தீவுக்கு ஒரு பயணம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 10, 2025
பார்வையிட்டோர்: 1,522 
 
 

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

இவாஞ்ஜிலின் கடற்கரை!

காலையில் குளித்து விட்டு , நேற்றைய , மிஞ்சிய கோழிக்கறி இருந்தது, அதை அவனுக்கு பாணுடன் சாப்பிடக் கொடுத்து விட்டு , முட்டையையைப் பொரித்து சன்விச் செய்து சாப்பிடுகிறார்கள், பூமலருக்கு சுமி பிறந்ததிலிருந்து நீரழிவு ஏற்பட்டிருக்கிறது, மாத்திரைகளை எடுப்பவள், ” கிழமையிலொரு தடவை இன்சுலின் வேறு ஏற்றிக் கொள்கிறேன் ” என்கிறாள், குட்டித் தங்கச்சியாக இருந்தவளை காலம் எப்படி மாற்றி விட்டிருக்கிறது, உதயனுக்கும் ( அண்ணர் ), பானுவுக்கும் ( அக்கா ),.கூட,. நீரழிவு இருக்கிறது, அவனுக்கும், குணவதிக்கு… இன்னம் தொந்தரவு கொடுக்கவில்லை, வழக்கம் போல கராஜிலிருந்து காரை சிரமப்பட்டு எடுக்க, இட பக்கக் கண்ணாடியை மடக்கி விடுகிறான், சுலபமாக வெளியே வர பூமலர் வீட்டைப் பூட்டி விட்டு வருகிறாள், ஒரு தடவை, வீதியில் குறுகலான லேன் என்ற உணர்வில் கரைக்கு இறக்கி விட ,தடபுடல் என,..சத்தம், அவனையும் குலுக்க, ஏன் ஓரங்களை,.. சீர்படுத்தாது விடுகிறார்கள் ” என ஒரேயடியாய் பற்றிக் கொண்டு வருகிறது, பார்த்து ஓடு ” என்கிறாள் பூமலர், ரொரொன்ரோவில் இந்த குலுக்கல் இராது, ‘ வரி குறைப்பு ‘,… என்றால் அதற்கேற்ப கஸ்டமும் கொடுக்கிறது, போக்குவரத்து அமைச்சராக ஒரு தேடல் உள்ள பொறியிலாளர்,..தெரிவாக வேண்டும், இல்லாதது சீரழிவாகவே கிடக்கிறது,

“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை , என்னைச் சொல்லிக் குற்றமில்லை , காலம் செய்த கோலமடி , கடவுள் செய்த குற்றமடி,..! “, பாட வேண்டியது தான், வேற என்ன செய்வது ?, பின்னுக்கு,. போற காட்சிகளை ஜெயந்தி பார்த்து வந்தாள், அவளுக்கு ‘ தீவை நிறையப் பிடித்திருக்கிறது ! ‘, முன்னால் பூமலர் இருந்தாள், பூமலர் ” இப்ப நாம் போறது இவாஞ்ஜிலின் கடற்கரை ” என்றவள், ” இவள், நம்ம ஆச்சி வீட்டுப் பிள்ளைப் போல,..ஒரு ஏழை பிரெஞ்சுப் பெண், இவள் சிலையுடன் ஒரு அகாடியர் பார்க் கூட இங்கே எங்கையோ கிட்டத்தில் இருக்கிறது, இவளைப்பற்றி ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது, நாடகம், சினிமாவாக எடுக்காமல் விட்டிருக்க மாட்டார்கள், அமைதியாக வாழ்ந்தவளில்லை, அவளுடைய ஆவி,.. இங்கே, பழைய ரயில் பாதையில் எல்லாம் அலைகிறது என்று சொல்கிறார்கள், நம்மைப் போல,..ஒரு பழி வாங்கும் பெண்,.. ” என்று அடுக்கடுக்காய் கூறி விட்டு சிரிக்கிறாள், நாங்க நினைக்கிறோம், குடியுரிமை பறிக்கிற அதிசயம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என்று நினைக்கிறோம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில்… (1700 களில்) இங்கே இருந்த பிரெஞ்சுஅகாடியர்களை, யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல,,..ஆனால் நாட்டை விட்டே ஆங்கிலேயர் துரத்தி விட்டிருக்கிறார்கள், அடிப்படையில் பயம் தான் காரணம், எந்த உதவியும் செய்யாது உர்ரென இருந்திருக்கிறார்கள், பிரெஞ்சுக்காரர்கள் மனச்சுமையுடன் அத்திலாந்திக் கடலில் மிதந்த போது அவர்களில் ஆயிரம் பேர்கள் வரையில்,..கடலில் மாண்டும் போய் விட்டிருக்கிறார்கள்,

அந்த பகை இன்றும் பிரெஞ்சு, ஆங்கிலேயர்களிடம் ஜென்மப்பகையாககிடக்கிறது, கனடா, பிரெஞ்சு மொழியை ஆட்சியில் இருத்தி, பிரெஞ்சுக்காரர்களை இங்கே தலைவர்களாக்கி..சூட்டைத்,தணிக்க முயல்கிறது, என்னென்னோ செய்கிறார்கள், இன்றும் பிரான்சும் , பிரிட்டனும் பேசுகிற போது தீப்பொறி பறக்கிறது, ஒன்று தெரியுமா ?, 2 ம் போரில் இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து நின்று போரிட்டதில்லை, கனடாவுடன் சேர்ந்து நின்று…போரிட்டிருக்கிறது, கனடா நட்பை ஏற்படுத்த பாலமாக நிற்க முயல்கிறது, ஆனால், இதுவும் இங்குள்ள பழங்குடி மக்களிற்கு அதிகாரபரவலாக்கம் கொடாது , இலங்கையைப் போல சிக்குப்பட்டும் கிடக்கிறது, இருந்தாலும் மத்தியில் அதிகாரப் பதவிகளில் அவர்களை நிறுத்தி வருக்கிறது, முன்னேறா விட்டாலும் அது குளிர வைக்கிறது, இங்கே சேவல் கூவி, ஈழத்தில், விடியப் போவதில்லை, விடுங்கள்,

ஆங்கிலேயரின் கையில் நொவாகோர்ஸியா வீழ்வதற்கு முன் இவாஞ்ஜிலின், காதலனுடன் காதலுடன் டூயட் பாடிக் கொண்டு,..திரிகிறாள், அறுந்த போர் ஏற்பட்டு வாழும் உரிமை பறிக்கப் படுகிறது, காதலன் ஒரு புறம், இவள் இன்னொரு புறமாக பிரிக்கப்பட்டு விடுகிறார்கள், லூசியானாவிற்கு சென்றவள் தேடுகிறாள், தேடிக் கொண்டிருக்க வாழ்நாள் போய் விடுகிறது, இவளை கிழவியாகக் காட்ட பிரெஞ்க்காரருக்கு துப்பரவாக விருப்பமில்லை, அழகிய தேவதையாக்கி, நர்ஸாகி காயப்பட்ட போர் வீரர்களின் கூடாரத்தில் காயப்பட்ட கிழவனான, காதலனை சந்திக்கிறாள், பிறகென்ன,..மணமுடிக்கிறாள், சுபம், போரிலே அவனை,… சாக்கடிச்சிருந்தால்,.. எழுத்தாளரைக் கொன்றிருப்பார்கள், கவிஞர் நோட்டைக் காணோம், பென்னைக் காணோம் என்று ஓட்டம் பிடித்திருப்பார், காவியமாக இந்தக் கதை இன்றும் திகழ்கிறது, ஆத்திரத்திரத்தைக் கொட்டவும் வேண்டுமல்லவா !, மூத்தவளுக்கு இந்தப் பெயர், செல்ல நாய்க்குட்டிக்கும்,..இதே பெயர், கடை வைக்கிறீரோ அதற்கும் இதே பெயர், பாலம், வீதி, கைவே,..என,.. கண்ட, கிண்ட எல்லாதிற்கும் இவள் பெயர் தான், திரும்பும் இடமெல்லாம் இவாஞ்ஜிலின் மயம் ,

கனகாலத்திற்குப் பிறகு கனடியர்கள்,பிரெஞ்சுக்காரர்களை நொவாகோர்ஸியாற்கு,. ” வெல்கம் ” கூறி அழைத்த போது , சிறிய தேவாலயம் ஒன்றை எழுப்பி,..முதல் வேலையாக இவாஞ்ஜிலின் சிலையையே நிறுவி பெரிய நிலப்பரப்பில் பூங்காவை அகாடியர் அமைத்தார்கள், நல்ல காலத்திற்கு பிரெஞ்சுக்காரர்கள் திரும்பி வந்த போது இவர்கள் நிறுவிய பழைய தேவாலயங்களை புத்தர் சிலையை வைக்கிறேன், இதை, அதை வைக்கிறேன் என,..அழித்து, சிதைத்திருக்கவில்லை, இன்று இங்கே, பிரெஞ்சுக்காரர் பரவி இருக்க அவை உதவுகின்றன, உண்மையிலே இவாஞ்ஜிலின் உயிருடன் இருந்தவளா? என்ற கேள்விக்கு,..யாருக்குமே பதில் தெரியாது, இருந்தவள் என்று ஒப்பிக்கினர் ஒரு பிரிவினர், ‘பேய்’ என்பவர் இன்னொரு பிரிவினர். ” உருவகம் ” என்று ஒரு சிலர், ” நியூயோர்கிற்கு பிரான்ஸ் அளித்த சுதந்திர சிலைக்கு மொடலாக இருந்தவள் ‘ இவளே தான் ‘ என்று சிலர் அடித்தும் கூறுகிறார்கள், அந்த சோகப் பெண் நாமம் நீடூழி, வாழ நாமும் ஆசியை வழங்குவோம்,

அந்த பீச்சைக் கவனிக்கிற ஓபீஸ் , கழிப்பிட வசதி இருக்கிற ஒரு கட்டடம் ஓரத்தில் நிற்கிறது, விளையாட்டு திடல் போன்ற, வாகன நிறுத்தல் இடம், வாகனத்தை கொண்டு போய் நிறுத்தினார்கள், கீழே இறங்கிற படிகள், பள்ளத்தினில் தான் இங்கே கற்கரையைக் காண முடியும், தூரல் விழுந்து கொண்டிருந்தது, மழை பிடிக்கலாம், பள்ளத்தை பார்த்து விட்டு” அம்மாடி !, நான் மேலேயே நிற்கிறேன்” என ஜெயந்தி நின்று விட்டாள், பூமலரும், தில்லையும் இறங்க ஒரு தட்டு, மேலும் இறங்கல் என ஐம்பது அடி,…கீழே இருக்கும், இறங்கினார்கள், ஈர மண், சில இடங்களில் நீர்த் தேங்கள், கடல் தூரத்தில் இருந்தது, நிலத்தில் தூரம் , தூரமாக புல் கூட்டம், கிட்ட இருந்த ஒன்றிற்குப் சென்று ஒரு புல்லை பிடுங்கி எடுக்க முயன்றான், உறுதியாக தரையோடு கிடந்தது, ரப்பர் போன்ற ஒரு இழையை மடித்து சிரமப்பட்டு ஒடித்து எடுத்தான், நீரினுள் வளர்கிறது, இவ்வளவு பலமாக கிடக்கிறதே ! கையில் வைத்து அதை கிறுக்கு பிடித்த விஞ்ஞானி போலப் பார்த்தான், பூமலர் சிறிய ஓடை போல இருந்த பகுதியிற்குப் போய் நின்று கொண்டிருந்தாள், தூரல் கூடியது, ” மேலே ஏறுவோம் ” என்று பூமலர் கூற மேலே வந்தார்கள், ஜெயந்தி வாகனத்தினுள் இருந்தாள், பட, படவென மழை கொட்ட மள, மளவென ஏறினார்கள், சிறு கப்பில் தேனீரை ஊத்தி ஜெயந்தி தந்தாள், சிப்ஸ் என்கிற உருளைக்கிழங்கு பொறியலையும் கொறித்துக் கொண்டு வெளியை வேடிக்கை பார்த்தார்கள், ஒரு தாய், மகனுடன்…. மழைக் கோட்டணிந்து குடையும் பிடித்துக் கொண்டு கடற்கரைக்கு பாசத்துடன் கதைத்துக் கொண்டு இறங்கிக் கொண்டிருந்தாள், அவனுக்கு அம்மா நினைவில் வந்தார், காலநிலை தெரிந்திருக்கிறது, மழையைப் பொருட்படுத்தாது அவர்கள் செல்வது அழகான காட்சிமாக தெரிந்தது, ஆச்சரியமாகவும் இருந்தது,

– தொடரும்…

– அக்டோபர் 2022 – ஜனவரி 2023, பதிவுகள்.காம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *