ஆறடி நிலம்




(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள தங்கடை வீடுகளைச் சொந்தக்காரர் வந்து பார்க்கலாம்” எண்டு ஆமி சொல்லியிருக்காம். இதை அறிஞ்ச ஒரு சிலர் தங்கடை வீடுகளைப் பாக்கப் போய்க் கொண்டிருக்கினை எண்டு கேள்வி.”
சாவகச்சேரிச் சந்தையடிக்குப் போய்வந்த ஆறுமுத்தார், இடம்பெயர்ந்து வந்து, சங்கத்தானையில் தற்காலிகமாகத் தங்கியிருக்கின்ற பென்சனியர் தம்பிமுத்தருக்குச் சொல் கின்றார்.
“அப்பிடியா! அப்ப நான் இண்டைக்கே என்ரை வீடுகளைப் போய்ப் பாக்கவேணும்.”
ஆனந்தமும் பேராவலும் பொங்கிப் பிரவகிக்க தம்பி முத்தர் தன்ரை வீடுகளைப் போய்ப் பார்க்க அவசர அவசர மாகப் புறப்படத் தயாராகின்றார்.
“காமதேனு”, “கற்பகதரு”, “அமுதசுரபி” வீடுகள் அவர் மனத்திரையில் நிழலாடி மறைகின்றன. அவற்றின் வனப்பை யும் கம்பீரத்தையும் பார்த்துப் பலரும் பாராட்டியதை அவர் இப்பொழுதும் நினைத்துப் பெருமைப்படுகின்றார்.
அவருடைய மூன்று வீடுகளும் குடிகொண்டுள்ள விசாலமான வளவுகளுக்குள் செழிப்பாய் வளர்ந்தோங்கிய தென்னை, மா, பலா, தோடை, எலுமிச்சை மரங்கள் எல்லாம் எழில் வனமாய்த் திகழும் காட்சி அவர் விழிகளில் கண்ணாமூச்சியாடுகின்றது.
“அப்பா அது உங்கடை வீடுகளே? அதுகள் மூண்டை யும் எப்பவோ எங்கடை அக்காவாக்களுக்குக் குடுத்ததை மறந்திட்டியளே? இப்பென்ன பகல் கனவா காணுறியள்?”
தம்பிமுத்தருடைய இளைய மகன் கருணாகரன் பரிகா சமாய்க் கேட்கின்றான்.
“அந்த மூண்டு வீடுகளும் இப்பவும் எனக்குத்தான்ரா. உன்ரை அக்காமாருக்கு அந்த வீடுகளைச் சீதனமாய்க் குடுத்தனான்தான். ஆனா அந்த வீடு வளவுகளை எனக்குச் ‘சீவிய உரித்து’க் கண்டுதான் நான் எழுதிக் குடுத்திருக்கிறன். என்ரை அனுமதி இல்லாமல் உன்ரை அக்காமாராலை அந்த வீடுகளை ஈடு வைக்கவோ விற்கவோ முடியாது. இப்பவும் அந்த வீடுகள் என்ரைதான். ஒரு தம்பியாலையும் அசைக்கேலாது.”
வீறாப்பாய்க் கூறுகின்றார் தம்பிமுத்தர். அவர் தன கெட்டித்தனத்தைத் தானே வியந்தவராய்ப் பெருமிதமடை கின்றார்.
தம்பிமுத்தரே. நீ பெத்த பிள்ளையளுக்கு இப்பிடிச் செய்து போட்டாய் எண்டு நான் வியப்படையேல்லை. நீ இதுவும் செய்வாய், இதுக்கு மேலாலையும் செய்வாய் எண்டு எனக்கு நல்லாய்த் தெரியும். ஏனெண்டால் உன்ரை அப்பன்ரை குணம்தானே உனக்கும் இருக்கும்.’
ஆறுமுகத்தார் தனக்குள் கூறிக்கொள்கின்றார்
‘தம்பிமுத்தற்ரை தகப்பன் மயில்வாகனத்துக்கு இரண்டு பெண்பிளைப் பிள்ளையளும் மூண்டு ஆண்பிளைப் பிள்ளை யளும். அவற்றை மூத்த மகள் முத்தம்மாவுக்கு வீடு வளவை சீதனமாய்க் குடுக்கேக்கை ‘வீட்டு மூலைக் கையை’ விலத்தி நொத்தாரிசு சின்னத்துரையைக் கொண்டு சீதன உறுதி எழுதுவிச்சார் மயில்வாகனம். ஒரு வரியத்துக்குப் பிறகு, முத்தம்மாவின்ரை புருசன் வேலுப்பிள்ளைக்கும் தம்பிமுத்த ருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட உடனை அவர் வீட்டுக் ‘கூரை யின் மூலைக்கையைப்’ புடுங்கினார். வேலுப்பிள்ளை விதானை யாரைக் கூட்டிவந்தார். விதானையார் விசாரணை செய்த பொழுது சீதன உறுதியை எடுத்துப் பார்க்கச் சொன்னார் மயில்வாகனம். உறுதியைப் பாத்த விதானையால் ஒண்டுமே செய்ய முடியாததால், வேலுப்பிள்ளையைப் பணிந்து போகச் சொல்லிச் சமரசம் செய்து வைச்சார்.’
‘அவர் தன்ரை இரண்டாவது மகளுக்கு தன்னுடைய வாழைத் தோட்டத்தின் ‘தலப்புத் துண்டு’ நிலத்தை சீதனமாய் எழுதிக் குடுத்தார். சீதனம் எழுதிக் குடுக்கேக்கை, அந்தத் தலைப்புத் துண்டு வாழைத் தோட்ட நிலத்துக்கு பாதையாய் வாய்க்கால் வழி’ எண்டு சீதன உறுதியிலை எழுதிக் குடுத்தார்.’
‘மாரி காலம் துவங்கின உடனை வாழைத் தோட்ட நிலத்தை மயில்வாகனம் கொத்துவித்தார். அந்த வேளையிலை தலப்புத்துண்டு வாழைத் தோட்டத்துக்கு தண்ணி இறைக்கிற வாய்க்காலைத் தவிர்த்து நிலத்தைக் கொத்துவித்தார். மயில்வாகனத்தின் இரண்டாவது மருமகன் கந்தையா நிலம் கொத்துவதைத் தடுத்தார்.’
“அடித்தறையிலிருந்து நீ எனக்குத் தந்த தலப்புத் தறை வரை செல்லிற வாய்க்காலுக்குப் பக்கத்தாலை ஒற்றையடிப் பாதை போகுது. அடித்தறைப் பாதை நிலத்தை விட்டிட்டு தலைப்புத்தறைக்கு நாங்கள் போற ஒற்றையடிப் பாதை நிலத்தை கொத்துவிக்கிறாய். நாங்கள் என்னண்டு என்ரை தறைக்குப் போறது?”
ஒன்றும் புரியாதவனாய் இரண்டாவது மருமகன் கந்தையா மயில்வாகனத்தைக் கேட்டார்.
“உனக்கு வாய்க்காலுக்குப் பக்கத்தாலை பாதை இல்லை. அதாவது ‘வழி வாய்க்கால்’ இல்லை. ‘வாய்க்கால் வழி’ தான் பாதை. உனக்கு எழுதித் தந்த சீதன உறுதியை எடுத்துப் பார். அந்த உறுதியிலை ‘வாய்க்கால் வழி’ எண்டு தான் எழுதிக்கிடக்கு” எண்டு சொன்னார் மயில்வாகனம்.
‘கந்தையா விசனத்துடன் அந்த இடத்தை விட்ட கன்றார்’.
‘மழை காலத்திலை மயில்வாகனத்தின்ரை வளவுக் காணியளின்ரை வேலியளும், தோட்ட நிலங்களின்ரை எல்லைக கல்லுகளும்’ தங்களையறியாமலே மற்றவையின்ரை நிலங் களை நோக்கி முழக் கணக்காய் நகர்ந்து செல்லும். இது இரண்டு மூண்டு வரியத்துக்கு ஒரு தடவை நடக்கும். இதனால் யாழ்ப்பாணம் சிவில் கோட்டிலும், கிறிமினல் கோட்டிலும் நாலஞ்சு எல்லைத் தகராறு வழக்குகளை மயில்வாகனம் ஆறேழு வரியமாய் நடத்தினார். அவரை “கோட்டுப் புலி” எண்டுதான் சனம் கூப்பிடும். தந்தையின் வழியில் தானே தனயனும்.
ஆறுமுகத்தார் தம்பித்துரையின் தந்தையைப் பற்றி மனத்தடத்தில் இரை மீட்டுகின்றார்.
தம்பிமுத்தன் மாணவனாக இருந்த காலத்திலேயே அவனுடைய குள்ளத்தனம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.
உடையார் வளவிற்குள் விளாங்காய் பிடுங்கும் பொழுதும் கோயில் தென்னங்காணிக்குள் ‘கள்ள இளநீர்’ பறிக்கும் பொழுதும் மற்றவர்களுக்குத் தெரியாமல் ஒரு பகுதியைப் பதுக்கி விடுவான் தம்பிமுத்தன்.
தம்பிழுத்தனின் ஊரின் கிழக்குப் பக்கத்தில், ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் இராசா இருந்தார். அவர் வறிய தோட்டக்காரரின் பிள்ளைகளுக்கு இலவசமாக ஆங்கிலம் போதித்து வந்தார்.
தம்பிமுத்தனும் அவனுடைய நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து மாலை வேளைகளில் படிக்கச் செல்வது வழக்கம். ஒரு நாள் நண்பர்கள் இருவரும் படிப்பதற்கு. அவனைக் கூட்டிச் செல்ல அவன் வீட்டுக்குச் சென்றனர்.
“அவன் வாழைக்கு தண்ணி இறைக்கப் போட்டான் மோனையள்”
தம்பிமுத்தனின் தாய் கூறினாள்.
நண்பர்கள் வாழைத் தோட்டத்துக்குப் போவதற்கு திரும்பினர்.
“எடே! ஏமாந்த சோனகிரியளே! அவன் கட்டையன் தான் வாழைத் தோட்டத்துக்குப் போட்டன் எண்டு உங்களுக்குச் சொல்லச் சொல்லி எங்கடை ஆச்சியிட்டை சொல்லிப் போட்டு, அவன் இங்கிலிசு படிக்க ராசா வாத்தியார் வீட்டை போட்டான். வேணுமெண்டால் நீங்கள் அங்கை போய்ப் பாருங்கோடா.”
தம்பிமுத்தனின் இளைய சகோதரி தங்கச்சிஅம்மா சொன்னாள்.
நண்பர்கள் இராசா ஆசிரியரின் வீட்டுக்குச் சென்ற பொழுது தம்பிமுத்தன் படித்துக் கொண்டிருந்தான்.
எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தி அடைந்த பின் தம்பி முத்தன் அரசாங்க சேவையில் இணைந்தான். அரசாங்க கட்டிட இலாகாவில் பரிசோதகர் வேலை. காலம் செல்லச் செல்ல கட்டிடக் கொந்தறாத்துக்காரருடன் அவனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் கட்டுகின்ற கட்டிடங்களை பரிசோதித்துச் சிபார்சு செய்வதற்கு லஞ்சம் பெற்று பணம் பண்ணினான்.
அவனுக்குத் திருமணம் நடந்தது. அவனுடைய மனைவி யின் தந்தை ஓய்வு பெற்ற ஓவசியர். அத்துடன் கட்டிட கொந்தறாத்துக்காரர். சாடிக்கேற்ற மூடியாச்சு. மாமனின் பேரில் பாரிய கட்டிடக் கொந்தராத்துக்களை எடுத்து பெரும் தொகைப் பணத்தைப் பெருக்கினான் தம்பிமுத்தன். கிடைத்த பணத்தை மாமனார் மூலம் வட்டிக்குக் கொடுத்துப் பணத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தான்.
தம்பிமுத்தனும் பண்டாரக்குளத்தடி முத்தையனும் ஒன்றாகவே அரசாங்க கட்டிட இலாகாவில் நீண்ட காலமாக வேலை செய்து வந்தனர். முத்தையன் கட்டைப் பிரமச்சாரி. அவனுக்கு நல்லூர் கோவில் வீதியில் முடமாவடிச் சந்தி யிலிருந்து தெற்கே கல்லெறி தூரத்தில், இருபத்திநாலு பரப்பில் ஒரு பெரிய வளவுக்காணியும் பழைய வீடொன்று மிருந்தது. அது மலட்டுச் சொத்து. முத்தையனுக்கு மனைவியோ பிள்ளை குட்டியளோ இல்லை. முத்தையன் முடாக்குடியன். அவனுடைய வளவுக்குப் பின்னால்தான் தம்பிமுத்தனுடைய சீதன வீடு வளவு. இருவரும் நீண்ட கால நெருங்கிய நண்பர்கள். முத்தையனுக்கு நன்றாகக் குடிக்கக் குடுத்து, அவனை ஏமாற்றி அந்த இருபத்திநாலு பரப்பு வளவுக் காணியை கள்ள உறுதி முடிச்சு அமத்திப் போட்டான் தம்பிமுத்தன். இறுதியில் முத்தையன் அநாதையாகி, கைதடியிலுள்ள முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்தான். அவன் நோய்வாய்ப்பட்டு ஒன்றரை வருடத்தின் பின் முதியோர் இல்லத்திலேயே மரணமானான்.
அரசாங்கக் கட்டடங்களைக் கட்டுவதற்குப் பெறப்படும் சீமந்து இரும்புக் கம்பிகள், பாலை முதிரை மரங்களின் ஒரு பகுதி காலத்துக்குக் காலம் கைமாறியது. இக்கட்டிடப் பொருட்களுக்கான பெரும் தொகைப் பணமும் வட்டிப் பணமும் சேர்ந்து, ஒரு காலத்தில் பண்டாரக்குளத்தடி முத்தையனுக்குச் சொந்தமாயிருந்த கோயில் வீதியிலுள்ள இருபத்தி நாலு பரப்புக் காணியில் “காமதேனு”, “கற்பகதரு’, ‘அமுதசுரபி” என்ற பெயர்களுடன் மூன்று வீடுகள் உருவெடுத்தன.
மூன்று பெண்பிளைப் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்தாகிவிட்டது. மூத்த மகளின் கணவன் எக்கவுண்டன். இரண்டாவது மகளின் கணவன் டாக்டர். மூன்றாவது மகளின் கணவன் இஞ்சினியர். ஒவ்வொரு மாப்பிளைக்கும் ஒவ்வொரு வீடும், ஒவ்வொருவருக்கும் முப்பது லட்சம் ரூபாவும் சீதனமாகக் கொடுத்தான் தம்பிமுத்தன். மூன்று மாப்பிளைகளும் சுண்டி எடுத்த சைவ வேளாளக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். முதல் இரு பெண்களும் கனடாவில் இளையவள் லண்டனில். இது போதாதா தம்பிமுத்தன் யாழ்ப்பாண சமூகத்தில் மிடுக்காய்த தலை நிமிர்ந்து நிற்பதற்கு.
தம்பிமுத்தன்ரை மூத்த மகன் கட்டிடக் கொந்திறாத்துத் தொழில். கொழுத்த சீதனத்துடன் ஒரு கொந்திராத்துக்காரரின் மகளைத் திருமணம் செய்திருக்கின்றார். இளைய மகன் இஞ்சினியரிங் படிக்கின்றான். படிப்பு முடிந்ததும் கனடா செல்லும் உத்தேசம்.
தம்பிமுத்தன் இப்போ அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டான். ஆனால் தொழில் செய்வதிலிருந்து அவன் ஓய்வு பெறவில்லை. இப்பொழுதும் அவன் நகை அடைவு பிடிக்கும் கடையில் பங்காளியாக இருக்கின்றான். இந்தத் தொழில் அவனது சொந்தக் கடைக் கட்டிடத்தில் தான் நடக்கிறது. இத்துடன் யாழ் நகரில் இரண்டு கடைகளை வாடகைக்குக் கொடுத்துள்ளான். ஒரு எம்.பி.யைப் பிடித்து மது விற்பனை லைசன்ஸ் எடுத்து ஒரு மதுவிற்பனைக் கடையைக் குத்தகைக்குக் கொடுத்துள்ளான். அவனுக்கு வவனிக்குளத்தில் நாப்பது ஏக்கர் வயலுமுண்டு. ஆட்களை வைத்து நெல் வயலில் திறமையாகச் சாகுபடி செய்கின்றான். பளையில் அவனுக்கு ஒரு தென்னந் தோட்டமுமுண்டு.
தம்பிமுத்தன் இப்போ பெரும் புள்ளி. செல்வந்தன். பெரும் சமுக சேவையாளான். அது மாத்திரமில்லை, அவன் ஜே.பி. சமூகத்தில் அவனுக்கு பெரும் மதிப்பு. அவன் இப்போ நல்லூர் வாசி. தனது கிராமத்திலுள்ள உற்றார் உறவினரின் தொடர்பை இருபது வருடங்களுக்கு முன்பே துண்டித்துவிட்டான். தன் கிராமத்தின் பெயரையே தன் இதயத்திலிருந்து அவன் துடைத்தெறிந்து விட்டான். இப்போ அவன் வசிக்கின்ற பிரதேசத்தில் நடைபெறுகின்ற பாடசாலை விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை விழாக்களில் முதன்மை விருந்தினராக அழைக்கப்படும் பெரும் பிரமுகர் வரிசையில் முன்னணியில் நிற்கின்றான்.
தம்பிமுத்தனின் நீண்ட நாள் நண்பன் கனகசுந்தரம். அவனுடன் சேர்ந்து கோழிப் பண்ணை நடத்துவதற்கு ஐந்து லட்சம் ரூபாவை முதலீடு செய்தான் தம்பிமுத்தன். கனகசுந்தரம அவருக்குத் தண்ணி காட்டி விட்டான். கோழிப் பண்ணை நட்டத்தில் போகின்றது என்று கூறி, அதை இரகசியமாக வேறு ஒருவனுக்கு விற்பனை செய்து முழுப்பணத்தையும் ஏப்பம் விட்டுவிட்டான். சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தம்பிமுத்தனுக்கு எதுவித ஆதாரமுமில்லை. இயக்கத்துக்கும் முறையிடுவதற்கு அவனுக்கு விருப்பமில்லை. இதனால் இயக்கத்துக்கும் தான் லட்சக் கணக்கில் குடுக்க வேண்டி வரும் என்ற பயம் அவனுக்கு.
குடாநாட்டுப் போர் உக்கிரமடைந்து உச்சநிலையை எட்டியதும், மக்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினர்.
மூன்று நாட்களின் பின் திரும்பி வருவோம் என்ற நிலையில், ‘காமதேனு’, ‘கற்பகதரு’, ‘அமுதசுரபி’ வீடுகளுக்கு காவலாக வைமனை விட்டுவிட்டு தம்பிமுத்தன் தனது குடும்பத்தினருடன் தென்மராட்சிக்கு சென்றுவிட்டான்.
வைமன் கடந்த இருபத்தைந்து வருடங்களாக தம்பி முத்தனுடன் இருந்து வருகின்றான். தம்பிமுத்தன் திசா மாராவில் வேலை செய்யும் பொழுது, ஒரு தடவை கதிர் காமம் சென்றிருந்தான். அப்பொழுது எட்டு வயதாக இருந்த வைமனை ஒரு ஆளுக்கு முன்னூறு ரூபா கொடுத்து சுவீகாரம் செய்து கொண்டான். வைமன் தமிழனா, சிங்கள வனா அல்லது இந்தியனா என்று அவனது பூர்வீகம் பற்றி ஒருவருக்குமே தெரியாது. அவன் கொச்சைத் தமிழிலும் சிங்களத்திலும் கதைத்தான். இப்பொழுது நல்ல தமிழில் கதைக்கின்றான். சிங்களத்தை அறவே மறந்து விட்டான்.
தம்பிமுத்தனுடன் யாழ்ப்பாணம் வந்த நாளிலிருந்து வைமன் அவனுடைய வீட்டில் கிணற்றில் தண்ணீர் இறை ப்பது, விறகு வெட்டுவது, துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, ஆடுமாடுகளுக்குத் தீனி போடுவது போன்ற சகல வீட்டு வேலைகளையும் செய்து வந்தான். அத்துடன் தம்பிமுத்தனின் மூன்று வீடுகளும் குடிகொண்டுள்ள வளவுகளுக்குள் உள்ள தென்னை, மா, பலா, தோடை, எலுமிச்சை போன்ற சகல கன்றுகளுக்கும் தண்ணீர் விட்டு, பசளையிட்டு அவைகளை வனப்புள்ள சோலையாக்கிய உழைப்பு முழுவதும் வைமனு டையதே.
‘மூண்டு நாட்களுக்குள் திரும்பி விடுவம் எண்டுதான் வெளிக்கிட்டம். ஆறு மாதங்களாகியும் எங்கடை இடத்துக் போகக்கிடைக்கேல்லை. என்ரை மூண்டு வீடுகளின்ரை கதி என்னவோ? தண்ணி இறைப்பில்லாமல் வளவுகளுக்கை உள்ள வான் பயிர்கள் எல்லாம் கருகிச் செத்துப் போயிருக் குமே. எவ்வளவு பெரிய நட்டமாய்போம்.
நட்டமாய்போம். வைமனாலை என்ன செய்ய முடியும்? சாப்பாடு, தண்ணி வென்னீர் இல்லாமல் அவனும் செத்திருப்பன். அல்லது ஆமிக்காறங்கள் அவனைப் புலி எண்டு சுட்டுச்சாக்காட்டி யிருப்பாங்கள். அவன் செத்திருந்தாலும் பறுவாயில்லை. அவன் செய்யிற வேலைக்கு வேறை ஆரையாவது கூலிக்குப் புடிச்சாப் போகுது. வைமன் இருந்து வயது போய் பிற்காலத்திலை நோய்வாய்ப்பட்டு பாயில் கிடந்து எங்களுக்கு பெரும் பாரமாய் இருப்பதிலும் பாக்க இப்பிடிச் செத்துப் போவதும் நல்லதுதான்.’ இழப்பிலும் ஒரு ஆறுதலை மானசீகமாகக் காண்கிறான் தம்பிமுத்தன்.
எது எப்படியென்றாலும் தன்னுடைய வீடுகளைப் போய்ப் பாத்துவிட வேண்டுமென்ற அங்கலாய்ப்பு தம்பிமுத்தனுக்கு.
இப்போ வீடுகளைப் போய்ப் பார்க்கலாம்’ என்றதும் தவியாய்த் தவிக்கின்ற அவன், உடனே போவதென்றே திடவைராக்கியம் கொண்டுவிட்டான்.
தம்பிமுத்தனின் இளைய மகன் கொழும்பிலிருந்து லீவில் யாழ்ப்பாணம் வந்தவன். இப்போ இடம்பெயர்ந்து தனது தாய் தந்தையுடன் சங்கத்தானையில் தங்கியிருக் கின்றான். அவன் தந்தையுடன் யாழ் வந்தால் புலி எண்டு ஆமி பிடித்து விடும் என்ற அச்சம் அவனுக்கு. மூத்த மகன குமாரலிங்கம் இரட்டை நாடித் தேகம், போந்து பொலிந்தவன். நடக்கும் பொழுது தாரா மாதிரி அசைந்தசைந்துதான் நடப்பான. ஆமிக்காறனுக்கு சந்தேகம் வராது. எனவே அவனைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு யாழ் புறப்படுகின்றான்.
நாவற்குளியைக் கடந்து செம்மணியை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.
தொலைவினிலே, விரிந்து பரந்த தொடுவானம் விருப்பு வெறுப்பற்று விழி பூத்துக் காத்திருக்கின்றது.
நீண்ட நெடுஞ்சாலை உயிரற்றுச் செத்துப் போய்க் கிடக்கின்றது.
காலை வேளையில் அந்தச் செம்மணிச் சூனிய வெளி யில் சென்று கொண்டிருப்பது அவர்கள் குடாநாட்டின் குடலுக்குள் துருவிச் செல்வதாய் புலப்படுகின்றது. சென்று கொண்டிருக்கும் அவர்கள் பின்னால் காலைச் சூரியன் நோக்கெறிந்து நிற்கின்றான்.
புழுதியை மேகங்களாய் இறைத்த காற்று, மூர்க்கமாய் வீசிக்கொண்டிருக்கின்றது. சென்று கொண்டிருக்கும் அவர் களை புழுதிப் படலம் விழுங்கிவிட்டது.
ஆள் நடமற்று, சந்தடியற்று விளங்கிய அந்தச் சூனியப் பிரதேசத்துக்குள் தந்தையும் மகனும் பயப்பீதியுடன் பயணி த்துக் கொண்டிருக்கின்றனர்.
செம்மணித் தொங்கலில் ‘கெற்றப்போலாய்’ கிளை விரித்து இரண்டாகப் பிரிகின்றது சாலை. ஒன்று யாழ் நகருக்கு மற்றது கல்வியங்காட்டுக்கு.
முச்சந்தியில் நாலைந்து ராணுவத்தினர் கும்பலாய் நிற்கின்றனர்.
ராணுவத்தினர் நின்ற இடத்திலிருந்து குறிப்பிட்டளவு தொலை தூரத்தில், தம்பிமுத்தனும் மகனும் தங்கள் பைசிக்கிளிலிருந்து இறங்கி அவற்றை உருட்டிக் கொண்டு பயத்துடன் தயங்கித்தயங்கி நடந்து வந்தனர்.
அவர்கள் சந்தியை வந்தடைகின்றனர். றோட்டருகாமையில் ஒரு பெரிய அலுமீனிய அண்டா வில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.
“தண்ணீர் வேண்டுமா?” என்று ஒரு ராணுவ வீரன் கொச்சைத் தமிழில் அவர்களைக் கேட்கின்றான்.
“வேண்டாம்” என்று அவர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.
“பைசிக்கிளிலிருந்து இறங்கி நடக்கத் தேவையில்லை, பயப்பிடாமல் செல்லலாம்” என்று அவர்களில் ஒருவன் கூறு கின்றான்.
யாழ் செல்லும் வீதியால் செல்லும்படி அவர்கள் கூறுகின்றனர்.
சந்தியின் வடக்கே, முழு அமைதி நிலவி, வியாபித்திரு க்கின்ற அந்தப் பரந்த வெளியிலேயிருந்த செம்மணி மயான மும், ஆகாயமும் மோன நிலையிலுள்ளன.
யாழ் செல்லும் வீதிவழியே சென்று கொண்டிருக்கின்ற அவர்கள் ஊர் எல்லையை அடைந்தனர்.
சாலையின் இரு மருங்கிலுமுள்ள வீடுகள் இடிந்து சிதைந்து காணப்படுகின்றன.
பனை மரங்களும் தென்னை மரங்களும் பட்டுப் போய், வட்டுகள் சரிந்து மூளியாய் நிற்கின்றன.
தெருவோரத்தில் புல் பூண்டுகள் அடர்த்தியாய் ஆக்கிர மித்து நிற்கின்றன.
வளவுகளுக்குள் உள்ள மரந்தடிகள் காய்ந்து பட்டுப் போய் நிற்கின்றன. ஆனால் காட்டுச் செடிகள் பற்றைக் காடாய்க் காட்சியளிக்கின்றன.
மனித சஞ்சாரமற்ற அந்தப் பிரதேசத்தில் பயங்கரமான மயான அமைதி.
குண்டும் குழிகளும் நிறைந்த அந்தச் சாலை வழியே அவர்கள் நத்தையாய் சென்று கொண்டிருக்கின்றனர்.
நேரம் போனதே தெரியவில்லை.
மதியச் சூரியன் வான்முகட்டைத் தொட்டுவிட்டான். கொதி வெய்யில்.
நீண்டு செல்லும் பகல் பொழுதில் அவர்கள் சோர்ந்து போய் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரியாலை ஊடாக, நெடுங்குளம், மாம்பழம் சந்தி வழியே சென்று அவர்கள் யாழ் கச்சேரியடியைச் சேர்ந்தனர்.
“நாங்கள் கள்ளியங்காட்டு சந்தையடியாலை போவம்.” தம்பிமுத்தன் கூறுகின்றான்.
“நாங்கள் ஏன் அவளவு தூரம் போவேணும்? நல்லூர் கந்தசாமி கோயிலடியாலை போகலாமே?”
மகன் குமாரலிங்கம் சொல்கின்றான்.
“தம்பி குமார், நான் நல்லூர் கந்தசாமி கோயில் திருப் பணி வேலையளுக்கெண்டு எத்தினை ஆயிரம் ரூபா யைச் சிலவளிச்சன். நல்லூர் திருவிழா இருபத்து நாலு நாள்கள் முழுவதும் விரதமிருந்ததோடை, ஒவ்வொரு நாளும் கோயில் உள்வீதியைச் சுற்றி அங்கப்பிரதட்சினை செய்தன். அது மாத்திரமே? நான் ஐப்பசி வெள்ளி விரதமிருந்ததோடை, கந்தசஷ்டி ஆறு நாளும், பத்து வரியமாய், உபவாச விரதம் பிடிச்சன். அப்பிடிப்பட்ட எனக்கு இந்தக் கதியை விட்ட கடவுள் இருக்கிற கோயில் பக்கம் இனி நான் கடசி வரை காலடி எடுத்து வையன்.”
விரக்தியும் வெறுப்பும் நிறைந்தவராய் வைராக்கியத்துடன கூறுகின்றான் தம்பிமுத்தன்.
அவர்கள் கச்சேரி நல்லூர் வீதியால் சென்று முத்திரைச் சந்தையை அடைந்து, பருத்தித்துறை வீதியால் சென்று, கல்வியங்காட்டு சந்தையடியை அடைந்தனர்.
அவர்கள் சென்று கொண்டிருக்கும் சாலையின் இரு மருங்கிலும் போரின் கோரக் காயங்கள் வாய்பிளந்து விகார மாயக் காட்சியளிக்கின்றன.
கல்வியங்காட்டுச் சந்தை ஆளரவமற்றுக் கிடக்கின்றது. கடைத் தெரு சிதைந்து சின்னாபின்னமாய்க் காட்சியளி க்கின்றது.
சந்தையடியால் திரும்பி திருநெல்வேலியை நோக்கிச் செல்லும் றோட்டால் செல்கின்றனர்.
நாற்சந்தி. மேற்கே திருநெல்வேலிக்குச் செல்லும் வீதி. வடக்கே இருபாலையை நோக்கிச் செல்லும் இராச வீதி. தெற்கே நல்லூர் கோவில் வீதியை நோக்கிச் செல்லும் இராமலிங்கம் றோட்.
தம்பிமுத்தனாக்கள் கோயில் வீதிப்பக்கம் திரும்புகின்றனர்
தனது வீடுகளைப் பார்த்துவிட வேண்டுமென்ற வேட்கை தம்பிமுத்தனுக்கு. களைப்பையும் பொருட்படுத்தாமல் அவன் ஆவேசத்துடன் பைசிக்கிளை ஓட்டுகின்றான்.
இராச வீதிச் சந்தியிலிருந்து அரை மைல தூரத்தில் வாலை அம்மன் கோயில். அதன் முன் பகுதி ‘செல்’ விழுந்து சேதமுற்றுச் சிதைந்து கிடக்கின்றது.
கோவில் கதவுகள் அகலத் திறந்திருக்கின்றன. கோவிலடியிலிருந்து கூப்பிடு தூரத்தில் றோட்டோரத்தில இரண்டு மனித எலும்புக் கூடுகள்.
தம்பிமுத்தனின் நெஞ்சில் திகில் உறைந்தது. மகனுடைய ஆழ்மனதில் அச்சம் திரளாய்ப் புரண்டது.
பதட்டத்துடன் அவர்கள் அவ்விடத்தை விட்டு விரைவாய அகல்கின்றனர்.
கோயில் வீதி முடமாவடிச் சந்தியிலிருந்து கல்லெறி தூரத்தில் தம்பிமுத்தனின் வீடுகள்.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் செல்லும் பொழுதே ‘செல்’ வீச்சில் முறிந்து சிதைந்த தென்னைகளும் மா, பலா மரங் களும் காய்ந்து கருகிப் பட்டுப் போய் நின்கின்றன.
தம்பிமுத்தராக்கள் அவனது வளவுகளை அண்மித்ததும அவனது விழிகள் அவனுடைய வீடுகளைத் தேடி அலைகின்றன.
‘என்ரை ‘காமதேனு’, ‘கற்பகதரு’, ‘அமுதசுரபி’ எங்கே?
தம்பிழுத்தனின் இதயம் ஓலமிடுகின்றது.
“காமதேனு”, “கற்பகதரு”, “அமுதசுரபி” வீடுகள் கொங்கிரீற குவியல்களாய்ச் சிதைந்து கிடக்கின்றன.
“ஐயோ என்ரை வீடுகள்” ஆவேசமாக அவன் வீரிட்டு அலறுகின்றான்.
அவனுடைய விழிகள் உருண்டு பிரள்கின்றன.
நெஞ்சை அழுத்தியபடியே தம்பிமுத்தன் சாய்கின்றான்.
“அப்பா! அப்பா!”
மகன் குமாரலிங்கம் கத்திக் கொண்டு தந்தையைத் தாங்கிப் பிடிக்கின்றான்.
“என்ரை வீடுகள், என்ரை……”
உதடுகள் அசைகின்றன.
கணப்பொழுதில் தம்பிமுத்தனின் விழிகள் நிலைகுத்தி நிற்கின்றன.
பயபீதியில் குமாரலிங்கம் அலறியபடியே ஓடிக் கொண்டி ருக்கின்றான்.
‘காமதேனு’ குடிகொண்டிருந்த வளவின் ஒரு மூலையில் தம்பிமுத்தரின் பிரேதம் அனாதரவாகக் கிடக்கின்றது. அடுத்த நாள் கோவில் வீதியால் வந்த ராணுவக் ‘கப்ரனின்’ கட்டளைக்கிணங்க ராணுவத்தினரால் எரியூட்டப் பட்ட தம்பிமுத்தனின் பிரேதத்தின் எரிந்த சாம்பல் ஆறடி நிலத்தில் படர்ந்திருக்கின்றது.
– 2005
– ஜென்மம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 2005, மீரா பதிப்பகம், கொழும்பு.