதைக் கஷ்டப்படுத்தினாலும் இறைவன் அளந்ததுத் தானே வாழ்க்கை. என்ன செய்திட முடியும் .விருப்பங்கள் எல்லாம் விரும்பிய படியா நடக்கின்றது.!இல்லையே!.கிடைத்ததைத் தானே நடைமுறையில் விருப்பமாக்கிக் கொள்ள முடியும். ஆனாலும் உறவுகளும் நட்புகளும் பல கேள்விகளுடன் தான் நல விசாரிப்புகளை தொடங்குவார்கள் .

இப்போ எப்படி குழப்படிபண்ண மாட்டாரா.

நல்லா படிப்பாரா.

கொஞ்சம் விஷேட டொக்டரிடம் காட்டியிருக்கலாமே.

மனசு வருத்தப் படாதப்படி பார்த்துக்குங்க.

ஒரு அம்மா ராதிகாவிடம் கூறுகின்றார் என் மகள் கர்ப்பமாய் இருக்கின்றாள் எனக் கண்டு கொண்டதுமே நான் கூறி விட்டேன் குகன் போன்ற குழந்தைகளை எல்லாம் நினைத்துக் கொணடிருக்காதே என்று.

யூரோப் நாட்டில் வாழும் ஒரு பெண்ணின் அம்மா ராதிகாவிடம் கூறுகின்றாள் மகளுக்கும் குழந்தைப் பிறந்து இரண்டு மூன்று வயதாகின்றது அவனும் கோபம் வந்த உடன் பொருள்களை உடைப்பானாம் கை கால்களை உதறிக் கொண்டு சத்தமாக அழுதுப் பிடிவாதமாய் அடம் பிடித்து குழப்படி செய்வானாம் .தாம் உடனே மகளிடம் கேட்டாளாம் என்ன நீ கர்ப்பமாக இருக்கும் போது குகனை ஏதும் நினைத்தாயா|| என்றுத்தான் கேட்டேன் என ராதிகாவிடம் பெருமையாய்; கூறுகின்றரள்.

பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எப்படி மகனின் செயற்பாடுகளில் ஏதும் முன்னேற்றம் இருக்கின்றதா?.என்பார்கள்.

அப்பா அம்மா முயற்சிக்க வேண்டிய எல்லா வற்றையும் முயற்சித்திருப்பீர்கள்;.இருந்தாலும் சித்த மருத்தவம் நாடி சோதிடம் என்ற முறைகளையும் கொஞ்சம் பார்த்திருந்தால் குணமாக்கியிருக்கலாம் தானே என்றார்கள் .

என்ன தான் நீங்கள் சந்தோசமாயிருந்தாலும் மகனை நினைத்தவுடன் அந்த சந்தோசமெல்லாம் என்னவோப் போலாகிவிடும் தானே!.

அந்தப் பெரிய புள்ளிகளுக்கெல்லாம் யந்திரம் செய்துக் கொடுப்பாரே அந்த சாமியாரைக் கொஞ்சம் பார்த்திருக்கலாமே!.

நீங்கள் போகுமிடமெல்லாம் மகனையும் அழைத்துச் செல்லாதீர்கள் உங்களுக்கு சங்கடமாயிருக்கும் தானே!.

பிள்ளையின் சுதந்திரத்தை மட்டும் இல்லாமல் செய்திடாதீங்க எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுப்பதுப் போலவே கொடுங்கள்.

அப்படி கொடுக்காத பட்சத்தில் ஏமாந்து விடுவான் மனசு பாதித்து விடும்.

என்ன இப்படி அடம்பிடித்து கரச்சல் கொடுக்கிறான் .அப்பா அம்மாவை அழுது அழுது நன்றாக ஏமாற்றி வைத்துள்ளான். அப்பா அம்மாவிற்கும் கோபம் வரும் என்பதை உணர்த்திட பிரம்பால் இரண்டு மூன்று அடி அடியுங்கள் . அவன் பிரச்சினை சரியாயிடும். இல்லாவிட்டால் பெரிய ஆளாய் வளர்ந்தாலும் இப்படியேதானிருப்பான்.

நினைக்கின்ற மாதிரி இல்லையே! உங்கள் மகனுக்கும் பெரிய வயதுதான் இருந்தும் செயற்பாடுகள் தான் முன்னேற்றம் இல்லாமலேயே இருக்கின்றது. இப்படி தூரயிருந்துப் பார்பவர்களுக்கு வித்தியாச வித்தியாசமாய் தோண்றினாளுங் கூட அவர்களைச் சொல்லி பிழையில்லை. சில நல்லுள்ளங்கள் உணமையிலேயே குகன் முன்னேற்றம் காண வேணடும் என்பதில் அக்கறைக் கொணடவர்களாய் இருப்பது என்னவோ உண்மைத்தான். இருந்தும் நினைப்பது நடப்பதென்பது படைத்தவன் கையில் அல்லவா உள்ளது. ராமுவும் ராதிகாவுமிதைப் பற்றி தெளிவடைந்த நிலையில் மனதளவில் சரியான தமக்கு நிம்மதியான சிந்தனைகளை மனதளவில் தெளிவுப் படுத்திக் கொண்டார்கள் . அந்த அந்த ஜீவண்களுக்கான நல்ல நேரங்கள் வரும்போது எல்லோருக்கும் எல்லாம் சரியாய் நடக்கும் அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டுமென்று . யாருக்குத் தான் தம் தம் வாரிசுகள் எல்லா வகையிலும் திறமையானவர்களாய் வெற்றி மட்டுமே வாழ்கையென எண்ணி வாழ்ந்திட வேண்டுமென்ற ஆசையில்லை . அது பலருக்கு நினைத்த வரமாய் அமைந்தாலும் சிலருக்கு இப்படியான வரங்களாகவும் அமையத்தான் செய்கினறது. அதற்காக என்ன செய்திட முடியும்.! எல்லாம் அவன் செயல் என தாழ்விலே பெருமையும் வாழ்விலே பெருமை மிகு தாழ்வையும் வேண்டி எல்லாம் வரமே என நினைத்து வாழ்வதுதானே சரியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *