கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2025
பார்வையிட்டோர்: 468 
 
 

(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலைப் பனி 

கொக்கும் குருவியும் குளிரால் நடுங்கின. 

தங்களுக்குள்ளேயே பேசி அவை ஒரு முடிவுக்கு வந்தன. 

‘இன்று நான் குளத்துக்குப் போவதில்லை – வேண்டுமானால் மீன் இங்கே வரட்டும்’ என்றது கொக்கு. 

‘நானுந்தான் தோப்புக்குப் போவதில்லை – வேண்டுமானால் பழம் இங்கே வரட்டும்’ என்றது குருவி. 

பொழுது கரைந்தது. 

பசி வயிற்றைக் கிள்ளியது. 

நடுப்பகல் தாண்டியபின்பும் பசியை எப்படித் தாங்கிக் கொள்ளமுடியும். 

கொக்கு குளத்துக்குப் போனது. குருவி பழத்துக்குப் போனது. 

மரத்தில் இருந்த அணில் பாடியது:- 

‘கொக்கைத் தேடிக் குளம் வராது
குருவியைத் தேடிப் பழம் வராது’

– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *