சக்தியுள்ள தெய்வம்




(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெருங்குளம் கிராமத்திலிருந்து ஸ்ரீவைகுண்டத்திற்குச் சொல்லும் ஆறு மைல் நீள ரஸ்தா அநேக இடங்களில் நீண்டும் நெளிந்தும் பல வளைவுகளாகக் கிடப்பதுடன், நெடுகிலும் விரிந்து கிடக்கிற பெரிய குளங்களின் உயர்ந்த கரையாகவும் திகழ்கிறது. ரஸ்தா வின் ஓரங்களில் சில இடங்களில் ஆலமரங்கள் உண்டு. சில இடங்களில் கொடிக்கள்ளி மரங்கள் தலைவிரித்து நிற்கும். தென்னை அல்லது பனை ஆங்காங்கே தென்படுவதும் உண்டு. இந்த வழியின் நடு மத்தியில் இருக்கிறது ‘செவளை, செவளை’ என்று பேச்சு வழக்கில் அடிபடுகிற சிவகளை கிராமம்.
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வந்தால் சிவகளைக்குள் புகும் வழியில் – பெருங்குளத்திலிருந்து வந்தால் , சிவ களையைத் தாண்டிச் செல்லும் இடத்தில் – இடைஞ்சலான வளைவும் திருப்பமுமாக ரோடு நெளிந்து கொடுக் கும். அந்த த்தில் ரோடு சிறிது குறுகலாக இருப்ப தோடு, இருபக்கங்களிலும் நெடிதுயர்ந்து வளர்ந்த பெரிய ஆலமரங்கள் இரண்டு உண்டு. மரங்களென்றால் சாதாரண மரங்கள் அல்ல. வயசான மரம். வட்டமிட்டு கப்புங் கவருமாகி, பூமியைத் தொடும்படி விழுதுகள் வீசி வளர்ந்து நிற்கும் மரங்கள். இருட்டின் இதயம் போலிருக்கும். அந்தி வேளையிலேயே அதன் அடிய இரவில் கேட்கவா வேண்டு?.
ஒரு புறம் குளம். இந்தப் பக்கம் ஒரு பள்ளம். அவ் விடத்திற்கு வந்தவுடன், திறமைசாலியான வண்டிக்காரன் கூட, விழித்த கண் விழித்தபடி யிருந்து லாகவமாக ஒட்ட முயல்வது சகஜம். இரவில் யாருக்குமே சற்றுக் கிலிதான். காளைகள் எவ்வளவு உயர்ந்த ரக மாடுகளாக இருந்தாலும் – அந்த இடத்திற்கு வந்ததும் சற்று மிரளத்தான் செய்யும். கலைகிற சுபாவமுள்ள மாடுகளானால், வெருவிப் பதறி ஆடும். மூக்கணாங் கயிற்றைச் சுண்டி இழுத்து, தலைப்புக் கயிறை இறுக்கிப் டித்து சாரத்தியம் செய்யவேண்டியது அவசியம் என்பது வண்டிக்காரர்கள் அறிந்த வித்தையே.
பொதுவாக, இரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு அந் இடத்திற்கு வரக்கூடா என்றுதான் வண்டிக் காரர்கள் பிரார்த்தித்துக் கொள்வார்கள். இரவுப் பிர யாணம் தவிர்க்க முடியாததாகி விட்டால், முன்னிரவி லேயே அவ்விடத்தைத் தாண்டிவிடத் தவிப்பார்கள். அல்லது மூன்று மணிக்கு மேலே வண்டி போட்டுக் கொண்டு கிளம்பலாமே என்று காலங் கடத்துவார்கள்.
இதற்கு முக்கிய காரணம் உண்டு. ஆலமரத்தடியில் ரசு செலுத்தும் சாலைக்கரையான் ரொம்பப் பொல்லாத தவதை; சக்தி வாய்ந்த சாமி என்பது அந்த வட்டாரத்தில் பிரசித்தமான சேதி.
பெருங்குளத்துக்குப் புதிதாக மாற்றலாகி வந்திருந்த ஸப்இன்ஸ்பெக்டர் முத்தைய பிள்ளையிடம் அவரது வண்டிக்காரன் மாடசாமி இந்த விஷயத்தைப் பணிவுடன் சொன்னபோது, பிள்ளைவாள் அட்டகாசமாகச் சிரித்தார். ‘மாடசாமி! உனக்கு இந்த முத்தைய பிள்ளைவாளைப் பற்றி ஒன்றும் தெரியாது. சக்தியுள்ள சாமிகளையே ஆட்டி வைக்கும் ஆசாமி ஐயாவாள். தெரிஞ்சுக்கோ!’ இப்படிச் சொல்லிவிட்டு பலமாகச் சிரித்தார். சிரிப்பா அது! அடித்தொண்டையிலிருந்து கிளம்பு கிற மிடுக்கான கனைப்பு.
மாடசாமிக்கு நெஞ்சு ‘திக் திக்’ கென்றது. மானசீகமாக லைக்கரையானை நினைத்துக் கும்பிடு போட்டான்.
‘ஐயா பூடம் தெரியாமச் சாமி ஆடப் பார்க்கிறாக. சாலைக்கரையானைப் பற்றிக் கேவலமாய்ப் பேசின யாரு தான் பிழைச்சாக? நம்ம வடக்குத் தெரு காரை வீட்டுப் பிள்ளைவாள் புதுப் பணம் கிடைத்த ஜோர்லே என்ன தான் சொல்லவி0ல்லை? சாலைக்கரைச் சாமி சும்மா விட்டுதா? புது வில்வண்டி. அருமையான மாடுக அந்த இடத்திலே வரும்போது, குடை வண்டி சாஞ்சு, பிள்ளைவாள் பிழைச்சது மறுபிழைப் பில்லையா! ஐயா ஸப்இனிஸ் பெக்டர்னா சாமிக்கு என்னங்ஙேன்? அது சக்தியுள்ள தெய்வமில்லா!’ என்று முனங்கிக் கொண்டான். அதுக்காக, தான் வண்டி ஓட்ட வரமுடியாது என்று சொல்லி விட முடியுமா? வயிறு கழுவ வேலை பார்த்தாக வேண்டுமே.
தன் குலதெய்வங்களை யெல்லாம் கும்பிட்டுக் கொண்டு, சாலைக்கரையானையும் நூறு தடவை நினைத்துக் கொண்டு, வண்டியில் காளைகளைப் பூட்டினான். அந்தக் காளைகளை ஓட்டிச் செல்வதென்றாலே அவனுக்குத் தனி குஷி. நல்ல போஷிப்பில் அருமையாக வளர்ந்த கருஞ் செவலைக் காளைகள். கழுத்திலே இரண்டிரண்டு வெண்கல மணிகள். நாதம் கணீரென்று கேட்கும். கால் மைலுக் கப்பால் வண்டி வரும்போ ன்ஸ்பெக்டர் பிள்ளைவாள் வண்டி வருது’ என்று காட்டிக் கொடுத்துவிடும் மாடுகளோ மணி மணியானவை. குறிப்பறிந்து போகும். சாட்டைக் கம்பின் பிரயோகம் தேவையே இல்லை. ‘த்தா… இத்தாலே’ என்று அதட்டினால், தூள் பறக்கும் படி ஓடும். இவற்றில் ‘இடத்தன் காளை’ பரமசாது. ‘வலத்தன்’ கொஞ்சம் திமிரு பிடித்தது. விளக்குகளைக் கண்டால் சிறி மிரளும். ஆனால் எந்த இருட்டாக இருந்தாலும் சரி, தானாகவே தடமறிந்து நடக்கக் கூடிய மாடுகள் அவை.
என்றாலும், வண்டி பூட்ட அவனுக்குச் சம்மதமேயில்லை. மோட்டார் ‘நாளைக்குப் போனால் என்ன, எசமான்? என்று கேட்டான்.
“சர்க்கார் சோலி பெரிசா? உன் சாமிபயம் பெரிசா? வண்டியைப் போடு. வீணாக நேரத்தை ஓட்டியடைச்சுக் கிட்டிராதே” என்று உறுமினார் பிள்ளை.
அவருக்குக் கோபம் வந்தால் ‘கண்ணு மூக்குத் தெரியாது.கையிலே அகப்பட்டதை எடுத்துக் கொண்டு வெளும்பச் சாத்திவிடுவார். விளாசு விளாசென்று விளாசித் தள்ளி விடுவார். ‘முரட்டு முத்தைய பிள்ளை’ என்றே பெயர். யாரையும் மதிக்கமாட்டார். ‘அடி உதவுகிற மா திரி அண்ணன் தம்பி உதவமாட்டான் வே’ என்று அடிக்கடி சொல்லுவார். எசமான் குணம் வேலைக்காரனுக்குத் தெரியாதா!
ஸ்ரீவைகுண்டத்தில் வண்டி பூட்டும்போதே இரவு பத்து மணி ஆகி விட்டது. எவ்வளவு போனாலும் பன்னிரண்டு மணிக்கு முந்தி வீடு போய்ச் சேரமுடியாது. சாம வேளையிலே சாலைக்கரையான் பூமியில் போகவா? அதிலும் அன்று!
அன்றைக்கு அமாவாசை. தை அமாவாசை. அத் துடன் செவ்வாய்க்கிழமை தலைச் செவ்வாயும் கூடிக் கொண்டது இது சாமிகளுக்கு உகந்த ‘உக்கிரமான நாளு’ என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். வேறு எந்த வண்டியாக இருந்தாலும் கூட அவன் இவ்வளவு கலவரம் அடையமாட்டான்.
“இன்ஸ்பெக்டர் எசமான் சாமியைச் சாமின்னு மதி யாமல் எக்காளம் கொழிச்சிட்டாக. அதிலும் போது வேறே அகங்காரமா….”ஏ மாடசாமி. இது தானே நீ சொன்ன பூடம்! எல்லாப் பூடங்களையும் போல் செங் கல்லும் மண்ணுமாகத் தானே இருக்கு. இது என்ன சக்திவாய்ந்த சாமியோ புரியலே. ஏம்பா மாடசாமி! இந்தப் பக்கத்திலேதான் முழத்துக்கு மூணு பூடம்; சாணுக்கு ஒரு சாமியின்னு யிருக்குதே, இதையெல்லாம் கண்டு பயப்படணும்னு சொன்னா, மனிசன் வீட்டை விட்டே வெளியே வரப்படாது தெரியுதா? பூடம் தெரி யாமச் சாமி ஆடுறது என்பாக. நான் சொல்லுறேன். ஆசாமியைக் கவனிச்சுக்கிட்டுத்தான் சாமியும் ஆட்ட பாட்டம் பண்ணும். ஐயாப் பிள்ளையிடம் எந்தச் சாமியும் வாலாட்ட முடியாது என்றாக. இப்படியா பேசறது?’ அவன் அதை மறக்க முடியுமா?
அப்போதுதான் வண்டி ஆலமரத்தடியில் – பந்த வளைவுபோல் அடர்ந்து நின்ற கிளைகளின் அடியில் – ஊர் கொண்டிருந்தது. ‘பகபக பகு பக்’ என்று ஓசை கேட்டது. ரொம்பத் தெளிவாக, யாரோ ஏளனச் சிரிப்பு சிரிப்பது போல் ஒலித்தது.
‘கெள்ளி… கேட்டீகளா?….நீங்க இப்படியெல்லாம் பேசப்படாது எசமான்’ என்றான் மாடசாமி.
‘பல்லி வயித்துக் கில்லாம, பசியினாலே கத்தும் சவம்’ என்றார் பிள்ளை
மீண்டும், முன்னைவிட பலமாக, ‘பக பக பக்’ என் சிரித்தது கௌளி சாலைக்கரையானே விஷமச் சிரிப்பு சிரிப்பது போலிருந்தது. கொண்டான்,
கௌளிக்கு எதிரொளி கொடுக்காமல் கேட்டுக் கொண்டிருந்தால் தோஷம் எனும் நம்பிக்கையுடைய மாடசாமி நாக்கினால் வாய்க்குள் ‘டொக் டொக்’ என்று அடித்துக் கொண்டான். ‘ஏந்தான் ஐயா இந்தப் போக்கு போறாகளோ, தெரியலே. து நல்லதுக்கில்லே’ என்று அவன் உள்ளம் புலம்பியது. உள்ளத்து ‘அச் சானியத்தை ஒடுக்க ‘த்தா….. இத்தாலே ‘ என்று கதறவும், காளைகள் வேகமாக ஓடத்தொடங்கின. மணி நாதமும், சக்கரங்களின் கடகடப்பும் அவன் மன அரிப்பை ஒடுக்க உதவின.
இது மத்தியானம் நடந்தது. திடீரென்று ஸ்ரீவை குண்டத்திற்குக் கிளம்பினார் பிள்ளை. கலையில் புறப் பட்டுப் போய், சாயங்காலமே திரும்பிவிடலாம் என்று எண்ணினார். தை அம்மாசையில்லா இன்னிக்கி! அமாசை விரதமும் அதுவுமா என்று வீட்டம்மா இழுக்கவே, “ஸேரி, மத்தியானச் சாப்பாட்டுக்கு மேலே போறேனே” என்று ஒத்திப்போட்டார். “போய்விட்டு எந்த ராத்திரியானாலும் சரி, வீடு திரும்பிரணும்.நாளைக்கு ந்த ஊரிலே முக்கிய சோலி யிருக்கு” என்றார் அவர். ஸ்ரீ வைகுண்டம் சேரும்பொழுது மணி மூன்றாகிவிட்டது. அவரைப் பார்த்து, இவரைப் பார்த்து, அங்கே காரியம் கவனித்து, இங்கே வம்பளந்து என்று அப்படியும் இப்படியுமாக நேரம் ஓடிவிட்டது. இராச் சாப்பாட்டை முடித்து விட்டுத்தான் போகணும் என்று நண்பர் கட்டாயப்படுத்தவே தங்கிவிட்டார். அதிகாலையில் எழுந்து போகலாமே என்ற யோசனையை மறுத்துவிட்டார். அதனால் வண்டி பூட்டவேண்டியதாயிற்று.
வண்டி போடும்போதே மாடசாமிக்குத் திகில்தான். வண்டி புறப்படும்போது ‘சகுனம் சரியில்லை’ என் அவிழ்த்துப் போட்டுவிட்டு, கால் மணி நேரம் கழித்துப் பூட்டினான்.
“சரி, போயிட்டு வாறேன்” என்று சொல்லி வண்டியி லேறினார் பிள்ளை.
அப்போது பக்கத்து வீட்டிலே எவளோ ஒருத்தி தன் மகனுக்கு வாழ்த்து பாடிக்கொண்டிருந்தாள்: ‘கரி முடிஞ்சு போவான்,நீ ஏன் இந்தப் போக்கு போறே?’
பிள்ளை காதில் இது விழுந்ததோ என்னவோ! சாமி தெளிவாகக் கேட்டான். அதற்குமேல் கேட்க விடாமல் வண்டி கடகடத்து உருண்டது. மாட்டு மணி கள் கணீரிட்டன. நிமித்திகங்களில் நம்பிக்கை குன்றாத மாடசாமி நல்ல நிமித்தமாக யில்லையே. இன்னைக்கு நல்லபடியாக வீடு போய்ச் சேரணும், தெய்வமே’ என்று நினைத்து, தனக்குத் தெரிந்த தெய்வங்களை யெல்லாம் வேண்டிக் கொண்டான். சாலைக்கரையானுக்கு விசேஷ வேண்டுதல்.
‘அப்பனே, சாலைக்கரையா, நான் புள்ளை குட்டிக் காரன் நீதான் காப்பாத்தணும். கடைசி செவ்வா யன்னைக்கு உனக்கு சேவல் கொண்டாந்து பலியிடுறேன்’ என்று நேர்ந்துகொண்டான். ‘கோசுப்பெட்டியினுள் களிருந்த திருநீறை யெடுத்து நெற்றி நிறையப் பூசிக் கொண்டான். வண்டியை வேகமாக ஓடவிட்டான்.
முத்தைய பிள்ளை ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். சாதாரண நாளாக இருந்திருந்தால் சாப்பாடு வெறும் தாசை உப்புமாவுமாக முடிந்திராது.’தண்ணி’ கோழிமுட்டை வெந்தது, புறாக்கறி யென்று நண்பர் வீட் டிலே விருந்து அமர்க்களமாகயிருக்கும். ‘சனியன் அமா வாசையாக அல்லவா போச்சு! தரித்திரம் புடிச்ச எழவு!’ என்று மனம் வருந்திக்கொண்டிருந்தது அவருக்கு. டீரென்று சாட்டையின் சுளீர் அடி அவரைத் திடுக்கிட வைத்தது
மாடசாமி மாடுகளைத்தான் அடித்தான். அவரையே அடித்தது போலிருந்தது பிள்ளைக்கு. மாடுகளிடம் அவ்வளவு உயிர்.
“ஏயேய்! என்னது இது? ஏனிப்படி விரட்டு விரட்னு விரட்டுறே? மாடுகளை ஏன் அடிக்கிறே?” என்று சீறினார். அதோடு “சாட்டைக் கம்பை இப்படிக் கொடு. நீ மாடுக தான் தானாகவே வேகமாய்ப் போகுமே. எதுக்காக அடிக்கணும்?” என்று கம்பை வாங்கி உள்ளே போட்டுக்கொண்டார்.
நல்ல இருட்டு. பனி வேறு அதிகம். குளிர் காற்று லேசாக நெளிந்து கொண்டிருந்தது. பாதை நெடுகிலும் சிள் வண்டுகள் ‘ஙிவிங்ங்’ என்று இரைந்து கொண்டிருந்தன, இருட்டில் ரஸ்தா மட்டும் வெளே ரென்று தெரிந்தது. வானத்திலே கன்னங்கரிய வெல் வெட்டில் அருவக் கரம் ஏலே தைத்துவிட்ட ஜிகினாப் பொட்டுக்களும் புள்ளிகளும் போல நட்சத்திரங்கள் நிறைந்து கிடந்தன. அந்த ரஸ்தாவில் வண்டி தனியாகப் போய்க் கொண்டிருந்தது. வண்டியின் இருப்புச் சட் டத்தின் அருகில், போலில் கட்டியிருந்த அரிக்கன் லாந்தரின் ஒளி,தீ நிற வட்டம் வரைந்து ஒடுங்கி, இரு ளின் எல்லையை அதிகமாக்கிக் காட்டியது. வண்டியின் ஓட்டத்துக் கேற்ப ஒளி வட்டம் ஆடி அசைந்தது. அந்த ஒளியின் உதவியால் மாடுகளின் கரிய நிழல் பெரிதாகத் தெரியும். மாடசாமி பயம் அரிக்கும் நெஞ்சின க இருந்தான். முத்தைய பிள்ளை கண்களை மூடியபடி தலையணையில் சுகமாகச் சாய்ந்திருந்தார்.
வண்டி இரட்டை ஆலமரங்களை நெருங்கிக் கொண்டிருந்தது.
இருளைக் கிழிக்க முயன்று முடியாமல், தானும் பேரிருளாய்க் கலந்துவிட்டதுபோல் இருளோடு இருளாக நின்றன மரங்கள். ஒரே இருட்டுக் கசம். தூரத்துப் பார் வைக்கு – வெள்ளிகள் சிந்திய வெளிறிய ஒளியிலே – பூத உருவில் யாரோ தலை விரித்து, நீளக் கரங்களைத் தொங்க விட்டு நிற்பது போல் தோன்றும். மரத்தின் தொங்கும் விழுதுகள் நெளியும் நாகங்கள் போல மருளூட்டும் ஒரு கணம நீண்டு தொங்கும் சடைகள் போல் தோற்ற மளிக்கும்.
சாதாரணமாக இப்படி அரண்டு மிரண்டு வருகிற மாடசாமியின் கண்களோ இல்லாத பலவற்றை வரைந்து காட்டின. முண்டாசு கட்டிய முறுக்கு மீசையான் சவுக்கு வைத்துக் கொண்டு நிற்பதுபோல் தோன்றியது அவனுக்கு. இலைகளூடே ஒடுங்கிக் கிடந்த பறவைகள் படபடவென்று சிறகடித்துக் கொண்டது அவன் அச் தத்தை அதிகரிக்கச் செய்தது. அவன் ‘அப்பனே…. சாலைக்கரையா! நீ தான் துணை’ என்று கும்பிட்டான்.
வண்டி ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று முத்தைய பிள்ளை விவரணையற்ற, தெளிவற்ற குரலிலே, ஊமைபோல் உளறினார். பதறியடித்து அலறுவது போல தொனித்தது குரல்.
பயம் மாடசாமியின் புடதியிலேறி உட்கார்ந்து அழுத்தியது. திடுக்கிட்டு ‘எசமான் என்ன எசமான்?’ என்று கேட்டபடி உள்ளே தலையைத் திருப்பினான் வண்டிக்காரன்
‘ஒண்ணுமில்லே, கண்ணை மூடியிருந்தேனா… தூக்கக் கிரக்கம். தூங்கியும் தூங்காததுமாக இருக்கையிலே நினைப்பு. யாரோ என்னவோ கேட்ட மாதிரி யிருந்தது. என்னவோ சொல்ல வாயெடுத்தேன், அதுதான்’ என்றான்.
‘சரி சரி, தடம் பார்த்து ஓட்டு. வண்டி வேகமா கவே போகட்டும், இந்தா, சாட்டைக்கம்பு வேணும்னா லும் வச்சுக்கோ’ என்று அவராகவே கொடுத்தார்.
மடசாமி வெளியே பார்வையைத் திருப்பினான். அவன் தேகம் நளுக்கிக் கொடுத்தது. உடலெல்லாம் புல்லரித்தது. நடு ரோட்டிலே கருப்பாக எவனோ ஒரு சாய வேட்டிக்காரன் சுருட்டுப் பிடித்துக் கொண்டு நிற் பது அவன் பார்வையில் பட்டது. ‘யாரய்யா அது, ந ரோட்டிலே?’ என்று கேட்க வாயெடுத்தான். துணிவில்லை. மாடுகள் முன்னே நகராமல் மிரண்டன. “ஹை…. த்தா’ என்று உ றுமினான். வலத்தன் காளை எதையோ கண்டு பயந்ததுபோல கலைந்தது.
‘மாடசாமி! ரோட்டோரமாக யாரும் நின்றுவிட் வண்டியைக் கடக்க ரோட்டைத் தாண்டிக் குறுக்கே களோ?’ என்று கேட்டார் பிள்ளை, அவர் தேகம் கூட புல்லரித்தது. ‘எழவு பனிவாட என்னமாத்தானிருக்கு’ என்று முனங்கிக் கொண்டார்.
மாடசாமி மனசுக்கு நன்றாகத் தெரியும். அது ஆள் அல்ல. சாமிதான். ஆமாம், சாலைக்கரைத் தெய்வம். ‘சாமி, நீதான் காப்பாத்தணும்’ என்று மனமாற வேண் டியபடி மாடுகளின் வாலை முறுக்கினான்.
‘ஏஏய்! எதிரே மோட்டாரு வராப்லே தோணுதே’ என்றார் பிள்ளை. எதிரேகண்ணெறிந்த மாடசாமி ‘அப்படி தெரியலியே. வெளிச்சமே காணோம்’ என்றான்.
‘பின்னே? பளிச்னு வெளிச்சமடிச்சுதே. நல்லக் கவனிச்சு ஓட்டு அந்த வளைசலிலே கண்டாத் திரும்பி யிருக்கோ என்னமோ…. சே, இது சீன்ட்ரம் புடிச்ச இடமாகல்லா யிருக்கு….வலத்தனை ஜாக்கிரதையாக் கவனிச்சுக்கோ. கழுதை மிரளப்போவுது’
வண்டிக்காரனுக்கு வியப்பும்,திகைப்பும். ‘மோட் டார் லைட் ஒளியோ, சத்தமோ இல்லை.ஐயா, மோட்டார், மோட்டார் என்கிறார்களே! அவனுக்குப் புரியவில்லை.
ஆலமரத்திலே குடியிருந்த கொக்கு இசை கேடாகக் கிளையில் நழுவியதனாலோ, தூக்கம் கலைந்து விட்டதாலோ சிறகைப் படபடக்க வைத்து, கரகரத்த குரலில் ‘ஹர்நாங்’ என்று விசித்திரமாகக் கத்தியது. இரவின் ஆழத்திலே, அமைதியின் கொலுவிலே, அந்த ஒற்றைக் குரல்கூட கோரமாகத் தான் ஒலித்தது.
மாடுகள் இக்கட்டான திருப்பத்தை – ஆலமர அடியை- நெருங்கிக் கொண்டிருந்தன.
‘எசமான்,காரு வர்றது போலத் தானிருக்கு என்றான் மாடசாமி.
‘காரு வறலே போலிருக்கே. அங்கேயே நிற்கு துன்னு நினைக்கிறேன். லைட்டை அணைச்சு அணைச்சுப் பொறுத்து தானே? வெறும் பய எவன்லேய் அது?’ என்று கத்தினார் பிள்ளை.
‘எசமான்!’ என்று பயக் குரல் கொடுக்க நாவசைத்தான் மாடசாமி.
‘பகபகபக்’ – பல்லி சிரித்தது.
‘ஏ சுருட்டு ! நடு ரோட்டிலே நின்று தான் சுருட்டுக் குடிக்கனுமோ?…..காரு என்ன ரிப்பேராயிட்டுதா’ என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
சுருட்டுப் பொறி செக்கச் செவேரிட்டு ஜொலித்தது. அதைவிட ஜோராக ‘கண கண’ வென்று நெருப்புக் கங்குகள் போல் ஒளிர்ந்தன அந்த ஆளின் கண்கள் அவன் சிரித்தான். அந்த இருட்டில் கூட நட்சத்திரங் கள் மாதிரி டாலடித்தன பற்கள் பற்களுக்கு அவ்வித ஒளி எங்கிருந்துதான் வந்ததோ!
பல்லி மிகவும் பலமாகச் சிரித்தது.
முத்தைய பிள்ளையின் உள்ளத்தில் உதைப்பு எடுத்தது. எதிரே நின்றது மனிதனல்ல என்பது அவருக்கு நன்றாகப் புரிந்தது. அவர் என்னவோ சொல்ல நினைத்தார்.
ஆனால் சொல்லவில்லை. அந்தக் கணத்திலே பல காரியங்கள் ஒரேயடியாக நிகழ்ந்தன.
மாடசாமி பளீரென்று சாட்டையடி கொடுத்தான் வலத்தன் காளைக்கு. பளீரென ஒளி வெள்ளம் அக்காளை யின் மூஞ்சியில் பட்டுத் தெறித்தது. சடக்கென மூலை திரும்பிய மோட்டாரின் ஹெட்லைட் வெளிச்சம் போல் தெரிந்தது. மாடு மிரண்டது. அடிபட்ட வெறி, கலைசல். மிரண்டு துள்ளியது. வண்டியை இழுத்துக் கொண்டு துடித்து விலகியது. அது போன போக்கிலேயே சென் றது ஜோடிக் காளையும்.
மாடுகளை இழுத்துப் பிடிக்க முயன்றான் மாடசாமி. அவ்வேளையில் ‘த்தா…. இத்தாலே ‘ என்று அதட்டல் கேட்டது.
“ஏ ஏ…. மடையா. இப்பவா அதட்டது?’ என்று சீறினார் பிள்ளை.
‘நான் அதட்டலே. நான் சத்தமே கொடுக்கலியே’ என்றான் வண்டிக்காரன்.
‘பகபகபக்’ என்று கௌளி கனைத்தது, சடாரென்று வண்டி குடை சாய்ந்து, பள்ளத்திலே சரிந்தது.
‘எசமான்!’ என்று கதறியபடி துள்ளி, இரும்புச் சட்டத்திலிருந்து கீழே குதித்து விட்டான் வண்டிக்காரன்.
முத்தைய பிள்ளைக்கு ஒன் றுமே புரியவில்லை. கூண்டிலே சடாரென அவர் மண்டை மோதிக் கொண்டதும், மூளையில் பொறி தெறிப்பது போல, மூளையே கலங் கிப் போனது போல் -இருந்தது அவருக்கு வண்டி அந்தரடித்தது. தும்பு தெறிபட்டு, மாடுகள் விலகி ஓடி அம்மாவ்” என்று கதறின.
வண்டி ரோட்டுச் சரிவில் நழுவிப் புரண்டது. உள்ளேயே குலுக்கி எடுக்கப்பட்ட பிள்ளை வெளியே வந்து விழுந்தார். அவர் காதில், முண்டாசுப் பேர்வழி சிரிப்பது – கெக்கலித்துக்கேலி செய்து சிரிப்பது – பலமாக விழுந்தது. அருவி ஒளிபோல் ஆரவாரித்துக் கொப்புளித் துக் குமிழிட்டுத் துள்ளியது சிரிப்பொலி. அவர் தன் சுயநிலைமை இழந்தார்.
மாடசாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனுக்கு சிறு அடி கூடக் கிடையாது. மாடுகள் காயம் படாமலே தப்பி விட்டன. வண்டிக்குக் கூடச் சேதமேற்படவில்லை. அரிக்கன் லாம்புச் சிமினி தூள் தூளாகி யிருந்ததுதான் நஷ்டம். ஆனால் முத்தைய பிள்ளைக்கு பலமான அடி.
வண்டிக்காரன் தன்னைச் சமாளித்துக் கொண்டதும், முதலில் செய்த காரியம் சாலைக்கரையானை விழுந்து கும் பிட்டதுதான். பிறகு ஓடிப் போய், சிவகளை கிராம வாசிகள் பலரை எழுப்பி கூட்டி வந்தான். எல்லோரும் சேர்ந்து வண்டியைத் தூக்கி ரோட்டில் விட்டனர்.
இன்ஸ்பெக்டர் தானாகவே எழமுயன்றும் முடிய வில்லை. இடுப்பில் பலமான காயம் மண்டையிலும் அடிபட்டிருந்தது. ‘ஸ்.. அம்மா’ என்று படுத்து டார். அவரை மெதுவாகத் தூக்கியெடுத்து வண்டியில் கிடத்தினர். தலையணையைப் பதனமாக அண்டை கொடுத்து அவருக்கு உதவி புரிந்தனர்.
மாடுகள் ஓரத்திலேயே நின்றன. பிறகு அவை கலையவே இல்லை. அவற்றை வண்டியில் பூட்டி, மெது வாக ஓட்டத் தொடங்கினான் மாடசாமி. இப்போது அவன் உள்ளத்திலே திகில் இல்லை. வியப்பும் பக்தியும் தான் மேலிட்டிருந்தன.
‘என்ன யிருந்தாலும், இது சக்தியுள்ள தெய்வம் தான். சாமி கருணையுள்ள சாமியும் கூட ஆளைச் சாகடிக்கிறது கிடையாது. சரியானபடி பாடம் கற்பித்து, வாழ்வு பூராவும் தன்னை மறக்கவிடாமல் செய்து விடுவதுதான் சாலைக்கரையான் குணமாக இருக்கு’ என்று நினைத்துக் கொண்டான் அவன்.
கடைசிச் செவ்வாயன்று கோழி கொடுப்பது மட்டு மல்ல, பொங்கலும் இட்டு விடவேண்டியதுதான்; தனக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படாதது தெய்வக் கருணை தானே என்று மகிழ்ந்து போனான் மாடசாமி.
முத்தைய பிள்ளைக்கு இடுப்பில் ஏற்பட்ட பலமான காயம் அவரைப் படுக்கையில் கிடத்தி விட்டது. அவர் டாக்டர் ஸ்ர்டிபிகேட் பெற்று, வாதம் பலமாகப் பிடித்து டுக்கையில் தள்ளிவிட்டதால் வேலை செய்ய இயலவில்லை என்று மூன்று மாத லீவுக்கு மனுச் செய்து விட்டார்.
அத்துடன், மேலதிகாரிக்கு தனியாக ஒரு கடிதம் எழுதினார். தன்னை வேறு இடத்துக்கு மாற்றிவிட வேணுமென்று தயவாகக் கோரியிருந்தார் பிள்ளை.
‘சாலைக்கரையான் சக்தியுள்ள ள தெய்வம்தான். சந்தேகமே யில்லை’ என்று அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. தன்னைக் கொல்லாமல் விட்டதற்காக நன்றி செலுத்தி பிரமாதமான பூஜை போட்டார் அந்த தேவதைக்கு.
– வல்லிக்கண்ணன் கதைகள், முதல் பதிப்பு: ஜூன் 1954, கயிலைப் பதிப்பகம், சென்னை.