தீவுக்கு ஒரு பயணம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2025
பார்வையிட்டோர்: 2,886 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

“(கோல்) கால்”துறைமுகம்

( யூனெஸ்கோவினால் அமெரிக்காவின் ஏழு அதிசயங்கள் ஒன்று என பதியப்பட்டிருக்கிறது)

வீட்டை அடைந்த பிறகு , தில்லை மறுபடியும் தேனீர் அருந்தினான் . ஜெயந்திக்கும் , பூமலருக்கும் ரிம் கொட்டனேபோதுமாகவிருந்தது .

வீட்டிலே , பூமலர் செய்திருந்த ‘ கோழிக்கறி ‘ பழைய நினைவு ஒன்றைக் கிளறி விட்டது . ஜெயந்தியும்”நல்லாயிருக்கிறதே”என்று ரெசிபியைக் கேட்டாள் . தில்லை “இப்படி உருளைக் கிழங்கு கறியையும் வைத்தால் …தூக்கலாக இருக்கும்”என்றான் .” இதுக்கு எப்பவும் சாப்பாட்டு நினைப்பு தான்”என்று ஜெயந்தி சொல்ல பூமலர் சிரித்தாள் . யாழ்ப்பாணத்து பிளவுஸ் , மொக்கங் கடைகளில் ரோஸ்ட் கறிகளில் இந்த உப்பும் , உறைப்பும் அப்படியே இருந்தது .”முதல் நாள் மெரினேற் பண்ணி குளிர்ப்பெட்டியில் வைத்து காலையில் எடுத்து சமைக்க வேண்டும். இங்கே என் சினேகிதி ஜீவி நல்லா சமைப்பார் . அவர் தான் சொல்லித் தந்தார் . இப்படி வைத்தால் சித்திராவும் , சுமியும் உடனேயே முடித்து விடுவார்கள் . திரேசாவின் பிள்ளைகளுக்கும் பிடிக்கும்”என்றாள் .

சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு , “களைப்பு இல்லை என்றால் பக்கத்தில் இருக்கிற ஒன்றை பார்த்து வரலாமே “.என்றாள் பூமலர் .”இரண்டு மணி நேரம் ஓடி கலைத்திருப்பாய் , நான் ஓடுகிறேன்”என்று தில்லை கூற (கார் ஓட்டம் ) பூமலர் தில்லையிடம்.சாவியைக் கொடுத்து கராஜ் கதவைத் திறந்து விட்டாள் . குறுக்கலான நிலைகளைத் தட்டிக் கொள்ளாமல் , ஒரு கட்டத்தில் பக்கக் கண்ணாடி ஒன்றை மடித்து விட்டே பிரயாசைப்பட்டு வெளியில் எடுத்தான் .”இந்த கண்ணாடியை மடிக்கலாம் என்று எனக்கு தெரியாதே “….என்று வியக்கிறாள் . அரும்பொட்டு இடைவெளியில் கராஜ் கதவுகளை ஏன் அமைக்கிறார்கள். பழைய கார்கள் தற்போதைய காரை விட அகலத்தில் குறந்தவையா இருக்க வேண்டும் . அப்ப இருந்த கட்டட விதியை ( பில்டிங் கோட்) மாற்றாமல் விட்டு விட்டார்கள் போல இருக்கிறது . இப்படியும் ஒரு ரோதனை . . வழி காட்ட செலுத்துகிறான் .

வழியில் ,”சித்திராவும் , சுமியும் படித்த பள்ளிகூடம் இது !”என்று காட்டினாள் . சிறிது தூரம் சென்ற போது ” நீச்சல் வகுப்பிற்கு இங்கே வருவோம் “என்று ஒரு கட்டிடத்தைக் காட்டினாள் .”நீ நீந்துவாயா ?”என்று தில்லை அவளைக் கேட்டான் .”அவர்கள் நீந்துறதை மட்டும் பார்ப்பேன்”என்று சிரித்தாள் .”நீயும் பழகி இருக்க வேண்டும்”என்றான் தில்லை .”இவயள் பழக்கிறேன் என்று கலவரப் படுத்தினாள்கள். வேண்டாம் என விட்டு விட்டேன்”என்றாள் . ஒரு இயல்போட்டம் எதிலும் இருக்க வேண்டும் . இல்லாட்டி கஸ்டம் தான் . இனப்பிரச்சனை தமிழரின் அத்தனையிலும் இயல்போட்டத்தைக் குழப்பி விட்டிருக்கிறதே .”கர்மமக்காரர்கள் , நீண்ட காலம் இருந்து அனுபவிக்கப் போறார்கள்”. மகாபாரதத்தில் கிருஸ்ணர் , அஸ்வத்தாமனுக்கு இட்ட சாபம் போல தில்லையினுடையதும் இருக்கிறது . இலங்கையின் வடக்கு , கிழக்கை பல தடவைகள் எரித்து விட்டவர்கள் . அதை விடவா இது பெரியது , என்ன , அனுபவிக்கட்டும்.

“சித்திரா , உவள் நல்ல நீச்சல்க்காரி . இப்படியே பழகி …இருந்தால் ஒலிம்பிக்கிலே சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் . சுமியும் கால்பந்து நல்லாய் விளையாடுவாள் . எது தான் நேர்…கோட்டில் சென்றிருக்கிறது. ஈடுபடுறதை விட்டு விட்டார்கள்”. பெற்றோர் இரவு நேரங்களில் கொண்டு வந்து விட்டு இறக்கி .., நின்று பிறகு கூட்டிச் செல்ல வேண்டும் . நிற்கிற பெற்றோர்களுடையேயும் சந்திப்பு நிகழ்கிறது . கனடா அம்மாவாக இருந்தால் பூமலர் இந்நேரம் நீச்சலைக் கற்றுக் கொண்டிருப்பாள் . படிச்சவர்களால் நீச்சலைக் கற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது ஏன் ? இது விகடன் பகிடி போல இருக்கிறது . பெரிய பாரங்களைத் தூக்கிற பயில்வான் , வீட்டிலே தட்டிலே சோறு சாப்பிடுற போது ஒரு சிறுகல் பல்லில் கடிபட்டு விடுகிறது . தாம் தூம் என துள்ளிக் குதிக்கிறான் . அந்த கேலிச்சித்திரமே நினைவில் வருகிறது . முடியாதது என்று ஒன்றுமில்லை . என்றநெப்போலியனைப் போல முடிக்க வேண்டும் . ஆண் , பெண் எல்லாருக்கும் இது பொது தான் .

இங்கும் இலவசக் கல்வி தான் . ஆனால் பெற்றோர் சமூக வகுப்புகளிற்கு கூட்டிச் செல்லல் போன்ற இதரச் செலவுகள் இருக்கின்றன . காரின் எரிபொருள் விலை தணிவாக இருக்க வேண்டும் . ஏற விட்டார்கள் என்றால் மக்களின் தோள் மீது சுமை எறி விடுகிறது . உக்ரேன் போரை ஏற்படுத்தியது இவர்களது முட்டாள் தன அரசியலையே வெளிப்படுத்தி நிற்கிறது . ( நியாயப்படுத்த என்ன பேச்சு பேசினாலும் அது வேஸ்ட் தான் ) .

“பயிற்சிக்கு வந்து விட்டால் முடிய நேரம் பிந்தி விடும் . இருளில் வீதிகளில் மின்சார விளக்குகள் கிடையாது வாகன வெளிச்சத்தில் செலுத்த வேண்டும் . இருட்டிலே எப்படி வீதி யை தவற விடாமல் சரியாய் ஓட முடிகிறது”தில்லை கேட்டான் .” ஓடி , ஓடி மனதில் பாடமாகி விட்டது” .” வாகனத்தில் ஓடுற போது இரண்டும் சண்டை பிடித்துக் கொண்டே வரும் . மத்தியஸ்தம் செய்து வைப்பதிற்குள் தலை வெடித்து விடும் . சிலசமயம் இரண்டும் சொல்லி வைச்சு கொண்டு சண்டை பிடித்து விட்டு , நான் கத்த சிரிக்கும்கள் . பத்திக் கொண்டு வரும் . வீதியைப் பார்த்து ஓடுவது…படு திண்டாட்டமாகி விடும்”என்றாள் .”இப்ப வேலையில் சேர்ந்தும் விட்டார்கள் . ரொரொன்ரோவில் இருக்கிறவர்கள் . 10 , 15 நாள்கள் லீவு எடுத்துக் கொண்டு வந்து என்னுடன் நின்று விட்டு போகிறார்கள் . சித்திரா அவளுடை ரூமிற்கு அவளே பெயின்ற் பண்ணி இருக்கிறாள் . சுமி திருத்தல் வேலைகளில் கெட்டிக்காரி . எல்லா வேலையும் செய்து விட்டு தான் போவாள் .இங்கே வந்தால் பழம் பறிக்க , அங்கே .., இங்கே என்று போய்யும் வருவோம் . இப்ப அவர்கள் தான் ரைவர்கள் . தூரத்தில் இருப்பதால் இந்த வீட்டை வித்துப் போட்டு அங்கேயே வருவோம் என்றிருக்கிறேன்” என்றாள். சுபமாக முடிந்து விட்டால் நிறைவு தான் . இலங்கைஅரசியலும்அப்படித் தான்.

அப்படியே வீதிக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டு கால் துறைமுகத்தை அடைந்து விட்டார்கள் . துறைமுகத்தினுள் ஈரமண் தெரிய படகுகள் , ரோலர் போன்ற பெரும் படகு ஒன்றும் மண்ணில் சிறிது புதைந்திருக்க நிலத்தில் வாய்க்கால் ஒன்றும் நீருடன் இருந்தது. ஓரிருவர் அந்த மண்ணில் நடக்கவும் செய்தார்கள் . பார்த்த மாத்திரத்தில் அது கை விடப்பட்ட துறை போல தெரிந்தது . அராலித் துறையில் பாதை கண்டு ஓட வேண்டும் என்று சொல்வார்கள் . அது தான் இந்த வாய்க்கால் போல .”என தில்லை நினைத்தான். எலும்புக்கூடு போல கரையிலிருந்து கடலுக்குள் வருகிற ஒரு மரச்சட்டகப் பாதை ஒன்று , அதன்கீழே இருக்கிற உள்ளீட்டில் பாரமான கல் , மரக்குற்றிகள் போடப்பட்டு கிடப்பது தெரிந்தது. சிறிய பேசின (தேக்கம்) போல இருந்த துறையை கிளிக் பண்ணி செல்லில் அடக்கிக் கொண்டான் . லொப்ஸ்டர் பொன்ட் என்ற எழுத்துகளுடன் பழமை மிளிரும் முழுதும் மரத்தாலான ஒரு பெரிய உணவகம் வீதீயிருந்து துறையோடு சேர எழுப்பப்பட்டிருந்தது. சுற்றுலா வருகிற பயணிகள் அங்கே தங்கி இருப்பார்கள் என நினைத்தான் . வீதியிலும் உள்ளேயும் என அங்கொன்றும் , இங்கொன்றுமாக பச்சை ,மஞ்சள் ,சிவப்பு , நீலம் என வர்ணங்களில் கட்டிய வீடுகள்மலைப் பாங்கான நிலத்தில்அழகாக இருந்தன . மாலை மங்கிக் கொண்டிருந்தது .

பூமலரின் மூத்தவள் , சித்திரா”அன்ரி , எங்கே போனாலும் குளிருக்கு சுவேட்டரையும் , மப்ளரையும் எடுத்துச் செல்ல மறந்து விடாதீர்கள்”என்று சொல்லியே இருந்தாள். விமான நிலையத்திற்கு வெளியில் வந்த போதும் , வீட்டில் இருந்த போதும்குளிரவில்லை . எச்சரிகை விட்டு விட்டது . மாலையானால் வெப்பநிலை வேறு சிறிது குளிரும் . இவர்கள் அவ்விடத்தில் இப்ப கூதலை உணர்ந்தார்கள் . பூமலர் எப்பவும் வாகனத்தில் ஒரு போர்வையை போட்டு வைத்திருப்பவள் . அவளுக்கும் . சட்டென ஞாபகம் வரவில்லை . இங்கே கடைசியாய் வந்தது எப்ப இருக்கும் ?. அவளும்மறந்திருப்பாள் . துறைமுகத்தின் மறுபகுதி , இறங்கி பீச் ஆகிறது . உயரமான கரையில் போடப்பட்டிருக்கிற பாறைக் கற்களில்நின்று சூரியன் மறைவைப் பார்த்து விட்டு செல்வது என்பதே தீர்மானம் .

ஒன்ராரியோவில் , சூரியன் உதிக்கிறதையும் , மறையிறதையும் பார்க்கவே முடியாது . சந்திரன் , எட்டி மட்டுமே பார்ப்பான் . எனவே , இங்கே வந்து பார்க்கிறதுக்கு விரும்பினார்கள். நட்சத்திரம் பார்க்கிறதுக்கு என்றும்கூட இங்கே ,ஒரு பார்க் ( பகுதி) இருக்கிறது . கூதல் கூடுதலாகி பல்லு கிடுகிடுக்க தொடங்கி இருந்தது . நோவாகோர்ஸியாவிலுள்ள மற்றப் பகுதிகளை விட இவ்விடம்அலைகளோடு, பருவப்பெயர்ச்சி…போல ஒரு காற்றும் வருவதால்குளிராக இருக்கிறது . இதை எல்லாம் யார் தெரிந்து வைத்திருக்கிறார்கள் . சொல்லி இருந்தாலும் , கூட பள்ளிப்பாடம் போல மண்டையில் நிற்கவா போகிறது ? .

ஆனால் , அன்று சூரியனுக்கு அவர்களை பிடிக்கவில்லை. சிவப்பு பந்தாகி கடலுக்குள் இறங்கிய போது வெள்ளை புகார் மேக வேட்டியைக் கட்டிக் கொண்டு நிற்கிறது . நின்று , நின்று பார்த்தார்கள் . கடலுக்குள் விழவே இல்லை. ஜெயந்தியின் ஆசை நிறைவேறவில்லை . குளிர் வேற வாட்டியது .”அதிருஸ்டம் இவ்வளவு தான்!, வீட்டிற்குபோவோம்” என்றாள் பூமலர் . வாகனத்தில் ஏறினார்கள் .

கால் துறைமுகத்திலிருந்து திரும்பும் போது ஒரு சிறு வழ ,வழப்பான கல்லையுமெடுத்து வந்திருந்தான் . உடம்பை தேய்த்துக் குளிக்க உதவலாம். ஜெயந்தி , காயத்திரியை ஒவ்வொரு முறை குளிப்பாட்டுற போதும் விரல்களால் தேய்த்து தேய்து ஊத்தை அகற்றிஅவளோடு கதைத்துக் கொண்டு நன்றாகக்குளிப்பாட்டுவாள் . பார்த்து கொண்டு நிற்பான் . காயத்திரி , சந்தோசமாக சிரிக்கும் .அந்த கல்லு உதவவில்லை . ஞாபகர்த்தமாக வைத்திருக்கிறான் .

அடுத்த நாள் , பூமலரிற்கு அயல் வீட்டு சினேகிதி தெரேசா தொலைபேசியில் அழைத்தாள் .”உங்களுடைய விருந்தினர்களை வந்து ஒரு தடவைபார்க்க வேண்டும்”என்றவள் ,”நேற்று ஜேம்ஸ்க்கு பிறந்த நாள் . நண்பர்களுடன் ஒருநாள் முழுதும்லொப்ஸ்டர்பொன்ட் உணவகத்திலே இருந்து கொண்டாடினான் .நீர் மட்டம் உயர்வதையும் பார்த்தான். அது ஒருதிரில்லான அனுபவமாக இருக்கும் . வீட்டிலே அது தான் ஒரே கதை . கொரோனாவிற்குப் பிறகு திறந்ததால் அரைவிலைக் கட்டணம் . ஜேம்ஸ் சந்தோசமாக கொண்டாடி இருக்கிறான்” என்றாள். பொன்ட் என்று பல சிறிய நீர்த்தொட்டிகள் கட்டி வைத்திருக்கிறார்கள் . அதிலே ரோலரில் வருகிற லொப்ஸ்டர்களை உயிருடனே போட்டு வைக்கிறார்கள் . டூரீஸ்டுகள்வரும் பொழுது அதை கையில் எடுத்து லொப்ஸ்டர் பற்றிய விளக்கமும்கொடுக்கிறார்கள் . அதுபிரபலமான உணவகம் .இரவிலே , நீர் அறுபது அடி உயரம் வரையில் உயர்ந்து துறைமுகத்தை நிறைத்து விடுகிறது . அதைத் தான் ஜேம்ஸ் பார்த்திருக்கிறான் . நீர் இருக்கிற போது ரோலர் படகு வந்து லொப்ஸ்டர்களை கொட்டுகிறது . பின் மண்ணில் புதைபட கிடக்கிறது . திரும்ப நீர் நிறைகிற போது கடலுக்குச் சென்று விடுகிறது . மீன்பிடிகாரர்கள் தான் இதற்கு இசைவாக்கம் அடைய வேண்டியிருக்கிறது. ஃபண்டி பேயில் இந்த பிரச்சனை நெடுக இருக்கிறது . மற்ற பகுதிகளில்….. இல்லை என்றே தோன்றுகிறது . அந்த கால் துறைமுகம் பாழடைந்திருக்கவில்லை . உயிர்ப்புடனேஇருக்கிறது. பூமலர் கூற தெரிய வருகிறது .

தெரேசாவிற்குகடைசி அவன் . அவனை விடவேறுநான்கு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள் . சித்திரா , சுமியோடு சகோதரங்களாக பழகிறார்கள் . போனிலே பேசிய பிறகு அவர்களைப் பார்க்க உடனேயே வந்தாள். சிறிது நேரம் இருந்து கதைத்து விட்டு சென்றாள் . எல்லா பிள்ளைகளுக்கும் வீட்டிலே வைத்து அவள் தான் ஆசிரியையாய் இருந்து சொல்லிக் கொடுத்திருக்கிறாள் . அப்படி படிப்பிக்கிறதை வீட்டுப்பள்ளிகூடம் என்பார்கள் . ஐரோப்பாவில் , பெரும் ஏக்கர் கணக்கில் செய்கை செய்யும் வவசாயிகள் அப்படித் தான் ….படிப்பிக்கிறார்கள் . பெண்களை நல்லாய் படிக்க வைக்கிறார்கள் . ஆசிரியராக இருக்கிறதுக்கு தகுதி வேண்டும் . தெரேசா படித்தவர் . மாகாணவரசு அதற்கான சிலபஸ் , பரீட்சை வைப்பது என …பல கவனிப்புகளைச் செய்கிறது . பல்கலைக்கழகங்களுகுச் சென்று தான் படிக்க வேண்டும் . பெண் பிள்ளைகள் எல்லாம் பல்கலைகழகப்படிப்பை முடித்து வேலையில் இருக்கிறார்கள் . ஜேம்ஸுக்கு விவசாயப் பண்ணை வைக்கிறது தான் கனவு . இப்படியான முறை ஒன்ரோரியோவில் இருப்பதாகத் தெரியவில்லை .

– தொடரும்…

– அக்டோபர் 2022 – ஜனவரி 2023, பதிவுகள்.காம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *