முறுக்கு சுட்டவள்





மாதர் சங்கத்தில் பல பெண்கள் ஒன்றுகூடி சமையல் குறிப்புப் பற்றி அளவளாவினர்.
அப்போது,
ஒவ்வொரு பெண்ணும் தத்தம் வீட்டில் புதுப் புதுப் பலகாரங்கள் செய்தது பற்றிக் கலந்துரையாடினர். அதிலே ஒரு பெண், “இன்றுதான் நான் சுத்தமான நெய்யிலே முருக்குச் சுட்டேன். மிகமிக அருமையாக இருந்தது” என்று சொன்னாள்.
அதற்கு அடுத்தவள், “ஏன் இவ்வளவு நாட்களாக நீங்கள் முருக்குச் சுட்டதே இல்லையா?” என்று கேட்டாள்,
அதற்கு முருக்குச் சுட்டவள் “நேற்றுத்தானே என் மாமியாருக்கு, டாக்டர் எல்லாப் பற்களையும் எடுத்து விட்டார்’ என்று பதில் சொன்னாள்.
எப்படி மருமகள்?
முன்னே சொன்ன மாமியார்கள் மத்தியில் இப்படியும் சில மருமகள் இருந்தனர் என்றும் தெரிகிறதல்லவா?
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |